Breaking

Showing posts with label Central Government. Show all posts
Showing posts with label Central Government. Show all posts

Monday, February 19, 2024

February 19, 2024

மத்திய அரசுப்பணி; 1000 மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி - விவரம்



Central Government Service; 6 months training with food and accommodation for 1000 students - details மத்திய அரசுப்பணி; 1000 மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி. - விவரம்.

மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

''மத்திய குடிமைப் பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின்‌ எண்ணிக்கையை அதிகரித்திட, ஒவ்வொரு ஆண்டும்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம்‌ மாணவர்களுக்கு, அவர்கள்‌ முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும்‌ 7,500 ரூபாய்‌ மற்றும்‌ முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம்‌ ரூபாய்‌ ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

ஆறு மாத காலப்‌ பயிற்சி இத்திட்டம்‌ 10 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீட்டில்‌ கடந்த ஆண்டு முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத்‌ தொடர்ந்து, தற்போது ஒன்றியப்‌ பணியாளர் தேர்வாணையம்‌, இரயில்வே மற்றும்‌ வங்கிப்‌ பணித்‌ தேர்வுகளில்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ அதிகம்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம்‌ மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில்‌ உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப்‌ பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌''.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Monday, March 27, 2023

March 27, 2023

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை - Increasing Corona: Tamil Nadu officials will consult with the central government today

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷ ணுடன் மாநில மக்கள் நல்வாழ் வுத் துறை அதிகாரிகள் திங்கள் கிழமை (மார்ச் 27) காணொலி முறையில் கலந்தாலோசனை நடத்தவுள்ளனர்.

Thursday, March 23, 2023

March 23, 2023

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல் - Increasing Corona Incidence: Central Govt instructs State Governments to follow 5 tier plan

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக விரைவில் நாங்கள் பயிற்சி சோதனையை மேற்கொள்வோம். இந்தச் சோதனை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். மேலும், அனைத்து மாநிலங்களும் இன்ஃப்ளூயன்சா மற்றும் கரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கான மருந்துகள், உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவை தவிர அனைத்து மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதரமர் ஆலோசனை: நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை இந்த அறிவுத்தலை வழங்கியுள்ளது.
நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே, நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஒரு நாளில் 1,300 பேர் பாதிப்பு: இந்தநிலையில், கடந்த 140 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் புதன்கிழை ஒரே நாளில் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 816 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Thursday, March 16, 2023

March 16, 2023

கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்.

பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தல்.

India has observed a significant decline in the number of Covid-19 cases during past few months. However, since past few weeks a rise in cases has been noted specifically in certain parts of the Country with a total of 2,082 cases reported in the week ending 8th March 2023 which rose to 3,264 cases in week ending 15th March 2023.

There are few States which are reporting higher number of cases indicating possible localized spread of infection and there is a need to follow a risk assessment- based approach to prevent & contain the infection, without losing the gains made so far in the fight against the pandemic.

Tamil Nadu has reported an increase in weekly cases from 170 in the week ending 08th Mar 2023 to 258 in week ending 15th Mar 2023. Further, the State reported a positivity rate of 1.99% in week ending 15th Mar 2023 which is higher than India's positivity rate of 0.61% during the same period.

It is advised that State should examine the situation of COVID-19 at micro level (district & sub-districts) and maintain focus on implementation of necessary measures for prompt and effective management of Covid-19 duly ensuring effective compliance with various advisories issued by this Ministry. The five-fold strategy, i.e., Test-Track Treat-Vaccination should be followed with continued focus on:

• Adequate & proactive testing as per guidelines • Monitoring new and emerging clusters of new Covid-19 cases Monitoring of Influenza-like illness (ILI) & SARI cases in all health facilities or through dedicated fever clinics on a regular basis for detecting early warning signals of the spread of infection Genomic sequencing for prescribed samples of international passengers,

collection of samples from sentinel sites (identified health facilities), and local clusters of cases

Proactive promotion to increase administration of precaution dose for all eligible beneficiaries

Covid Appropriate Behaviour particularly in enclosed spaces and in crowded spaces

It is essential that the State must maintain a strict watch and take pre-emptive action if required in any areas of concern to control emerging spread of infection. கடந்த சில மாதங்களில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை இந்தியா அவதானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களிலிருந்து, குறிப்பாக நாட்டின் சில பகுதிகளில் வழக்குகளின் அதிகரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது, மார்ச் 8, 2023 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் 2,082 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 15, 2023 இல் முடிவடைந்த வாரத்தில் 3,264 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்றின் உள்ளூர்மயமாக்கப்பட்ட பரவலைக் குறிக்கும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் புகாரளிக்கும் சில மாநிலங்கள் உள்ளன, மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. .

தமிழ்நாட்டில் வாராந்திர வழக்குகள் 170 இல் இருந்து அதிகரித்துள்ளன மார்ச் 08, 2023 இல் முடிவடைகிறது.

15 மார்ச் 2023 இல் முடிவடைந்த வாரத்தில் 1.99% நேர்மறை விகிதம் பதிவாகியுள்ளது, இது அதிகமாகும் இதே காலகட்டத்தில் இந்தியாவின் நேர்மறை விகிதமான 0.61% ஐ விட. நுண்ணிய மட்டத்தில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) கோவிட்-19 இன் நிலைமையை அரசு ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் கோவிட்-19 இன் பல்வேறு ஆலோசனைகளை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, கோவிட்-19 இன் உடனடி மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கான தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அமைச்சகம். ஐந்து மடங்கு உத்தி, அதாவது, டெஸ்ட்-ட்ராக் ட்ரீட்-தடுப்பூசி தொடர்ந்து கவனம் செலுத்தி பின்பற்றப்பட வேண்டும்: • வழிகாட்டுதல்களின்படி போதுமான மற்றும் செயல்திறன் மிக்க சோதனை • புதிய மற்றும் வளர்ந்து வரும் புதிய கோவிட்-19 வழக்குகளைக் கண்காணித்தல் அனைத்து சுகாதார வசதிகளிலும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் SARI வழக்குகளை கண்காணித்தல் அல்லது சர்வதேச பயணிகளின் பரிந்துரைக்கப்பட்ட மாதிரிகளுக்கான மரபணு வரிசைமுறை தொற்று பரவுவதற்கான ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கண்டறிவதற்காக வழக்கமான அடிப்படையில் பிரத்யேக காய்ச்சல் கிளினிக்குகள் மூலம், செண்டினல் தளங்களிலிருந்து மாதிரிகள் சேகரிப்பு (அடையாளம் காணப்பட்ட சுகாதார வசதிகள்), மற்றும் வழக்குகளின் உள்ளூர் கொத்துகள் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை டோஸின் நிர்வாகத்தை அதிகரிக்க ஊக்கமளிக்கும் ஊக்குவிப்பு குறிப்பாக மூடப்பட்ட இடங்களிலும் நெரிசலான இடங்களிலும் கோவிட் பொருத்தமான நடத்தை வளர்ந்து வரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அக்கறையுள்ள எந்தப் பகுதியிலும் அரசு கடுமையான கண்காணிப்பைக் கடைப்பிடிப்பதும், தேவைப்பட்டால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் அவசியம்

Wednesday, March 08, 2023

March 08, 2023

பென்ஷன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு

பென்ஷன் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது மத்திய அரசு

மத்திய அரசு ஓய்வூ தியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு நாள் நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் சான்று அளிக்கும் நடைமுறை, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது.

'மொபைல்போன் ஆப்' வாயிலாகவும் ஆயுள் சான்றை அளிக்கும் வசதி துவக்கப்பட்டது.

தற்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதில், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்கும் ௧௮ வங்கிகளின் இணையதளங்கள் உட்பட, ஓய்வூதியம் தொடர்பான இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் இல்லாமல், தங்களுடைய சேவைகளை பெறுவதற்கு உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.

Sunday, February 26, 2023

February 26, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு Salary hike for central government employees soon

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது.

ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஃபிட்மென்ட் காரணி உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலிக்குப் பிறகு (மார்ச் 8) மார்ச் மாதத்தில் ஃபிட்மெண்ட் காரணி மற்றும் அகவிலைப்படியை (DA) அரசாங்கம் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் இப்போது ஃபிட்மெண்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. அந்த வகையில் இந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது..

கடந்த செப்டம்பர் 2022ல், மத்திய அரசு, அகவிலைப்படியை 3% அதிகரித்தது.. இதன் மூலம் அகவிலைப்படி 38% ஆக அதிகரித்தது.. இதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Tuesday, February 21, 2023

February 21, 2023

ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2023



ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் வேலை! 

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுயானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Project Engineer-I

காலியிடங்கள்: 9

வயதுவரம்பு: 1.2.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டும மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.55,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி(பொறியியல்) முடித்திருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.2.2023

Monday, February 06, 2023

February 06, 2023

முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்

முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்

புது தில்லி: 2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதம் எழுதியுள்ளாா். கடிதத்தில் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதில் மகாராஷ்டிரம் (325), கா்நாடகம் (268), தமிழகம் (100) ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலும் குறிப்பாக நிா்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளில் இந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் மற்ற விவரங்கள் வருமாறு: 2022-23 கல்வியாண்டில் மருத்துவத்தில் எம்.டி, எம்.எஸ்., டிப்ளோமட் ஆஃப் நேஷனல் போா்டு (டிஎன்பி) போன்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று உச்சநீதி மன்றம் கருத்துக் கூறியுள்ளது. சோ்க்கை முடிந்த நிலையில், இந்த இடங்கள் நிரப்பப்படாமல் வீணாக கைவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடுகளில் 640 இடங்களும், நிா்வாக ஒதுக்கீடுகளில் 589 இடங்களும், டிஎன்பி முதுநிலைப் படிப்பில் 82 இடங்கள் என மொத்தம் 1,311 இடங்கள் காலியாக உள்ளன.

மோசமான நீட் கலந்தாய்வு முறை தோ்வால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரலகம் (டிஜிஹெச்எஸ்) மருத்துவப் படிப்பிற்கான இடங்களை கையாள்வதில் மெத்தனமாக நடந்து கொள்வது போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. ஒவ்வொரு முதுநிலை மருத்துவப் படிப்பு இடமும் நாட்டின் தேசிய சொத்தாக இருக்கும் நிலையில், காலியாகும் இந்த சிறப்பு இடங்களை நிரப்புவதில் உரிய நேரத்தில் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. நிகழாண்டில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு ஜனவரி 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி குறுகிய காலத்தில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் ‘இடஒதுக்கீட்டில்’ கணக்கிடப்படுவதால், பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவா்களுக்கு நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது தொடா்பாக ஏற்கெனவே இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்தாய்விற்கும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதனால், பொறுப்பற்ற முறையில் திறனின்று செயல்படும் டிஜிஹெச்எஸ் நிா்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும். குழப்பங்களுக்குரிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தோ்வு நடத்தப்பட்டுதான் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகிறாா்கள். இந்த நிலையில், முதுநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவா்களுக்ககான கெடுபிடி தேவையில்லை. நாட்டில் மக்கள்தொகைக்கு சமமாக தகுதி வாய்ந்த மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவா் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்
February 06, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?

புதுடில்லி: மத்திய அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விலைவாசி உயர்வை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ௩௮ சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கடந்த முறை திருத்தமானது, செப்டம்பர் ௨௮ல் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை ௧ முதல் அமல்படுத்தப்பட்டது. இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலர் சிவகோபால் மிஷ்ரா கூறியதாவது:

தொழிற்சாலை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு, ௨௦௨௩, ஜன., ௩௧ல் வெளியிடப்பட்டது. இதனடிப்படையில், ௪.௨௩ சதவீதம் அகவிலைப்படி அதிகரிக்க வேண்டும். எனவே, அகவிலைப்படி உயர்வானது நான்கு சதவீதமாக இருக்கும். அதாவது, நடப்பு ௩௮ சதவீதத்தில் இருந்து ௪௨ சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த உயர்வு, ஜன., ௧ முதல் அமல்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, January 17, 2023

January 17, 2023

வெளிநாடுகளில் படிக்க செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு

வெளிநாடுகளில் படிக்க செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு

வெளிநாடு படிப்புக்கு செல்ல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு மாநிலத்தில் போதுமான அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டில் படிக்கும் விடுப்புக்கான ஒப்புதல் வழங்கும் முன்பு மாநில அரசிலும், ஒன்றிய அரசின் பணியிலும் போதுமான எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உரிய விடுமுறை வழங்கும் முன்பு ஒன்றிய அரசின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் விடுப்பில் இருந்து திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட பணியிடங்களையும் மாநிங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி பற்றிய விவரங்கள், இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியேயும் ஆய்வு விடுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 13, 2022

December 13, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் திங்கள்கிழமை கூறினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி வந்தது. அத்திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். அரசு சாா்பில் 14 சதவீதம் செலுத்தப்படும்.

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசுப் பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் புதிய திட்டத்தில் பணியாளா்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் குரலெழுப்பி வருகின்றனா்.

தாங்கள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு மத்திய அமைச்சா் பாகவத் கராட் மக்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மாநில அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு எடுத்திருப்பது குறித்தும், அதுதொடா்பான பரிந்துரையையும் ராஜஸ்தான், சத்தீஸ்கா் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்கள் மத்திய அரசிடமும், ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமும் (பிஎஃப்ஆா்டிஏ) சமா்ப்பித்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் சாா்பில் இதுபோன்ற பரிந்துரை எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை.

மேலும், இந்தப் பரிந்துரையை சமா்ப்பித்த மாநிலங்களுக்கு பதிலளித்த பிஎஃப்ஆா்டிஏ, ‘பிஎஃப்ஆா்டிஏ சட்டம் 2013 மற்றும் பிற வழிகாட்டுதல்களின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் டெபாசிட் (வைப்பு) செய்யப்பட்ட அரசு மற்றும் பணியாளா் தரப்பு பங்களிப்புகள் மீண்டும் மாநில அரசுகளுக்கு திரும்ப அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்று தெரிவித்துவிட்டதாக மத்திய அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

Saturday, November 05, 2022

November 05, 2022

உயா்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்த குழு: மத்திய கல்வி அமைச்சகம் அமைப்பு

உயா்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்த குழு: மத்திய கல்வி அமைச்சகம் அமைப்பு

உயா் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயா்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கான்பூா் ஐஐடி நிா்வாகிகள் வாரியத் தலைவரும், ஐஐடி கவுன்சில் நிலைக் குழு தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயா்நிலைக் குழுவில் அஸ்ஸாம் மகாபுருஷ ஸ்ரீமத் சங்கரதேவா விஷ்வ வித்யாலயா துணைவேந்தா் மிா்துல் ஹஜாரிகா, லக்னெள ஐஐஎம் பேராசிரியா் பாரத் பாஸ்கா், மத்திய கல்வி அமைச்சக உயா் கல்வித் துறை இணைச் செயலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘உயா் கல்வி நிறுவனங்களுக்கு ஆய்வு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அங்கீகார கவுன்சிலுக்கான நடைமுறைகளை வகுப்பதற்கு இந்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஆய்வைப் பொருத்தவரை உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், அங்கீகாரம் என்பது உயா் கல்வ நிறுவனங்கள் அவா்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. மேலும், இந்த ஆய்வு மற்றும் அங்கீகார தரநிலை மூலமாக உயா் கல்வி நிறுவனங்கள் குறித்த நம்பகமான தகவல்கள் மற்றும் கல்வித் தரம் குறித்த விவரங்களை மாணவா்களும், ஊழியா்களும், சமூகமும் தெரிந்துகொள்ள முடியும்’ என்றாா்

Saturday, October 22, 2022

October 22, 2022

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

மாநில அரசுகள் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசின் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி, அரசு கேபிள் கார்ப்பரேஷன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவியின் முடிவின்படி மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உள்ள கல்வி தொலைக்காட்சி இனி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது

Thursday, October 20, 2022

October 20, 2022

பணி காலத்தில் இதெல்லாம் செய்தால் அரசு ஊழியரின் பென்சன் கட் - எச்சரிக்கும் மத்திய அரசின் புதிய விதி

பணி காலத்தில் இதெல்லாம் செய்தால் அரசு ஊழியரின் பென்சன் கட் - எச்சரிக்கும் மத்திய அரசின் புதிய விதி
 
அரசு அதிகாரிகள் என்றாலே மதிப்பும், மரியாதையும் சமூகத்தில் தானாக கிடைக்கும். அதிலும் முன்பெல்லாம் நம் முன்னோர்கள் கால் காசு சம்பாதித்தாலும் அது அரசு உத்யோகத்திலிருந்து கிடைக்க வேண்டும் எனவும், பணி ஓய்விற்குப்பிறகு பென்சன் வருவதால் வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்பார்கள். ஆனால் இன்றைக்கு பென்சன் திட்டம் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்தவர்களுக்குக் கிடையாது என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய பென்சன் மற்றும் கிராஜுவிட்டி பெறுவதற்கான வழிமுறைகளில் புதிய விதியைக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் புதிய விதி சொல்வது என்ன?

மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள் 2021 ன் படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபட்டிருக்கக்கூடாது எனவும் வேலையை முறையாக செய்யாமல் அலட்சியம் காட்டினார்கள் என்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட விதி 8ன்படி, முறைகேடு மற்றும் பணியில் அலட்சியத்தன்மையோடு இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசு ஊழியரின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் செய்ய வேண்டியது என்ன?

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுபவரின் விஷயத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால், ஜனாதிபதி நியமிக்கும் நிர்வாக அமைச்சர் முடிவு எடுக்கலாம். அதே வேளையில் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவரின் விஷயத்தில், ஜனாதிபதிக்கு அடுத்தப்படியாக நியமனம் செய்யும் அதிகாரிகள் எந்த முடிவுகளையும் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஒவ்வொரு துறையில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் எதுவும் பிரச்சனை செய்தால் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

அதன் படி முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் மத்திய அதிகாரிகளின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையும் அல்லது இரண்டையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்தி வைக்கலாம் . ஒருவேளை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், ஓய்வூதியத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப் பெறலாம்.

இதோடு பணிக்காலத்தில் அலட்சியமாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படலாம். ஆனால் இவர்கள் ஸ்கேனர் லிஸ்டில் தான் வருவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஓய்வூதியம் அல்லது கருணைத் தொகையிலிருந்து முழுமையாகவோ அல்லது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பண இழப்பின் ஒரு பகுதியையோ மீட்டெடுக்க உத்தரவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog