TET EXAM
September 07, 2025
Showing posts with label LAW. Show all posts
Showing posts with label LAW. Show all posts
Sunday, September 07, 2025
Thursday, May 15, 2025
Tuesday, August 27, 2024
Friday, June 07, 2024
Monday, May 13, 2024
Sunday, May 05, 2024
Friday, April 12, 2024
Monday, March 18, 2024
Monday, March 11, 2024
Friday, December 22, 2023
LAW
December 22, 2023
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஐந்தாண்டு சட்ட படிப்பில் தமிழ் பாடம்
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஐந்தாண்டு சட்ட படிப்பில் தமிழ் பாடம்
ஐந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
பல்வேறு மாநிலங்களில் சட்டப் படிப்பில் தாய்மொழி ஒரு பாடமாக இடம்பெற்றுள்ளது. கர்நாடகத்தில் சட்டப் படிப்பில் கன்னடம் ஒரு பாடமாக இருந்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் 5 ஆண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் ஒரு பாடமாக இடம்பெறும். முதல்வர் சார்பில் இதை அறிவிக்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மேற்கொண்டு வரும் 100 சட்டங்களை தமிழ்மொழியாக்கம் செய்யும் பணியை விரைந்து முடித்து, சட்ட நூல் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, சட்ட ஆட்சிமொழி ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ் வளர்ச்சித் துறை செய்யும் என்று உறுதியளித்தார்.
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதிபதி இரா.தாரணி, ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்கள் அ.முகமது ஜியாவுதீன், ச.கோபி ரவிகுமார், வி.வில்ஸ்றோடாஸ்பின், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ் பங்கேற்றனர். ஆணைய பகுதிநேர உறுப்பினரும், புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான சு.முரளி அரூபன் வரவேற்றார். பகுதிநேர உறுப்பினர் கனிமொழி மதி நன்றி கூறினா
ஐந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
பல்வேறு மாநிலங்களில் சட்டப் படிப்பில் தாய்மொழி ஒரு பாடமாக இடம்பெற்றுள்ளது. கர்நாடகத்தில் சட்டப் படிப்பில் கன்னடம் ஒரு பாடமாக இருந்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் 5 ஆண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் ஒரு பாடமாக இடம்பெறும். முதல்வர் சார்பில் இதை அறிவிக்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மேற்கொண்டு வரும் 100 சட்டங்களை தமிழ்மொழியாக்கம் செய்யும் பணியை விரைந்து முடித்து, சட்ட நூல் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, சட்ட ஆட்சிமொழி ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ் வளர்ச்சித் துறை செய்யும் என்று உறுதியளித்தார்.
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதிபதி இரா.தாரணி, ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்கள் அ.முகமது ஜியாவுதீன், ச.கோபி ரவிகுமார், வி.வில்ஸ்றோடாஸ்பின், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ் பங்கேற்றனர். ஆணைய பகுதிநேர உறுப்பினரும், புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான சு.முரளி அரூபன் வரவேற்றார். பகுதிநேர உறுப்பினர் கனிமொழி மதி நன்றி கூறினா
Sunday, December 10, 2023
LAW
December 10, 2023
இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு
*இந்திய வசதியுரிமைகள் சட்டம் 1882 (Indian Easements Act-1882) குறித்த ஒரு தெளிவான பதிவு காண்போமா?*
*வசதியுரிமைக்கு ஏற்படும் தொல்லைகள்*
ஒரு நிலத்தின் உரிமையாளர், தன்னுடைய நிலத்தை நல்லமுறையில் அனுபவிப்பதற்காக, அருகில் உள்ள நிலத்தில் சில வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அல்லது அந்நிலத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உள்ள உரிமையே வசதியுரிமை எனப்படும். வசதியுரிமை என்பதை "இந்திய வசதியுரிமைகள் சட்டம்" (Indian Easements Act 1882) பிரிவு 4 வரையறை செய்கிறது. மற்றொருவருடைய நிலத்தில் இருந்து வசதியுரிமை பெறும் சொத்து ஓங்கு சொத்து (Dominent heritage) என்றும் ஓங்கு சொத்துக்கு வசதி உரிமைகளை வழங்கும் சொத்துக்கு ஓடுங்கு சொத்து (Servient heritage) என்றும் அழைக்கப்படும். காற்று அல்லது வெளிச்சம் பெறும் உரிமை, பாதை உரிமை, மழைநீர் அல்லது கழிவுநீர் கடத்தும் உரிமை, ஒரு சொத்து சேதமடையாமல் இருக்க அருகிலுள்ள சொத்தை தாங்கி பிடித்துக் கொள்ளும் உரிமை ஆகியன வசதியுரிமைக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். வசதி உரிமைகளுக்கு ஏற்படும் தொல்லைகளால் ஏற்பட்ட இழப்பை வாதி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தனக்குரிய வசதியுரிமையை நிரூபித்தாலே போதுமானதாகும்.
1. தாங்கு வசதியுரிமை (Right to support)
ஒரு நிலம் சரிந்து விழாமல் இருப்பதற்கு அந்நிலம் அதன் அருகில் உள்ள நிலத்தை தாங்கிப் பிடித்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு நிலம் சரிந்து விழாமல் இருக்க அருகில் உள்ள நிலத்தை தாங்கிப் பிடித்துக் கொள்வதற்கு இருக்கும் உரிமையே தாங்கு வசதியுரிமை எனப்படும். இது எல்லா நிலங்களுக்கும் உரிய இயற்கை உரிமையாகும். எனவே ஒரு நிலம் சரிந்து விழுகின்ற வகையில் அல்லது சேதமடையும் வகையில், அருகில் உள்ள நிலத்தில் பள்ளம் தோண்டுவதோ மண்பிடிப்பை அகற்றுவதோ கூடாது. தாங்கு வசதியுரிமைக்கு தீங்கிழைக்கும் வகையில், அருகில் உள்ள நிலத்தை தோண்டுவது அல்லது சுரங்கம் வெட்டுவது ஆகியன தொல்லை தீங்காக கருதப்படும். இத்தகைய இயற்கையான தாங்கு வசதியுரிமை, கட்டிடங்கள் இல்லாத காலி நிலங்களுக்கு மட்டுமே உண்டு. கட்டிடங்கள் கீழே விழாமல் இருப்பதற்குரிய தாங்கு வசதியுரிமை இயற்கை உரிமை அல்ல. ஆனால் கட்டிடங்களுக்குரிய தாங்கு வசதியுரிமை இயற்கை உரிமையாக கிடைக்காவிட்டாலும், அது பக்கத்து நிலத்தின் உரிமையாளரின் அனுமதி மற்றும் நீடாணுபோக உரிமையின் மூலம் பெறப்படலாம்.
Dalton -Vs- Angus (1881) 6 A.C.740 என்ற வழக்கில் வாதியின் வீடும் பிரதிவாதியின் வீடும் அருகருகே உள்ள நிலங்களில் அமைந்திருந்தது. வாதி தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு தொழிற் சாலையாக மாற்றி விட்டார். இப்போது வாதியின் தொழிற்சாலை கட்டிடத்திற்கு பிரதிவாதியின் நிலத்திலிருந்து முன்பைக் காட்டிலும் கூடுதலான தாங்கும் வசதியுரிமை தேவைப்பட்டது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, பிரதிவாதி தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு தன்னுடைய நிலத்தில் சில பள்ளங்கள் தோண்டினார். இதனால் வாதியின் கட்டிடம் தாங்கும் வசதியுரிமையை இழந்து கீழே விழுந்து விட்டது. வாதியின் தொழிற்சாலை கட்டிடத்திற்கு இயற்கையாக தாங்கும் வசதியுரிமை இல்லாவிட்டாலும், அது கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வசதியுரிமையை அனுபவித்து வந்துள்ளது. எனவே, அக்கட்டிடம் நீடாணுபோக உரிமை (Presscription) யின் மூலம் தாங்கு வசதியுரிமையைப் பெற்றுள்ளது. எனவே பிரதிவாதி, வாதிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2. வெளிச்சம் மற்றும் காற்றுக்கான வசதியுரிமை (Right to light and air)
வெளிச்சம் மற்றும் காற்றுக்கான வசதியுரிமைகள் நிலங்களின் தாங்குவசதியுரிமையைப் போல் இயற்கை உரிமை அல்ல. எனவே, அவ்வசதி உரிமைகளை அனுமதி மற்றும் நீடாணுபோகத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும். அவ்விதம் நீடாணுபோகத்தின் மூலம் அடைந்த வெளிச்சம் அல்லது காற்றுக்கான வசதியுரிமைக்கு ஊறுவிளைவிப்பது தொல்லை தீங்காகும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த வெளிச்சத்தை தடை செய்யும் தொல்லை தீங்கிற்காக வழக்கிடும் வாதி, பிரதிவாதியின் செயலால், தான் இதுவரை அனுபவித்து வந்த வெளிச்சத்தின் அளவு போதுமான அளவைக் காட்டிலும் பெருமளவு குறைந்து விட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். Colls -Vs- Home and Colonial stores Ltd., (1904) A.C. 179 என்ற வழக்கில் பிரதிவாதி எழுப்பிய 42 அடி உயர கட்டிடத்தால் வாதி இதுவரை அனுபவித்து வந்த வெளிச்சம் பாதிக்கப்பட்டதாகக் கூறி அக்கட்டிடம் கட்டப்படுவதை தடைசெய்யக் கோரி வழக்கிடப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் வாதியின் கட்டிடத்திற்கு வரும் வெளிச்சம் முன்பு இருந்த அளவிற்கு வராவிட்டாலும் போதுமான அளவு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் தடை செய்யப்படுவதை தொல்லையாக கருதுவதற்கு, ஏற்கனவே அனுபவித்து வந்த வெளிச்சத்தின் அளவு குறைந்துள்ளதா ? என்பதைக் கணக்கில் கொள்ளக் கூடாது போதுமான அளவு வெளிச்சம் வருகின்றதா என்பதையே கணக்கில் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு வெளிச்சத்திற்கும் குறை வருமாறு வெளிச்சம் தடை செய்யப்பட்டால் மட்டுமே அது தொல்லையாக கருதப்பட வேண்டும். எனவே, இவ்வழக்கில் வாதியின் கட்டிடத்திற்கு போதுமான அளவு வெளிச்சம் வருவதால் பிரதிவாதியின் செயல் தொல்லை ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அனுமதி அல்லது நீடாணுபோகத்தின் மூலம் அடைந்த காற்றுக்கான வசதியுரிமையை பொதுவாக அண்டை நிலத்தின் எல்லையற்ற மேற்பரப்பு முழுவதிலும் இருந்து கோர முடியாது என்று Webb-Vs- Bird, (1861) 10 C.B. (N.S.) 268- என்ற வழக்கில் பிரதிவாதி கட்டும் கட்டிடம் தன்னுடைய காற்றாலைக்கு வரும் காற்றின் வழியை தடுப்பதாகக் கூறி லாதி வழக்கு தொடர்ந்தார். ஆனால் வாதி அக்காற்றுக் கான வசதியுரிமையை நீடாணுபோகத்தின் மூலம் அடையவில்லை (அதாவது 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்திருக்கவில்லை) என்பதால் பிரதிவாதியின் செயல் தொல்லை ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
( தீங்கியல் சட்டம் The Law of Tort) என்ற சட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியாகும். இதன் நூல் ஆசிரியர் த.சிவகுமார், B. A. B. L
Friday, September 29, 2023
TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY
September 29, 2023
தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13
தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு. வழங்கப்படும் படிப்புகள்:
பி.ஏ.எல்.எல்.பி., (ஹானர்ஸ்) - 5 ஆண்டுகள்எல்.எல்.எம்., - ஓர் ஆண்டுபிஎச்.டி.,
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எல்.எல்.எம்., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி., படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்பில் சேர எல்.எல்.எம்., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை உண்டு.
தேர்வு முறை:
அனைத்து படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஏ.ஐ.எல்.இ.டி., எனும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. சென்னை, மதுரை, பெங்களூரு, கொச்சி, மும்பை, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13
விபரங்களுக்கு: https://nludelhi.ac.in/
Thursday, September 14, 2023
TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY
September 14, 2023
Master of Laws (M.L. or LL.M) படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
Master of Laws (M.L. or LL.M) படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
எல்எல்எம் சட்ட படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம்எ-னும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள்தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (செப்.14) முதல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, September 07, 2023
LAW
September 07, 2023
சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு - நவம்பர் 3 விண்ணப்பிக்க கடைசி நாள்
சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு - நவம்பர் 3 விண்ணப்பிக்க கடைசி நாள்
சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு
இள படிப்பு சேர்க்கைக்கு 22 தேசிய சட் டப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பிர தானநுழைவுத்தேர்வு காமன் லா அட் மிஷன் டெஸ்ட்-கிளாட் 2024க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் ஒருங்கிணைந்த இள நிலைப்பட்டப்படிப்பு - எல்.எல்.பி.. முதுநிலை பட்டப்படிப்பு - எல்.எல். எம்.. ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தகுதிகள்: 5 ஆண்டு ஒருங்கி ணைந்த சட்டப் படிப்பிற்கு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. மார்ச்/ஏப்ரல் 2024ல் நடைபெறும் கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எல்.எல்.எம்., அல்லது அதற்கு இணையான சட்டப் படிப்பில் சேர, இளநிலைச்சட்ட பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமா னது ஏப்ரல் /மே 2024ல் நடைபெறும் இளநிலை பட்டப்படிப்பிற்கான இறு தித்தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: இளநிலைப் பட் டப்படிப்பிற்கான தேர்வில் ஆங்கி லம். பொது அறிவு. லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட் டிவ் டெக்னிக்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில், முன்பு 150 கேள் விகள் கேட்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வில் 120 கேள்விகளாக குறைக் முதுநிலைப்பட்டப்பிடிப்பிற்கான தேர்வில் அரசியலமைப்பு சட்டம், நிர் வாக சட்டம், குடும்ப சட்டம். குற்றவியல் சட்டம், கம்பெனி சட்டம். சுற்றுச்சூழல் சட்டம். லா ஆப் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டிசம் பர் 3ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https:// consortiumofnlus.ac.in/clat-2024/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.நவம்பர் 3 விண்ணப் பிக்க கடைசி நாள்.
சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு
இள படிப்பு சேர்க்கைக்கு 22 தேசிய சட் டப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பிர தானநுழைவுத்தேர்வு காமன் லா அட் மிஷன் டெஸ்ட்-கிளாட் 2024க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் ஒருங்கிணைந்த இள நிலைப்பட்டப்படிப்பு - எல்.எல்.பி.. முதுநிலை பட்டப்படிப்பு - எல்.எல். எம்.. ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தகுதிகள்: 5 ஆண்டு ஒருங்கி ணைந்த சட்டப் படிப்பிற்கு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. மார்ச்/ஏப்ரல் 2024ல் நடைபெறும் கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எல்.எல்.எம்., அல்லது அதற்கு இணையான சட்டப் படிப்பில் சேர, இளநிலைச்சட்ட பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமா னது ஏப்ரல் /மே 2024ல் நடைபெறும் இளநிலை பட்டப்படிப்பிற்கான இறு தித்தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: இளநிலைப் பட் டப்படிப்பிற்கான தேர்வில் ஆங்கி லம். பொது அறிவு. லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட் டிவ் டெக்னிக்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில், முன்பு 150 கேள் விகள் கேட்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வில் 120 கேள்விகளாக குறைக் முதுநிலைப்பட்டப்பிடிப்பிற்கான தேர்வில் அரசியலமைப்பு சட்டம், நிர் வாக சட்டம், குடும்ப சட்டம். குற்றவியல் சட்டம், கம்பெனி சட்டம். சுற்றுச்சூழல் சட்டம். லா ஆப் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டிசம் பர் 3ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https:// consortiumofnlus.ac.in/clat-2024/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.நவம்பர் 3 விண்ணப் பிக்க கடைசி நாள்.
Monday, July 17, 2023
Thursday, June 01, 2023
Wednesday, October 12, 2022
LAW
October 12, 2022
சட்டப் பல்கலை. தேர்வில் குழப்பம்: பழைய வினாத்தாள் கொடுத்ததால் அதிர்ச்சி
சட்டப் பல்கலை. தேர்வில் குழப்பம்: பழைய வினாத்தாள் கொடுத்ததால் அதிர்ச்சி
மும்பை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப் படிப்பு தேர்வின்போது, மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாள் கடந்த ஆண்டுடையது என்று தெரிந்ததும், தேர்வு மைய அதிகாரிகள் உடனடியாக வினாத்தாளை வாங்கிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு கல்லூரிகளில் தேர்வு 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பிறகுதான், தவறுதலாக கடந்த ஆண்டு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்துக் கல்லூரிகளிலும் வினாத்தாளை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டது.
தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல், வினாத்தாள் கொடுத்த சில நிமிடங்களில் திரும்ப வாங்கப்பட்டதால் அதிர்ச்சியுடன் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் பிற்பகலில் வந்து தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்பட்டு, புதிய வினாத்தாள் வரவழைக்கப்பட்டு மீண்டும் தேர்வு தொடங்கி நடைபெற்றுள்ளது.
அதாவது இ-டெலிவரி முறையில்தான் கல்லூரிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. மின்னஞ்சல் வழியாக பல்கலைக்கழகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டதும், அந்தந்த கல்லூரிகள் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு பல்கலைக்கழகத்திலிருந்து வினாத்தாள் அனுப்பிய பிறகுதான், அது கடந்த ஆண்டுடைய வினாத்தாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் தேர்வுகள் தொடங்கிவிட்டதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
மும்பை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப் படிப்பு தேர்வின்போது, மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாள் கடந்த ஆண்டுடையது என்று தெரிந்ததும், தேர்வு மைய அதிகாரிகள் உடனடியாக வினாத்தாளை வாங்கிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு கல்லூரிகளில் தேர்வு 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பிறகுதான், தவறுதலாக கடந்த ஆண்டு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்துக் கல்லூரிகளிலும் வினாத்தாளை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டது.
தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல், வினாத்தாள் கொடுத்த சில நிமிடங்களில் திரும்ப வாங்கப்பட்டதால் அதிர்ச்சியுடன் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் பிற்பகலில் வந்து தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்பட்டு, புதிய வினாத்தாள் வரவழைக்கப்பட்டு மீண்டும் தேர்வு தொடங்கி நடைபெற்றுள்ளது.
அதாவது இ-டெலிவரி முறையில்தான் கல்லூரிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. மின்னஞ்சல் வழியாக பல்கலைக்கழகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டதும், அந்தந்த கல்லூரிகள் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு பல்கலைக்கழகத்திலிருந்து வினாத்தாள் அனுப்பிய பிறகுதான், அது கடந்த ஆண்டுடைய வினாத்தாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் தேர்வுகள் தொடங்கிவிட்டதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
Monday, September 05, 2022
University
September 05, 2022
LLM சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!
எல்எல்எம் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பள்ளியில் எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேறியிருக்க வேண்டும்.
இந்நிலையில், எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பள்ளியில் எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேறியிருக்க வேண்டும்.
இந்நிலையில், எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, August 11, 2022
LAW
August 11, 2022
69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநர்
தமிழக சட்டக்கல்வித் துறையின் முதல் பெண் இயக்குநராக பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டக்கல்வி இயக்குநரகத்தின் இயக்குநராக இருந்த டி.சொக்கலிங்கம் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் இயக்குநர் பணியானது பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமிக்கு முழு கூடுதல் பொறுப்பாக கடந்த மே 31-ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டக்கல்வித் துறையின் புதிய இயக்குநராகவும் தற்போது அவரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25-ம்தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமி, பாண்டிச்சேரியில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் ஆராய்ச்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை பேராசிரியராகக் கல்விப்பணியை தொடங்கிய இவர், 24 ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.
செங்கல்பட்டு, வேலூர், சென்னை பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சட்டக்கல்வி இயக்குநரகத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் பெண் இயக்குநர் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறை.
தமிழகத்தில் சட்டத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டக்கல்வி இயக்குநரகத்தின் இயக்குநராக இருந்த டி.சொக்கலிங்கம் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் இயக்குநர் பணியானது பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமிக்கு முழு கூடுதல் பொறுப்பாக கடந்த மே 31-ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டக்கல்வித் துறையின் புதிய இயக்குநராகவும் தற்போது அவரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25-ம்தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமி, பாண்டிச்சேரியில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் ஆராய்ச்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை பேராசிரியராகக் கல்விப்பணியை தொடங்கிய இவர், 24 ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.
செங்கல்பட்டு, வேலூர், சென்னை பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சட்டக்கல்வி இயக்குநரகத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் பெண் இயக்குநர் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறை.
Tuesday, August 09, 2022
விழிப்புணர்வு
August 09, 2022
148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் (POCSO ACT) குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. சென்னை பெருநகரில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனைகள் கிடைக்க 2012ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (Protection of Childrens from Sexual Offences Act-2012) குறித்தும் பெண் குழந்தைகள் அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (08.08.2022) சென்னையிலுள்ள 148 பள்ளிகளில், மாணவ, மாணவியர்க்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர். இம்முகாம்களில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், Good touch மற்றும் Bad touch குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
நேற்று 148 பள்ளிகளில் நடந்த போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் 13,878 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர். சென்னை பெருநகர காவல் குழுவினரின் போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனைகள் கிடைக்க 2012ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (Protection of Childrens from Sexual Offences Act-2012) குறித்தும் பெண் குழந்தைகள் அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (08.08.2022) சென்னையிலுள்ள 148 பள்ளிகளில், மாணவ, மாணவியர்க்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர். இம்முகாம்களில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், Good touch மற்றும் Bad touch குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
நேற்று 148 பள்ளிகளில் நடந்த போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் 13,878 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர். சென்னை பெருநகர காவல் குழுவினரின் போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
