Breaking

Showing posts with label laptops. Show all posts
Showing posts with label laptops. Show all posts

Monday, December 08, 2025

Sunday, December 07, 2025

Saturday, April 06, 2024

Monday, February 12, 2024

February 12, 2024

புதிய Laptop வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? What to consider when buying a new laptop?



புதிய Laptop வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

எங்கெங்கு காணினும் ஆன்லைன் வகுப்புகள். கல்லூரியில் தொடங்கி தற்போது யு.கே.ஜி வரையும் பரவியுள்ளது. பெற்றோருக்கு இதில் பிரச்சனை என்பது மொபைல் போனில் பார்க்க வைப்பது. வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் போன் கொடுப்பதில் வாரிசுரிமைப் போரே நிகழ்கிறது. காலத்தின் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுத்தியுள்ளது.

அப்பாக்களின் ஆப்ஷன்கள் மூன்று.

கம்பெனி லேப்டாப் கம்மி ரேட்டுக்கு அசெம்பிள் செட் கவர்ன்மென்ட் கொடுத்த லேப்டாப்.

இதுவும் கிடைக்காத பட்சத்தில் புது லேப்டாப் வாங்க வருகின்றனர்.

லேப்டாப் வாங்குவதற்கு முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில தகவல்களை நாங்கள் பட்டியலிடுகிறோம். அதன்மூலம் நீங்கள் விரும்பும்படியான புதிய லேப்டாப் வாங்க முடியும்.

பட்ஜெட்:

புதிதாய் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

யுகேஜி படிக்கும் மகனுக்கு M.E, M.tech லெவல் வேண்டாம். மினிமம் வசதியுள்ள லேப்டாப் ஆப்ஷன் வைத்துக் கொள்ளலாம்.

லேப்டாப் வாங்குவதற்கு முன், பட்ஜெட்டை நிர்ணயிப்பது மிகவும் முக்கியம். லேப்டாப்களை ஆராய்ந்த பின் அதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வருகிறதா என்பதனை உறுதி செய்வது மிகவும் அவசியமான ஒன்று.

பிராசசர் மற்றும் ரேம்:

லேப்டாப்-ல் உள்ள பிராசசர் அதன் திறனை வரையறுக்கிறது. ரேம் தடையில்லா வேகமான பணியை உறுதி செய்கிறது. பெரும்பாலான மடிக்கணினிகள் Intel அல்லது AMD CPU உடன் வருகின்றன. ஆனால், பெரிய அளவில் Intel செயலி மூலம் இயங்கும் மடிக்கணினியை அதிகம் தேர்வு செய்யப்படுகிறது. இன்டெல்லின் கோர் i3 பொதுவாகத் தொடக்க நிலை லேப்டாப்-ல் காணப்படுகிறது, அதேசமயம் கோர் i5 பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Life long வரணுமில்ல என்பதையும் நம்ப வேண்டாம். இணைய உலகில் இன்னைக்கு வாங்கினா நாளைக்கு அப்டேட் மாடல் வந்திடும். Processor என்பது எல்லா மதர் போர்டுகளிலும் இருக்கும் ஒரு சிப். இப்போதைக்கு processor ஐ3 & ஐ5 வாங்கலாம். ஆனால், ஐ7, ஐ9 வரை வந்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும். இதில் processor-க்கு அருகில் இருக்கும் 2.80GHz என்பது பிராசசரின் வேகம். இது குறையும் போது வேகம் குறைவாய் இருக்கும்.

intel, AMD brand-ல் இன்டெல் அட்வான்ஸ் வெர்ஷன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நம்ம கணினிக்கேற்ற பொருத்தமான மணமகனாய் இருப்பார்.

RAM எனும் வேகப்படுத்தி மடிக்கணினியில் மினிமம் 4 GB இருக்கணும். 8 GB இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. DDR3 அல்லது DDR4 RAM பொருத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும்.

தற்போது பெரும்பாலும் 1-TB மெமரி உள்ள லேப்டாப் தான் வருகிறது.

மற்றது சாலிட் ஸ்டேட் ட்ரைவ் வேகம் அதிகம், விலையும் அதிகம், நினைவுத் திறன் குறைவு.

Bluetooth, WiFi, Memory Card Slot, HDMI cable option, DVD RW Drive அல்லது பென் ட்ரைவ் ஆப்ஷன் தற்போது இரண்டு வந்து விட்டது.

USB தற்போது 3.0 வெர்சன் வந்துள்ளதால் கொஞ்சம் வேகமாய் இருக்கும்.

வெப்கேமரா அனைத்து லேப்டாப்புகளிலும் வருகிறது. தரமாய் இருக்கிறதா எனச் சரி பார்க்கவும்

பேட்டரி 8 மணி நேரம் இருப்பது போல் வாங்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சார்ஜர் போட வேண்டும். சைஸ்:

பெரும்பாலான லேப்டாப்கள் 15.6-இன்ச் திரையுடன் வருகின்றன. ஆனால், சிறிய 14-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் அமைப்புகள் நிறைய உள்ளன. உங்கள் பணிக்கு நிறையப் பயணம் செய்ய வேண்டியிருந்தால், சிறிய வடிவ காரணியை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அது பொதுவாக இலகுவானது மற்றும் உங்கள் பையில் வைப்பது எளிதாக இருக்கும். பெரிய மடிக்கணினிகள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது. ஒரே இடத்தில் வைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் பெரிய திரை கொண்ட லேப்டாப்-யை தேர்வு செய்யலாம்.

15.6 அல்லது 14 இன்ச் display LED monitor வாங்கலாம். அதிலும் Full HD, Ultra HD என வந்து விட்டதால் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் memory card slot, Front mic, audio speaker system இணைந்ததா எனப் பார்த்துக் கொள்ளவும்

Screen resolution ஐ கண் பார்வையை உறுத்தாத அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Hard disc பயன்பாட்டின் வேகத்தைப் பொறுத்து தேர்வு செய்யலாம். இதன் வேகம் 7200RPM, 5400RPM போன்றவற்றை பார்க்கவும். 320GB,160GB, 80GB எனும் அளவில் கிடைப்பதால் பயன்பாட்டைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கலாம். ஸ்டோரேஜ்:

அதிக சேமிப்பு சிறந்தது. 500ஜிபி மற்றும் 1டிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ் (எச்டிடி) கொண்ட லேப்டாப்கள் இன்று மிகவும் பொதுவானவை. இருப்பினும், SDD வேகமானதாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் குறைவான சேமிப்பகத்துடன் வருகிறது. எனவே, லேப்டாப் வாங்கும் போது உங்கள் தேவைக்கேற்ப சேமிப்பகத்தைக் கருத்தில் கொள்ள மறக்காதீர்கள்.

SSD (solid state drive) இருந்தால் லேப்டாப் ஆன் செய்தவுடன் துரித வேகத்தில் உடனே ஆன் ஆகிவிடும். குறைவாய் இருந்தால் ஆன் ஆவதில் தாமதம் ஆகும். ஆனால், சற்றுவிலை அதிகமாய் இருக்கும்.

O.S எனும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முக்கியமானது. இதுதான் லேப்டாப்பின் இதயம் போலே. தற்போது விண்டோஸ் 10 புது வெர்ஷன் வந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு வாங்கவும்.

எனக்கு செக்யூரிட்டி அதிகம் தேவையெனில் ஆப்பிளின் Mac ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நாடலாம்.

Graphic card இருந்தால் ஆன்லைன் வகுப்பில் அனிமேஷன் சப்போர்ட் ஆவது எளிதாய் இருக்கும். இதில் இருவகையாய் இருக்கும். அதிக வீடியோக்கள் பார்ப்பதாய் இருந்தால் Dedicated graphic card உபயோகிக்கலாம். கணினி வேகம் குறையாது. குறைவான பயன்பாடு மட்டும் போதுமென்றால் integrated graphic card போதும்.

ஆன்ட்டி வைரஸ் புரோக்கிராம் முக்கியமாய் இருக்க வேண்டும். அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆமை புகுந்த வீடும் ஆன்ட்டி வைரஸ் இல்லாத கணினியும் நல்லாயிருக்காது.

i3-4GB , i5-8GB, i7-8GB இருக்கும். தேவைக்கேற்ப பார்த்து வாங்கலாம். பேட்டரி:

ஒரு நல்ல பேட்டரி இல்லாமல், உங்கள் லேப்டாப் உங்களுக்குத் திருப்தியைக் கொடுக்காது. உங்கள் லேப்டாப் குறைந்தபட்சம் 4-6 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொடுக்க வேண்டும். எட்டு மணிநேர பேட்டரி நன்றாகக் கருதப்படுகிறது.

எல்லோரும் வைத்துள்ளனர் என வாங்காமல் தேவையாக இருப்பின் வாங்கவும். பள்ளிவயது குழந்தைக்கு எனில் i3-4GB-1TB போதும். கல்லூரி மாணவர்க்கு எனில், i5-8GB-2TB -Grabhic card போதும். பிசினஸ்க்காக வாங்க வேண்டுமெனில் கமர்ஷியல் லேப்டாப் வாங்கலாம். ஏனெனில் வெயில், தூசு, வெப்பம் ஆகியவற்றுக்குப் பொருந்தும். எல்லாமே இருப்பதுபோல தேவை எனில் i7-8GB-16GB RAM-SSD Hard disc- graphic card 8GB.

பட்ஜெட், பயன்பாடு இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன லேப்டாப் வாங்குவதில். இணைய வல்லுநர் நண்பர்கள் மற்றும் துறைசார் நண்பர்களின் ஆலோசனையுடன் வாங்கலாம். நல்லன தேர்தெடுத்தால் பிறகு வரும் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் வசதியும் ஆண்ட்ராய்டு போனும் இல்லாத மாணவ மாணவியரின் கதி என்ன எனவும் யோசிக்க வைத்துள்ளது.

Monday, October 30, 2023

October 30, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் When are laptops for government school students? Information from Minister Anbil Mages

நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்(நிப்டெம்) சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிப்டெம் இயக்குநர் வி.பழனிமுத்து வரவேற்றார்.

விழாவில், அரசுப் பள்ளியில் படித்து இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ள 13 பேருக்கு லேப்டாப்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் மாதிரி பள்ளித் திட்டத்தின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்ஐடி, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம். இத்திட்டத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதிநிலை சரியான பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், 6,218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார். இந்த விழாவில் அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர்- செயலர் இரா.சுதன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மேயர் சண். ராமநாதன், முதன்மைக் கல்வி அலுவலர் இரா.மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய சட்டப் பள்ளியில்...

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் மத்திய அரசின் தேசிய சட்டப் பள்ளி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் 17 மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடும் நிகழ்ச்சி தேசிய சட்டப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் இல்லை என்கிற நிலை இன்று உருவாகி உள்ளது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் மாணவர்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி உள்ளோம்.

தற்போது ஒரு மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பதுபோல, நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கவும், தொடர்ந்து

பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாட்டையும் தொடங்கியுள்ளோம்” என்றார். இதில், ரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Total Pageviews

Search This Blog