Breaking

Showing posts with label ACHIEVEMENT. Show all posts
Showing posts with label ACHIEVEMENT. Show all posts

Saturday, April 13, 2024

Tuesday, December 05, 2023

December 05, 2023

அரசு பள்ளி மாணவர்களின் புது முயற்சி! - கோயில் தேர்களுக்கு பிரேக்



கோயில் தேர்களுக்கு பிரேக் - அரசு பள்ளி மாணவர்களின் புது முயற்சி! Brake for Temple Chariots - Government School Students' New Initiative!

கோயில் தேர்களுக்கு பிரேக் கண்டறிந்துள்ளனர் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள். அதை நிஜத் தேரில் பொருத்தி செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களில் தேர்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். மரத்தால் செய்யப்பட்ட இந்த கோயில் தேர்களை பக்தர்கள் கைகளால் இழுத்துச் செல்வார்கள். பொதுவாக கோயில் தேர்களுக்கு பிரேக் கிடையாது. தேரை நிறுத்த வேண்டும் என்றால் பக்தர்கள் மரக்கட்டையைத்தான் உபயோகிப்பார்கள். தேருக்கு மிக அருகில் சென்று சுழலும் சக்கரங்களுக்கு எதிராக மரக்கட்டையை செருகி நிறுத்துவது ஆபத்தான நடைமுறை. மரக்கட்டைகள் தேரின் வேகத்தை குறைக்கவோ, நிறுத்தவோ கைமுறையாக பயன்படுத்தப்படுவதால் விபத்து நிகழ வாய்ப்புண்டு. அத்துடன் தேர்களின் சக்கர அச்சும் கடும் சேதமாகும். இயற்பியல் பாடத்தில் வரும் சுழல் மின்னோட்டத்தை இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம் விளக்கும் போது தேருக்கு சுழல் மின்னோட்ட பிரேக் வடிவமைக்கும் ஆவலை புதுச்சேரி முத்தரையர் பாளையம் இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சீவி, முத்து செல்வா இசக்கி ஆகியோர் தெரிவித்தனர்.

ஆசிரியர் வழிகாட்டுதல்படி இரு மாணவர்களும் 3 மாத காலமாக பள்ளியில் உள்ள அட்டல் டிங்கரிங் ஆய்வுக்கூடத்தில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தேருக்குஉராய்வற்ற பிரேக்குகளை உருவாக்கினார்கள். தேர் வடிவமைப்புக்கு பள்ளி நுண்கலை ஆசிரியர் இளமுருகன் வழிகாட்டினார். பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் முன்பாக நேற்று முன்தினம் தேரை பிரேக்குடன் இணைத்து செயல்படுத்தி காட்டினர். இது பற்றி மாணவர்கள் சஞ்சீவி, முத்து செல்வா இசக்கி ஆகியோர் கூறியதாவது: சுழல் மின்னோட்ட பிரேக் அல்லது உராய்வற்ற பிரேக் வேகமாக செல்லும் ரயில்களிலும், ரோலர் கோஸ்டர்களிலும் பயன்படுகிறது. ஆனால் இதுவரை மெதுவாக நகரும் வாகனங்களுக்கு பயன்படுத்தப் படவில்லை. தேர் மெதுவாக நகரக்கூடியது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நிலை காந்தங்கள், பல் சக்கரங்கள், டைமிங் பெல்ட், அனுமினியம் வட்டுத்தகடு ஆகியவைக் கொண்டு 24 வோல்ட் மின்துணையுடன் தேருக்கு பாரடேவின் தூண்டல் விதிகள், சுழல் மின்னோட்டம், லென்ஸ் விதி ஆகியவை பயன்படுத்தி தேருக்கு உராய்வற்ற பிரேக்கை வடிவமைத்தோம். தொடக்கத்தில் தோல்வியடைந்து, அதிலிருந்து கற்று மேம்படுத்தினோம். கோயில் தேர் சக்கரத்தின் அச்சு அமைப்பில் பல்சக்கரம் மற்றும் டைமிங் பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாக தேர் சக்கரம் நகரும்போது அச்சில் இணைக்கப்பட்டிருக்கும். அலுமினியத்தால் ஆன 2 டிஸ்குகள், பல்சக்கரம் மற்றும் டைமிங் பெல்ட் உதவியுடன் வேகமாக அச்சை பற்றி சுழல வைக்கும்.

அலுமினியம் காந்தத்தால் கவரப்படாது. தேரில் பிரேக்கை பயன்படுத்தும்போது வேகமாக சுழலும் அனுமினிய டிஸ்குகளுக்கு எதிராக ஒரு சோலனாய்டு உலக்கை மற்றும் 24 வோல்ட் மின்சாரம் ஆகியற்றின் உதவியுடன் 2 செட் நியோடைமியம் நிலை காந்தங்களின் அடுக்கை நெருக்கமாக நகர்த்தும். இந்த காந்தங்கள் பாரடே மின்காந்த தூண்டல், சுழல் மின்னோட்டம், லென்ஸ் விதிப்படி சுழலும் சக்கரத்தின் இயக்கத்தை உராய்வில்லாமல் நிறுத்தும். இதனால் தேரின் வேகம் குறைந்து நிலை நிறுத்தப்படும். இது உராய்வு இல்லாத பிரேக். மென்மையான துல்லியமான கட்டுப்பாட்டை வழங்கும். இது பாரம்பரிய பிரேக் சிஸ்டம் போல் இருக்காது. சுழல் மின்னோட்ட பிரேக்குகள் நகரும் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளாது. அதனால் பாகங்கள் தேய்மானம் ஏற்படாது. பாதுகாப்பானது. என்றனர். இயற்பியல் ஆசிரியர் ஸ்ரீராம் கூறுகையில், “வகுப்பறை பாடங்கள் சமூகத்துக்கு பயனுள்ளதாக அமைய விரும்பினேன். அதன்படி தேருக்கு பிரேக் கண்டுபிடித்து மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். பாடம் நடத்தும்போது தேருக்கு பிரேக் அமைக்கும் யோசனை பள்ளி மாணவர்களுக்கு எழுந்தது. அதன்படி தான் படிப்படியாக இதை செயல்படுத்தினர்.

ஆகம விதிகளை மீறாமல் மோட்டார் வைக்காமல் செயல்படுத்தியுள்ளோம். நிஜ தேர் எடையும், உயரமும் அதிகம். அதற்கு தகுந்தாற்போல் உருவாக்க முடியும். நாங்கள் சிறு கல்விக்கூடத்தில் உள்ளோம். உயர் கல்விக் கூடத்தின் ஆலோசனையும் உதவியும் கிடைத்தால் நிஜத் தேருக்கும் வடிவமைப்பை நாங்கள் உருவாக்கலாம்” என்று குறிப்பிட்டார். இக்கண்டுபிடிப்பை புதுச்சேரி, தமிழக கோயில்களில் செயல்படுத்தும் யோசனையையும் இம்மாணவர்கள் வைத்துள்ளனர். அவர் களின் கனவு பலிக்கட்டும்.

Saturday, November 04, 2023

November 04, 2023

குறும்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சென்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி

குறும்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சென்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினாவிடை சார்ந்த போட்டிகள், பள்ளி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.


பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதல் இடம் கிடைத்தது.

முன்னதாக கல்விச் சுற்றுலாவாக மாணவியை அமெரிக்கா அழைத்துச் செல்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக பாஸ்போர்ட், விசா தயாரானபோதும், பள்ளி கல்வித்துறை தாமதத்தால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனா நேற்று ஜப்பானுக்கு புறப்படுகிறார்.

Wednesday, February 15, 2023

February 15, 2023

சர்வதேச அளவில் கராத்தே போட்டியில் முதலிடம்- தஞ்சை 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் சாதனை



சர்வதேச அளவில் கராத்தே போட்டியில் முதலிடம்- தஞ்சை 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் சாதனை - 1st in International Karate Competition - Achievement of Tanjore 3rd Class Govt

தஞ்சையைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் கராத்தே, மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல கோப்பைகளை பெற்று வரும் நிலையில் சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் சுமார் 195 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.. இப்பள்ளியில் பயின்று வரும் குழந்தைகள் அனைவரும் பல விதமானவிளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அவ்வபோது பல பரிசுகளையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இப்பள்ளியில்மூன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சாய்சரண் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இந்த க்யூட் குட்டிமாணவனுக்குசிறு வயதிலேயே உதித்த விளையாட்டு மேல் உள்ள நீங்கா காதலால் தஞ்சை மாவட்டத்தில் எங்கு மாரத்தான், கராத்தே போன்ற விளையாட்டுபோட்டிகள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாக பங்கேற்று பதக்கம் மற்றும் கோப்பைகளையும் ஷீல்டுகளையும் வென்று அசத்தியுள்ளார் இந்த அரசு பள்ளி மாணவன்.

அது மட்டுமல்லாமல் சென்னையில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் முதலிடமும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தன் பெற்றோருக்கும், தஞ்சை மாவட்டப்பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் யோகா, சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்று பல பரிசுகளையும் குவித்துள்ளனர்.இந்த தொடக்கப் பள்ளியில் 195 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் அனைத்து திறன்களையும் வெளிக்கொணர்ந்து சிறந்த மாணவர்களை உருவாக்குவதே எங்கள் கடமை என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார் தெரிவித்தார். மேலும் கராத்தே போட்டிகளில் பங்கு பெற செய்து வழிநடத்திய பயிற்சியாளர் சத்யா மற்றும் பயிற்சி பள்ளியின் ஆசிரியர் பொய்யாமொழி கூறுகையில், ‘இந்த மாணவன் சாய்சரண் கடந்த 6 மாதத்திலேயே பலசாதனைகளை படைத்து உள்ளான்‌.அவன் முதல் நாள் பயிற்சி பெற வரும் போதே கணித்தோம் இவனுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளது என்று. மேலும் மிகப்பெரிய சாதனைகளைமாணவன் படைப்பான் என்று கூறினார்கள்.

அரசர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் சிலம்பம், கராத்தேமற்றும் பல போட்டிகளில் பரிசுகளை குவித்துள்ளனர் என்றும் பெருமிதம் கூறினார்.

வரும் கல்வி ஆண்டு முதல 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், பள்ளி வளாகத்தில் புதிய பொலிவுடன் ஸ்மார்ட் கிளாஸ் கொண்ட வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் விளையாட நவீனபுதிய அம்சங்களுடன் செயல்படவும் தயாராகி வருகிறது என்றும் தலைமை ஆசிரியர் கூறினார்

Thursday, February 02, 2023

February 02, 2023

சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி

A government school student who won gold at the world level in Silambam - சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி

சேலம் அருகே அரசுப்பள்ளி மாணவியான ரமணி உலக அளவில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்

எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தறி தொழிலாளியான ஆறுமுகம் - சுதா தம்பதி. இவர்களது இளைய மகள் ரமணி எடப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிலம்பம் போட்டியில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக அளவில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, தங்கப்பதக்கமும் கோப்பையும் வென்று அசத்தியுள்ளார்.

கூலி வேலைக்குச் சென்று, தன்னையும் தன்னுடன் பிறந்த நான்கு பேரையும் வாடகை வீட்டில் வசித்தபடி மிகுந்த சிரமப்பட்டு தங்களை படிக்க வைக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ரமணி தங்கப்பதக்கத்தையும் கோப்பையையும் பெற்றோர்களிடம் வழங்கி ஆசி பெற்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.இதுகுறித்து ரமணி கூறுகையில், “எதிர்வரும் காலங்களில் உலக அளவிலான சிலம்பம் போட்டியிலும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு, மேலும் பல்வேறு சாதனைகள் புரிய எனது பெற்றோரிடம் வசதி இல்லை. இதன் காரணமாக அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தால், தமிழ்நாட்டிற்கும் எனது கிராமத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் பல சாதனைகள் புரிய வாய்ப்பாக இருக்கும்.எதிர்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணங்களை எனக்குள் வளர்த்து வருகிறேன்.

ஆனால், குடும்பம் வறுமையில் உள்ளது. அதில் இருந்து மீளவும் கல்வி மேம்படவும் பள்ளி சென்று வர நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் கால்நடைகள் மேய்க்கிறேன்' என்கிறார் ரமணி.பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து சிலம்பத்தில் சாதனைப் படைத்துள்ள ரமணிக்கு எண்ணங்கள் நிறைவேற அரசும் தன்னார்வலர்களும் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Friday, August 05, 2022

August 05, 2022

செயற்கை கோளுக்கு மென்பொருள் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. வான்வெளி அறிவியலில் பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில் முற்றிலும் மாணவிகள் மட்டுமே செயற்கைக்கோள் மென்பொருட்கள் தயாரிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் 75 பள்ளிகளை சேர்ந்த, 750 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகள் பவதாரணி, ஏஞ்சல், கவுரி, ஹரி வைஷ்ணவி, ஜெய்ரின் இருதயா, யசோதாதேவி, பத்மினி, அத்சாராணி, சுவேதா, பிருந்தா ஆகிய 10 பேர் தேர்வாகினர். இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோளின் ஒரு பாகம் தயாரிக்க ‘சிப்’ அனுப்பி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். 5 மாதத்தில் இந்த பணியை மாணவிகள் சிறப்பாக செய்து முடித்தனர். அவர்கள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 7ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க மாணவிகள் 10 பேரும் இன்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்கின்றனர். தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நேற்று இப்பள்ளிக்கு நேரில் சென்று சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து திருக்குறள், ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Monday, June 13, 2022

June 13, 2022

ரீடிங் மாரத்தான் – தமிழக மாணவர்கள் உலக சாதனை - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக்குறிப்பு!!

செய்திக் குறிப்பு

'ரீடிங் மாரத்தான்' தமிழக மாணவர்கள் உலக சாதனை!

ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் நடைபெற்ற ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 இலட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை கோடை விடுமுறை காலத்தில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக 12 நாட்கள் ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டி நடைபெற்றது சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் 'கூகுள் ரீட் அலாங்க் (Google read along) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைப்பேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை மாணவர்கள் வாசித்து உள்ளனர் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் இந்த நிகழ்வில் 18.36 லட்சம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் 12 நாட்களில் 263.17 கோடி சொற்களைச் சரியாக வாசித்துச் சாதனை படைத்து உள்ளனர், இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 இலட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்து உள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக நிகழ்ந்துள்ளனர். உலகலாவிய அளவில் கூகுள் ரீட் அலாங்க செயலியை பயன்படுத்தியதில் தமிழக மாணவர்கள் உலக சாதனை புரிந்துள்ளார்கள். 413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 இலட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றுள்ளது. அடுத்ததாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் (40.19 இலட்சம்) மற்றும் மேலூர் வட்டாரம் (41.72 இலட்சம்) ஆகியவை இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த ரீடிங் மரத்தான் தொடர் வாசிப்பு நிகழ்வு உதவி புரிந்துள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மற்றும் வாசிப்பு வேகம் ஆகியவை மேம்பட்டுள்ளது. பல நூறு கதைகள் வழியாக புதிய சொற்களை மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். அலைபேசிகளை வாசிப்புப் பழக்கத்திற்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த இயலும் என்ற புதிய வாய்ப்பை இந்த ரீடிங் மாரத்தான் ஏற்படுத்தித் தந்துள்ளது.

Tuesday, March 29, 2022

March 29, 2022

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்

பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்

ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில், 28 மாணவர்கள் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.70 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர்.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிக்க | TET - தகுதித்தேர்வு நிபந்தனைகளை அரசு கைவிட்டு 10 ஆயிரம் ஆசிரியர்களை காப்பாற்ற கோரிக்கை

இதுகுறித்து ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எல்.சுரேஷ்சேனாதிபதி கூறியது:

கஜா புயல் பாதிப்பின்போது, எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஆம்பல் ரிலீப் ஃபண்ட் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி, நிதி வசூலித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம்.

பின்னர், அதே பெயரில் கிராம வளர்ச்சி மற்றும் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக நிதி திரட்டினோம். தொடக்கத்தில், இலுப்பைத்தோப்பு அரசுப் பள்ளியில் 1,500மாணவர்கள் படித்துவந்த நிலையில், தற்போது 500-க்கும் குறைவானவர்களே படித்து வருகின்றனர். எனவே, இப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பரிசு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்காக, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என 21 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பெற்று, இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளோம். வரும் ஆண்டுகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதுபோன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளோம் என்றார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு! - உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் கணேசன் கூறியபோது, “கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உள்ள இந்தப் பகுதியில், பரிசு பெறும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு அந்தத் தொகை மிக உதவியாக இருக்கும் என்றுகூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். பரிசுத் தொகையை பெறுவதற்காக மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்” என்றார்.

Wednesday, March 09, 2022

March 09, 2022

வெற்றிலையில் 1330 திருக்குறள் எழுதி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு முயற்சி

வெற்றிலையில் 1330 திருக்குறளை எழுதிய அரசு பள்ளி தமிழ் ஆசிரியைக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இவரது சாதனை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி அகோர வீரபத்திரசுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். மனநலன் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து, இரவு தங்க வைத்து வேண்டி கொண்டால், நோய் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து செல்வதால் அனுமந்தபுரம் பிரபலமான ஊராக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு ஊர், தற்போது உலகளவில் புகழ்பெறும் வகையில், மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

அனுமந்தபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், நாகப்பட்டினத்தை சேர்ந்த சீதளாதேவி (42), தமிழ் ஆசிரியையாக பணியாற்றுகிறார். அவர், குழந்தையாக இருந்தபோது கிருபானந்த வாரியாரின் மடியில் தவழ்ந்து வளர்ந்த அவர், தமிழில் முதுகலை பட்டம் முடித்து, கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளியில், தமிழ ஆசிரியையாக பொறுப்பேற்று அனுமந்தபுரத்திற்கு வந்தார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட சீதளாதேவி, 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்று, அதனை மாணவர்களுக்கும் போதிக்கும் பணியையும் செய்து வந்தார். இதைதொடர்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை முன் வைத்து அவர், பல்வேறு திருக்குறள் தொடர்பான சாதனைகளை செய்து வருகிறார். ஐஸ் குச்சி எனப்படும் மூங்கில் பட்டைகளை சேகரித்து, 223 குச்சிகளில் 1330 திருக்குறள்களை 19 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார். மேலும் உலகளவில் திருக்குரளை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கடந்த 2020ம் ஆண்டு கரும்பலகைகளில் எழுதப் பயன்படும் 268 சாக்பீஸ்களில், 12.5 மணிநேரத்தில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைத்தார்.

இதையும் படிக்க | ‘நம் பள்ளி நம் பெருமை’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கம்

இந்நிலையில் கடந்த வாரம் வெற்றிலையில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைக்க முயற்சித்து வெற்றி கண்டுள்ளாம்ா. 43 வெற்றிலைகளை இதற்காக பயன்படுத்திய சீதளாதேவி, அதற்காக 20 மணி நேரமே எடுத்து கொண்டார். ஆரம்பத்தில் வெற்றிலையில் எழுதத் தொடங்கியபோது பேனா மையின் சூடு தாங்காமல் வெற்றிலை வாடி விட்டதாகவும், இதையடுத்து ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று வெற்றிலையை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்துக்கு அனுப்பியதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்த சாதனை தற்போது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நேற்று நேரடியாக அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று, ஆசிரியை சீதளாதேவிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் அளித்து வாழ்த்து பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சூர்யகுமார் தலைமையில் கிராம மக்களும், தலைமை ஆசிரியர் நேரு தலைமையில் சக ஆசிரியர்களும் சாதனை புரிந்த ஆசிரியை சீதளாதேவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, அனுமந்தபுரம் ஆசிரியை சீதளாதேவியின் சாதனை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய அங்கீகாரத்தை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Sunday, February 06, 2022

February 06, 2022

அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 பேரை கலெக்டர் பாராட்டினார்

அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 பேரை கலெக்டர் பாராட்டினார்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 மாணவ-மாணவியர்கள் மற்றும் அம்மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பயின்று தற்போது மருத்துவ படிப்புக்கு தேர்வாகி பல்வேறு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நமது மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே இரண்டாவது அதிக அளவில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. அதாவது எம்பிபிஎஸ் படிப்பில் 23 மாணவர்களும் பிடிஎஸ் படிப்பில் 5 மாணவர்களும் தேர்வாகி உள்ளனர். இந்த அளவிற்கு நமது மாவட்டம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு மாணவர்களின் உழைப்பும் ஆசிரியர்களின் கடின உழைப்பும் பெற்றோர்களின் ஊக்கமும் இதற்கு முக்கிய காரணம் .ஆகையால் இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதற்கு ஆசிரிய பெருமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், நேர்முக உதவியாளர் ந.பூபாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளுர்) ஆ.எல்லப்பன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, January 29, 2022

January 29, 2022

நீட் தேர்வில் 64 வயது ஆசிரியர் தேர்ச்சி: பி.யூ.சி., சான்றிதழ் இருந்ததால் சீட் மறுப்பு

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்குக்கு வந்த 64 வயது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு 'சீட்' மறுக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி. நீட் தேர்வில் 348 மதிப்பெண் பெற்றார். அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தார்.எம்.எஸ்சி. தாவரவியல் எம்.எட். முடித்த இவர் மருத்துவ படிப்பில் சேர கல்வி தகுதி பெற்றவர் என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையின் சார்பில் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்ததற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் உறுதியளிப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. தர வரிசையில் முன்னிலை

இந்த சான்றிதழ்களுடன் மருத்துவ படிப்பில் சேர கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்தார். ஆனால் மருத்துவ தர வரிசை பட்டியல் வெளியானபோது முனுசாமி பெயர் இல்லை. பின் முனுசாமி மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகளை சந்தித்து சான்றிதழ்களை சமர்ப்பித்தார்.

இதையடுத்து தர வரிசை திருத்த பட்டியல் வெளியானது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் இடம் பெற்றார். நேற்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங் நடக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்துக்கு வந்தார்.

இடம் மறுப்பு

மருத்துவ கல்வி அதிகாரிகள் அவர் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என கூறினர். அவர் பி.யூ.சி. படிப்பைஅரசு உதவி பெறும் விவேகானந்தா கல்லூரியிலும் படித்ததால் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.முனுசாமி கூறுகையில் ''அரசாணைப்படி எனக்கு ஒதுக்கீடு கிடைக்க சட்ட ரீதியாக முயற்சிப்பேன்''என்றார். விட்டுக் கொடுத்த ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம் 61. விலங்கியல் முதுகலை பட்டம் பெற்ற இவர் 2020ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.தனது பெற்றோர் கனவை நனவாக்கசிவபிரகாசம் 'நீட்' தேர்வு எழுதினார்.அதில் 249 மதிப்பெண் பெற்ற அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியலில் 349வது இடம்பெற்றார்.நேற்று துவங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்ற சிவபிரகாசம் மருத்துவ படிப்பை மாணவர்களுக்கு விட்டு கொடுப்பதாக கூறி தனக்கு கிடைத்த மருத்துவ வாய்ப்பை கைவிட்டார்.

விழிப்புணர்வு

சிவபிரகாசம் கூறியதாவது:போட்டி தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் பயப்படக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்வு எழுதினேன். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக இருக்கும் என் மகன் பிரசாந்த் கூறியதால்என் இடத்தை மற்றொரு அரசு பள்ளி மாணவருக்கு விட்டுக் கொடுத்தேன். எனக்குவழிகாட்டியாக இருந்து ஊக்குவித்த மனைவி சுப்புலட்சுமிக்கு நன்றி என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, November 18, 2021

November 18, 2021

வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு - திண்டுக்கல் மாணவி தேசிய சாதனை!

அகில இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில் -ஐ.சி.ஏ.ஆர்., திண்டுக்கல் மாணவி அ.ஓவியா 23, தேசிய அளவில் 2ம் இடம், தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கண்ட அமைப்பு கால்நடைத் துறையில் பட்ட மேற்படிப்புக்காக இத்தேர்வை செப்.,17 ல் நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சாதனை படைத்த மாணவி ஓவியாவை புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பேராசிரியர்கள் பாராட்டினர்.

ஓவியா கூறுகையில், ''இளங்கலை படிப்பின்போதே முதுகலை படிக்கும் எண்ணம் இருந்ததால் இத்தேர்வுக்கென புத்தகங்களை தயார்படுத்திக் கொண்டேன். எனது ஆசிரியர்கள், சீனியர் மாணவியர் எனக்கு வழிகாட்டினர். இதற்கென தனிப்பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இரு மாதங்களாக இரவு 12:00 மணி வரை படித்தேன். 'டிவி' பார்ப்பதை தவிர்த்து விட்டேன்,'' என்றார்.

Wednesday, November 17, 2021

November 17, 2021

கல்வியறிவு தேர்வில் 89 மதிப்பெண் 104 வயது கேரள மூதாட்டி சாதனை

கேரளாவில் நடந்த கல்வியறிவு தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 104 வயது கேரள மூதாட்டியின் மன உறுதிக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா விளங்குகிறது. இம்மாநிலத்தின் மொத்த கல்வியறிவு 96.2 சதவீதமாக உள்ளது. இதில் 92.07 பெண்கள், 96.11 சதவீத ஆண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 104 வயது மூதாட்டி குட்டியம்மா. இவர் சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை என்பதால் எழுத, படிக்க தெரியாது. இவர் சமீபத்தில் அரசு நடத்தும் சாஷாரத்தா வகுப்பில் சேர்ந்து மலையாளம் மொழியில் எழுத, வாசிக்க கற்றுக் கொண்டார்.
இவர் அண்மையில் அரசு நடத்திய கல்வியறிவுத் தேர்வில் நூற்றுக்கு 89 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். கல்வி கற்பதில் இருந்த இவரது மனஉறுதியை பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குட்டியம்மாவின் தணியாத கல்வி தாகத்துக்கு தலைவணங்குவதாகவும் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tuesday, October 26, 2021

October 26, 2021

உலக சாதனை நிகழ்ச்சி-600 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

விராலிமலை : இலுப்பூர் அருகேயுள்ள மேலபட்டியில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும், சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாகவும் பள்ளி மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.பஞ்சபூதா சர்வதேச தற்காப்புக் கலை சம்மேளனம் சார்பில் பஞ்சபூதா உலக சாதனை புத்தகத்தின் நிகழ்வாக நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழர்களின் பாரம்பரிய போர்கலையான சிலம்பத்தில் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியவாறு இரண்டு கிலோ மீட்டர் தூரம், ஒரு மணி நேரம் நின்ற நிலையில் இடைவிடாது சிலம்பத்தை கைகளால் சுழற்றியும் மாணவர்கள் சாதனை படைத்தனர். 638 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை பஞ்சபூதா நிர்வாக இயக்குனரும், சிலம்பக்கலை வல்லுனருமான சதீஷ்குமார் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

சிலம்பக் கலை, மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ தண்டாயுதபாணி, தாசில்தார் முத்துக்கருப்பன், ரவிச்சந்திரன் (தனி), மருத்துவர் புனிதாகுமார், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சத்யமூர்த்தி, ஆர்ஐ பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர். 13. நாற்று நடுவதற்குமுன் உயிர் உர நேர்த்தி அவசியம்-வேளாண் உதவி இயக்குனர் தகவல்

பொன்னமராவதி : பொன்னமராவதி பகுதி விவசாயிகள் நெல் நாற்று நடுவதற்கு முன் உயிர் உர நேர்த்தி செய்யவேண்டுமென்று பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி கூறினார்.நெல் நாற்றுக்களை பறித்து நாற்றங்காலின் ஓரத்தில் அணைகட்டி ஒரு ஏக்கர் நிலம் நடுவதற்குரிய நாற்றங்காலுக்கு 200மி அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவத்தை ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு நட வேண்டும்.

பாக்டீரியாக்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை தழைச்சத்தாக மண்ணில் நிலை நிறுத்தும். வளர்ச்சி ஊக்கிகளை வெளியேறும் இதனால் பயிர் வீரியமாக வளரும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மகசூல் அதிகரிக்கும். உரச் செலவை குறைக்கலாம். விவசாயிகள் பொன்னமராவதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இதனை பெற்று பயன்படும்படி கேட்டுக்கொண்டார்

Thursday, October 07, 2021

October 07, 2021

வெப்பம் பாதிக்காத இன்சுலின் மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 'இன்சுலின்' ஊசி மருந்தை குளிர்சாதன வசதியின்றி, சாதாரண அறையில் வைத்து பாதுகாக்க முடியும் என இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த, இந்திய ரசாயன தொழில்நுட்ப மையம், கோல்கட்டாவின் இந்திய ரசாயன உயிரியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து, குளிர்சாதன பெட்டியின்றி, சாதாரண அறையில் இன்சுலின் மருந்தை பாதுகாக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக, இன்சுலின் மருந்தை, 2-8 செல்சியஸ் டிகிரியில் வைத்து பாதுகாக்க வேண்டும். இதனால், குளிர்சாதன பெட்டி வசதியில்லாத தொலைதுாரங்களில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து கிடைப்பது கடினமாக உள்ளது. சிலர், இன்சுலின் ஊசி மருந்தை, ஐஸ் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து தினமும் உடலில் செலுத்திக் கொள்கின்றனர். இந்த முறையில் சில சமயம், இன்சுலின் மருந்து உறைந்து விடும் பிரச்னை உள்ளது. அடிக்கடி பணி நிமித்தமாக வெளியூர் செல்வோருக்கும், குளிர்சாதன வசதியுடன் இன்சுலின் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வாக 'சாதாரண தட்பவெப்பம் நிலவும் அறையில் இருந்தாலும், சிறிதளவும் வீரியம் இழக்காத இன்சுலின் மருந்தை தயாரிக்க முடியும்' என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்காக, 'இன்சுலாக்' என்ற நான்கு அமினோ அமிலங்களின் மூலக்கூறு கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதை, இன்சுலின் மருந்துடன் கலந்து எலிக்கு கொடுத்து சோதித்ததில், மருந்தின் ஆற்றலில் மாறுபாடு இல்லாதது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை 'ஐசயின்ஸ்' என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

'இந்த இன்சுலாக் மூலக்கூறுப் பொருள், மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும். இதையடுத்து உருவாக்கப்படும் குறைந்த விலை இன்சுலின் மருந்தை, தொலை துாரத்தில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் சுலபமாக பயன்படுத்த முடியும்' என, விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து, மனிதர்களிடம் இன்சுலாக் கலந்த இன்சுலின் மருந்தின் சோதனையை மேற்கொள்ளவும், விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Thursday, September 16, 2021

September 16, 2021

செவித்திறன் குன்றியோர் வாகனம் ஓட்ட சேஃப்டி எய்டு கருவியை கண்டுபிடித்து அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் அசத்தல்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய பாதுகாப்பு கருவியை கண்டுபிடித்து பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளார். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனங்களை இயக்கும் போது இயரிக் எய்டு கருவி மூலம் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியை கேட்கின்றனர். ஆனால் தலைக்கவசம் அணியும் போது அந்த ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த சிரமத்தை போக்கும் வகையில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் 3 பேர் புதிய சேஃப்டி எய்டு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


மதுமிதா, ரம்யா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய மூன்று மாணவிகள் கண்டுபிடித்துள்ள இந்த கருவி வாகனத்தின் பின்பக்கத்தில் சென்சார் கருவியுடன் பொருத்தப்படுகிறது. பின்வரும் வாகனங்களின் அதிர்வை சென்சார் கருவி வாகன ஓட்டிக்கு கடத்துகிறது. ஒன்றிய அரசின் அடல் டிங்கரிங் திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் இந்த சேஃப்டி எய்டு கருவியை 3 மாணவிகளும் கண்டுபிடித்துள்ளனர். இதன் தயாரிப்பு செலவு 1,700 என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

Total Pageviews

Search This Blog