Breaking

Showing posts with label letter pad. Show all posts
Showing posts with label letter pad. Show all posts

Wednesday, June 21, 2023

Friday, January 20, 2023

January 20, 2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Press Release - நாள்: 20.01.2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் Press Release - நாள்: 20.01.2023

மறிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு

இனிய வணக்கங்கள்,

1. இன்றைய நாளில், பள்ளிக்வய்வித்துறையில், சுமார் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதைப்போன்றே முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

2 எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் ஏராளமான மானாவச் செல்வங்கள் அரகப் பள்ளிகளில் வந்து சேர்ந்துள்ளனர்.

3. நிலைமை இவ்வாறு இருக்கையில், கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை அக்கல்வி ஆண்டு முடியும்வரை அதாவது மே மாதம் வரை, பணியில் நீட்டிக்கலாம் என்று நடைமுறையில் இருந்து வரும் ஆணையை நடைமுறைப்படுத்தாபல் உதாசீனப்படுத்தி ஏழை எளிய மாணவர்களின் கல்வி பெறும் வாய்ப்பை பறிமுதல் செய்வது நியாயம்தானா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

4. ஆகவே அருள்கூர்ந்து இப்பிரச்சனையில் தாங்கள் உடனடி கவனம் செலுத்தி, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், தொடர்ந்து அக்கல்வி ஆண்டு முடியும் வரை மாணவர்களின் நலன் கருதி, பணியாற்றலாம் என்ற ஆணையை உடனடியாக பிறப்பிக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

Tuesday, August 16, 2022

August 16, 2022

அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க அரசுக்கு கோரிக்கை!

அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க அரசுக்கு கோரிக்கை!

அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன்தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய நாட்டின 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 01.07.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று என அறிவித்துள்ளீர்கள். வழக்கமான நடைமுறையை சற்று தாமதமாக அறிவித்திருந்தாலும் மகிழ்வையும் வரவேற்பையும் எமது இயக்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் மத்திய அரசு 2022 ஜனவரி முதல் வழங்கியுள்ள அகவிலைப்படியை, 2022 ஜூலை முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படி என்பது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகும். அதையே காலம் தாழ்த்தி வழங்குவதே அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்போது வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படியை 01.01.2022 முதல் அறிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே ஜனவரி மாதம் 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிய போதே நிதிநிலையை காரணம் காட்டி அகவிலைப்படியை தாமதமாக அறிவித்து, அகவிலைப்படி நிலுவையும் வழங்கப்படவில்லை. எனவே தற்போதும் அதைப் போன்றதொரு நடைமுறை பின்பற்றப்படுவது ஏற்புடையதாக இல்லை என்பதை எங்கள் பேரியக்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்தியஅரசு அகவிலைப்படியை அறிவிக்கும் பொழுதெல்லாம் அதைப் பின்பற்றி உடனடியாக அறிவித்து வந்தார். எனவே அதையே பின்பற்றி அகவிலைப்படி உயர்வினை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனவே 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Monday, May 16, 2022

May 16, 2022

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை விரைவில் களைய வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம்

Friday, April 08, 2022

April 08, 2022

மாத ஊதியம் பெற்று வழங்கிட வேண்டுதல் சார்பாக ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை

மதிப்பிற்குரிய ஆணையர் அவர்களுக்கு வணக்கம்

பொருள்: மாத ஊதியம் பெற்று வழங்கிட வேண்டுதல் - சார்பாக,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை.

அவர்களது பணியிடம் IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எனவே கால தாமதம் ஆகிறது என்றும் அதற்கான சரியான வழிகாட்டுதல்கள் ஏதுமின்றி ஆசிரியர்கள் ஊதியம் பெற இயலாத சூழல் நிலவுகிறது. மேலும் சில பள்ளிளுக்கு காலிப்பணியிடங்களுக்கு சென்றவர்களுக்கும் அந்த பணியிடம் பள்ளியின் அளவை பதிவேட்டில் (Scale Register)-ல் இருந்தும் IFHRM-ல் இல்லை என்பதால் ஊதியம் பெற்று வழங்கப்படாமல் உள்ளது. எனவே இவைசார்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் பெற ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

Wednesday, March 09, 2022

March 09, 2022

இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆணையருக்கு கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

மதிப்புமிகு ஆணையர் அவர்களுக்கு,

வணக்கம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற பணி நிரவலின் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு தினமும் தங்கள் இல்லத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு பணிமாறுதல் பெற வாய்ப்பின்றி அல்லலுற்று வருகின்றனர். ஆகவே தற்போது நடைபெற்று வரும் பணி நிரவல் கலந்தாய்வில் அவ்வாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஏற்கனவே தங்களிடம் எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு (W.P.No.: 3571/2022 மற்றும் W.P.No.4563/2022) அவ்வாசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து ஆணைபிறப்பிக்குமாறு தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

எனவே பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் எங்களின் கோரிக்கையினை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்து தற்போது நடைபெறும் பணி நிரவல் கலந்தாய்வுக்கு முன் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கிட ஆவன செய்யுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் ரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆவன செய்யுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog