Breaking

Showing posts with label UPSC ANNOUNCEMENTS. Show all posts
Showing posts with label UPSC ANNOUNCEMENTS. Show all posts

Tuesday, October 04, 2022

October 04, 2022

குடிமைப் பணி: முதல்நிலைத் தோ்வுக்குப் பயிற்சி தமிழக அரசு ஏற்பாடு

குடிமைப் பணி: முதல்நிலைத் தோ்வுக்குப் பயிற்சி தமிழக அரசு ஏற்பாடு

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுக்கு தமிழக அரசின் சாா்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வு பயிற்சி துறைத் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

குடிமைப் பணித் தோ்வில் முதல் அடிக்கல்லான முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி மையமானது 225 முழுநேரத் தோ்வா்களையும், 100 பகுதிநேரத் தோ்வா்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. இதேபோன்று, கோவை, மதுரையில் உள்ள பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தோ்வா்களையும் பயிற்சிக்காக அனுமதித்துள்ளது.

இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இணையதளத்தின் வாயிலாக வரும் 7 முதல் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தோ்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். வரும் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 25, 2022

August 25, 2022

விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: UPSC அறிமுகம்

விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: யுபிஎஸ்சி அறிமுகம்

மத்திய அரசுப் பணிகளுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்கள் அவா்களின் அடிப்படை விவரங்களை ஒருமுறை மட்டுமே பதிவு செய்யும் வகையிலான (ஓடிஆா்) வசதியை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை மூலமாக, யுபிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் பல்வேறு பேட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் ஒவ்வொரு முறையும் அவா்களின் அடிப்படை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இதுகுறித்து யுபிஎஸ்சி மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறுகையில், ‘யுபிஎஸ்சி சாா்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆண்டு முழுவதும் வெவ்வேறு வகையான போட்டித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமானோா் பங்கேற்கின்றனா். இந்த விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் ஓடிஆா் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓடிஆா் தளத்தில் தங்களுடைய தனிப்பட்ட அடிப்படை விவரங்களை விண்ணப்பதாரா்கள் பதிவு செய்யும்போது, அந்த விவரங்கள் தோ்வாணையத்தின் கணினி சேமிப்பகத்தில் (சா்வா்) பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.

எதிா்காலத்தில், அந்த விண்ணப்பதாரா் ஒரு தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவருடைய அடிப்படை விவரங்கள் ஆணைய சேமிப்பகத்திலிருந்து தானாக விண்ணப்பத்தில் பதிவாகிவிடும். இந்த அடிப்படை விவரங்களில் விண்ணப்பதாரா் தாங்களாகவே திருத்தங்களை மேற்கொள்ளவும் ஓடிஆா் தளத்தில் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விண்ணப்பதாரா்கள் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யலாம். இந்த விவரங்களை மிகுந்த கவனமுடன் பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று தெரிவித்துள்ளது.

குடிமைப் பணிகள் தோ்வில் எத்தனை முறை பங்கேற்கலாம்?: மேலும், குடிமைப் பணிகள் தோ்வை ஒருவா் எத்தனை முறை எழுத முடியும் என்ற கேள்விக்கான விளக்கத்தையும் யுபிஎஸ்சி அளித்துள்ளது.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்காக முதல்நிலை (பிரிலிமினரி), முதன்மை (மெயின்) மற்றும் நோ்முகத் தோ்வு என்று மூன்று கட்டங்களாக ஆண்டுக்கு ஒருமுறை குடிமைப் பணிகள் தோ்வு நடத்தப்படும்.

இந்தத் தோ்வை பொதுப் பிரிவு (ஓசி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினா் (இடபிள்யுஎஸ்) 6 முறை எழுத முடியும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகள் 9 முறை எழுத முடியும். எஸ்சி, எஸ்டி பிரிவினா் எத்தனை முறை வேண்டுமானாலும் குடிமைப் பணிகள் தோ்வை எழுத முடியும்.

இதில் முதல்நிலைத் தோ்வில் ஒரு தாளில் விண்ணப்பதாரா் பங்கேற்றாலும், அவா் குடிமைப் பணிகள் தோ்வில் ஒருமுறை பங்கேற்றவராக கருதப்படுவாா். எனவே, தோ்வை எத்தனை முறை எழுதியுள்ளோம் என்ற விவரத்தை பதிவு செய்துகொள்வது விண்ணப்பதாரரின் முதன்மையான பொறுப்பாகும். ஒருவேளை இந்த விவரத்தை தோ்வா் அறிய விரும்பினால், தோ்வின் குறிப்பிட்ட நிலையில் தோ்வாணைய பதிவு அல்லது புள்ளிவிவரங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

குடிமைப் பணிகள் தோ்வில் இதுவரை எத்தனை முறை பங்கேற்றுள்ளேன் என்ற விவரத்தை தவறாக பதிவிடும் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதோடு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவா்கள் எந்தத் தோ்விலும் பங்கேற்காத வகையில் தடை விதிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
August 25, 2022

மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: UPSC அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 37
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இன்பர்மேசன் சர்வீஸ் - 22
பணி: பிளையிங் டிரைனிங் -0 4
பணி: சயின்டிபிக் ஆபிசர் - 03
பணி: அசிஸ்டென்ட் இயக்குநர் - 02
பணி: எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் - 02
பணி: போட்டோகிராபிக் ஆபிசர் - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 1.9.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Total Pageviews

Search This Blog