Wednesday, December 24, 2025
Thursday, December 18, 2025
Thursday, February 16, 2023
ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) “வாழ்வாதார உரிமை மீட்பு” மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு - நாமக்கல் மாவட்டம்
1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.
2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று முறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானது ஆறு மாதம் காலம் கடந்து வழங்கப்பட்டது.
ஒன்றிய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லுாரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும் . மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும் . சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள் , சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் - பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் . உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக வேண்டும் . அனைத்து பள்ளிகளிலும் , கல்லுாரிகளிலும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியமர்த்திட வேண்டும். 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.
Monday, October 31, 2022
Monday, September 12, 2022
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஸ்டாலின் 'அல்வா'
அவர் மேலும் கூறியதாவது:
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வால், சிறு, குறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை ஏற்றுவது தான் திராவிட மாடலா.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர், அமைச்சர்கள் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளன.
பழனிசாமிக்கு இருப்பது, 'டெம்ப்ரவரி' பதவி தான். விரைவில், அவர் பொதுச் செயலராவார். அவர் தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். காங்., - எம்.பி., ராகுல் இளம் தலைவர். அவரது பாதயாத்திரை, காங்.,க்கு பலன் தருமா என தெரியவில்லை. அவருக்கு பலன் தரும்.முதல்வர் ஸ்டாலின், 'நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன்' என்கிறார். அதை கேட்டால் சிரிப்பு வருகிறது. போட்டோவுக்கு போஸ் கொடுத்து, 'டிவி'யில் முகத்தை தான் காட்டுகிறார்.
இப்படி பேசி, சினிமாவில் நடிகர் வடிவேல் இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்குகின்றனர்.'நீட்' தேர்வை தி.மு.க., ரத்து செய்யும் என்று மாணவர்களை குழப்பியதால் தான் தேர்ச்சி குறைந்துள்ளது. திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை என்கிறார் முதல்வர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா, இல்லையா என தெரியாமலா 'மதுவிலக்கு இல்லாத மாநிலமாக மாற்றுவேன்' என, உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, September 10, 2022
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு - ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, மற்ற மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன்.
போராட்டக் காலத்தை பணிக்காலமாக வரைமுறைப்படுத்தி அளிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டனர். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம்.
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். பள்ளி கல்வி துறையை சீரமைக்க கொண்டு வரப்பட்ட அரசாணையில் சில மாற்றங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். கல்வி துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர். துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் தன் கவனத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Friday, September 02, 2022
செப். 10 இல் ஜாக்டோ ஜியோ மாநாடு! அதற்கு முன் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டம்
Thursday, August 25, 2022
சென்னையில் செப்.10-இல் 'ஜாக்டோ ஜியோ' மாநாடு: முதல்வர் பங்கேற்பு
இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் முந் தைய ஆட்சியின்போது கோரிக்கை களை வலியுறுத்தி பல போராட் டங்களை நடத்தியபோதும், எங்க ளது மனுவைக் கூட பெறவில்லை.
தற்போதைய திமுக அரசு ஜாக்டோ ஜியோ கோரிக்கை கள் தொடர்பாக 3 முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. எங்க ளது கோரிக்கை மனுவையும் முதல் வரிடம் வழங்கியுள்ளோம்.
முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளுக்காக போராட் டம் நடத்தியபோது, குறைந்தபட் சம் பேச்சுவார்த்தை கூட நடத்த வில்லை. அதனால் போராட்டங் களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வர் 'ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதி அளித்திருக்கிறார்.
'ஜாக்டோ ஜியோ' சார்பில் சென் னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி மாநாடு நடத்தவுள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்றார்.
'ஜாக்டோ - ஜியோ' மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க. நீதி ராஜா, வெ. பாபு பிரேம்குமார், உயர்மட்டக்குழு உறுப்பினர் இரா. தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.
Monday, August 22, 2022
தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - செப்டம்பர் 10ம் தேதி
ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு
வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் சென்னை - தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது
வங்கக் கடலோரம் சங்கமித்து சாதிப்போம் வாருங்கள் !!!
இவண்...
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)






