Breaking

Showing posts with label State Election Commission. Show all posts
Showing posts with label State Election Commission. Show all posts

Tuesday, January 23, 2024

January 23, 2024

அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தல் 2024 - அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்...

Election Commission of India instructions/ reply to Chief Electoral Officer of TamilNadu regarding General Election to Lok Sabha 2024 - Transfer / Postings of Officers (BDO's,Tahsildars & Sub-Inspectors of Police) connected with election - LokSabha Elections2024...

நாடாளுமன்ற தேர்தல் 2024 - அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்...

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம்... 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்...

I am directed to refer to your letter no. 7400/2023-2, dated 22.12.2023 on the subject cited and to inform you that the Commission has allowed BDOs, Tahsildars and Sub-Inspectors of Police who are district cadre officers to remain posted within the district, but they should be posted out from the Assembly Constituency where their home town is located or where their tenure exceeds 3 years out of the last 4 years. Yours/hithfully

Thursday, November 03, 2022

November 03, 2022

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, நவ. 3: தமிழகத்தில் 17 வயதுடைய இளை ஞர்கள், இளம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி. இவர்களில், 55.37 சதவீதம், அதாவது 3.42 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர். கள் ளக்குறிச்சி, அரியலுார், தர்மபுரி மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஆதார் எண் வழங்கி உள்ளனர். மிகக் குறைவாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே வழங்கி உள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவாகவும், ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர். மொத்தம் 31 மாவட்டங்களில் 50 சதவீ தத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ஆதார் எண் அளித்துள்ளனர்.

வரும் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அன்று முதல் வாக்காளர் பட்டி யல் சுருக்க திருத்தப் பணி துவங்கும். இம்முறை 17 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, விண்ணப் பம் அளிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும், அவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, February 06, 2022

February 06, 2022

முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதி ரத்து அதிகாரிகளுக்கு 10ம் தேதி 2வது பயிற்சி: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேதியை ரத்து செய்து, தேர்தல் அதிகாரிகளுக்கான இரண்டாவது பயிற்சி வரும் 10ம் தேதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை கடந்த மாதம் 26ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது.

சென்னை மாநகராட்சியை தவிர, இதர மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணி அமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் 9ம் தேதி இரண்டாவது பயிற்சி அளிக்க அறிவுறுத்தி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தக்க அறிவுரைகள் ஆணையத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதர அனைத்து மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சியை நிர்வாக காரணங்களுக்காக 10.2.2022 (வியாழக்கிழமை) அன்று நடத்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog