EXAMS
December 28, 2025
Showing posts with label Anna University Jobs. Show all posts
Showing posts with label Anna University Jobs. Show all posts
Sunday, December 28, 2025
Thursday, December 25, 2025
Monday, August 21, 2023
temporary TEACHERS
August 21, 2023
தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: ஆக.28-க்குள் விண்ணப்பிக்கலாம்!
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: ஆக.28-க்குள் விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆக.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியா்கள் மூலம் நிரப்புவதற்கு அண்ணா பல்கலை. முடிவெடுத்தது.
அந்தவகையில் முதல்கட்டமாக கிண்டி பொறியியல் கல்லூரி(சிஇஜி ) மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரியில்(எம்ஐடி) உள்ள ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை. தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சிஇஜி கல்லூரியில் கட்டுமான பொறியியல்(சிவில்)–2, கணிதம்–5, ஆங்கிலம்–5, இயந்திரவியல் (மெக்கானிக்கல்) பொறியியல் –3 என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், எம்ஐடியில் ஆங்கிலம்–8, கணிதம்–4, இயற்பியல்–1 என 13 பணியிடங்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளன. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் www.kalviseithiofficial.com என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான கல்வித்தகுதி, ஊதியம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Thursday, May 25, 2023
Thursday, February 09, 2023
temporary posts
February 09, 2023
அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்!
அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்! Anna University appoints employees on lease basis!
அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பணி நிலைப்பு வேண்டும்- நீக்கம் கூடாது! - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. உண்மையில் இத்தகைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஆனால், இத்தகைய அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதன் நோக்கம் பெரும் கவலையை அளிக்கிறது. இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நியமிக்காது என்று அறிவித்திருப்பதன் நோக்கம், இனி அனைத்து பணிகளிலும் நிரந்தரப் பணியாளர்கள் தான் நியமிக்கப் படுவார்கள் என்பதாக இருந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், படித்து விட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகவும் இருந்திருக்கும். ஆனால், அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு அறிவித்திருப்பதன் நோக்கம், தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை விட குறைந்த ஊதியத்தில், எந்த காலத்திலும் பணி நிலைப்பு உரிமை கோர முடியாத வகையில், குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது தான். அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதவி எழுத்தர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணிகளுக்கு இனி தினக்கூலி/தற்காலிக அடிப்படையில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்; மாறாக அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஊழியர்களை பெறுவது குறித்த நடைமுறைகள் அடுத்த ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது.
இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், குத்தகை முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பணியில் இருக்கும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தான். இதை அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர். இது உண்மையாக இருந்தால் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை இழப்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முடிவை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறது. அவ்வாறு வலியுறுத்தும் போதெல்லாம் அம்முடிவை தற்காலிகமாக கிடப்பில் போட்டிருந்த பல்கலைக்கழக நிர்வாகம், இப்போது அந்த முடிவை முழுமூச்சாக செயல்படுத்தத் தயாராகியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டால் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அத்தகைய பொறுப்பு கொண்ட அரசாங்கமே, அதை மறந்து விட்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது.
தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அமைத்தது. நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பது தான் அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆய்வு வரம்பு ஆகும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து குத்தகை முறை நியமனம் குறித்த ஆய்வு வரம்புகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பல்கலைக்கழகங்களில் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்க நடக்கும் முயற்சிகளை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பணி நிலைப்பு வேண்டும்- நீக்கம் கூடாது! - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. உண்மையில் இத்தகைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஆனால், இத்தகைய அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதன் நோக்கம் பெரும் கவலையை அளிக்கிறது. இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நியமிக்காது என்று அறிவித்திருப்பதன் நோக்கம், இனி அனைத்து பணிகளிலும் நிரந்தரப் பணியாளர்கள் தான் நியமிக்கப் படுவார்கள் என்பதாக இருந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், படித்து விட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகவும் இருந்திருக்கும். ஆனால், அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு அறிவித்திருப்பதன் நோக்கம், தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை விட குறைந்த ஊதியத்தில், எந்த காலத்திலும் பணி நிலைப்பு உரிமை கோர முடியாத வகையில், குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது தான். அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதவி எழுத்தர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணிகளுக்கு இனி தினக்கூலி/தற்காலிக அடிப்படையில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்; மாறாக அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஊழியர்களை பெறுவது குறித்த நடைமுறைகள் அடுத்த ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது.
இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், குத்தகை முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பணியில் இருக்கும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தான். இதை அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர். இது உண்மையாக இருந்தால் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை இழப்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முடிவை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறது. அவ்வாறு வலியுறுத்தும் போதெல்லாம் அம்முடிவை தற்காலிகமாக கிடப்பில் போட்டிருந்த பல்கலைக்கழக நிர்வாகம், இப்போது அந்த முடிவை முழுமூச்சாக செயல்படுத்தத் தயாராகியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டால் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அத்தகைய பொறுப்பு கொண்ட அரசாங்கமே, அதை மறந்து விட்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது.
தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அமைத்தது. நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பது தான் அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆய்வு வரம்பு ஆகும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து குத்தகை முறை நியமனம் குறித்த ஆய்வு வரம்புகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பல்கலைக்கழகங்களில் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்க நடக்கும் முயற்சிகளை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
Tuesday, January 31, 2023
jobs
January 31, 2023
தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.2.2023
தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறையில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிம் இருந்து வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அறிவிப்பில் வெளியிட்டுள்ளவாறு, நாள்தோறும் சம்பளம் வழங்கப்படும்.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: professional Assistant-I
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.821 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Professional Assistant-II
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.771 வழங்கப்படும்.
தகுதி: எம்சிஏ, எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Clerical Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு486 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Peon
காலியிடங்கள்: 3
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.424 வழங்கப்படும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் கவரின் மீது பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, Anna University Sports Board, Anna University, Chennai - 600 025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.2.2023
மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Saturday, January 28, 2023
latest jobs
January 28, 2023
முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - ஜனவரி.30, 2023
முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Senior Research Fellow, Research Assistantஉள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் - தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம்
பதவி - Senior Research Fellow, Research Assistant
காலியிடம் - 03
கல்வித்தகுதி - BE / B.Tech in CSE / IT, ME / M.Tech, Masters Degree, M.Sc
சம்பளம் - ரூ.20,000-35,000
வயது வரம்பு - 28
பணியிடம் - சென்னை
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல், எழுத்து தேர்வு
இணையதள முகவரி - https://tngreencompany.com/
கடைசி தேதி - ஜனவரி.30, 2023
முகவரி - Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur
Monday, January 02, 2023
government jobs
January 02, 2023
தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.1.2023
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகம், குரோம்பேட்டையில் தற்காலிக அடிப்படையில் கணினி தொழில்நுட்பத் துறையில் ஆசிரியரல்லாத பணியான தொழில்முறை உதவியாளர்-I (கணினி தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.821 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.022-2022/MIT/Non-Teaching. தேதி: 29.12.2022
பணி மற்றும் இதர விவரங்கள்: நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்
பணி: Professional Assistant-I(Computer Technology)
காலியிடங்கள்: 6
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: நாள் சம்பளம் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ரூ.821 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் அதிகயளவில் வரப்பெற்றால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai 600044
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.1.2023
Sunday, January 01, 2023
jobs
January 01, 2023
அண்ணா பல்கலையில் வேலை - கடைசி தேதி - 25 ஜனவரி,2023
டிகிரி முடிச்சாச்சா?அண்ணா பல்கலையில் காத்திருக்கு வேலை! - Anna University Jobs - Last Date - 25 January,2023
சென்னை அண்ணா பல்கலையில் காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் - அண்ணா பல்கலைக் கழகம்.
பதவி - Project Assistant, Project Associate
கல்வித்தகுதி - BE/B.Tech B.Sc, BCA, Diploma, M.Com, MBA, ME/M.Tech
காலியிடங்கள் - 05
சம்பளம் - 18000-36000
பணியிடம் - சென்னை
தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
கடைசி தேதி - 25 ஜனவரி,2023
இணையதளம் - https://www.annauniv.edu/nwsnew/
சென்னை அண்ணா பல்கலையில் காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் - அண்ணா பல்கலைக் கழகம்.
பதவி - Project Assistant, Project Associate
கல்வித்தகுதி - BE/B.Tech B.Sc, BCA, Diploma, M.Com, MBA, ME/M.Tech
காலியிடங்கள் - 05
சம்பளம் - 18000-36000
பணியிடம் - சென்னை
தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
கடைசி தேதி - 25 ஜனவரி,2023
இணையதளம் - https://www.annauniv.edu/nwsnew/



