Breaking

Showing posts with label WhatsApp QR. Show all posts
Showing posts with label WhatsApp QR. Show all posts

Thursday, February 27, 2025

Wednesday, August 07, 2024

Monday, January 29, 2024

January 29, 2024

WhatsAppல் சூப்பர் அப்டேட் அறிமுகம்... பயனாளர்கள் குஷி.



வாட்ஸ்அப்பில் சூப்பர் அப்டேட் அறிமுகம்... பயனாளர்கள் குஷி.

ஃபோட்டோ, வீடியோ, ஆவணங்கள் போன்றவற்றை நம்முடைய நண்பர்கள், குடும்ப உறவுகள், அலுவலக ஊழியர்கள் போன்றோருக்கு பகிர்ந்து கொள்ள நாம் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த தொழில்நுட்பம் வருவதற்கு முன்பாக நாம் ப்ளூடூத் வசதியை பயன்படுத்தி வந்தோம். இவ்வாறு ப்ளூடூத் மூலமாக அனுப்பி வைக்கும்போது நீண்ட நேரம் பிடித்தது. இதனால் ஷேர் இட், ஷேர் மீ போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினோம்.

அதில் எவ்வளவு பெரிய ஃபைல் ஆக இருந்தாலும் நொடிப் பொழுதில் நமக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால், ஷேர் இட், ஷேர் மீ போல எண்ணற்ற ஷேரிங் ஆப்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு செயலியை பயன்படுத்தி வந்ததால், அவர்களுடன் நாம் இணைக்க முற்படும்போது நாமும் புதிய, புதிய செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் பெரும்பாலான நபர்கள் வாட்ஸ்அப் மூலமாகவே ஆவணங்களை அனுப்பி வைக்கத் தொடங்கினர்.

இன்டர்நெட் மூலமாக இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதே சமயம், வாட்ஸ்அப்பில் பெரிய ஃபைல்களை அனுப்பி வைக்க முடியாது என்றொரு குறை இருந்தது. அதற்கும் கூட கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டது.

அதன்படி வாட்ஸ்அப்பில் 2 ஜிபி வரையிலான ஃபைல்களையும் கூட தங்கு தடையின்றி அனுப்பி வைக்க முடிந்தது.

ஆனால், இதிலும் கூட நம்முடைய டேட்டா காலியாகி விடுகிறது என்றொரு குறை மக்கள் மனதில் இருக்கிறது. மேலும் பெரிய ஃபைல் என்றால் அதன் அப்லோடிங் நேரம் அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தான், அருகாமையில் இருக்கும் நபர்களிடம் வீடியோ மற்றும் ஃபோட்டோ போன்ற ஃபைல்களை நேரடியாக அனுப்பி வைக்கும் வசதியை செயல்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்தப் புதிய வசதியை பயன்படுத்துவதற்கு, வாட்ஸ்அப் செயலியில் புதிய ஆப்சன் ஒன்று இடம்பெறும் என்று தெரிகிறது.

அங்கு சென்று இரு தரப்பு யூசர்கள் தங்களுக்கிடையே ஆவணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

அதேசமயம், வாட்ஸ்அப் சேட்டிங்கில் உள்ளதைப் போல இதற்கும் எண்டு-டூ-எண்டு பாதுகாப்பு வசதி உண்டு.

ஆண்டிராய்டு ஃபோன்களில் ஏற்கனவே நியர்பை என்ற செயலியும், ஆப்பிள் ஐஃபோன்களில் ஏர் டிராப் என்ற செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், வாட்ஸ்அப்பில் இடம்பெறும் புதிய அம்சமானது பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.

Monday, November 27, 2023

November 27, 2023

WhatsApp செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலி – புதிய வசதி அறிமுகம்!

Google is working on improving its RCS-supported Messages app to compete with popular instant messaging apps like WhatsApp and Signal. The company has recently added features such as better message management, emoji reactions, and the ability to watch YouTube videos within the app.

வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலி – புதிய வசதி அறிமுகம்!

மக்கள் பலர் வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளை பயன்படுத்திய வரும் நிலையில் அதற்கு போட்டியாக கூகிள் மெசேஜ்ஸ் ஆப் செயலியில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

கூகுள் அறிவிப்பு:

மக்கள் ஆண்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கும் நிலையில், அதிகமாக வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த செயலிகளுக்கு போட்டியாக கூகிள் மெசேஜஸ் ஆப் செயலியில் (Google Messages) புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன . அதன் படி மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ் எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த வசதி வாட்ஸ்அப், சிக்னல் போன்ற செயலிகளுக்குப் போட்டியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. மெசேஜஸ் செயலியில் வாய்ஸ் நோட்ஸ் அம்சம் மூலம் பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

Friday, September 29, 2023

September 29, 2023

மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை!



வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்பை கல்லூரி மாணவர்கள் ஏற்க வேண்டாம் என புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரித்து வரும் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் கல்லூரி மாணவர்கள் தேவையில்லாத, அவர்களது செல்போன்களுக்கு வரும் அறிமுகம் இல்லாதா வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தங்களின் புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்றும் தேவையில்லாத இணையதள முகவரிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு (0413-2276144) கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Sunday, September 24, 2023

September 24, 2023

WhatsApp Group Call New Update - புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப்!



இனி குரூப் கால்களில் 31 நபர்கள் பங்கேற்கலாம்.

புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ்அப்...


குரூப் காலிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் அடிப்படையில், வாட்ஸ்அப் தற்போது 31 நபர்களுடன் குரூப் கால்களை இனி செய்யலாம் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

WABteaInfo வழங்கிய அறிக்கையின்படி, இனி 31 நபர்களுடன் குரூப் கால்களை செய்யலாம்

இதற்கு முன்பு வாட்ஸ்சப்பில் 15 நபர்கள் கொண்ட குரூப் கால்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டத்தில் 7 நபர்கள் மட்டுமே குரூப் கால்களில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையை 31 ஆக உயர்த்தி உள்ளது.

Tuesday, February 07, 2023

February 07, 2023

WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம்



WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம் 30 second voice recording can be put in status on WhatsApp - new feature introduced

வாட்ஸ்அப்பில் 30 வினாடி குரல் பதிவை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.. புதிய வசதி அறிமுகமாகிறது..

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.

இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர்களுக்கு கூடுதல் வசதியாக, ஸ்டேட்டஸில் வலைதள இணைப்புகளை பகிரும் போது, அதன் உள்ளடக்கத்தின் படமும் அதில் காண்பிக்கும் ‘என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் 30 நொடிகள் வரை வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, போட்டோ, விடியோ அனுப்புவதற்கும் ஆடியோ, விடியோ அழைப்புகளுக்கும் அதிகம் பயன்படுகிறது.

அந்நிறுவனமும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அனைவரும் இந்த புதிய வசதியை பெறலாம்.
February 07, 2023

சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? WhatsApp விளக்கம்



சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? WhatsApp விளக்கம் How to stay safe on social media? WhatsApp description

உலக இணைய பாதுகாப்பு நாளினை முன்னிட்டு, இணையதளத்தில் பயனாளர்கள் எவ்வாறு தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 7ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வாட்ஸ்ஆப், எவ்வாறு சமூக வலைத்தளப் பக்கங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளது. மோசடிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதலைக் கொண்டிருக்கிறது.

வாட்ஸ்ஆப்பின் பயனர் வழிகாட்டியானது, ஆன்லைனில் இருக்கும் சிக்கல்களை எடுத்துரைப்பதோடு, நாம் உறங்க வேண்டிய நேரத்தில் கூட உறங்காமல், அதிக நேரம் விழித்திருந்து நமது பொன்னான நேரத்தை ஆன்லைனில் அல்லது நமது செல்லிடப்பேசிகளில் செலவிடுவதால், நமது பாதுகாப்பை அது உறுதி செய்ய உதவுகிறதாம்.

அதற்காக, அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிமையான, பயனுள்ள தீர்வுகளை வழங்குவதாகவும் கூறுகிறது. பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் அதாவது முகவரி, செல்லிடப்பேசி எண், டெபிட்/கிரெடிட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை பகிரக் கூடாது.

தனிநபர் தங்களது புரொஃபைல் பிக்சர், கடைசியாக ஆன்லைன் வந்தது, ஆன்லைன் டேட்டஸ், தங்களைப் பற்றி, ஸ்டேட்டஸ் என அனைத்தையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், செல்லிடப்பேசி எண் நம்மிடம் இருக்கும் கான்டாக்ட் ஒன்லி அல்லது யாருமே பார்க்கக் கூடாது என்பதை கிளிக் செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஆன்லைன் வந்தால் அது யாருக்கெல்லாம் தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதையும் தனிநபர்கள் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம். வாட்ஸ்ஆப் பயனாளர்கள் வேண்டுமென்றால் டிரண்டு அடுக்கு வெரிஃபிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் செல்லிடப்பேசி திருட்டுப் போனால் இது பயன்படும்.

ஃபார்வார்டு ஆகும் அனைத்துத்தகவல்களையும் உண்மைதானா என்பதை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர்வதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்ஸ்ஆப் கொண்டு வந்திருக்கிறது. எனவே, உண்மை என்று தெரியாத எதையும் யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறது.

ஒருவேளை மோசடியான தகவல்கள் ஏதேனும் வந்தால் அது பற்றி பயனாளர்கள் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற மோசடித் தகவல்களுடன் ஒரு லிங்க் இணைக்கப்படும். அதனை கிளிக் செய்தால் உங்கள் அனைத்துத் தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது. அந்த தகவல்கள் வரும் எண்ணை தொடர்ந்து அழுத்தினால் பிளாக் அண்ட் ரிப்போர்ட் என்று வரும் அதனை தேர்வு செய்யவும்.

போலி செய்தியா? எப்படி கண்டுபிடிப்பது?

இந்தியாவில் மட்டும் 10 உண்மை கண்டறியும் அமைப்புகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளன. எனவே, அதன் மூலம், நமக்கு வரும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். போலியான தகவல்களை பகிராமல் தடுக்கலாம். போட்டோ, விடியோ, குரல் பதிவு என எது பற்றியும் உண்மை கண்டறிந்த பிறகே அதனை முழுமையாக நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog