Breaking

Showing posts with label முறைகேடு. Show all posts
Showing posts with label முறைகேடு. Show all posts

Monday, July 25, 2022

July 25, 2022

ஆசிரியர் நியமன முறைகேடு: கைது குறித்து தெரிவிக்க நள்ளிரவில் போன் செய்த அமைச்சர்!

சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டப் பிறகு, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் நான்கு முறை போனில் தொடர்புகொள்ள முயன்றதாக அமலாக்கத்துறையின் `அரெஸ்ட் மெமோ'-வில் கூறப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, அந்த மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜி, அமலாக்கத்துறையால் கடந்த சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிக்க | 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

இந்த நிலையில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டப் பிறகு, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் நான்கு முறை போனில் தொடர்புகொள்ள முயன்றதாக அமலாக்கத்துறையின் `அரெஸ்ட் மெமோ'-வில் கூறப்பட்டிருக்கிறது. அரெஸ்ட் மெமோ என்பது, கைதுசெய்யப்படும் நபரைக் காவலில் வைக்க பின்பற்றப்படும் ஒரு பொதுவான நடைமுறை. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் அவர்கள், கைதுசெய்யப்பட்டதைத் தெரிவிக்க உறவினர் அல்லது நண்பரை போனில் அழைக்கலாம்.

அந்த நடைமுறையின் கீழ்தான் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, சட்டர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டப் பிறகு, மம்தா பானர்ஜிக்கு மொத்தம் மூன்று முறை அழைப்பு விடுத்திருக்கிறார். சரியாக அதிகாலை 1:55 மணியளவில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்ட போதும், அதிகாலை 2:33 மணிக்கும், 3.37 மணிக்கும்... பின்னர் காலை 9:35 மணிக்கும் என நான்கு முறை மம்தா பானர்ஜியை போனில் அழைத்திருக்கிறார். ஆனால் மம்தா, நான்கு முறையும் சாட்டர்ஜியின் அழைப்பை ஏற்கவில்லை. இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துவிட்டது.

இதையும் படிக்க | வகுப்பு 12|நுண்ணுயிரியல்|பாடம் 10|மருத்துவ வைரலாஜி| பகுதி 2

கைதுசெய்யப்பட்ட அன்றே, மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாட்டர்ஜி, நீதிமன்ற உத்தரவின்பேரில் புவனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை மாற்றப்பட்டார். மேலும் சிகிச்சை முடிந்த பின்னர் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக இந்த விவகாரத்தில் சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 20 கோடி ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog