Breaking

Showing posts with label abil mahesh poyyamozhi. Show all posts
Showing posts with label abil mahesh poyyamozhi. Show all posts

Friday, July 22, 2022

July 22, 2022

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் முதுநிலைப் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை (2022 2024) - விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 29.07.2022

மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Monday, April 18, 2022

April 18, 2022

பள்ளிகளுக்கு 13 நாள் கோடை விடுமுறை: கல்வி அமைச்சர் தகவல்

பள்ளிகளுக்கு 13 நாள் கோடை விடுமுறை: கல்வி அமைச்சர் தகவல்

கொரோனா பாதிப்பால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் நடப்பு ஆண்டில் 10 முதல் 13 நாட்களுக்குத்தான் பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல கோடைவிடுமுறை அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 47அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பாசிரியர் என்ற விருதுகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை தவிர்த்து மீதம் உள்ள நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேடக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த விவரங்கள் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது. அதன்படிதான் பொதுத் தேர்வில் கேள்விகள் இடம் பெறும் என்று மீண்டும் தெரிவிக்கிறோம். தேர்வுக்கான பாடங்கள் நடத்தாமல் இருந்தால் அவற்றை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. எனவே முதல்வர் அது குறித்து முடிவெடுத்து அறிவிப்பார்.

தற்போது கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர் சங்கங்களுடன் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளில் அரசாணை எண் 101, 108 ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

* கொரோனா பாதிப்பின் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால், பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

* தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

* இதன் காரணமாக, இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.

* அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும்.

Wednesday, March 02, 2022

March 02, 2022

10, பிளஸ் 2 தேர்வு எப்போது? இன்று வெளியாகிறது அட்டவணை

10, பிளஸ் 2 தேர்வு எப்போது? இன்று வெளியாகிறது

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று காலை வெளியிடுகிறார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட வகுப்புகளில் படித்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - 31ம் தேதி கடைசி

இந்த கல்வி ஆண்டிலும் கொரோனா பரவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொற்றின் தீவிரம் குறைந்து கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்ததின் பேரில், பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முன்வந்துள்ளது. முன்னதாக திருப்புதல் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கவும் திட்டமிட்டு அதற்கான அட்டவணைகளையும் கடந்த மாதம் வெளியிட்டு அதன்படி முதல் திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 28ம் தேதி இரண்டாம் திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தற்போது சுமார் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். அவர்களுக்கான தேர்வுகளை மே மாதம் நடத்துவோம் என்று ஏற்கனவே கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருப்புதல் தேர்வும் மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பொதுத் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பொதுத் தேர்வுக்கான அட்டவணைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தேர்வு அட்டவணைகளை வெளியிட உள்ளார்.

Total Pageviews

Search This Blog