Google Gemini
January 30, 2026
Showing posts with label Dropout Education Program. Show all posts
Showing posts with label Dropout Education Program. Show all posts
Friday, January 30, 2026
Tuesday, July 12, 2022
கல்வித் திட்டம்
July 12, 2022
படிக்கும் வாய்ப்பை தவற விட்டோர் கல்வித் திட்டம்; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கல்வித் திட்டம்;
'குடும்ப சூழ்நிலைகளால் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பை தவற விட்டோருக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக சிலர் பணிபுரிந்தனர். இவர்கள் படித்த முன் அடிப்படை கல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானது இல்லை எனக்கூறி, கேங் மஸ்துார் நிலைக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மேல் முறையீடு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், 'மனுதாரர்கள் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள்' என தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:மனுதாரர்கள் முன் அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித் தகுதியின்படி கேங் மஸ்துாராக நியமிக்கப்பட்டனர்; அப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.முன் அடிப்படை கல்வி படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி படிப்பிற்கு இணையானதாக அங்கீகரிக்க முடியாது.மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மூலம் பத்தாம் வகுப்பை முடிக்கவில்லை. பொது வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில், முன் அடிப்படை கல்வி தேர்ச்சியை கருத்தில் கொள்ள முடியாது.இவ்வாறு கூறப்பட்டது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மனுதாரர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில் பதவி இறக்கம் செய்யப்பட்டால் அவர்களின் குடும்பம், சமூகத்தில் அந்தஸ்து பாதிக்கும். மனுதாரர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.மனுதாரர்கள் 2017 நவ., 20க்கு முன்பே முன் அடிப்படை கல்வியை முடித்திருப்பதால், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள்; பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது; மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதுபோல, வாய்ப்பை தவற விட்டோருக்கான கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும். இருப்பினும், வழக்கமாக பள்ளியில் நேரடியாக படிப்பை முடித்தவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் திட்டம் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'குடும்ப சூழ்நிலைகளால் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பை தவற விட்டோருக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக சிலர் பணிபுரிந்தனர். இவர்கள் படித்த முன் அடிப்படை கல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானது இல்லை எனக்கூறி, கேங் மஸ்துார் நிலைக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மேல் முறையீடு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், 'மனுதாரர்கள் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள்' என தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:மனுதாரர்கள் முன் அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித் தகுதியின்படி கேங் மஸ்துாராக நியமிக்கப்பட்டனர்; அப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.முன் அடிப்படை கல்வி படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி படிப்பிற்கு இணையானதாக அங்கீகரிக்க முடியாது.மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மூலம் பத்தாம் வகுப்பை முடிக்கவில்லை. பொது வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில், முன் அடிப்படை கல்வி தேர்ச்சியை கருத்தில் கொள்ள முடியாது.இவ்வாறு கூறப்பட்டது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மனுதாரர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில் பதவி இறக்கம் செய்யப்பட்டால் அவர்களின் குடும்பம், சமூகத்தில் அந்தஸ்து பாதிக்கும். மனுதாரர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.மனுதாரர்கள் 2017 நவ., 20க்கு முன்பே முன் அடிப்படை கல்வியை முடித்திருப்பதால், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள்; பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது; மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன.
அதுபோல, வாய்ப்பை தவற விட்டோருக்கான கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும். இருப்பினும், வழக்கமாக பள்ளியில் நேரடியாக படிப்பை முடித்தவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் திட்டம் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.