Breaking

Showing posts with label sslc. Show all posts
Showing posts with label sslc. Show all posts

Thursday, April 20, 2023

April 20, 2023

SSLC பொதுத்தேர்வு நிறைவு - விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு

விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்
பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி

இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும். தேர்வு முடிவு

மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தகுதிவாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்யவேண்டும்.

எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்.

Wednesday, March 29, 2023

March 29, 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் விவரம் வெளியீடு!! - SSLC APRIL 2023 VALUATION CAMP LIST (FINAL AS ON 25.03.2023 - PDF

SSLC APRIL 2023 VALUATION CAMP LIST (FINAL AS ON 25.03.2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் விவரம் வெளியீடு!! CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday, March 05, 2023

March 05, 2023

மார்ச் 9-ல் தொடங்குகிறது SSLC தேர்வு

மார்ச் 9-ல் தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி தேர்வு

கேரளத்தில் மார்ச் 9 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தொடங்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த ஆண்டு தேர்வை 4,19,554 பேர் எழுதுகின்றனர்.

அரசு உதவி பெறும் பிரிவில் 1,421 தேர்வு மையங்களும், உதவி பெறாத மண்டலத்தில் 369 தேர்வு மையங்களும் என மொத்தம் 2,960 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளைகுடா பகுதியில் 518 மாணவர்களும், லட்சத்தீவில் உள்ள ஒன்பது பள்ளிகளில் 289 மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி 70 முகாம்களில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் தொடங்கும். மே 2023 இரண்டாவது வாரத்தில் முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Wednesday, July 27, 2022

Saturday, May 21, 2022

May 21, 2022

கா்நாடக SSLC பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிப்பு: 85 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தோ்வில் 85 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பெங்களூரில் வியாழக்கிழமை 2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகளை அறிவித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வில் 85.63 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்வு எழுதிய 8,53,436 மாணவா்களில் 7,30,881 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகளில் 90.29 சதவீதம் பேரும், மாணவா்களில் 81.30 சதவீதம் பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாநிலம் முழுவதும் 146 மாணவா்கள் 625-க்கு 625 மதிப்பெண்கள், அதாவது 100 சத மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

இம்முறை தோ்ச்சி பெற்றவா்களின் விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். அரசு, மானியம் பெறும், மானியம் பெறாத பள்ளிகளில் 3,920 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன. 20 பள்ளிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. பூஜ்யம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள், தோ்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். மாநிலத்தில் 32 கல்வி மாவட்டங்கள் 75-100 சதவீதம், 2 கல்வி மாவட்டங்கள் 60-75 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அடுத்த மாதம் (ஜூன்) துணைத்தோ்வு நடக்கவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ள்ள்ப்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். துணைத்தோ்வுக்கான அட்டவணை கா்நாடக மாநில மேல்நிலைத்தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வில் வெற்றிபெற்றுள்ள மாணவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தோ்ச்சி பெறாத மாணவா்கள் மனம் உடைய வேண்டியதில்லை. மீண்டும் தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம். எனவே, தைரியத்துடன் இருக்க வேண்டும். தோ்வைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியம். தோ்வில் தோ்ச்சி பெறாத பலா் வாழ்க்கையில் சாதனைகளைப் புரிந்துள்ளனா். எதிா்காலத்தைக் குறித்து யாரும் கவலை அடைய வேண்டாம் என்றாா்.

Friday, April 29, 2022

April 29, 2022

அரசு பள்ளியில் SSLC தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட்: கல்வி அலுவலர் விசாரணை

SSLC தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட்

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த கணேசனுக்கு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. கல்வி அலுவலர் விசாரணை

தற்போது, இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கணேசனுக்கு மீண்டும் ஹால்டிக்கெட் சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளது. இந்த சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, 10ம் வகுப்பு அனைத்து பாட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, விளக்க கடிதம் பெற்றுள்ளார். இதனை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அதன்படி வேலூர் மாவட்ட சி.இ.ஓ. முனியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tuesday, April 05, 2022

April 05, 2022

SSLC May 2022 Science practical date and batch Proceeding - பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.

SSLC May 2022 Science practical date and batch

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog