Breaking

Showing posts with label Leave. Show all posts
Showing posts with label Leave. Show all posts

Sunday, December 21, 2025

Monday, January 20, 2025

Monday, November 18, 2024

Monday, February 12, 2024

February 12, 2024

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு

Here 'leave' shall mean full entitlement of a women to complete wages during the period of menstruation subject to maximum of 3 days per month for a working women and of 3 days for a non-working women including students.

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரி வழக்கு A suit seeking leave with pay for female employees during menstruation

தமிழகத்தில் பணிக்கு செல்லும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பை மருத்துவ சான்றிதழ் கோராமல் வழங்க வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசை அணுக மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மாதவிடாய் காலங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மிகுந்த சிரமத்துக் குள்ளாக நேரிடுகிறது. மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. அதற்கு மருத்துவ சான்றிதழ் பெறுவது என்பது இயலாத காரியம். பிஹார் மாநிலத்தில் விடுப்பு:

பிஹாரில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டங்களில் 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், சில தனியார் நிறுவன பெண்களுக்கும் இது போன்ற கால கட்டங்களில் விடுப்பு வழங்கப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற நடைமுறை இல்லை. எனவே தமிழகத்திலும் மாத விடாய் கால கட்டங்களில் பெண் ஊழியர்களுக்கு எந்த மருத்துவ சான்றிதழும் கோராமல் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி அமர்வு:

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக கொள்கை வகுக்கும் படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அணுக ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே மனுதாரரும் மத்திய அரசை அணுகலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Thursday, January 18, 2024

January 18, 2024

ஜன.,22ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் லீவு



Subject: Half day closing (till 2.30 P.M.) of Central Government Offices, Central Institutions and Central Industrial Establishments on 22nd January, 2024 reg.

The Ram Lalla Pran Pratishtha at Ayodhya will be celebrated on 22nd January, 2024 across India. To enable employees to participate in the celebrations, it has been decided that all Central Government Offices, Central Institutions and Central Industrial Establishments throughout India will be closed for half day till 1430 hours on 22nd January, 2024.

2. All Ministries/Departments of Government of India may bring the above decision to the notice of all concerned.

ஜன.,22ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் லீவு - Half-day leave for central government offices on Jan. 22

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 22ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, September 19, 2023

September 19, 2023

நிபா பரவல் எதிரொலி - பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்


நிபா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து கோழிக்கோட்டில்பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவ னங்களிலும் நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 2 பேர் மரணமடைந்தனர். இந்த நோய் பாதித்த4பேர் தற்போதும் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் நோய் அறிகுறிகளு டன் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர நோயாளி களுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்கா ணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் கோழிக்கோடு மாவட்டத் தில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடு முறை அளிக்கப்பட்டது.

வரும் 23ம் தேதி வரை கல்வி நிறுவனங் கள் அனைத்தையும் மூட கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா உத்தர விட்டு உள்ளார். தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட் டது. தொடர்ந்து நேற்று முதல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது

Thursday, July 27, 2023

July 27, 2023

பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய அரசு!



சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.

சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விரையில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.

பேறுகால நலச்சட்டம் 1961ன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, January 20, 2023

January 20, 2023

கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு!

கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு! 60 days maternity leave for girls 18+ in Kerala!

18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.

இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.

மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.

Wednesday, October 26, 2022

October 26, 2022

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்.

ML Clarification Letter - Download here

Sunday, September 25, 2022

September 25, 2022

12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு சலுகைகள் - தமிழக அரசு

12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி பெண்களை ஊக்குவிக்கிறது -ஐகோர்ட் கிளை பாராட்டு .

தமிழகஅரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்குவது போன்ற சலுகைகளை வழங்கி பணி யாற்றும்பெண்களை ஊக்கு விக்கிறது என்று ஐகோர்ட் கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வர் கண்மணி. இவர் தனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு :

மனுதாரர் அரசின் மது ரைக்கிளை அச்சகத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற அச்சகத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள் ளது.

2016ல் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2020 பிப்ரவரி மாதம் மதுரைக்கு பணி மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் 8 மாதத்திற்குள்ளாக மீண் டும் சென்னைக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள் ளார். இதை எதிர்த்துமனு தாரர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அரசு தரப்பில் குறிப் பிடும்போது மனுதாரர் பணியாற்றிய சமயத்தில் மதுரை அரசு அச்சகத்தில் முறைகேடு நடந்ததாகவும், ரூ.1.20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வும், இந்த வழக்கு தொடர் பானதுறைரீதியான நடவ டிக்கையாகவே, இடம் மாறுதல் வழங்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இது தொடர்பான முறையான விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு பின்பே,

இதில் உரிய முடிவெடுக்க இயலும் பல ஆண்டுகளாக பெண்களின் பங்களிப்பை நாம் பயன்படுத்தவில்லை. குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் கவனித் துக் கொள்ள வேண்டிய சூழல்இருப்பதால் படித்த பெண்கள் கூட தங்கள் வேலைவாய்ப்பை கைவி டும் சூழல் உள்ளது. சமீ பத்திய உலகம் பெண்கள் முக்கியத்துறைக்கு வருவ தற்கும், அதில் தங்களை நிரூபிப்பதற்கும் வாய்ப்பு களை வழங்குகிறது.

தமிழக அரசு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்கு வது போன்ற சலுகைகளை வழங்கி பணியாற்றும் பெண்களை ஊக்குவிக்கி றது. பெண்களின் சேவை கள் எந்த தடையுமின்றி மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண் டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

Sunday, July 31, 2022

July 31, 2022

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே ஆசிரியர்களின் Leave / CL / SL / Permission, மாணவர்கள், ஆசிரியர்களின் Attendance பதிவு - பள்ளிக்கல்வித்துறை

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் Attendance பதிவு செய்யப்பட வேண்டும்

Leave / CL / SL / Permission உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ளலாம்

- பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் ஆகஸ்ட் -1 முதல் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு - வழக்கமான வருகை பதிவேட்டில் பதிவு செய்ய கூடாது

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் - CEOs ஆய்வுக் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog