Breaking

Showing posts with label Veterinary Care Assistant. Show all posts
Showing posts with label Veterinary Care Assistant. Show all posts

Friday, August 18, 2023

August 18, 2023

கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!



கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என மொத்தம் 660 இடங்கள் உள்ளது.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது. கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக ஜூன் 12 முதல் 30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிலையில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18,752 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3,783 மாணவர்கள் என மொத்தம் 22,535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் 26ம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பு பிரிவினரான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. அதில் 36 இடங்கள் நிரப்பப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 17) அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் (பிவிஎஸ்சி மற்றும் ஏஎச்) இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டது.மேலும், மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,“அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அதில் இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பில் கலையியல் பிரிவில் 109 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 60 மாணவர்களும், தொழிற்கல்விப்பிரிவில் 8 மாணவர்களும் கலந்துக் கொண்டனர். பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில் நுட்பப் படிப்பிற்கு 59 மாணவர்களுக்கு அழைப்பு அளிக்கப்பட்டதில் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இளநிலை கால்நடைமருத்துவ அறிவியியல் படிப்பில் 45 இடங்களிலும், பிடெக் பட்டப்படிப்பில் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பத்தில் தலா 3 மாணவர்களும், பால்வளத் தொழில்நுட்பத்தில் ஒரு மாணவரும் என 7 மாணவர்கள் சேர்க்கப்படுவர்” எனத் தெரிவித்தார். இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 41 இடங்களும், பிடெக் படிப்பில் 4 இடங்களும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, October 04, 2022

October 04, 2022

கால்நடை மருத்துவப் படிப்பு: 16,214 போ் விண்ணப்பம்

கால்நடை மருத்துவப் படிப்பு: 16,214 போ் விண்ணப்பம் - Veterinary Course: 16,214 applications



கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். வரும் 6-ஆம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச், பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் இணையவழியில் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச், பி.டெக் படிப்புகளுக்கு 16,214 போ் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்யவும் வரும் 6-ஆம் தேதி காலை 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினருக்கு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபா் 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog