Madurai Kamaraj University Announcement
July 01, 2023
Showing posts with label Madurai Kamaraj University Announcement. Show all posts
Showing posts with label Madurai Kamaraj University Announcement. Show all posts
Saturday, July 01, 2023
Tuesday, July 12, 2022
VIDEOS
July 12, 2022
"மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்" - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார் என சந்தேகம் எழுந்துள்ளது. பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே கவர்னரின் கடமை. கவர்னரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரசாரமாக உள்ளது. இந்திய நாட்டின் வரலாற்றை முதலில் கவர்னர் படிக்க வேண்டும். கவர்னர் எந்த '-ism' பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, June 15, 2022
student admission will be followed
June 15, 2022
M.Sc., மாணவர் சேர்க்கையில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு
மதுரை காமராஜ் பல்கலை எம்.எஸ்சி., உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 'இப்பல்கலை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் அதுசார்ந்த இடஒதுக்கீடு தான் பின்பற்ற வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பல்கலை பதிவாளர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது:மாநில பல்கலை என்பதால் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை தான் மாணவர் சேர்க்கை பின்பற்ற வேண்டும் என்ற பரிசீலனையை வலியுறுத்தி மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத் துறை செயலருக்கு துணைவேந்தர் குமார், ஜூன் 14ல் கடிதம் எழுதியுள்ளார்.
மொத்தமுள்ள 30 இடங்களில் பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு தலா 9 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 6, தாழ்த்தப்பட்டோர் 5, பழங்குடியினருக்கு 1 இடங்கள் ஒதுக்கப்படும். இதை பின்பற்றியே இக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 'ஒன்றிய அரசு' சர்ச்சை இப்பல்கலை செய்திக் குறிப்பில் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தான் இவ்வாறு உச்சரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் வேந்தராக கவர்னர் உள்ளார். கவர்னர் அலுவலகம், இதுவரை 'மத்திய அரசு' என்றே குறிப்பிட்டுவரும் நிலையில், கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ள இப்பல்கலை 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது கவர்னர் அலுவலகத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 'இப்பல்கலை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் அதுசார்ந்த இடஒதுக்கீடு தான் பின்பற்ற வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பல்கலை பதிவாளர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது:மாநில பல்கலை என்பதால் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை தான் மாணவர் சேர்க்கை பின்பற்ற வேண்டும் என்ற பரிசீலனையை வலியுறுத்தி மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத் துறை செயலருக்கு துணைவேந்தர் குமார், ஜூன் 14ல் கடிதம் எழுதியுள்ளார்.
மொத்தமுள்ள 30 இடங்களில் பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு தலா 9 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 6, தாழ்த்தப்பட்டோர் 5, பழங்குடியினருக்கு 1 இடங்கள் ஒதுக்கப்படும். இதை பின்பற்றியே இக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 'ஒன்றிய அரசு' சர்ச்சை இப்பல்கலை செய்திக் குறிப்பில் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தான் இவ்வாறு உச்சரிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் வேந்தராக கவர்னர் உள்ளார். கவர்னர் அலுவலகம், இதுவரை 'மத்திய அரசு' என்றே குறிப்பிட்டுவரும் நிலையில், கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ள இப்பல்கலை 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது கவர்னர் அலுவலகத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.