Breaking

Showing posts with label Indian Railways. Show all posts
Showing posts with label Indian Railways. Show all posts

Sunday, February 08, 2026

Friday, December 26, 2025

Tuesday, February 28, 2023

February 28, 2023

உதவித்தொகையுடன் மெட்ரொ ரயில்வேயில் தொழில் பழகுநர் பயிற்சி!

உதவித்தொகையுடன் மெட்ரொ ரயில்வேயில் தொழில் பழகுநர் பயிற்சி!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/23/Metro Raiway/Kolkata

பயிற்சியின் பெயர்: தொழில்பழகுநர் பயிற்சி (Trade Apprentice)

மொத்த காலியிடங்கள்:

125

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Fitter - 81

2. Electrician - 2 

3. Machinist - 9 

4. Welder - 9 

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சியின்போது கொல்கத்தா மெட்ரோ ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை குறுக்கு கோடிட்ட ஐபிஓ-ஆக செலுத்த வேண்டும். 


எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mtp.indianrailways.gov.in 

என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இனைத்து மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும்.

Friday, February 24, 2023

February 24, 2023

தெற்கு ரயில்வே - சென்னை கோட்டம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பபிக்க 14.03.2023

தெற்கு ரயில்வே - சென்னை கோட்டம்

முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர், தெற்கு ரயில்வே, சென்னைகோட்டம், சென்னை - 600003 அவர்கள், மேதகு இந்தியக்குடியரசுத் தலைவரின் சார்பிலும் அவருக்காகவும் வ. உ. சி. நகர் (VOC), நந்தியம்பாக்கம் (NPKM), புட்லூர் (PTLR), செஞ்சிபனம்பாக்கம் (SPAM), பரனூர் (PWU) மற்றும் | அன்வர்த்திகான்பேட்டை (AVN) ரயில் நிலையத்தில் நிறுத்த முகவர் (ஹால்ட் ஏஜன்ட்) நியமனம் செய்வதற்காக, விண்ணப்பங்களை வரவேற்கிறார்.

வ. எண். 1 முதல் 6 வரை உள்ளவற்றுக்கு: காலம்: 5 ஆண்டுகள்.

பிணை வைப்புத் தொகை: இல்லை.

விண்ணப்ப படிவக் கட்டணம்: இல்லை.

விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ள வேண்டிய அலுவலகத்தின் முகவரி: கோட்ட ரயில்வே மேலாளர் / வர்த்தகம், என்ஜிஓ இணைப்பு கட்டிடம், 2வது மாடி, பூங்கா நகர், தெற்கு ரயில்வே, சென்னை - 600 003.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதியும் நேரமும் 14.03.2023 (செவ்வாய்கிழமை) அன்று 10.00 மணி முதல் 14.00 மணி வரை

விண்ணப்ப படிவம் திறக்கப்படுதல்: 14.03.2023 (செவ்வாய்கிழமை) அன்று 14.30 .

விரிவான தகவல்கள் காணக்கூடிய இணையதள www.sr.indianrailways.gov.in

முகவரி:

விண்ணப்பங்கள் பெறப்படும் தேதியும் விண்ணப்பம் திறக்கப்படும் தேதியும் பின்னர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டால் அவை அதற்கடுத்த வேலை நாளில் நடைபெறும்.

Wednesday, November 30, 2022

November 30, 2022

மத்திய ரயில்வேயில் 2521 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2022 - முழு விவரம்!



மத்திய ரயில்வேயில் 2521 காலிப்பணியிடங்கள்: முழு விவரம்!

மேற்கு மத்திய ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மேற்கு மத்திய ரயில்வே

பணி: தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்)

காலியிடங்கள்: 2521

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எடி மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: மேற்கு மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைதளமான https://iroams.com/RRCJabalpur/applicationAfterIndex, wcr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2022 

மேலும் விவரங்கள் அறிய https://iroams.com/RRCJabalpur/pdfs/Act%20Apprrentice%20Notification%2003_2022_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Wednesday, October 26, 2022

October 26, 2022

10th, ITI முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

10th, ஐடிஐ முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் மாதம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Trade Apprentice

காலியிடங்கள்: 1,284

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உதவித் தொகை: பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.10.2022

Tuesday, October 04, 2022

October 04, 2022

இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Indian Railways invites applications for 3,115 vacancies!

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்த மாநிலத்தை சேர்ந்த இந்திய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம். 

அறிவிப்பு எண். RRC-ER/ActApprentices/2022-23

பணி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 3115

தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் தொழில்பயிற்சிக்கான என்சிவிடி, எஸ்சிடிவி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர்(வாயு மற்றும் எலக்ட்ரிக்), ஷீட்மெட்டல் ஒர்க்கர், லயன்மேன், வயர்மேன், பெயிண்டர் தொடர்புடைய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

உதவித்தொகை: பயிற்சியின்போது தொழில் பழகுநர் சட்டத்தின் படி மாதம் மாதம் உதவித்தொகை வழங்கப்படும். 

மேலும் விவரங்கள் அறிய www.rrcer.com என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Total Pageviews

Search This Blog