Breaking

Showing posts with label consultation. Show all posts
Showing posts with label consultation. Show all posts

Saturday, November 18, 2023

November 18, 2023

பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு!



பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு! Petition to the Director of School Education to cancel the recruitment consultation!

இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் நடத்த திட்டமிட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து விரிவாக விவாதித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கு.தியாகராஜன்

மாநில தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

Monday, February 13, 2023

February 13, 2023

பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வை உடனே நடத்தக் கோரிக்கை

பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வை உடனே நடத்தக் கோரிக்கை Request to hold consultation on vacancy of professor post immediately

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பதவி உயா்வு பெற தகுதியுள்ள இணை, உதவி பேராசிரியா்கள் ஏராளமாக உள்ளனா். அவா்களுக்கு உரிய நேரத்தில் கலந்தாய்வை அரசு நடத்தவில்லை. தற்போது பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் மற்றும் இணை பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை ஈடுகட்ட உரிய நேரத்தில் பதவி உயா்வு கலந்தாய்வை நடத்தாமல் விட்டது அரசின் தவறு. மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ஓய்வு பெற்றதும் புதிய இயக்குநா்களை நியமிப்பதில் அரசு மெத்தனமாக உள்ளது.

அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் முதல்வா் பதவி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை துறை இயக்குநா் பதவி நீண்டகாலமாக காலியாக உள்ளன. தமிழகத்தில் தற்போது 250 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவுக்கு, ஏற்கெனவே மருத்துவா்கள் அதிகமாகவே உள்ளனா். எனவே, இதற்கு மேலும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டாம். பதவி உயா்வு கலந்தாய்வை அரசு முறையாக விரைந்து நடத்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கான ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
February 13, 2023

யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு



யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு Yoga-naturopathy: Live consultation tomorrow

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பில் சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.

இதுவரை அந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்காதவா்கள் வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்விரு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன. இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.

இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 413 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி பிற்பகலில் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது. முதல் சுற்று மற்றும் சிறப்பு சுற்று கலந்தாய்வுகளில் இடங்கள் பெற்றவா்கள் இதில் பங்கேற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 02, 2023

February 02, 2023

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு



What is yoga and Naturopathy?
Is BNYS possible without NEET?
Is BNYS called a doctor?
Is BNYS a good course?
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு Yoga - Naturopathy Course: Special Consultation Date Notification

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: பிப்ரவரி 7-இல் சிறப்பு கலந்தாய்வு

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள், அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் உள்ளவா்கள் காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்தனா். அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான 1,766 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.

இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 421 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முதல் கட்ட கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்களும், இதில் பங்கேற்கலாம் என்றும், தற்போது உள்ள காலி இடங்களில் தகுதியின் அடிப்படையில் சோ்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

Sunday, September 11, 2022

September 11, 2022

1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் கலந்தாய்வு.

1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் கலந்தாய்வு. அக்டோபர் மாதத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு பின்வறுமாறு நடக்க வாய்ப்பு:

Tngtf மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வி ஆணையர் சந்திப்பு தகவல் (10.9.22 )

10.09.2022 நமது TNGTF அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்தனர்.

சந்திப்பு விபரம்

🎯 அனைத்து மாவட்டங்களிலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு,1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் உபரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும்.



🎯உபரி ஆசிரியர்கள் இல்லாத மாவட்டங்களில் மறு பணி நியமனம் வழங்கப்படும் இது குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்

🎯மகப்பேறு விடுப்பில் செல்பவர்களுக்கு பதிலாக SMC மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.

🎯31.08.2022 அன்று மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உபரியாக உள்ள ஆசிரியர்கள், தேவைப்படும் பள்ளிகளுக்கு மாறுதல் (Deputation or Transfer within district) செய்யப்படுவார்கள்.

🎯 அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்த பட்சம் 5 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக ஆறு பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்வது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

🎯 ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்தில் உபரி பணியிடம் இல்லாத பட்சத்தில் பணி நீட்டிப்பு (reemployment) வழங்கப்படும்.

Total Pageviews

Search This Blog