Breaking

Showing posts with label eduction in salary hike. Show all posts
Showing posts with label eduction in salary hike. Show all posts

Sunday, February 26, 2023

February 26, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு Salary hike for central government employees soon

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது.

ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஃபிட்மென்ட் காரணி உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலிக்குப் பிறகு (மார்ச் 8) மார்ச் மாதத்தில் ஃபிட்மெண்ட் காரணி மற்றும் அகவிலைப்படியை (DA) அரசாங்கம் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் இப்போது ஃபிட்மெண்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. அந்த வகையில் இந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது..

கடந்த செப்டம்பர் 2022ல், மத்திய அரசு, அகவிலைப்படியை 3% அதிகரித்தது.. இதன் மூலம் அகவிலைப்படி 38% ஆக அதிகரித்தது.. இதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Sunday, January 01, 2023

January 01, 2023

திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2021 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு

ிமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2021 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு - 18-month reduction in salary hike from June 2022 after DMK takes office

திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து நிலுவையிலுள்ள 18 மாத கால அகவிலைப்படியை, அரசு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (Tamil Nadu Graduate Teachers Association) பொதுச்செயலளார் பேட்ரிக் ரெய்மாண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2022 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலளார் பேட்ரிக் ரெய்மாண்ட் இன்று (ஜன.1) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சம வேலைக்கு சம ஊதியத்திற்காக (Equal Pay for equal Work) போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் (TN Teachers Hunger strike in Chennai) கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கு நிதித்துறை செயலாளர் (செலவினம்) தலைமையில் தமிழ்நாடு அரசு, குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், குழுவிற்கான கால வரையறை நிர்ணயம் செய்து நியாயமான கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, மேலும் கால தாமதம் செய்யாமல் தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணர்ந்து 2009-ல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். அகவிலைப்படியில் பாரபட்சம்:

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு ஜனவரி 2023 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு பின்னர், ஒன்றிய அரசு ஜூலை 2021 முதல் அகவிலைப் படி உயர்வு வழங்கியது. தமிழ்நாடு அரசு ஜூலை 2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வை ஏப்ரல் 2022 முதல் வழங்கப்படும் என அறிவித்தது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் இருந்து வந்த கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். அதில் 6 மாதம் அகவிலைப்படி பறிக்கப்பட்டது.

மேலும் ஒன்றிய அரசு, ஜனவரி 2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வினை வழங்கியது. இவ்வாறு, தமிழ்நாடு அரசு ஆறு மாதங்கள் காலம் தாமதமாக 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கியது. இதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆறு மாதம் அகவிலைப் படி உயர்வினை இழந்தார்கள்.ஏமாற்றமான அறிவிப்பு: கடந்த 2022 ஜூலை மாதம் ஒன்றிய அரசின் ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வை வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வினை தற்பொழுது 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலனைக் காக்கும் அரசு, கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சொல்கிற தமிழ்நாடு அரசு 3 முறை அகவிலைப்படி அறிவிப்பில் 18 மாத காலமாக அகவிலைப் படி உயர்வினை பறித்து இருக்கிறது.கரோனா தொற்றுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் கூறிவரும் நிலையில், கரோனா நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2022 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, தமிழ்நாடு அரசு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog