Thirukkural
January 16, 2026
Showing posts with label Daily Thirukkural. Show all posts
Showing posts with label Daily Thirukkural. Show all posts
Friday, January 16, 2026
Thursday, January 15, 2026
Thursday, November 27, 2025
Friday, December 06, 2024
Saturday, September 23, 2023
Daily Thirukkural
September 23, 2023
திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ. 15,000 பரிசுத்தொகை - அக். 31-ம் தேதி கடைசி
திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ. 15,000 பரிசுத்தொகை - அக். 31-ம் தேதி கடைசி
திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்
உலக பொதுமறை நூல் திருக்குறளில் உள்ள கருத்துக் களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய் யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப் படுகின்றன. இந்த பரிசுத்தொகையானது தற்போது ரூ. 15,000-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2023-2024-ம் ஆண்டுக்கான ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் (அரசு/தனியார்/நிதியுதவி) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு, வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரால் (ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) பரிந்துரைக்கப்படும்). ஏற்கெனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. திருக்குறள் முற்றோதலில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக, கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 0416 2256166 (99522-80798) 616 60 660016001160 தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 31-ம் தேதிக்குள், 'மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகம், 4-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேலூர் மாவட்டம் 632-009' என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.
திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்
உலக பொதுமறை நூல் திருக்குறளில் உள்ள கருத்துக் களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய் யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப் படுகின்றன. இந்த பரிசுத்தொகையானது தற்போது ரூ. 15,000-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2023-2024-ம் ஆண்டுக்கான ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் (அரசு/தனியார்/நிதியுதவி) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு, வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரால் (ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) பரிந்துரைக்கப்படும்). ஏற்கெனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. திருக்குறள் முற்றோதலில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக, கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 0416 2256166 (99522-80798) 616 60 660016001160 தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 31-ம் தேதிக்குள், 'மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகம், 4-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேலூர் மாவட்டம் 632-009' என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.
Monday, May 29, 2023
Thursday, October 27, 2022
Latest News
October 27, 2022
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியப்போட்டி: ரூ.40,000 பரிசு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியப்போட்டி: ரூ.40,000 பரிசு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் திருக்குறள் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது படைப்புகளை வரும் நவ.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். தோ்வு செய்யப்படும் சிறந்த 15 படைப்புகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதற்காக திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடா்பான ஓவியங்களை தமிழகம் முழுவதிலுமுள்ள படைப்பாளா்களிடமிருந்து பெற்று நடுவா் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த 15 படைப்புகளுக்கு இதற்கென நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடா்பில் இருக்க வேண்டும். ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட வேண்டும்.
போட்டியாளா்கள் தங்களது படைப்புகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113’ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் நவ.30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தபால் வழி அனுப்புவோா் கண்டிப்பாக ஓவியம் வரைந்தவா் பெயா் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவா்கள், இப்போது நடத்தப்படும் போட்டியில் பங்கேற்கக் கூடாது. தோ்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் நிறுவனத்தால் டிச.23-ஆம் தேதி நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். திருக்குறள் ஓவியப் போட்டி குறித்து கூடுதல் தகவல்களை வலைதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் திருக்குறள் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது படைப்புகளை வரும் நவ.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். தோ்வு செய்யப்படும் சிறந்த 15 படைப்புகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதற்காக திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடா்பான ஓவியங்களை தமிழகம் முழுவதிலுமுள்ள படைப்பாளா்களிடமிருந்து பெற்று நடுவா் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த 15 படைப்புகளுக்கு இதற்கென நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடா்பில் இருக்க வேண்டும். ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட வேண்டும்.
போட்டியாளா்கள் தங்களது படைப்புகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113’ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் நவ.30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தபால் வழி அனுப்புவோா் கண்டிப்பாக ஓவியம் வரைந்தவா் பெயா் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவா்கள், இப்போது நடத்தப்படும் போட்டியில் பங்கேற்கக் கூடாது. தோ்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் நிறுவனத்தால் டிச.23-ஆம் தேதி நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். திருக்குறள் ஓவியப் போட்டி குறித்து கூடுதல் தகவல்களை வலைதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, July 29, 2022
புத்தக அட்டை
July 29, 2022
புத்தக அட்டை படத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: கோவையில் சர்ச்சை
கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அட்டை படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருப்பதுபோல உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனிடம் கேட்டபோது ,” புத்தகத்தில் உள்ள உள்ளடகத்தை பாருங்கள். அதை தவிர்த்து கவிஞரின் உடையை பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அட்டை படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருப்பதுபோல உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனிடம் கேட்டபோது ,” புத்தகத்தில் உள்ள உள்ளடகத்தை பாருங்கள். அதை தவிர்த்து கவிஞரின் உடையை பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
Sunday, September 05, 2021
Sunday, August 29, 2021
NEWS
August 29, 2021
ஒன்றரை மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் சொல்லிக்கொண்டே 13 அடி அகலம் 30 அடி உயர திருவள்ளுவர் ஓவியம்: 7ம் வகுப்பு மாணவி சாதனை
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒன்றரை மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் சொல்லிக்கொண்டே 13 அடி அகலம், 30 அடி உயர திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து 7ம் வகுப்பு மாணவி லக்ஷனா சாதனை படைத்துள்ளார். திருவள்ளூரைச் சேர்ந்த செந்தில்குமார், சாந்தி தம்பதியரின் மகள் லக்ஷனா. ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் இம்மாணவி கொரோனா கால கட்டத்தில் நெல்லை தியாகராஜநகரில் உள்ள பாட்டி ராமலட்சுமியின் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். மேலும் கடந்த ஓராண்டு காலமாக சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் இம்மாணவி நேற்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில், 1330 திருக்குறளையும் சொல்லிக்கொண்டே 13 அடி அகலம், 30 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் இருப்பதுபோல் திருவள்ளுவரின் முழு உருவ ஓவியத்தை ஒன்றரை மணிக்குள் வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் கலாம் புக் ஆப் அவார்டு சாதனை புத்தகங்களில் இடம்பெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட நூலகர் மீனாட்சிசுந்தரம், பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா, ஓவிய ஆசிரியர் சிவராம்கிருஷ்ணன், சுங்கவரித் துறை அலுவலர் காக்கும்பெருமாள், முருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை படைத்த மாணவி லக்ஷனாவை பாராட்டினர்
Wednesday, August 11, 2021
Daily Thirukkural
August 11, 2021
1330 குறளை எப்படி கேட்டாலும் அசராமல் கூறி அசத்தும் 8-ஆம் வகுப்பு மாணவி
1330 குறளை எப்படி கேட்டாலும் அசராமல் கூறி அசத்தும் 8-ஆம் வகுப்பு மாணவி
கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் 1330 குறளை எந்த விதத்தில் கேட்டாலும், எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் கூறி அசத்துகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பேரரசி. இவர், 1330 குறள்களையும் சொல்லி, அனைவரையும் வியக்கவைக்கிறார். 10 குறள்கள் படிக்கவே பெரிய வகுப்பு மாணவர்கள் சிரமப்படும் நிலையில், பேரரசி தன் முதல் வகுப்பிலேயே சுமார் 500 குறள்களை மனப்பாடமாகச் சொல்வதோடு, அந்த குறள்களுக்கு தெளிவுரையும் கூறியதை பார்த்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் ஆச்சரியமடைந்தனர். பேரரசி ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது அவரது தாயார் பூங்கொடி திருக்குறளை படிக்க கற்றுக் கொடுத்துள்ளார். பின்னர், சிறுவயதில் சுமார் 500 குறள்களை ஒப்புவித்து பல்வேறு மேடைகளில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வாங்கி குவித்துள்ளார். ஆரம்பத்தில் பேரரசியின் பெற்றோர்கள் திருக்குறளை கதையாக கூறி புரிய வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அலைபேசி வாய்ஸ் ரெக்கார்டரில் திருக்குறளை படித்து, அதை விளையாடும்போது கேட்கும்படி செய்திருக்கிறார்கள். இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் கிடைத்த பொன்னான நேரத்தை வீணாக செலவு செய்யாமல் திருக்குறளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு இருக்கிறார் பேரரசி. இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த திருதமிழ் மகிழ்நன் என்பவர் திருக்குறளை எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள ஊக்கம் அளித்துள்ளார். தற்போது பேரரசி, 1330 குறளை எந்த முறையில் கேட்டாலும் சிறப்பாக கூறி அசத்தி வருகிறார்.
கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் 1330 குறளை எந்த விதத்தில் கேட்டாலும், எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் கூறி அசத்துகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பேரரசி. இவர், 1330 குறள்களையும் சொல்லி, அனைவரையும் வியக்கவைக்கிறார். 10 குறள்கள் படிக்கவே பெரிய வகுப்பு மாணவர்கள் சிரமப்படும் நிலையில், பேரரசி தன் முதல் வகுப்பிலேயே சுமார் 500 குறள்களை மனப்பாடமாகச் சொல்வதோடு, அந்த குறள்களுக்கு தெளிவுரையும் கூறியதை பார்த்த சக மாணவர்களும் ஆசிரியர்களும் ஆச்சரியமடைந்தனர். பேரரசி ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது அவரது தாயார் பூங்கொடி திருக்குறளை படிக்க கற்றுக் கொடுத்துள்ளார். பின்னர், சிறுவயதில் சுமார் 500 குறள்களை ஒப்புவித்து பல்வேறு மேடைகளில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வாங்கி குவித்துள்ளார். ஆரம்பத்தில் பேரரசியின் பெற்றோர்கள் திருக்குறளை கதையாக கூறி புரிய வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அலைபேசி வாய்ஸ் ரெக்கார்டரில் திருக்குறளை படித்து, அதை விளையாடும்போது கேட்கும்படி செய்திருக்கிறார்கள். இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் கிடைத்த பொன்னான நேரத்தை வீணாக செலவு செய்யாமல் திருக்குறளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டு இருக்கிறார் பேரரசி. இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த திருதமிழ் மகிழ்நன் என்பவர் திருக்குறளை எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள ஊக்கம் அளித்துள்ளார். தற்போது பேரரசி, 1330 குறளை எந்த முறையில் கேட்டாலும் சிறப்பாக கூறி அசத்தி வருகிறார்.
Tuesday, August 10, 2021
Daily Thirukkural
August 10, 2021
1,330 குறள்களையும் ஒப்பித்தால் கல்லூரியில் மூன்றாண்டு பட்டப் படிப்பு இலவசம்
திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பிக்கும் தமிழகம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.ஏ.தமிழ் இளங்கலை வகுப்பு மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து இக்கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் கூறியது:
இன்றைய தலைமுறையினரிடம் குறிப்பாக மாணவ, மாணவிகளிடம் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து செல்லிடப்பேசி, விடியோகேம் என அவா்களின் வாழ்வை சிதைக்கும் உலகில் மூழ்கியிருக்கிறாா்கள்.
அவசர உலகில் பெற்றோா்களும் தங்களது குழந்தைகளைக்கூட கண்காணிக்க இயலாமல் திணறி வரும் நிலையில், நாட்டின் இளையத் தலைமுறையினரை வள்ளுவன் காட்டிய வழியில் வாழ்ந்து அறிவாா்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் எங்கள் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இளங்கலை வகுப்பில் சேரும் மாணவா்கள் திருக்குறளில் 1330 குகளையும் ஒப்பித்தால் அவா்கள் மூன்றாண்டுகள் படிப்பதற்கும், கல்லூரியில் தங்குவதற்கும் இலவசம் என்கிற அறிவிப்பை கொடுத்துள்ளோம்.
1330 குறள் அல்லது அதைவிடசற்று குறைந்தாலும் பரவாயில்லை. குறள் கற்று,அதன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் மாணவா்கள் நிச்சயம் எதிா்காலத்தில் சமுதாய சீா்திருத்தவாதியாக, சிறந்த பண்பாளராக உருவாகுவாா்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
தமிழ்வழியில் கற்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளதால், மாணவா்களிடையே தமிழ் ஆா்வத்தை வளா்த்து, மூன்றாண்டுகள் படிப்பை முடிக்கும்போது, அவா்கள் அரசு வேலை பெறும் வகையில், முதலாமாண்டில் கல்விக் கற்கத் தொடங்கிய உடனே அவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி சிறப்புப் பயிற்சியும் வழங்குகிறோம்.
கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து, அவா்கள் அரசுப் பணியில் சேரும்போது, மக்கள் சேவையில் லஞ்ச, லாவண்யமின்றி நடுநிலையோடு அவா்கள் செயல்படவேண்டும் என்பதே எங்கள் எதிா்பாா்ப்பு என்றாா் அவா்.
Sunday, July 18, 2021
Friday, May 28, 2021
Daily Thirukkural
May 28, 2021
கொரோனா நிவாரண நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு,
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்துத் தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள். இதில், தங்களின் சின்னஞ் சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று அனுப்பி வைக்கப்படும் என்பதைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
““ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு"
- என்ற அய்யன் திருவள்ளுவரின் குறள்நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சசு மனிதர்களை நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அன்னைத் தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும்! வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்துத் தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள். இதில், தங்களின் சின்னஞ் சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று அனுப்பி வைக்கப்படும் என்பதைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
““ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு"
- என்ற அய்யன் திருவள்ளுவரின் குறள்நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சசு மனிதர்களை நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அன்னைத் தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும்! வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Saturday, April 24, 2021
Daily Thirukkural
April 24, 2021
திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரை நூல்கள்: காரைக்குடி பள்ளித் தாளாளரின் குறள் நேசம்
காரைக்குடி தனியார் பள்ளி சார்பில் திருமண அழைப்பிதழுடன் வழங்கப்பட்ட திருக்குறள் உரைநூல்கள்.காரைக்குடி தனியார் பள்ளித் தாளாளர் தனது மகனின் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரை நூல்களையும் நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
வசதி படைத்தோரின் திருமண அழைப்பிதழ்கள் பெரும்பாலும் விலை உயர்ந்ததாகவும், பல்வேறு வடிவங்களிலும் இருக்கும். அந்த அழைப்பிதழ்கள் திருமணம் முடிந்தவுடன் பயனற்று போய் விடும். ஆனால், அதை மாற்றிக் காட்டும் விதமாக, காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளித் தாளாளர் சுப.குமரேசன், தனது மகனின் திருமணத்துக்கு வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழுடன் திருக்குறளுக்கான உரை நூல்களையும் வழங்கி வருகிறார்.
உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்ப்பு
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் ஆகிய 3 பிரிவுகளும் தனித்தனி நூல்களாக உள்ளன. இதில் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேளழகர் முதல் உரையெழுதிய அனைத்து ஆசிரியர்களின் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அழைப்பிதழை பெறும் உறவினர்கள், நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சுப.குமரேசன் கூறியதாவது: எங்கள் மகன் திருமணம் ஏப்.26-ல் நடக்கிறது. திருமண அழைப்பிதழுடன் சிறந்த பரிசு அளிக்க நினைத்தேன். பல இடங்களில் தேடியும் எதுவும் மனநிறைவாகத் தெரியவில்லை. அப்போது வான்புகழ் வள்ளுவரின்ன் வழிகாட்டு நுாலான திருக்குறளை பரிசளிக்கலாம் எனத் தோன்றியது. வெறும் திருக்குறளை மட்டும் கொடுப்பதைவிட திருக்குறளுக்கு உரையெழுதியவர்களின் தொகுப்பையும் சேர்த்து கொடுக்க முடிவு செய்தேன். இதனை எங்கள் பள்ளி தமிழ்துறை தயாரித்துள்ளது. திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் நுாலை வழங்கிய போது, அதனை பெற்று கொண்ட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டேன். பலர் மொபைலிலும் தொடர்பு கொண்டு வாழ்த்தி வருகின்றனர், என்று கூறினார்.
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் ஆகிய 3 பிரிவுகளும் தனித்தனி நூல்களாக உள்ளன. இதில் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேளழகர் முதல் உரையெழுதிய அனைத்து ஆசிரியர்களின் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அழைப்பிதழை பெறும் உறவினர்கள், நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சுப.குமரேசன் கூறியதாவது: எங்கள் மகன் திருமணம் ஏப்.26-ல் நடக்கிறது. திருமண அழைப்பிதழுடன் சிறந்த பரிசு அளிக்க நினைத்தேன். பல இடங்களில் தேடியும் எதுவும் மனநிறைவாகத் தெரியவில்லை. அப்போது வான்புகழ் வள்ளுவரின்ன் வழிகாட்டு நுாலான திருக்குறளை பரிசளிக்கலாம் எனத் தோன்றியது. வெறும் திருக்குறளை மட்டும் கொடுப்பதைவிட திருக்குறளுக்கு உரையெழுதியவர்களின் தொகுப்பையும் சேர்த்து கொடுக்க முடிவு செய்தேன். இதனை எங்கள் பள்ளி தமிழ்துறை தயாரித்துள்ளது. திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் நுாலை வழங்கிய போது, அதனை பெற்று கொண்ட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டேன். பலர் மொபைலிலும் தொடர்பு கொண்டு வாழ்த்தி வருகின்றனர், என்று கூறினார்.
Friday, March 12, 2021
PROCEEDINGS
March 12, 2021
13.03.2021 (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் - சார்பு -முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
Tuesday, January 12, 2021
TAMIL
January 12, 2021
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவியப் போட்டிகள்: ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013-ல் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் வாயிலாக 2020- 21ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காகத் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களைத் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள படைப்பாளிகளிடமிருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப்படும். அதில் சிறந்த 15 படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். படைப்பொன்றுக்கு ரூ. 40,000/- பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள்
* ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பில் இருத்தல் வேண்டும்.
* ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுதல் வேண்டும்.
* படைப்பு எந்தக் குறள்/ அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்ற விவரம், தனித்தாளில் படைப்பாளரின் பெயர், முகவரி, தொடர்புகளோடு அனுப்பப்படல் வேண்டும்.
* ஒரு படைப்பாளர் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள் அனுப்பப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படும். * ஓவியங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.
* ஓவியங்கள் அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் வேறெந்தப் போட்டிகளிலும் பங்குபெற்றதாக இருத்தல் கூடாது.
* ஓவியங்கள் 3 அடி * 2 அடி அளவில் இருக்க வேண்டும்.
* தரமான ஓவிய கித்தான் துணியில் (Canvas Cloth) வரைய வேண்டும். ஓவியம் தரமான அக்ரிலிக் வண்ணக் கலவையில் தீட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
* சென்ற ஆண்டு நிறுவனத்தால் நடத்தப்பெற்ற ஓவியப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்கள், இப்போது நடத்தப்பெறும் போட்டியில் பங்கேற்கக் கூடாது.
* நடுவர்களின் முடிவே இறுதியானது. * போட்டியில் பங்கேற்கவுள்ள ஓவியங்கள் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 03.02.2021
* தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் 24.02.2021 அன்று வழங்கப்படும்.
* வெற்றி பெறுபவர்கள் விழாவிற்கு வருகை தரப் பயணப்படி, நாட்படி போன்றவை வழங்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, தொலைபேசி - 044-225429 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்’’.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’’உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013-ல் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் வாயிலாக 2020- 21ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காகத் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களைத் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள படைப்பாளிகளிடமிருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப்படும். அதில் சிறந்த 15 படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். படைப்பொன்றுக்கு ரூ. 40,000/- பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள்
* ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பில் இருத்தல் வேண்டும்.
* ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுதல் வேண்டும்.
* படைப்பு எந்தக் குறள்/ அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்ற விவரம், தனித்தாளில் படைப்பாளரின் பெயர், முகவரி, தொடர்புகளோடு அனுப்பப்படல் வேண்டும்.
* ஒரு படைப்பாளர் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள் அனுப்பப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படும். * ஓவியங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.
* ஓவியங்கள் அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் வேறெந்தப் போட்டிகளிலும் பங்குபெற்றதாக இருத்தல் கூடாது.
* ஓவியங்கள் 3 அடி * 2 அடி அளவில் இருக்க வேண்டும்.
* தரமான ஓவிய கித்தான் துணியில் (Canvas Cloth) வரைய வேண்டும். ஓவியம் தரமான அக்ரிலிக் வண்ணக் கலவையில் தீட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
* சென்ற ஆண்டு நிறுவனத்தால் நடத்தப்பெற்ற ஓவியப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்கள், இப்போது நடத்தப்பெறும் போட்டியில் பங்கேற்கக் கூடாது.
* நடுவர்களின் முடிவே இறுதியானது. * போட்டியில் பங்கேற்கவுள்ள ஓவியங்கள் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 03.02.2021
* தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் 24.02.2021 அன்று வழங்கப்படும்.
* வெற்றி பெறுபவர்கள் விழாவிற்கு வருகை தரப் பயணப்படி, நாட்படி போன்றவை வழங்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, தொலைபேசி - 044-225429 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்’’.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 09, 2020
Daily Thirukkural
September 09, 2020
திருக்குறள் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups







