Breaking

Showing posts with label Editorial. Show all posts
Showing posts with label Editorial. Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

இளம் வயது மாணவர்களை திருத்த இதுவே வழி - தலையங்கம்

அந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும், இந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும், இந்த கால மாணவர்களின் மனப்போக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், சிறு வயதிலேயே இந்த கால மாணவர்கள் அதில் ஆற்றல் மிகுந்தவர்களாக ஆகிவிடுவதாலும், அவர்கள் பெரியவர்களைவிட எல்லாம் தெரிந்து வைத்திருந்தாலும், மனதளவில் மிகவும் பலவீனமாகி விடுகிறார்கள். பெற்றோரும், வீடுகளில் மாணவர்களை அந்தகால பெரியவர்கள் போல அடிப்பதில்லை, கிள்ளுவதில்லை, முழங்காலில் நிற்க சொல்வதில்லை, தோப்புகரணம் போட சொல்வதில்லை. சொன்னாலும், அதை கேட்டு கீழ்படிதல், இந்தகால குழந்தைகளுக்கு இல்லை. மேலும், சிறு குழந்தைகள் என்றாலும், அவர்கள் கேட்பதையெல்லாம் தங்களுக்கு அதை வாங்கிக்கொடுக்க பணம் இல்லையென்றாலும், கஷ்டப்பட்டாவது பெற்றோர் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதனால், அந்த குழந்தைகளுக்கு எந்த ஏமாற்றமும் வாழ்வில் இல்லை. இப்படி வளர்க்கப்படும் அந்த குழந்தைகள், அதே உணர்வோடுதான் பள்ளிக்கூடங்களிலும் இருக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். பழைய கால முறையில், மாணவர்களை ஆசிரியர்களும் இப்போது கண்டிக்க முடியாது. மாணவர்களை அடித்தால், பதிலுக்கு மாணவர்கள் திருப்பி அடிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆசிரியர், ஆசிரியைகளை மாணவர்களே கத்தியால் குத்திய, ஏன் கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆக, "மாணவர்களை திருத்துவதற்கு அடியும், உதையும் இனி தேவை இல்லை. வேறு அன்பான, அவர்கள் மனதை தொடும் வழிகள்தான் வேண்டும்" என சமுதாயம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளிக்கூடம் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளை கையாளும் சில வழிமுறைகளை தமிழக அரசின் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. பொது போக்குவரத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், புகைப்பிடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், மற்ற குழந்தைகளை அடித்தல், ஆசிரியர்களை உடல் ரீதியாக காயப்படுத்துதல், அச்சுறுத்துதல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், சாதி, மத, பொருளாதார ரீதியாக மற்றவர்களிடம் பாகுபாடு பார்த்தல், புண்படுத்துதல் உள்பட குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுகளை பட்டியலிட்டு, அந்த ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய குற்றங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனைகளை வழங்கவேண்டும். இதே தவறை அவர்கள், 2-வது மற்றும் 3-வது முறையாக செய்தால், ஆசிரியர்கள் கையாள வேண்டிய ஒழுங்குமுறை நுட்பங்களை கையாளலாம் என்று கூறியுள்ளது. அதன்படி, 5 திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியர்களிடம் எழுதிக் காட்டவேண்டும், 2 நீதிக்கதைகளை பெற்றோரிடம் இருந்து கற்று, வகுப்பறையில் சொல்ல வேண்டும், 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும். வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்துக்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்கவேண்டும். 5 வரலாற்று தலைவர்களைப்பற்றி அறிந்துகொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்கவேண்டும். சிறந்த ஆளுமைகளின் உண்மைக் கதையை கற்றுக்கொண்டு, வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்கவேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள் பற்றிய வரைபடம் எழுத வேண்டும், பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுதவேண்டுமென்பது உள்பட மேலும் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. 3-வது எச்சரிக்கையிலும் திருந்தாவிட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து குழந்தைகள் நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்கவேண்டும். இவ்வளவுக்கும் பிறகு 5-வது முறையாக தவறு செய்தால், சுற்றுசூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும் என்பதால், பள்ளி நிர்வாக குழு ஒப்புதலோடு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது வரவேற்கத்தக்க பரிந்துரைகளாகும். எந்த இடத்திலும் மாணவர்களை அடிக்க சொல்லவில்லை. தவறு செய்யும் மாணவர்களின் அறிவை மேம்படுத்தும், தன்னைப்பற்றி உயர்வான எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த வகைகளிலேயே குழந்தைகளை திருத்தலாம்.

Wednesday, June 01, 2022

June 01, 2022

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்! - தலையங்கம்

சிறு குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் கடந்த மாதம் 5-ஆம் தேதி சட்டசபையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவது அரசுப்பள்ளிகளில் ஒன்று |முதல்ஐந்தாம் வகுப்புவரைபடிக்கும்குழந்தைகளுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும். மற் |றொன்று 5 வயதிற்கு குறைவாக உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளை தீர்க்க மருத்துவ பரிசோ தளை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் றார். கண் விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்காள சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆனால் உணவு உண்பதன் நோக்கம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற் கான கலோரி மற்றும் புரதச்சத்துடன் நோய் எதிர்ப்பு சந்தியை ஊக்குவிக்கும், வைட்டமினும், தாதுப் பொருட்களும், நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க |வேண்டும். நுண்சத்துக்களில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ. |போலேட் பி12 முக்கியமானவை. இரும்புச்சத்து மற் றும் போலேட் நம் உடலுக்கான ரத்த உற்பத்தியில் |பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ, கண் பார் வைக்கு தேவையானது. தேசிய அளவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறித்து எடுக்கப்| பட்ட ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் 5 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 10 சதவீதம் வரை ரத்த சோகையும், வைட்டமின் ஏ பற்றாக்குறையும், 41 சத |வீதம் பேர் போலேட் பற்றாக்குறையும், 7 சதவீதம் பேர் |பி12 பற்றாக்குறையும் உடையவர்களாகக் கண்டறி) யப்பட்டுள்ளனர்.இவற்றில் பி12 தவிர இதரசத்துக்கள்] காய்கறி, பழங்களில் இருந்து கிடைக்கின்றன. ஒரு வேளை உணவில் ஒரு நாளைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் மூன்றில் ஒரு பங்கு என்ற அள் வில் கிடைக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தற்சமயம் ஆரம்பப் பள்ளிக |வில் வழங்கப்படும் மதிய உணவு 450 கலோரியும், 12 கிராம் புரதமும் கொடுக்கவல்லதாக உள்ளது. ஒவ் |வொரு குழந்தைக்கும் 50 கிராம் காய்கறியை கொடுப் பதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. வாரத்தில் |5 நாட்கள் சனி, ஞாயிறு தவிர உணவு வழங்கப்படுகி றது. முதல் 5 நாட்கள் வெஜிடபிள் பிரியாணி, கருப்புக் |கொண்டைக்கடலை புலாவ், தக்காளி சாதம், சாதம் காய்கறிகளுடன்கூடிய சாம்பார். கறிவேப்பிலை சாதம் | வழங்கப்படுகிறது. அடுத்த 5 நாட்கள் சாம்பார் சாதம், சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கர் சேர்க் கப்பட்ட சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. | அரிசி, எண்ணெய், முட்டை, பருப்பு போன்ற உண [வுப் பொருட்களை அரசு தேவையான அளவில் நேரடி யாக பள்ளிக்கு வழங்கி விடுகிறது. மற்ற சத்துக்கள் |அடங்கிய இதர காய்கறிகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தின மும் 50 கிராம் காய்கறி கொடுப்பதற்கு ரூ.1.06-ம், இதர மசாலா பொருட்கள் வாங்குவதற்கு 40 காசும், சமையல் எரிவாயுவிற்கு 61 காசும் ஒதுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மதிய உணவு பணியாளர் காய் கறியையும், மசாலா பொருட்களையும் அன்றாடம் வாங்கிக்கொள்ளவேண்டும், இந்தநிதி ஒதுக்கீடு மேற் கூறிய பொருட்களை வாங்குவதற்குப் போதாத நிலை யில் கூடுதலாக 50 கிராம் காய்கறி வாங்குவது சாத்தி யமற்றது. ஊட்டச்சத்து இலக்கை அடைவது என்பது வேறு: விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது வேறு, மற்ற உணவுப் பொருட்களை வழங்குவது போல |அரசே தேவையான காய்கறிகளையும் மையங்களுக்கு நேரடியாக வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய லாம். அந்தந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இயங் கும் மகளிர் கய உதவிக் குழுக்களின் மூலமோ, சிறு குறு விவசாய அமைப்புகளின் மூலமாகவோ ஒப்பந்த

அடிப்படையில் இம்முயற்சியில் ஈடுபடலாம். காய்கறிகள் தவிர ஊட்டச்சத்து நிறைந்த கொய்யா, பப்பாளி போன்ற பழங்களையும் குழந்தைகளுக்கு வழங்கலாம். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத் திற்கும் உதவி செய்வது போல் இருக்கும். குழந்தைக ளுக்கு வாய்க்கு ருசியான உணவு வழங்குவதில் மேற்கொள்ளப்படும் முயற்சி களைப் போலவே நுண் சத்துக்களும் தேவையான அளவில் கிடைப்பதற்கு |அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்த நடைமுறை களை கையாண்டால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள [குழந்தைகளை காணமுடியாது. மாறாக நல்ல சத்துள்ள

Total Pageviews

Search This Blog