Breaking

Showing posts with label Government High School Headmasters. Show all posts
Showing posts with label Government High School Headmasters. Show all posts

Monday, March 16, 2026

Sunday, December 07, 2025

Sunday, March 17, 2024

Wednesday, February 21, 2024

February 21, 2024

மின் கட்டணம் - தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி

மின் கட்டணம் - தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில், 5,700க்கும் மேற்பட்ட உயர்நிலை, 8,100க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் ஹைடெக் லேப்கள் உள்ளன.

மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு, ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் பயிற்சிகள் போன்றவை, இந்த லேப்களில் தற்போது நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு இதுவரை இருந்த மின் கட்டணம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் ஹைடெக் லேப் வசதி இல்லாத போது வழங்கப்பட்ட மின் கட்டணத்தையே அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தலைமையாசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

மின் கட்டணத்தை உயர், மேல்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் முன்கூட்டியே செலுத்தி, அரசு நிதி ஒதுக்கியவுடன் அதில் இருந்து பெற்றுக்கொள்வோம். லேப் வருவதற்கு முன் ஒரு பள்ளிக்கு 3,000 - 5,000 ரூபாயாக இருந்த மின் கட்டணம் தற்போது 50,000 ரூபாய்க்கும் மேல் அதிகரித்து விட்டது.

ஆண்டுதோறும் இரண்டு கட்டமாக மின் கட்டணத்தை அரசு வழங்குகிறது. கடைசியாக ஒதுக்கிய நிதி பல ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளது. ஆனால் அப்பணத்தை தலைமையாசிரியர்கள் செலுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

அரசு பள்ளிக்கு ஆகும் மின்செலவை அரசே செலுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Monday, January 22, 2024

January 22, 2024

கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உத்தரவு

கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உத்தரவு Gram Sabha Meeting - Headmasters, Education Officers directed to attend

குடியரசு தின விழா நாளில் நடக்கும் கிராம சபா கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களில் கிராமசபா கூட்டம் நடக்கிறது. இதில், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று, தங்களது தேவை மற்றம் கோரிக்கை குறித்து நேரடியாக தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில், தங்கள் பகுதியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில், அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணி உள்ளிட்ட செயல்பாடுகளை பள்ளிக்கு அருகில் வசிக்கும் மக்களும், பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது கல்வி அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, இது குறித்து பேச வேண்டும். அதற்காகவே, கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அரசு அறிவுறுத்தியுள்ளது என்றனர்.

Tuesday, December 12, 2023

December 12, 2023

ஆச்சரிய படுத்தும் தலைமை ஆசிரியர்கள் - அசத்தும் அரசு பள்ளிகள்



ஆச்சரிய படுத்தும் தலைமை ஆசிரியர்கள் - அசத்தும் அரசு பள்ளிகள்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியை பார்ப்பவர்கள் அதை அரசுப் பள்ளி என்றே கூறமாட்டார்கள். காரணம் தனியார் பள்ளிக்கு நிகராக பள்ளிக் கட்டிடங்கள் ஜொலிக்கின்றன.

சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டு திடல், ‘ஸ்மார்ட்' வகுப்பறை, கூட்டரங்கம், பசுமை நிறைந்த மரங்கள், மாணவர்கள் உணவு சாப்பிட தனி இடம் என தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்கு புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அனைத்து வசதி களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி ஒதுக்கீட்டின்படி இந்த பள்ளியில் இவ்வளவு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதா? என பார்த்தால் அதுதான் இல்லை. தலைமை ஆசிரியரின் முயற்சியால் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் தன்னார்வலர்கள் செய்து கொடுத்த வசதிகள் தான் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை இந்த பள்ளி இரட்டிப்பாக்கியுள்ளது. அரசுப் பள்ளி என்றாலே அங்கு கல்வித் தரம் இருக்காது, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருக்காது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் இருக்காது என்ற நிலையை புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடியோடு மாற்றியிருக்கிறது. பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் தலைவர்களின் புகைப்படங் களும், அவர்கள் கூறிய கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 95 சதவீதம் பேர் உயர் கல்வி படித்து மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது, ‘‘கடந்த 1960-ம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 620 பேர் படித்து வருகின்றனர். பொதுதேர்வின் தேர்ச்சி விகிதம் 92 சதவீதமாக உள்ளது. வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயித்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறேன். இப்பள்ளியில் மாணவர்களுக்கு சகல வசதிகள் இருந்தால் தான் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆசிரியர்கள் நாங்களே ஒன்றிணைந்து செய்து கொடுத் தோம். ஏறத்தாழ 7 லட்சம் ரூபாய் வரை செலவழித்து பள்ளியை சீரமைத்துள்ளோம். மேலும், சில வசதிகளை செய்துகொடுக்க தன்னார்வலர்களுடன் பேசி வருகிறோம்.

தங்கப் பதக்கம்

அரசுப் பள்ளியில் படித்தால் பெரிய படிப்புகளுக்கு செல்ல முடியாது என்ற நிலையை கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் மாற்றியுள்ளோம். எங்கள் பள்ளியில் மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் அதிகம் பேர் உயர் கல்வியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். கல்வி மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் பல வெற்றிகளை குவித்துள்ளனர்.

அனைத்து வகுப்புகளுக்கும் மின் விசிறி, மின் விளக்கு, தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறை, மாணவர்கள் விளை யாட தேவையான விளையாட்டு உபகரணங்கள், மாணவர்களுக்கு யோகா பயிற்சி, கணினி அறிவு, ஆங்கில மொழியில் சரளமாக பேச, எழுத, படிக்க தனிப் பயிற்சி, மாணவர்களின் தனித்திறன் அறிந்து அதற்கான சிறப்பு பயிற்சிகள் என ஒவ்வொன்றாக பார்த்து, பார்த்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நமக்கு வேண்டியதை நாமே செய்து கொண்டால் தான் நம்முடைய லட்சியத்தை நம்மால் எளிதாக எட்ட முடியும் என்பதை நான் மட்டும் அல்ல எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பின் பற்றி வருகிறோம்’’ என்றார். திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி மட்டும் அல்லாமல், செவ்வாத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அரசு என்பவர் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன் சொந்த செலவிலேயே செய்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட 1.70 லட்சம் ரூபாய் வரை செலவழித்து மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ள தலைமை ஆசிரியர் அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை புதுப்பிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

அரசுப் பள்ளி தானே, வேலைக்கு வந்தோமா? மாதச் சம்பளம் வாங் கினோமா? என்று நினைக்காமல் இது போன்ற தலைமை ஆசிரியர்கள் முயற்சியால் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக மாறி வருவது ஆரோக்கி யமான நடைமுறை என்பதால் அனைவரும் இதை பின்பற்றினால் மாணவர்களின் கல்வித் தகுதி உயரும்.
December 12, 2023

'பள்ளிகளில் துாய்மை பணி - தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

'பள்ளிகளில் துாய்மை பணி - தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

கொரட்டூர் மாநகராட்சி பள்ளி மொட்டை மாடியில் ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டியை பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மொட்டை மாடியில் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடி இருந்த பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளியின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சீருடையுடன் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

மேலும் ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி மீது நின்றபடி மாணவர்கள் தொட்டிக்குள் இருக்கும் அசுத்த நீரை பக்கெட் மூலம் வெளியேற்றி வந்தனர். இதை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பள்ளி மாணவர்களிடம் கேட்டார்.

அதற்கு அந்த சிறுவர்களோ தலைமை ஆசிரியர் தான் சுத்தம் செய்ய சொன்னார் என்று உரக்கச் சொல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

அதில், 'பள்ளிகளில் துாய்மை பணிகள், சீரமைப்பு பணிகள் ஆகியவற்றில், மாணவ - மாணவியரை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக்கூடாது.

'அவ்வாறு புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

Total Pageviews

Search This Blog