Breaking

Showing posts with label India Post Recruitment. Show all posts
Showing posts with label India Post Recruitment. Show all posts

Sunday, February 05, 2023

February 05, 2023

40,000 அஞ்சல்துறை வேலைவாய்ப்பு.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

40,000 அஞ்சல்துறை வேலைவாய்ப்பு.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

India Post recruitment Gramin Dak Sevak: அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master), துணை கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master), அஞ்சல் உதவியாளர் (Gramin Dak Sevaks (GDS) அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், நாடு முழுவதும் 40,889 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், 10ம் வகுப்பு, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

1 . தமிழ்நாட்டில் காலியிடங்கள் எண்ணிக்கை:

தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இது, முழுக்க முழுக்க மத்திய அரசு வேலையா?

ஆம். இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)

3. அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும் 4. ப்ரோமோஷன் உண்டா?

ஆம்! குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் 'சி' பணிக்கு (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) தகுதி பெறலாம்.

அதேபோன்று, 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன்அனுபவம் உள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம்.

அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.

5. பணியின் தன்மை என்ன? பகுதி நேர ஊழியர்களாக பயன்படுத்தப்படுவார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும்.

6. ஓய்வு பெறும் வயது என்ன? இந்தப் பணியாளர்கள் 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

7. படித்த இளைஞர்கள் அப்ளை செய்யலாமா? இன்றைய இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்புகளில் நாட்டம் செலுத்தி வருகின்றன.

பொதுவாக, வட இந்தியாவில் யுபிஎஸ்சி,எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு தாயராகி வரும் தேர்வர்கள், இந்த கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது வழக்கம். வேலை நேரங்கள் போக இதர நேரத்தில் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர். எனவே, நீங்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வரும் நபராக இருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இல்லையேல், ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டு, எஸ்எஸ்சி தேர்வெழுதி நல்ல பதவியில் அமரலாம்.

Tuesday, July 26, 2022

July 26, 2022

மூத்த குடிமக்களுக்காகவே போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ஸ்பெஷல் திட்டங்கள்!

போஸ்ட் ஆபீஸில் மூத்த குடிமக்களுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

வயதான காலத்தில் எவ்வித ஆபத்துமின்றியும், வரிச்சலுகையுடன் முதலீடு செய்ய நினைக்கும் மூத்த குடிமக்களுக்காகவே மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

இன்றைக்கு உள்ள பொருளாதார நிலையை சரிசெய்வதற்கு சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக வயதானவர்களிடம் சேமிப்பு எதுவும் இல்லையென்றால் மற்றவர்களை நம்பி அவர்களால் இருக்க முடியாது. இதற்காக தான் சீனியர் சிட்டிசன்கள் தங்களது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றில் முதலீடு செய்து மாதந்தோறும் வருமானத்தை பெறுகிறார்கள். ஒருவேளை சில சமயங்களில் பங்கு சந்தையில் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அதிக வட்டி தரும் சேமிப்புத்திட்டங்களை தேர்ந்தெடுக்க முயல்வார்கள். இப்படி வரிச்சலுகையுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதோ முழு விபரம் இங்கே… மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ( senioe citizen saving scheme-SCSS):

மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் என்பது 5 ஆண்டுகளுக்கான முதலீட்டுத் திட்டமாக உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சேமிப்புக் கணக்கை வங்கி அல்லது அஞ்சலகத்தின் வாயிலாக திறந்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். இத்திட்டத்திற்க 7.4 சதவீத வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டம் முழு வரிக்கு உட்பட்டது.

5 வருட நிலையான சேமிப்பு (FD):

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நிலையான வைப்புத்தொகையை (Fixed deposit) வழங்குகின்றன. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இத்தொகையானது 5 ஆண்டு வரி சேமிப்பு FD ல் மொத்த வருவாயில் இருந்து விலக்கு பெறத் தகுதி பெறுகிறது. இதற்கான வட்டித்தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என ஒட்டுமொத்தமாகப் பெறலாம். இந்த வரி சேமிப்புத்திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை டெபாசிட்டுகளை திரும்ப பெற முடியாது. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:

இதுநிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை , ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். எனவே நிலையான வருமானம் மற்றும் வரிச்சலுகைகளுடன் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை ஆனால் பிரிவு 80 C இன் கீழ் வரிச் சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். குறிப்பாக தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் கிடைக்கும் பணத்திற்கு, டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme):

ஓய்வூதியத்திற்கான சேமிப்பை திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வரி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரிக்கிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் செய்யப்படும் பங்களிப்பு, பிரிவு 80 CCD (1) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்கு பெறுவதற்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 வரை கூடுதல் வரி சலுகையும் கிடைக்கும்.

Saturday, May 14, 2022

May 14, 2022

India Post Recruitment: இந்திய தபால் அலுவலகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ndia Post Recruitment: இந்திய தபால் அலுவலகம் ஆட்சேர்ப்பு 2022 38926 பல்வேறு கிராமின் டாக் சேவக் இடுகைகள் தகுதி: 10வது தேர்ச்சி தேர்வு செயல்முறை: தகுதி பட்டியல்
Application Form Fees :

The application fee varies according to the category. Hence, the applicants have to check the official advertisement for the category wise

application fee details :

General/OBC Category candidates have to pay Rs. 100/-. There is no fee for SC/ST/PWD/Female/Transwomen candidates.

Age Limit for India Post Jobs 2022:

The age of candidate who is willing to apply for India Post must be between 18 to 40 Years as on 05-06-2022.. Age relaxation to different reserved categories is according to the rules and norms as prescribed by recruiting organization.

Pay Scale:

Qualified Candidates for India Post vacancies will get a pay scale of Rs. 12,000/- (For BPM), Rs. 10,000/- (For ABPM/DakSevak) Per month.

Mode of Assortment :

Contenders for India Post Jobs 2022 are selected based on their performance in Merit List. How to Apply for India Post Vacancy?

First of all you have to logon to the Official website of organization that is indiapostgdsonline.gov.in. Secondly, candidates have to choose Exam/ Recruitment/ Careers tab which is given at the right side of the page. After that open Notification link and read the given advertisement carefully and completely. Fill Online Application Form in prescribed way and upload scanned photograph and images of documents and certificates before closing date that is 5th June 2022. After that, hit on submit button & take a hard copy of it and keep it safe till future reference.

Important Dates :

Opening date to apply : 02-05-2022. Last date to fill the online application form is : 05-06-2022.

Official Website : indiapostgdsonline.gov.in

Read Official Notification Here.

Read Official Notification 2 Here.

Apply Online

Total Pageviews

Search This Blog