TNPSC
February 27, 2024
Showing posts with label Co-operative. Show all posts
Showing posts with label Co-operative. Show all posts
Tuesday, February 27, 2024
Wednesday, November 15, 2023
JOB NEWS
November 15, 2023
கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியீடு.
கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியீடு.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பதவிக்கு 3000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் மொத்த கூட்டுறவு பண்டகாலை நகர கூட்டுறவு வங்கிகள் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வேளாண் விற்பனையாளர் சங்கம் போன்றவை செயல்படுகின்றன.
அவை சங்க உறுப்பினர்களுடன் கடன் வழங்குவதுடன் ரேஷன் கடைகள் பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றன.மேற்கண்ட சங்கங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50, 60 என மாநிலம் முழுதும் 3000 உதவியாளர் பதவிகள் காலி பணியிடமாக உள்ளன. எனவே அந்த பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் நேற்று வெளியிட்டுள்ளன. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு வாயிலாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
DOWNLOAD Notification PDF CLICK HERE
Thursday, September 14, 2023
JOB NEWS
September 14, 2023
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
Online Applications for Admission to Diploma in Co-operative Management (D.Co-op) - PDF - கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (D.Co-op) சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடக்கம்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (D.Co-op) சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் 13.09.2023 முதல் தொடக்கம்!
CLICK HERE TO DOWNLOAD PDF
Monday, August 14, 2023
ELECTION
August 14, 2023
விரைவில் கூட்டுறவு சங்க பதவிகளுக்கு தேர்தல்!
Sunday, September 04, 2022
pension scheme
September 04, 2022
ரூ.1000 கருணை பென்ஷன்: பட்டியல் தயாரிக்க உத்தரவு
ரூ.1000 கருணை பென்ஷன்: பட்டியல் தயாரிக்க பதிவாளர் உத்தரவு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள மற்றும் தற்போது ஓய்வு பெறவுள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நிதி ஆதாரமில்லாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று உயிருடன் உள்ள பணியாளர்களுக்கு மாதாந்திர கருணை ஓய்வூதிய தொகையாக ரூ.1000 வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள 8,752 பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏதுவாக அரசாணையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை பரிசீலித்து தகுதி பெறாத நபர்களின் விபரங்களை நீக்கி, நிபந்தனைகளின் படி தனியார் கருணை ஓய்வூதியம் பெற தகுதியானவர் என உறுதி மொழி சான்றிதழை தொடர்புடைய சங்கங்களுக்கு அளிக்க வேண்டும்.
அதனை பரிசீலித்து உறுதிமொழி சான்றிதழை சரக துணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை அவர்கள் பரிசீலித்து இணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலை சரிபார்த்து மண்டல இணைபதிவாளர்கள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சங்க பணியில் இருந்து ராஜினாமா செய்தவர்களும், விருப்ப ஓய்வில் சென்றவர்களும் கருணை ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் கூறியுள்ளார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள மற்றும் தற்போது ஓய்வு பெறவுள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைபதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நிதி ஆதாரமில்லாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று உயிருடன் உள்ள பணியாளர்களுக்கு மாதாந்திர கருணை ஓய்வூதிய தொகையாக ரூ.1000 வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள 8,752 பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏதுவாக அரசாணையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை பரிசீலித்து தகுதி பெறாத நபர்களின் விபரங்களை நீக்கி, நிபந்தனைகளின் படி தனியார் கருணை ஓய்வூதியம் பெற தகுதியானவர் என உறுதி மொழி சான்றிதழை தொடர்புடைய சங்கங்களுக்கு அளிக்க வேண்டும்.
அதனை பரிசீலித்து உறுதிமொழி சான்றிதழை சரக துணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனை அவர்கள் பரிசீலித்து இணை பதிவாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த பட்டியலை சரிபார்த்து மண்டல இணைபதிவாளர்கள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சங்க பணியில் இருந்து ராஜினாமா செய்தவர்களும், விருப்ப ஓய்வில் சென்றவர்களும் கருணை ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் கூறியுள்ளார்.
Tuesday, August 23, 2022
Tamilnadu Government
August 23, 2022
கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு எச்சரிக்கை
கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு எச்சரிக்கை
கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் தொடா்பாக விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக அனுப்பலாம் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. கூட்டுறவுத் துறையின் சாா்பில் அத்தகைய அதிகாரபூா்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
எனவே, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி அறிவிப்புகளைப் பாா்த்து மக்கள் ஏமாற வேண்டாம். பொய்யான தகவல்களைப் பரப்புவோா் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் தொடா்பாக விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக அனுப்பலாம் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. கூட்டுறவுத் துறையின் சாா்பில் அத்தகைய அதிகாரபூா்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
எனவே, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி அறிவிப்புகளைப் பாா்த்து மக்கள் ஏமாற வேண்டாம். பொய்யான தகவல்களைப் பரப்புவோா் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Monday, August 22, 2022
State President
August 22, 2022
கூட்டுறவு வங்கியில் அரசியல் தலையீடு; 1800 காலிப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை - மாநில தலைவர்
''மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் முழுவதும் 1800 காலிப்பணியிடங்களை அரசியல் தலையீட்டால் கடந்த ஆட்சியை போலவே தி.மு.க., ஆட்சியிலும் நிரப்ப முடியவில்லை'', என, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் தமிழரசு குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரத்தில் நடந்த சங்க பொதுக்குழுவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பணியாளர்கள் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் அரசியல் வாதிகள் தலையீட்டால் நிரப்ப முடியவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்த அதே நிலைதான் தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள 128 நகர வங்கிகளை மாவட்ட வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து ஆக. 24 முதல் தொடர் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும், என்றார்
ராமநாதபுரத்தில் நடந்த சங்க பொதுக்குழுவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பணியாளர்கள் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை. பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் அரசியல் வாதிகள் தலையீட்டால் நிரப்ப முடியவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்த அதே நிலைதான் தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள 128 நகர வங்கிகளை மாவட்ட வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து ஆக. 24 முதல் தொடர் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும், என்றார்

