Typewriting
June 23, 2023
Showing posts with label type writing exams. Show all posts
Showing posts with label type writing exams. Show all posts
Friday, June 23, 2023
Saturday, December 17, 2022
type writing exams
December 17, 2022
அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்? - காலஅட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்? - காலஅட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்படும் என்ற கால அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளையும், கணக்கியல் தேர்வுகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. ஆண்டுக்கு இரண்டு தடவை (பிப்ரவரி மற்றும்ஆகஸ்டு) மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தொழில்நுட்பத்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வுகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்களுடன் கூடிய காலஅட்டவணையை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 11, 12-ல் சுருக்கெழுத்து ஹை ஸ்பீடு தேர்வும், பிப்ரவரி 18, 19-ல் சுருக்கெழுத்து ஜுனியர், இண்டர்மீடியட், சீனியர் தேர்வுகளும் பிப்ரவரி 20-ல் கணக்கியல் தேர்வும் (ஜுனியர் மற்றும் சீனியர்) பிப்ரவரி 25, 26-ல்தட்டச்சு (ஜுனியர், சீனியர், அதிவேகம்) தேர்வும் நடத்தப்பட உள்ளன.
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் டிசம்பர் 25-ம் தேதி வெளியிடப்பட்டு 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 20-ம் தேதி ஆகும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 21-ம் தேதி அன்று வெளியாகும்.
இதேபோல், ஆகஸ்டு பருவதேர்வு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுகால அட்டவணையை www.dte.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜி.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
Thursday, September 01, 2022
type writing exams
September 01, 2022
தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம் - TNPSC தேர்வால் விழிப்புணர்வு அதிகரிப்பு
தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம் -
டிஎன்பிஎஸ்சி தேர்வால் விழிப்புணர்வு அதிகரிப்பு
நெல்லை, செப். 1: தமிழகத் தில் டிஎன்பிஎஸ்சி தேர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரண மாக இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள டைப்ரைட் டிங் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் தொழில்நுட்ப தேர்வுத்துறையால் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டைப்ரைட் டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறன.
இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங் கப்படும் சான்றிதழ்கள் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டைப்ரைட்டிங் தேர்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மேலும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் சீராக செயல்படாததால் பயிற்சி பெறுபவர்கள் எண் ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் இந்த தேர்வுக்காக பயிற்சி பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தட்டச்சர் பணிக்கு அதிகம் பேர் அரசு பணிக்கு தேர்வு செய் யப்படுவதாலும் டைப்ரைட்டிங் கற்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வருகிற 24, 25ம் தேதிகளில் நடைபெற உள்ள இத்தேர்விற்கு 1.50 லட்சம் பேர் விண்ணப்பித் துள்ளனர். இதற்காக இவர்கள் தனியார் தட்டச்சு நிலையங்களில் பயிற்சி பெறுகின்றனர். ஒரு சிலர் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்வை எழுத விண்ணப்பித்து அதற்கான பயிற்சி பெறுகின்ற னர். சிறப்பு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வை சந்திக்க உள்ள தாக தட்டச்சு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
நெல்லை, செப். 1: தமிழகத் தில் டிஎன்பிஎஸ்சி தேர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரண மாக இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள டைப்ரைட் டிங் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் தொழில்நுட்ப தேர்வுத்துறையால் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டைப்ரைட் டிங், சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறன.
இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வழங் கப்படும் சான்றிதழ்கள் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் டைப்பிஸ்ட், சுருக்கெழுத்தர் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டைப்ரைட்டிங் தேர்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மேலும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் சீராக செயல்படாததால் பயிற்சி பெறுபவர்கள் எண் ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் இந்த தேர்வுக்காக பயிற்சி பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தட்டச்சர் பணிக்கு அதிகம் பேர் அரசு பணிக்கு தேர்வு செய் யப்படுவதாலும் டைப்ரைட்டிங் கற்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வருகிற 24, 25ம் தேதிகளில் நடைபெற உள்ள இத்தேர்விற்கு 1.50 லட்சம் பேர் விண்ணப்பித் துள்ளனர். இதற்காக இவர்கள் தனியார் தட்டச்சு நிலையங்களில் பயிற்சி பெறுகின்றனர். ஒரு சிலர் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்வை எழுத விண்ணப்பித்து அதற்கான பயிற்சி பெறுகின்ற னர். சிறப்பு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வை சந்திக்க உள்ள தாக தட்டச்சு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

