Breaking

Showing posts with label DMK. Show all posts
Showing posts with label DMK. Show all posts

Sunday, November 30, 2025

November 30, 2025

Block Educational Officer - BEO Exam Syllabus

BEO Exam Syllabus

வட்டாரக் கல்வி அலுவலர் BEO பணியிடங்களுக்கான தேர்வு பாடத்திட்டம்

Block Educational Officer Exam Syllabus

Unit-l History of Tamil Literature

சங்க காலம் முதல் தற்காலம் வரை

சங்க இலக்கியம் – சங்கம் பற்றிய குறிப்புகள் – பாட்டும் தொகையும் தொகுப்பு முறை – சங்க இலக்கியச் சிறப்புகள்.

நீதி நூல்களின் சிறப்புகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் பக்தி இலக்கியம் தேவாரம் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் – திருமந்திரம் – திருப்புகழ் பட்டினத்தார் – அருணகிரிநாதர் தாயுமானவர் வள்ளலார் கம்பராமாயணம் மகாபாரதம் பெரியபுராணம் திருவிளையாடற்புராணம் – சிற்றிலக்கியங்கள் 96 வகை பிரபந்தங்கள் கோவை பிள்ளைத்தமிழ் கலம்பகம் உலா தூது பரணி -பள்ளு குறவஞ்சி முதலியன சமயங்கள் வளர்த்த தமிழ் சமணம் – பௌத்தம் இசுலாம் கிருத்துவம் சித்தர்கள் சமூகச்சீர்திருத்தம்.

தற்காலம் தமிழ் உரைநடைவளர்ச்சி புனைகதைகள் – நாவல் – சிறுகதைகள், நாட்டுப்புறவியல் – கட்டுரை – இலக்கியம்.

இலக்கணம் – எழுத்து -சொல் பொருள் – யாப்பு, அணி இலக்கணம்.

Unit-II History of English Literature

Development of Prose, Poetry, Fiction, Drama and Grammar

Approaches to Literature(From 1830 to the Present day)

Modern Drama, Modern Fiction, Literary Movements, Literary Criticism and Theory, Teaching of English in India, Journalism and Creative Writing in English, British English Literature – American English Literature, Indian English Literature.

English Language and Grammar : Origin of English Language, General, Characteristics of Old and Middle English. The rise and growth of Modern English, Growth of Vocabulary Greek, Latin, French, Italian, Scandinavian and other foreign influences Word Formation, Change of Meaning, The makers of English Spenser, Shakespeare, Milton and Dr. Johnson, Basic English Grammar Parts of Speech, Tenses, Voice, Singular/Plural, Spelling Reforms

Unit – III Mathematical Aptitude & Mental Ability Test

Data analysis Conversion of Information to Data presentation and interpretation of data Tables, graphs, diagrams Analytical interpretation of data -Simplification Percentage Highest Common Factor (HCF) Lowest Common Multiple (LCM) – Ratio and Proportion – Simple interest – Compound interest – Area -Volume Time and Work Decision making and problem solving Logical Reasoning – Puzzles – Dice numerals. Verbals and non – verbals. Unit-IV General Science

Physics: Units and Measurement, Laws of motions, Force, work, Energy and Power, Properties of Matter Current electricity Magnetism Heat, Light and Sound – Atomic Physics – Electronic devices.

Chemistry: Classification of Matter, Stoichiometry, Types of Reactions, Extraction of Metals (Zn, Cu, Al, Au, Ag, Pb)Acids and Bases Periodic classification, Chemical bonding, Compounds of Carbon, Nitrogen, Oxygen, and Sulphur. Gas laws, Drugs, Fertilizers, Dyes and Polymers.

Botany: Plant Physiology -Cell- Basic unit of Life. Photosynthesis its Significance. Families Malvaceae, Solanaceae, Euphorbiaceae, Musaceae and their economic importance. Plant Pathology – Bio technology – Tissue Culture.

Zoology: Human physiology- Human body functions, Environmental Biology -Global Warming Green house effect, Ozone layer depletion, Applied biology Genetics and Evolution -Dairy, Poultry, Pisciculture, Fish farming Health and hygiene.

Unit V History – National Movements of Tamil Nadu and India and Constitutional Development

South Indian history Culture and Heritage of Tamil people Advent of European invasion – Expansion and consolidation of British rule Effect of British rule on socio-economic factor Social reforms and religious movements India since Independence.

Characteristics of Indian culture Unity in diversity race, colour, language, custom India as secular state Organizations for finearts, dance, drama, music -Growth of rationalism.

Advent of Europeans Early uprising against British rule 1857 Revolt Indian National Congress – Emergence of national leaders – Gandhi, Nehru, Tagore, Netaji -Growth of militant movements – Communalism led to partition – Role of Tamil Nadu in freedom struggle Rajaji, VOC, Periyar, Bharathiar & Others Birth of political parties /political


system in India since Independence, Dravidian movement in TN -Political parties and populist schemes Prominent personalities in the various spheres – Arts, Science, literature and Philosophy.

Constitution of India Preamble to the constitution

constitution Union, State and territory Fundamental rights Human rights charter Union legislature Salient features of Fundamental duties -Parliament State executive State

Legislature assembly Status of Jammu & Kashmir Local government panchayat raj Tamil Nadu Judiciary in India Rule of law/Due process of law Indian federalism central state relations Emergency provisions Elections Election Commission Union and State Amendments to constitution Schedules to constitution Administrative reforms & tribunals Corruption in public life Anti-corruption measures Central Vigilance Commission, lok-adalats, Ombudsman, Comptroller and Auditor General of India Right to information Central and State Commission – Empowerment of women.

Unit-VI- Physical Geography and Economic Commercial Geography of India

Universe Solar system Earth and Atmosphere, hydrosphere, lithosphere Monsoon, rainfall, weather and climate Water resources Geography of India -Physical features: Soil, minerals and natural resources-Natural vegetation-Forest &Wildlife-Agricultural pattern, livestock and fisheries-Social geography population-density and distribution-Natural calamities-disaster management. Geographical landmarks – Policy on environment and ecology. Geography of Tamil Nadu.

Economic Nature of Indian economy Five year plan models an assessment – Land reforms &agriculture Application of science in agriculture Industrial growth – Role of public sector &disinvestment Development of infrastructure National income Rural welfare oriented programmes – Social sector problems population, education, health, employment, poverty HRD sustainable economic growth trends in Tamil Nadu Energy Different sources and development Finance Commission – Planning Commission National Development Council. Current socio-economic problems New economic policy and Government sector. Niti Aayog-Globalization, Liberalization, Privatization and Marketing.

Unit- VII General Knowledge and Current Affairs 10 Marks

Latest diary of events National-National symbols-Profile of States-Eminent persons & paces in news-Sports & games-Books & authors Awards & honors-Latest historical events India and its neighbours – Science and Technology – Latest inventions on science & technology Latest discoveries in Health Science Mass media and communication.

PART – II

CHILD PSYCHOLOGY AND PEDAGOGY – 30 Marks

Unit -I Human Growth and Development

Interaction of Nature and Nurture Concept, Distinction among Growth, Development and Maturation. General Principles of Growth and Development Characteristics, Dimensions of Development – Physical, Cognitive, Emotional, Social and Moral Phases of Development and Development tasks Infancy, Childhood and Adolescence. Unit-Il Cognitive Development

Cognitive Process, Attention Factors relating to attention, Kinds of attention Inattention, distraction and division of attention Span of Attention. Sensation and Perception – Factors relating to Perception, Perceptual errors – Concept formation

Nature and Types of Concepts Piaget’s stages of cognitive development Bruner’s theory Concept maps Imagery Language and Thinking – Reasoning and Problem Solving Implications to the teacher.

Unit-III Social, Emotional and Moral Development

Social development Factors of Social development Social Maturity Erikson’s stages of Social development Emotional development meaning Positive and Negative emotions Emotional control and maturity Place of emotions in life Significance of Emotional Intelligence Moral development Kohlberg’s stages of Moral development.

Unit-IV Learning

Nature and importance of learning Individual differences in learning Learning Curves – Factors influencing learning theories of learning Conditioning: Classical and Operant (Pavlov, Skinner), Trial and Error (Thorndike), Learning by Insight (Kohler) – Transfer of Learning – Learning by Imitation – Levels of Learning: Gagne – Remembering and Forgetting: Curve of forgetting.

Unit- V Intelligence and Creativity

Nature of Intelligence – Distribution of Intelligence Theories of Intelligence: Single, Two factor and Multifactor theories, Guilford’s structure of the Intellect, Gardner’s Multiple Intelligence Theory Constancy of IQ Assessment of Intelligence Users of Intelligence tests.

The Process of Creativity Creativity and Intelligence Identification and promotion of Creativity Thinking: Convergent and Divergent thinking.

Unit- VI Motivation and Group Dynamics

Motivation and Learning-Kinds of Motives – Theories of Motivation: Maslow’s hierarchy of needs Role of Rewards and Punishments Level of Aspiration Achievement Motivation: Techniques of Developing Achievement Motivation Motivation in the classroom context, Competition and Co-operation Leadership Traits Leadership Styles and Classroom Climate. Unit- VII Personality and Assessment

Meaning and Definitions of Personality – Major Determinants of Personality Theories of Personality Types and Traits of Personality, Psychoanalytic Assessment of Personality: Projective and Non projective Techniques-Aptitude concept, types and measurement. Attitude and interest concept and measurement – Integrated Personality.

Unit-VIII Mental Health and Hygiene

Concept of Mental health and Hygiene Conflict and Frustration -Unrest Adjustment and Maladjustment Causes of Maladjustment – Defence Mechanisms Mental Illness. Juvenile Delinquency – Promotion of Mental health of students and teachers.

Unit-IX Guidance and Counselling

Nature, Types and Need of Guidance and Counselling Educational, Vocational and Personal. Identification of Children with Counselling Needs Counselling Techniques: Individual and Group Techniques-Guidance and counselling for the children with Learning Difficulties.

Unit-X History of Educational Development in Tamil Nadu

Ancient, Medieval, Modern Educational System, Development and growth of modern education system (since 1813 to the present day) – Organisational structures of Educational System in Tamil Nadu (DSE, DEE, Samagra Shiksha Abhiyan, SCERT Non-Formal, etc.,) Roles and Responsibilities of CEOs, DEOS, BEOs, Acts and Rules – RTE(Right of children to free and compulsory Education act), Schools run by other Departments in Tamil Nadu Kallar Reclamation, Forest Department, Adhi Dravida and Tribal Welfare Department and other Departments, Implementation of Educational schemes in Tamil Nadu.

Sunday, April 07, 2024

Monday, January 15, 2024

January 15, 2024

CBSE பரிந்துரைகள் தமிழகத்தில் அறிமுகம்; புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக நாடகம்: திமுக மீது அண்ணாமலை விமர்சனம்



CBSE Recommendations Introduced in Tamil Nadu; Drama as Opposition to New Education Policy: Annamalai Criticism of DMK - சிபிஎஸ்இ பரிந்துரைகள் தமிழகத்தில் அறிமுகம்; புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக நாடகம்: திமுக மீது அண்ணாமலை விமர்சனம்

புதிய கல்வி கொள்கை பாடத்திட்டங்களை எதிர்ப்பது போல திமுக நாடகமாடிவிட்டு, சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜக சார்பாக நன்றிள்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் திமுக அரசுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றி. எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக திமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டுக்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான். தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன்மூலம் நிரூபணமாகியிருக்கிறது. தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா, 1967-ம் ஆண்டு அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்டபல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம். புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, தமிழக பாஜக சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 07, 2023

December 07, 2023

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழக நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது!-

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மறுப்பு: தமிழக நலனை திமுக அரசு தாரைவார்த்து விட்டது!- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.

இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவற விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த் வலியுறுத்தி வருகிறது. 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. மற்றொருபக்கம், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள்தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி, 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளைத் தொடங்க நவம்பர் 16-ஆம் நாள் முதல் 26-ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி. புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியிருப்பதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம் அதன் விதிகளை திருத்தாத வரை, தமிழ்நாட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே முடியாது என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கனவை நனவாக்கவே முடியாத பின்னடைவை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முயற்சி செய்து வருவதால் தான் இப்போது புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் திட்டத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான செலவில் மத்திய அரசு 60 விழுக்காட்டையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்ளும். இத்திட்டத்தின்படி முதல் இரு கட்டங்களில் அனுமதிக்கப்பட்ட 82 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக 75 மருத்துவக்கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட போது, அவற்றில் 15 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தான் முதன்முதலில் வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்திற்கு மொத்தம் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. அந்தத் திட்டம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி மத்திய அரசு உதவியுடன் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பில்லை.

இந்த உண்மையை மறைத்து விட்டு, மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும். எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tuesday, October 31, 2023

October 31, 2023

கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு - இன்னொரு ஏமாற்றம் - ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு

இன்னொரு ஏமாற்றம் - கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு காற்றில் பறந்தது திமுக தேர்தல் வாக்குறுதி எண்: 311

ஜாக்டோ- ஜியோ போராட்டங்கள் தீவிரமாக வாய்ப்பு

அரசு ஊழியர், அவர் வகிக்ரும் பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதிக்கான படிப்பை, அவரது பணிக்காலத்தில் படித்து முடித்தால், அவருக்கு தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது அவரின் அடிப்படை சம்பளத்தில் 6 சத வீதம் ஒவ்வொரு மாதமும்,அவர் ஈம்பளத்தில் கூடுதலாக பணிக் காலம் முழுவதும் வழங்கப் படும். ஒருவர் பணிக்காலத்தில் அதியுட்சம் 2 முறை இதுபோல் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை பெற முடியும். அதரவது ஒரு பட்டதாரி ஆசிரியர் பி.எஸ்சி., பி.எட்., கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்துவிட்டு, பின்னர் அவரது பணிக் காலத்தில் கூடுதலாக எம்.எஸ்சி படித்து முடித்தால் அவர் பெறும் அடிப்படை சம் பளத்தில் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு மக்கத்தொகையாக வழங்கப்படும். அந்த ஊதிய உயர்வு அவரது பணிக் காலம் முழுவதும் மாதம்தோறும் கிடைக்கும்.

இதையும் படிக்க | ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) முதல்வருக்கு கோரிக்கை - நாள்.30.10.2023 - 6 Pages - PDF

Thursday, October 26, 2023

October 26, 2023

பள்ளிக் கல்வித்துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றம்



பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 105 ஆண்டுகள் பழைமையானது. இதுபோல், 100 ஆண்டுகளைக் கடந்துள்ள பள்ளிகளுக்கு பழைமை மாறாமல் புதுப்பிக்க தமிழக முதல்வா் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

அதன்படி, இப்பள்ளி 2024இல் புதுப்பிப்பு பட்டியலில் சோக்கப்படும். மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தேங்கும் நீரை அகற்றவும், வகுப்பறைகள்- திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞா் நலன் - விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று இப்பள்ளியில் ஹாக்கி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் சுமாா் 31,000 பள்ளிகளில் 17.50 லட்சம் மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறுகின்றனா். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்துவது தொடா்பாக நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சா் முடிவெடுப்பாா். இத்திட்டம் தெலுங்கானாவிலும் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது. சத்துணவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சோப்பது தொடா்பாக சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமாக திமுக அளித்த 32 வாக்குறுதிகளில் 29 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியா்களின் போராட்டங்களைப் பொருத்தவரை, அவா்களது உணா்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே பாா்க்கிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அவா்களது ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

Tuesday, September 26, 2023

September 26, 2023

நோட்டாவை நோக்கி நகரும் ஆசிரியர்களைத் தன்வயப்படுத்துமா விடியல் ஆட்சி?



நோட்டாவை நோக்கி நகரும் ஆசிரியர்களைத் தன்வயப்படுத்துமா விடியல் ஆட்சி?

பொதுவாகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளைக் கொட்டிக் கொடுப்பதாகப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருத்து ஆழ வேரூன்றி இருப்பது மறுப்பதற்கில்லை. அதன் காரணமாகவே ஆசிரியர்கள் வாக்குகள் திமுகவிற்கே என்ற எண்ணம் பிற கட்சிகளிடம் காணப்படுவது மலிந்துள்ளது. இந்தக் கூற்று மிகவும் தவறானது. இத்தகைய தவறான உண்மைக்குப் புறம்பான கருத்து காரணமாக ஆசிரியர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் ஏராளம்.

இதன் காரணமாகவே, அஇஅதிமுக தலைமை உள்ளிட்ட எவருக்கும் ஆசிரியர்கள் மீது எப்போதும் முழுதாக நம்பிக்கை இருப்பதில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் அவர்கள் ஆட்சியில் இருக்கும் காலக்கட்டங்களில் கிள்ளிக் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதன் உச்சகட்டமாக 2003 இல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் ஒற்றைக் கையெழுத்தில் ஒருசேர பணிநீக்கம் செய்து ஆணைப் பிறப்பித்த கருப்பு நாளை யாரும் மறப்பதற்கில்லை. இவர்களால் தமக்கு எந்தவொரு பயனும் இல்லை என்கிற ஆழ்மன வெறுப்புணர்ச்சியே அதற்குரிய காரணமாகக் கருதிக் கொள்ள நிறைய வாய்ப்புண்டு.

அரசியல் சார்பற்ற நிலையில் எந்த ஆட்சி குறித்தும் இது நம் ஆட்சி என்று கவலை கொள்ளாமல் பொதுவான ஆசிரியர் இயக்கங்களுக்குள் அடையாள அரசியல் மற்றும் கட்சி சார்பு மனநிலையை விதைத்து தலைமைப் பதவி ஆசையுடன் ஊசலாடிய நபர்களை வலைவிரித்து ஒட்டுமொத்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக ஆசிரியர் இயக்கத்தை உடைத்ததில் திமுக மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு நிறைய பங்குண்டு.

தமிழக அளவில் குறிப்பாக திமுகவிற்கு வலுவான இயக்கமாக ஆசிரியர் மன்றம் ஒன்று இருப்பது போல் ஆசிரியர்கள் மத்தியில் அஇஅதிமுக சார்புடைய ஓர் இயக்கத்தை வலுவானதாகக் கட்டமைக்க இன்று வரை இயலவில்லை என்பதே உண்மை.

அரசு ஊழியர் இயக்கங்கள் பலவும் இன்றும் கூட தேசிய, மாநில கட்சிகள் சார்புடையவையாக உள்ளது அறியத்தக்கது.

அதேவேளையில் ஆசிரியர் இயக்கங்களுக்குள் இந்த நிலை இல்லை. திமுக மற்றும் சிபிஎம் கட்சி சார்ந்த ஒரு சில ஆசிரியர் இயக்கங்களைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் இப்போது வரை கட்சி சார்பற்று பொதுவானவையாக துணிந்து திடமுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இதுபோன்ற கட்சி சார்புடைய இயக்கங்கள் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நம்பும்படியாக எதையெதையோ சொல்வார்கள். ஆனால் எதுவும் உண்மையல்ல. எந்த மயிலாவது தாமாக இறகொன்றை இரந்து கேட்பவருக்குக் கொடுத்து விடுமா என்ன?

தன்னலத்திற்காகப் பொதுநலத்தைப் பணயம் வைத்த துரோக வரலாறே ஆசிரியர் போராட்ட களத்தில் வழிநெடுகக் காணப்படுவது வருந்தத்தக்கது. வேதனைக்குரியதும் கூட. இந்த ஆசிரியர் இயக்க உடைப்பு வேலை இன்றும் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் ஒவ்வொரு நிலையிலும் தொடர்வதைக் காண சகிக்கவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த போராட்ட களங்கள் அண்மைக்காலமாகப் பிசுபிசுத்து வெறும் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போக்கிடமாக ஆகிப் போனதற்கு தனிமனித பதவி வெறியும் கண்மூடித்தனமாக நம்பும் கட்சி மோகமும் முக்கிய காரணங்கள் ஆகும்.

திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாய்விட்டுச் சொல்லவும் முடியாமல் கட்சி அபிமானத்திலிருந்து விட்டு விலகவும் இயலாமல் தணலில் மாட்டிய பிஞ்சு உயிராக அண்மைக்காலத்தில் கட்சி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் நிலையுள்ளது. இஃது ஆசிரியர்களின் பெரும் துயரம் ஆகும். வெறுப்பு மிகுந்த எதிரியை எதிர்த்து இழப்பதற்கு இனி எதுவுமில்லை, அடைவதற்கு ஓர் இலக்கு இருக்கின்றது என்று உயிரைக் கொடுத்து போராட முடியும். அன்பிற்கினிய பச்சைத் துரோகியுடன் இனி எவ்வளவு காலத்திற்கு மறத்துப்போன ஆன்மாவுடன் கைகோர்த்து நடைபோடுவது என்று அல்லாடித் தவிக்கும் ஆசிரியர் இயக்கவாதிகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பது கொடுமையானது. முன்பு போல் இப்போது யாரையும் அவ்வளவு எளிதாக அதிக காலம் ஏமாற்ற முடியாது. இதை எளிய அணுகுமுறையையும் தியாக உணர்வையும் கட்சி சார்பில்லாத போராட்ட குணத்தையும் காலில் போட்டு மிதித்து பக்கா பகட்டுக் கட்சிக்கார அரசியல்வாதி போல் ஆகிவிட்ட வெள்ளையும் சொள்ளையும் பளிச்சிடும் ஆசிரியர் தலைமை உணருதல் அவசியம். முகத்திற்கு நேராக எதிர்த்துக் கேள்வி கேட்க துணிவற்ற பலரும் தம் முதுகிற்கு பின் காரித் துப்புவது குறித்து சிந்திப்பது நல்லது.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட நிலையில் இன்றைய ஆசிரியர்கள் நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஆசிரியர் விரோத வடுக்களுக்குத் தீர்வாக விடியல் அரசைத் துணையாகக் கொண்டது மறைப்பதற்கில்லை. பழைய ஓய்வூதியம், சம வேலைக்குச் சம ஊதியம், ஊதிய முரண்பாடுகள் களைதல், பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்று காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஊக்க ஊதியம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் விடுவித்தல் முதலானவற்றிற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்குக் கிடைத்தது என்னவோ பெருத்த ஏமாற்றம் மட்டுமே என்றால் மிகையில்லை.

அதாவது இருண்ட வாழ்விலிருந்து மீள முடியா நரக வாழ்வில் தாமாகவே போய்விழுந்த குற்ற உணர்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆசிரியரும் உழல்வதாக அறியப்படுகிறது. விளம்பரங்கள் பள்ளிக்குத் தேவை தான். ஆனால், வெற்று விளம்பரங்களால் கல்வி பாழாக்கப்படுவதை எவராலும் ஏற்கவியலாது. கற்பித்தலை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு இணையத்தோடும் பதிவேடுகளோடும் நொடிகள் தோறும் மல்லுக்கட்டும் முழுநேர வேலையில் ஆசிரியர்களின் ஆவி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரின் முழுமுதற் கடமையாக உள்ளது. முதன்மையானதும் பயன்மிக்கதும் ஆசிரியர் நலனுக்கு உகந்ததுமான பல்வேறு கோரிக்கைகளும் ஆழ்கடலில் கொண்டு போய் போடப்பட்டவையாகவே இன்றுவரை காணப்படுகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. வந்த பிறகு வேறு பேச்சு என்பதில் ஆசிரியர்களுக்கு எப்போதும் உடன்பாடில்லை. பழைய கொடிய பிசாசுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி ஆசிரியச் சமூகத்தை அதிலிருந்து விடுவிக்காமல் மேலும் புதிய புதிய பேய்களை ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது என்பது கொடுமையானது.

ஆம். எண்ணும் எழுத்தும், கிணற்றைத் தேடி அலைந்த கதையாக உயிரை மாய்க்கும் இணைய வழி மதிப்பீட்டு முறைகள் மற்றும் ஆய்வு படையெடுப்புகள், பதவி உயர்வுகள் கலந்தாய்வைக் கொள்கை முடிவெடுத்து நடத்துவதில் காலம் தாழ்த்துதல், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அறிவுறுத்துதல், மறைமுகமாக காலை உணவுத் திட்டம் வாயிலாக ஆசிரியர் பெருமக்களை 12 மணிநேரம் உழைக்க வைக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை ஏவிவிடுதல் முதலான புத்தம் புதிய பிசாசுகளுடன் போராடி உடல் மற்றும் உள நலன் கெட்டு, சுயமரியாதை இழந்து, அகால மரணம் அடையும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இன்றியமையாதது.

இத்தகைய சூழலில், இந்திய துணைக்கண்ட ஒன்றிய அளவில் திராவிட மாடல் அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் நலத்திட்ட உதவிகளையும் தொலைநோக்கு சிந்தனைகளையும் முன்னெடுக்கும் முன்முயற்சிகள் அனைத்திலும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்கள் காக்கப்பட தோள்கொடுப்பது அரசின் கடமையாகும். இன்றைய பாசிச, மதவாத, வெறுப்பு அரசியல் மற்றும் அவற்றின் அனைத்து மக்கள் விரோத மற்றும் குரோத செய்கைகளுக்குத் தவழ்ந்து தலையாட்டும் திராணியற்று திராவிடத்தை முழுக்குப் போட்டு தலைமை குழப்பம் நிலவும் கைப்பாவை அரசியல் மீது பின்தொடரும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் திமுகவை விட்டாலும் ஒர் அமைதியும் இணக்கமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்திட வேறு கதியில்லை என்பதே நடப்பியல் ஆகும்.

அதேவேளையில், நம்பகமும் நம்பிக்கையும் நிறைந்த விடியல் அரசு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 100 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதை நினைத்து ஆசிரியர்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியுள்ளது. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் தம் நியாயமான எதிர்ப்பை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அச்சுறுத்தும் சனாதனமும் போலியான சமூகநீதிக் கூட்டணியும் வேண்டவே வேண்டாம் என்று நோட்டாவை நோக்கி நகரும் அபாயகரமான சூழலைத் தடுத்து நிறுத்தி சரிந்து இருள் கவிந்த பாதாளத்தில் விழும் இழந்த நம்பிக்கையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்து புதியதொரு விடியலைத் தரவேண்டும் என்பது ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பாகும்.

முனைவர் மணி கணேசன்
September 26, 2023

அரசு ஊழியருக்கான வாக்குறுதியை தி.மு.க.,அரசு நிறைவேற்றவில்லை - ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

DMK, government has not fulfilled the promise for government employees - Interview with the general secretary of the employees' union- அரசு ஊழியருக்கான வாக்குறுதியை தி.மு.க.,அரசு நிறைவேற்றவில்லை - ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

Friday, August 18, 2023

August 18, 2023

நான்கு மாதங்களாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளுக்கான விடுதிகளுக்கு உணவு தொகை வழங்காமல் இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக உணவு தொகை வழங்காமல் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனம்.



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருக்கும் மாணவ-மாணவியர்களுக்கான விடுதிகளுக்கு தேவையான உணவு நிதி, கடந்த நான்கு மாதங்களாக திமுக தலைமையிலான அரசால் வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கான விடுதிகள். அதேபோன்று கல்லூரிகள், ஐ டி ஐ, பாலிடெக்னிக் மற்றும் பட்ட மேற்படிப்பு கல்லூரி போன்றவற்றுக்கான விடுதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இதில் மாணவர் விடுதிகள் 8,37, மாணவியர் விடுதிகள் 494 என மொத்தம் 1331 விடுதிகள் செயல்படுகின்றன.

இதேபோன்று பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிட பள்ளிகள் 320 மற்றும் பழங்குடியினருக்கான 48 நலவிடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் தங்கி படிக்கின்றனர். இங்கு தங்கி படிக்கும் மாணாக்கர்களின் உணவு தேவைக்காக, கல்லூரி மாணவருக்கு மாதம் 1100 ரூபாயும், பள்ளி மாணவருக்கு மாதம் 1000 ரூபாயும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவ-மாணவியருக்கு மாத உணவுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது.

இந்த நிதியை பயன்படுத்திதான் மட்டன், சிக்கன், முட்டை, காய்கறி, கொண்டக்கடலை, பயறு வகைகளை வாங்கி உணவு தயாரிக்கப்பட்டு மாணாக்கர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உணவிற்கான தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என்று விடுதி காப்பாளர்கள் சொல்லி வேதனைப்படுகின்றனர். இதன் காரணமாக வேறு வழியின்றி, விடுதி காப்பாளர்கள் கடன் வாங்கி உணவு தயாரித்து கொடுப்பதாக தெரியவருகிறது. இதனால் மாணவர்களுக்கு முறையாக உணவை ஏற்பாடு செய்து தர முடியாமல் அலுவலர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்தாண்டு ரூ.4,281,76 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது ஆனால் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.3,513 கோடி அளவுக்கு குறைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த அளவுக்கு குறைத்து நிதியை ஒதுக்கீடு செய்தது ஏன்? என்று தெரியவில்லை.

தற்போது திமுக தலைமையிலான அரசு கடந்த நான்கு மாதங்களாக ஆதிதிராவிடர் நலவிடுதிகளுக்கு உணவு தொகை கூட வழங்காமல் இருப்பதை பார்க்கும்போது இந்த துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3.5/3 கோடி நிதியை திமுகவினர் என்னதான் செய்தனர்? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதுவரை மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தவில்லை. திமுகவினரிடமிருந்து நாள்தோறும் வெற்று மேடைப்பேச்சுகளும், ஆனால் வீர வசனங்களும் தான் வந்த வண்ணம் இருக்கிறது.

திமுகவினர் அறிவித்த எத்தனையோ திட்டங்கள் இன்று வரை வெறும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன.

திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கினால் மட்டும் போதுமா? கொடுத்த வாக்குறுதிகளை, நிறைவேற்ற வேண்டாமா?

நாள்தோறும் வாய்கூசாமல் பொய்களை பேசி மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். இதுபோன்று இன்னும் எத்தனை காலத்திற்கு வேஷம் போடுவீர்கள்? விரைவில் தமிழக மக்களுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலவிடுதிகளில் உணவுத்தொகையை வழங்க எந்தவித முயற்சியும் எடுக்காமல் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு. என பொழுதை கழிக்கும் திமுகவினர் திரைப்படங்களில் தங்களை ஏதோ சமூக நீதி காவலர்கள் போலவும், ஓடுக்கப்பட்ட மக்களின் காவலர்கள் போலவும் தங்களை தாங்களே விளம்பரப்படுத்தி கொள்வதால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

இந்த உண்மைகள் நன்றாக தெரிந்தும், திமுகவினரோடு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சியை சேர்ந்தவர்களோ தங்கள் சுய லாபத்திற்காக தொடர்ந்து திமுகவினருக்கு துதி பாடிவருவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. திமுகவினர் எவ்வளவு செலவு செய்து சுய விளம்பரம் தேடினாலும் தமிழக மக்கள் யாரும் அவர்களை இனிமேல் நம்பப்போவது இல்லை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாணவர் நலவிடுதிகளுக்கு கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச்சூழல், உணவு தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவை குறித்து தமிழக அரசு உடனே ஆய்வு செய்திட வேண்டும்.

மேலும், ஆதிதிராவிடர் நலவிடுதிகளுக்கு நான்கு மாத காலமாக நிலுவையில் உள்ள உணவுக்கான தொகையை காலதாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
August 18, 2023

தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - ஆசிரியர்கள் குமுறல்!!

தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் குமுறல்

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி களில் தி.மு.க., அரசு ஒன்றை கூட நிறைவேற்றவில்லை, என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் குற்றம் சாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற மயில் கூறியதாவது:

Wednesday, August 16, 2023

August 16, 2023

நீட் தேர்வு | மத்திய அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதப் போராட்டம்



நீட் தேர்வு | மத்திய அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

“நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் இம்மாதம் 20-ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திமுகவின் கூட்டறிக்கையில், “தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம். அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது. செல்வசேகரின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது, யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது. இந்த மரணங்கள் அனைத்துக்கும், ஒன்றிய பாஜக அரசும், அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் , நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம். ஒட்டுமொத்த தமிழக மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை.

“நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார். இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன் ராமசாமியின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்? மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின் போது, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் அடிமை ஆட்சியின் போது தமிழகத்துக்குள் வந்தது. நீட் விலக்குக்காக 2017-ம் ஆண்டு அதிமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழக சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அதிமுக அடிமைகள் மறைத்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியபோதுதான், அது தமிழகத்துக்கே தெரியவந்தது. இப்படிப்பட்ட துரோக வரலாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அடிமைகளுக்கோ நம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிற இயக்கமாக நம்முடைய திமுக இருந்து வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும், முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.மே 2021-ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம், ஒப்புதல் வழங்கும்படி பல்வேறு தருணங்களில் முதல்வர் வலியுறுத்தி வந்தார்.நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதல்வர்களுக்கு நம் தமிழக முதல்வர்கடிதம் எழுதினார். கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் 27 -ஆம் தேதியன்று, முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினார். தமிழக முதல்வரின் தொடர் அழுத்தம், பிற அரசியல் கட்சிகளின் அழுத்தம், பொதுமக்கள், மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து, ஆலோசிப்பதற்காக முதல்வர் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று முதல்வர் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை ஏப்ரல் 22, 2022 அன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார்.

இப்படி தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளுநர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.பிரதமர் தமிழகம் வருகிற போதும், முதல்வர் டெல்லி செல்கிற போதும், பிரதமரிடம் வைக்கப்படும் முதல் கோரிக்கையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவதுதான். திமுக இளைஞர் அணி செயலாளர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், மோடியை டெல்லியில் பிப்ரவரி 28, 2023 அன்று சந்தித்தார். அப்போதுகூட, பிரதமரிடம், நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார்.இப்படித் தமிழக அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய பாஜக அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது. இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது.

தமிழக முதல்வர் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும், இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழகமெங்கும் நடைபெறவுள்ளது.

இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம். நீட் தேர்வை ஒழித்து, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையும், விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog