Breaking

Showing posts with label Court action order. Show all posts
Showing posts with label Court action order. Show all posts

Saturday, January 17, 2026

Thursday, May 08, 2025

Tuesday, June 18, 2024

Sunday, April 14, 2024

April 14, 2024

4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது - சென்னை உயர் நீதிமன்றம்

Sunday, February 18, 2024

February 18, 2024

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வும், நீதிமன்ற தீர்ப்பும்



நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வும்

நீதிமன்ற தீர்ப்பும் Middle School Headmaster, BEd Higher Education Incentive Pay Increase and Court Judgment

* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd உயர் கல்வி முடித்து incentive increment அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தணிக்கை தடை ஏற்பட்டது .பல நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd உயர் கல்விக்கு சில மாவட்டங்களில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படவும் இல்லை . திருமதி V. Geetha வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு

* * /It is Clear that BEd qualification is not a required qualification for being posted as Middle school headmaster / என்று மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது . நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd உயர் கல்வி முடித்தவர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது சரி .

திரு A.Arul வழக்கு இரு நபர் அமர்வால் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு

* * அரசாணை எண் 42 , அரசாணை எண் 107 , 07.06 .1991 இயக்குநரின் செயல்முறைகளின்படி நடுநிலைப் Uள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக BEd உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது சரி

* * here is a victim to one Such indiscriminate decisions of the educational authorities

வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு கண்மூடிதனமானது என்று கடுமையாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது * * கரூர் மாவட்டத்தை சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd உயர் கல்விகான ஊக்க ஊதிய உயர்வை வழங்கிடவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

* * * நீதிமன்ற தீர்ப்புகளின் படி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக முடித்துள்ள BEd உயர் கல்வி கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது சரியாகும் .

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

Tuesday, January 16, 2024

January 16, 2024

அரசுப்பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை



அரசுப்பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை

தீயணைப்புத்துறை அதிகாரி தொடர்ந்த வழக்கில், அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மணலியை சேர்ந்தவர் ஜி.சத்தியநாராயணன். தீயணைப்புத்துறை இணை இயக்குநரான இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மண்டல தீயணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தேன்.

பின்னர் தீயணைப்பு துறையில் மத்திய மண்டல துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றேன். தொடர்ந்து கோவையில் மேற்கு மண்டல இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றேன். எனக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் பணிமூப்பு முறையை மாற்றம் செய்து தமிழக உள்துறை 2023 ஜூலையில் அரசாணை பிறப்பித்தது. இதனால், எனது பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய ஒதுக்கீடு தராததால் என்னைவிட குறைந்த பணிமூப்புள்ளவர்கள் பெரிய பதவிக்கு வந்துவிடுகிறார்கள். எனவே, சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கு உட்பட்டு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதை உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் வலியுறுத்தியுள்ளது. இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழக அரசு பதவி உயர்வுகளில் உரிய ஒதுக்கீடு நடைமுறைகளை கடைபிடித்து வந்தது. எனவே, சமூக கட்டமைப்புக்கு எதிராக 2023 ஜூலை 10ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

எனக்கு, தீயணைப்பு துறையில் இணை இயக்குநராகவோ அல்லது அதே அந்தஸ்தில் வேறு துறையிலோ பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பிப்ரவரி 5ம் தேதிக்குள் பதில் தருமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். அதுவரை அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Total Pageviews

Search This Blog