Breaking

Showing posts with label பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள். Show all posts
Showing posts with label பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள். Show all posts

Thursday, September 01, 2022

September 01, 2022

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2022


 திருக்குறள் :

பால்: பொருட்பால்

அதிகாரம்: நல்குரவு 

குறள் 1044:

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

பொருள்:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

பழமொழி :
A good tongue is a great weapon.

நல்ல வார்த்தைகள் ஒரு சிறந்த ஆயுதம். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன். 

2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்

பொன்மொழி :

எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!

பொது அறிவு :

1.காந்தியை முதன் முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் யார்? 

 நேதாஜி . 

 2.முதல் இரும்பு கப்பலை செய்தவர் யார்?

 வில்கின்சன்.

English words & meanings :

Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds
ஆரோக்ய வாழ்வு :







அத்திப் பழத்தில் கொழுப்புச் சத்துக்கள் எதுவும் கிடையாது. கொலஸ்டிரால் இல்லாத, அதேசமயம் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாக இந்த அத்திப் பழம் இருக்கிறது. இதில்,

வைட்டமின் ஏ,

வைட்டமின் சி,

கால்சியம்,

இரும்புச்சத்து,

பொட்டாசியம்,

மக்னீசியம்

ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. 
NMMS Q 51:

லீலாவதி என்னும் நூலை இயற்றியவர் யார்? 

விடை : பாஸ்கராச்சாரியார்.
நீதிக்கதை

தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.

இன்றைய செய்திகள்

01.09.22

* கிருஷ்ணகிரி அணையில் இருந்து 14,618 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

* தமிழகத்தில் இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.

* “பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானியத்தில் சக்தி இ-ஆட்டோ வழங்கப்படும்” என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் உயர்வு - 2021-ல் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு  என்று தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை கூறியுள்ளது.

* ஆப்கனில் பஞ்சம் காரணமாக 60 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - ஐ.நா. உயர் அதிகாரி எச்சரிக்கை.

* சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர்.

* ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

* ஆசிய கைப்பந்து போட்டி: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி.

* இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்.

Today's Headlines

* Release of 14,618 cubic feet of water from Krishnagiri Dam: Flood warning for coastal people.

 * In Tamil Nadu, the Chief Minister has ordered the purchase of normal paddy at the rate of Rs.2,115 per quintal and Rs.2,160 per quintal of light paddy from today.

*  Puducherry State Transport Minister Chandra Priyanka has said that Shakti e-Auto will be provided with 100 per cent subsidy to encourage self-employment for Scheduled Caste and Tribal women.

 * The Chennai Meteorological Center has informed that there is a possibility of widespread rain and heavy rain at some places for 4 days in Tamil Nadu.

*  Crimes against women rise 15.3 per cent - 4.28 lakh cases in 2021, says National Crime Records Bureau report.

* 60 lakh people likely to suffer due to famine in Afghanistan - UN  Higher authority warning.

* As a precautionary measure in connection with the Chi



Tuesday, August 30, 2022

August 30, 2022

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2022


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள் : 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பொருள்:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்

பழமொழி :

Necessity is the mother of invention

தேவையே கண்டுபிடிப்பின் தாய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன். 

2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்

பொன்மொழி :

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்!

பொது அறிவு :

1.ஆழ்கடல் செல்பவர் எடுத்துச் செல்லும் வாயு எது? 

 ஆக்ஸிஜன் .

 2.தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது? 

 ஆனைமுடி.

English words & meanings :

bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு 

பழங்களில் அத்தியை சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்கிறார்கள். அத்திப் பழத்தை ஃபிரஷ்ஷாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிடலாம். அத்திப்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி நிறைய மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன

NMMS Q 50:

ஓர் எண்ணை மூன்று முறை பெருக்கக் கிடைப்பது __________ எனப்படும்.

விடை : கனம்

நீதிக்கதை

இரண்டு மரம்

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா? என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தது. ஒரு நாள் பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் எனக்கு தெரியும் நான் *வலுவிழந்து* விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு என்றது.

நீதி :
உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.

இன்றைய செய்திகள்

30.08.22

 🌸 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்வழங்கும் திட்டம் வரும்
செப்., 5 ம் தேதி துவக்கிவைக்கப்படுகிறது துவக்க விழாவில்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

🌸 கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🌸 தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌸திருவண்ணாமலை : சாலையில் கிடந்த மணிபர்சை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

🌸கேரளாவில் ஆண்டுதோறும் 10 நாள் மலையாள அறுவடைத் திருவிழாவான ஓணம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு அந்த திருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை நிகழ்த்தப்பட உள்ளது

🌸 நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. கூறியுள்ளார்

Today's Headlines

 🌸 The scheme of giving 1000 rs/month college students will come into effect from September 5th. For the Inauguration of the programme Delhi Chief Minister Arvind Kejriwal will be the special guest.
 
 🌸 The Tamil Nadu government has informed that 800 mobile medical teams have been set up to provide counseling to students who are under stress due to education and exams. 

 🌸 According to Meteorological Department, 17 districts of Tamil Nadu including Nilgiris and Coimbatore are likely to experience heavy rain today.

 🌸 Thiruvannamalai: Many people are praising the youth who handed over the money bag lying on the road to the police.

 🌸Onam, a 10-day Malayalam harvest festival, is celebrated annually in Kerala.  This year the festival will be held from August 30 to September 8.

 🌸 Chief Minister M.K.STALIN said that under the Nan Muthalvan scheme, the goal of the Tamil Nadu government is not to have jobs for all, but to have appropriate jobs for all.

Tuesday, August 23, 2022

August 23, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.08.2022


  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1034

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

பொருள்:

உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

பழமொழி :

A little labour, much health.

உழைப்பே ஆரோக்கியம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

ஒன்று உங்களுக்கு
முக்கியமென்றால்.. தோல்விக்கே
அதிக வாய்ப்பு என தெரிந்தாலும்..
அதை நீங்கள் செய்ய வேண்டும்..!

பொது அறிவு :

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?

 வேளாண்மை. 

 2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

 ஆந்திரப்பிரதேசம்.

English words & meanings :

Wam-bled- an unsteady or rolling movement. Verb. நிதானம் இன்றி நடப்பது. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

சப்போட்டா இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.

NMMS Q 46:

2Y , 5V , _______ , 17J , 26A. 

 Ans : 10Q

ஆகஸ்ட் 23

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நீதிக்கதை

நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

23.08.22

* தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் அரசுப் பணித் தேர்வுகளுக்கு, தமிழ் தகுதித் தேர்வு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

* அரசுப் பள்ளி, கல்லூரிகளின் 25 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் பயண அட்டை: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்.

* இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர்.

* சோமாலியா ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு: 70 பேர் படுகாயம்; 106 பேர் பத்திரமாக மீட்பு.

* சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கை துறைமுகத்தில் இருந்து வெளியேறியது.

* கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது.

* 10 அணிகள் பங்கேற்கும் அஞ்சல் துறையினருக்கான அகில இந்திய கால்பந்து போட்டி; சென்னையில் நேற்று தொடக்கம்.

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

* The Madras High Court has ordered the Tamil Nadu government to issue a notification banning nurseries from growing and selling foreign saplings in Tamil Nadu.

 * The Chennai Meteorological Department has said that there is a possibility of widespread rain and heavy rain at a few places in Tamil Nadu for 4 days.

* The Government of Tamil Nadu has announced that the Tamil Eligibility Test will be implemented for the civil service examinations in Tamil Nadu.

 * Travel cards for 25 lakh students of government schools and colleges soon: Transport department officials inform.

* Tomato fever spread in India: 82 children under 5 years affected.

* Death toll rises to 40 in Somalia hotel attack: 70 seriously injured;  106 people were rescued safely.

 * China's spy ship 'Yuan Wang 5' leaves Sri Lankan port.

 * Last ODI: New Zealand beat West Indies to win: clinched the series.

 * 10-team A postal football tournament;  Started yesterday in Chennai.

 * Caroline Garcia of France won the women's singles title at the Cincinnati Open tennis tournament.


Friday, August 12, 2022

August 12, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.08.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 12.08.2022


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1025

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

பொருள்:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்

பழமொழி :
Don't use a lot where a little will do. 

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 

2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.

பொன்மொழி :

உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்....விவேகானந்தர்

பொது அறிவு :

1.ஐநா சபை எந்த ஆண்டு தொடங்கியது ?

 1945 . 

 2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் எது?

 ஜூலை 21 ,1969.

English words & meanings :

Quiz-zi-cal - asking a question through expression not with words. Adjective. ஒன்றை வினவுவதைப் போலக் காணப்படுகின்ற. பெயரளபடை 
ஆரோக்ய வாழ்வு :

கறிவேப்பிலை புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் காணப்படும் ப்ளவனாய்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
NMMS Q 40:

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில் எது?

 விடை: ஹசரா ராமசாமி கோயில் 

ஆகஸ்ட் 12

விக்கிரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்

விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

உலக யானைகள் நாள்

உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய நூலக தினம். 

ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.
நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.

நீதிக்கதை

ஒரு வியாபாரியின் கதை

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. 

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். 

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினாலேயே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். 

பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல். 

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். 

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய செய்திகள்

12.08.22

* போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - பெற்றோர், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.

* 75-வது சுதந்திர தினம்: சென்னையில் களைகட்டிய இரண்டாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி.

* சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநராக பேராசிரியர் விஜயலட்சுமி நியமனம்.

* மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்ந்தளிப்புத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

* 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கார்பிவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி.

* தைவான் எல்லையில் ராணுவப் பயிற்சிகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாகவும் சீனா கூறியுள்ளது.

* மாநில ஜூனியர் தடகள போட்டி:
கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்க உள்ளது.

* கனடா ஓபன் டென்னிஸ்: சானியா- மேடிசன் இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

* முதல் டி20 போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி.

Today's Headlines

* Drug-free Tamil Nadu - CM Stalin's appeal to parents, teachers

 * 75th Independence Day: Day 2 Rehearsal in Chennai

 * Appointment of the first woman director of the Department of Legal Education Prof. Vijayalakshmi.

 * 4,758 crores have been released to Tamil Nadu from the central government's tax distribution amount to the states.

 * Central government approves Carbivax booster vaccine for everyone above 18.

  *China has said it has ended military drills on its border with Taiwan and is planning regular patrols.

 * State Junior Athletics Tournament will be held for 4 days in S.T.A.D Krishnagiri stadium from 17th to 20th.

 * Canada Open Tennis: Sania-Madison advance to quarterfinals

* First T20: New Zealand beat West Indies to win.

Thursday, August 11, 2022

August 11, 2022

School Morning Prayer Activities: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022

School Morning Prayer Activities - 11.08.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022

School Morning Prayer Activities - 11.08.2022
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

பொருள்:
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்

பழமொழி :
It is the mind that makes the body rich.

உள்ளமே உடலை செழிப்பாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 

2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.

பொன்மொழி :

உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.

பொது அறிவு :

1.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார் ? 

 பாத்திமா பீவி. 

 2. மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன ? 

 புத்லிபாய்.

English words & meanings :

Pediatrician - a person who treats children, noun. குழந்தை மருத்துவர். பெயர்ச் சொல் 
ஆரோக்ய வாழ்வு :

கறிவேப்பிலையை தினமும் டீ போட்டு வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது. ஒரு மாதம் காலம் வரை இப்படி குடித்து வருவது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

அப்படி இல்லையென்றால் காலையில் வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வரலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உங்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
NMMS Q 39:

பெட்ரோலுடன் எந்த ஆல்கஹாலைக் கலந்து பயன்படுத்தலாம் என மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது?

 விடை: எத்தனால்
நீதிக்கதை

வைரவியாபாரி

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று, இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் என்றான். உடனே பிச்சைக்காரன், இரண்டு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள் என்றான்.

அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் இரண்டு ரூபாய் அதிகம்! நான் உனக்கு ஒரு ரூபாய் தருகிறேன் என்றான். அதற்கு பிச்சைக்காரன், பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான். வைர வியாபாரி, எப்படியாவது அவன் தன்னிடம் அதை ஒரு ரூபாய்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 2000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் இரண்டாயிரத்தை கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோஷமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் என்றான். அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் இரண்டு ரூபாய்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றவாறே நடக்கலானான்.

இன்றைய செய்திகள் - 11.08.22

* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு.

*நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

* புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப் பி ஐ அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அத்துமீறல்கள் நடந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

* எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் முடிவு செய்துள்ளது.

* காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் : தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை.

* ஐ.எஸ்.எல் கால்பந்து: ரஹீம் அலியை தக்கவைத்தது சென்னை அணி

* ஐசிசி டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறார்.

Today's Headlines

* Tamil Nadu Chief Minister M. K. Stalin has announced that the winning Indian teams will be given a prize of Rs 1 crore each.

* The Chennai Meteorological Department has informed that the Nilgiris and Coimbatore are likely to receive very heavy rains.

 * Planning to set up pilot training center at Chettinad near Karaikudi.

 * Supreme Court Justice Uday Umesh Lalit has been appointed as the next Chief Justice of the country.

 * Former US President Donald Trump has accused the FBI of violations during a search of his Florida home.

 * The Council of the European Union has decided to reduce dependence on Russia for gas imports.

 * Commonwealth Fencing Championship: Tamil Nadu player Bhavani Devi wins gold.

* ISL Football: Chennai retain Rahim Ali

 * Indian player Suryakumar Yatham continues to remain at the 2nd position in the list of best batsmen in the ICC T20 rankings.

Monday, August 08, 2022

August 08, 2022

School Morning Prayer Activities - 08.08.2022 - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022

School Morning Prayer Activities - 08.08.2022
 
 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022
School Morning Prayer Activities - 08.08.2022 - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

பொருள்:

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது

பழமொழி :
Too much rest is rust.

துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 

2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன். 

பொன்மொழி :

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.....ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1. தீப்பெட்டியில் இரு பக்கமும் தடவப்படும் திரவம் எது? 

சிவப்பு பாஸ்பரஸ் .

 2.ஒரு சிங்கம் சாதாரணமாக எத்தனை அடி தூரம் பாயும்?

 20 அடி.

English words & meanings :

neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

இந்திய சமையலைப் பொருத்த வரை கறிவேப்பிலை என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளன. கறிவேப்பிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது. 

NMMS Q 37:

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளின் முறையான வரிசை: Learn, Exam, Result, Book. 

 விடை: Book, Learn, Exam, Result 

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.


இன்றைய செய்திகள் - 08.08.22

* கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

* நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

* பிஹாரில் பத்து மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் இருந்து நிலத்தடி நீர் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

* தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.

* சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

* உலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றுள்ளார்.

* காமன்வெல்த்: குத்துச்சண்டை, மல்யுத்தம், பாரா டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.


Today's Headlines

* The forest department is planning to set up a butterfly park near Kodaikanal to promote tourism and attract tourists in Thandikudi hills.

 * On the occasion of the country's 75th Independence Day, the national flag is being sold at post offices for Rs.25.

 * According to the Chennai Meteorological Department, 6 districts of Tamil Nadu namely Nilgiris, Coimbatore, Tirupur, Theni, Dindigul and Tenkasi are likely to receive heavy rain.

 * The central government has written a letter to 7 state governments including Tamil Nadu asking them to take measures to control the spread of corona virus and to increase vaccination activities.

* Ten districts in Bihar have been found to have uranium above the limit in groundwater.  In this case, groundwater from these districts has been sent for testing.

*  At least 121 people have been injured in a massive fire caused by lightning at an oil depot in the South American country of Cuba.  Many have disappeared.

 * Viswanathan Anand from Tamil Nadu has been elected as the Vice President of International Chess Federation (FIDE).

 * World Junior Athletics: Tamil Nadu's Selvaprabu won silver.

 * Commonwealth: India has won medals in boxing, wrestling, para table tennis and lawn bowls.


Tuesday, August 02, 2022

August 02, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022
  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றியில் செல்வம்

குறள் : 1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருள்:
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்

பழமொழி :
Don't bargain for fish that is still in the water.
கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

வாழ்க்கையில் நிறைய
பிரச்சனைகளை சந்தித்த
பின் அறிவையும் சில
இழப்புக்களை பார்த்த
பின் அதிக அடக்கத்தையும்
உணர்கிறோம்..!

பொது அறிவு :

1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன? 

ரிப்ஸ் .

 2.மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை யாது?

1400.

English words & meanings :

jan·gling - to produce a harsh sound. Verb. கடூர சத்தம் உருவாக்குதல். வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :

பெரும்பாலான பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகிறது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
சிறுநீரக செல்கள் மீது பாதுகாப்பை வழங்குகிறது. ப்ளூ பெர்ரி பழங்களில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ் பரஸ் போன்ற பண்புகள் உள்ளன. க்ரான் பெர்ரி பழங்கள் சிறுநீர் பாதையை தொற்றுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.
NMMS Q 37:

ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கின் ஏழில் ஒரு பங்கு 20 எனில் அவ்வெண் _______. 

விடை: 1680

ஆகஸ்ட்  02

ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.

பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்

பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

பிங்கலி வெங்கைய்யா

பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.
நீதிக்கதை

நான்கு பொம்மைகள்

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன், இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. அதனுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார். சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித்தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள் என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார். இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார். அப்போது இதில் யார் தான் சிறந்த மனிதர் என்று அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.

மூன்றாம் முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார். நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்

இன்றைய செய்திகள்

02.08.22

📍மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி.

📍நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

📍தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

📍இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்களுக்கான நிவாரணம் குறித்த விவரம் மத்திய அரசிடம் இல்லை என்ற தகவலை மத்திய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் மக்களவையில் வெளியிட்டார்.

📍புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள்: எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ திட்டம்.

📍கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

📍காமன்வெல்த் ஜூடோ போட்டி : சுசிலா தேவி இறுதி சுற்றுக்கு தகுதி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.

📍காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்.

📍காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Today's Headlines

📍Madurai Regional Arts, Science Colleges Counseling Begins: 73,260 Candidates for 14,430 Seats

 📍The Madras High Court has warned that if the court order to remove water encroachments is not implemented within 10 days, it will have to order the Chief Secretary to appear in person.

 📍The Tamil Nadu Public Service Commission has announced August 26 as the last day to apply online for the 16 vacant posts of Career Counselor and Social Officer.

 📍Union Minister of State for Tribal Affairs released the information in the Lok Sabha that the central government does not have the details of the relief for the displaced tribal people.

 📍Earth observation satellite 'Microsat-2A': ISRO plan to launch by SSLV rocket.

 📍Last July 29 Scientists reported that the Earth completed its one-day rotation around itself 24 hours earlier on that date.

 📍Commonwealth Judo Tournament: Susila Devi qualifies for finals - India assured of another medal

 📍Commonwealth Boxing Tournament: India's Amit Pangal advances to quarter-finals

 📍India's Achinda Shuli lifted 313 kg and won the gold medal in the Commonwealth Weightlifting Championships.

Saturday, July 09, 2022

July 09, 2022

School Morning Prayer Activities: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022

School Morning Prayer Activities 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022
School Morning Prayer Activities: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1022

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

பொருள்:
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்

பழமொழி :
In the end things will mend.

போகப் போக எல்லாம் சரியாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 

2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன். 

பொன்மொழி :

தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.

-ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1.திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது எது ? 

 பெட்ரோலியம். 

 2.மேட்டூர் அணையின் வேறு பெயர் என்ன? 

 ஸ்டான்லி அணை.

English words & meanings :

Ob-lig-a-to-ry - mandatory, compulsory, Adjective, கண்டிப்பாக தேவை, அத்தியாவசியம், பெயரளபடை 
ஆரோக்ய வாழ்வு :

100 கிராம் கறிவேப்பிலையில் 108 கலோரி அளவிற்கு ஆற்றல் காணப்படுகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
NMMS Q 38:

ஆடைகளில் படிந்துள்ள கறைகளை போக்க உதவுவது எது? 

 விடை - சோடியம் ஹைட்ராக்ஸைடு

ஆகஸ்ட் 10 இன்று

வைணு பாப்பு அவர்களின் பிறந்தநாள்

மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.

நீதிக்கதை

காக்கா ஏன் கறுப்பாச்சு?

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம். 

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அற்புதா. 

அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்கலாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம். 

சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிற காக்காவை கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம். 

காக்கா அந்த பைய தூக்கிக்கிட்டு இளவரசி இருந்த அரண்மனையை நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துக்கிட்டு போனாங்க. காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசைப்பட்டு, பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். 

மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான். 

காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பைய எடுத்துக்கிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பைய தூக்கிப்போட்டுச்சாம். 

மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததைப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம். 

நீதி :
கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள் - 10.08.22

* செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ், வீணை, கீ போர்டு, புல்லாங்குழல் ஆகிய நான்கு கருவிகளில் இருந்து ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் இசைக்கப்பட்டது.

* ரூ.55.34 கோடியில் கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு: உலக சுற்றுச்சூழல் நிறுவனம் நிதியுதவி.

* காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் இணைந்து செயல்பட உலக வள நிறுவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியின்போது தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்துள்ளன.

* தமிழகத்தில் நீர் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் குறைந்ததால், ஒட்டுமொத்த அனல் மின் நிலையங்களிலும் நேற்று 90 சதவீதத்திற்கு மேல் இயக்கம் நிறுத்தப்பட்டது.  அனல் மின் நிலைய வரலாற்றில் இது அரிய நிகழ்வாகும்.

* மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

* போர் ஒத்திகை மூலம் படையெடுப்புக்கு சீனா தயாராகி வருவதாக தைவான் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள்  கடைசி நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர். இதன்மூலம் பதக்கப் பட்டியலில்  22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.

* செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

 * At the closing ceremony of the Chess Olympiad, the song 'Semmozhiyana Tamil Mozhiyam' was played from four instruments namely Drums, Veena, Keyboard and Flute.

 * Renovation of Kadapakkam Lake at Rs.55.34 crore: Funded by World Environment Agency.

 * A Memorandum of Understanding has been signed between the World Resources Institute and the Chennai Municipal Corporation to collaborate on climate change related activities.

 * During the excavation work at Adichanallur, a golden forehead ornament was found.  Bronze and iron objects have also been found.

 * In Tamil Nadu, more than 90 percent of the thermal power plants stopped operating yesterday due to the increase in power generation in hydropower plants and wind farms, as the power demand also decreased.  This is a rare event in the history of thermal power plants.

*  Population Control Act: Supreme Court Notice to Central Govt.

 * Taiwan's foreign minister has accused China of preparing for an invasion through war rehearsals.

 * Indian sportsmen and women won 4 gold medals on the last day of the Commonwealth Games.  With this, India stood 4th in the medal list with a total of 61 medals including 22 gold, 16 silver and 23 bronze.

*  Chess Olympiad: Tamil Nadu player Gukesh won gold medal and Pragnananda won bronze medal in individual category.

 * India won the last T20 against West Indies by 88 runs.

Total Pageviews

Search This Blog