Breaking

Showing posts with label exam result. Show all posts
Showing posts with label exam result. Show all posts

Saturday, January 31, 2026

Thursday, March 21, 2024

Tuesday, February 13, 2024

February 13, 2024

JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு JEE Advanced Exam Result Release



JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு JEE Advanced Exam Result Release

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள், jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் சாதனை

இன்று வெளியான ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுள், அகில இந்திய தரவரிசையில் அதாவது 300-க்கு 300 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ்-ம் ஒருவர்.

மாணவன் முகுந்த் பிரதீஷ் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்

Friday, February 09, 2024

February 09, 2024

University of Chennai. Publication of Distance Education Exam Result

University of Chennai. Publication of Distance Education Exam Result சென்னை பல்கலை. தொலைதூர கல்வி தேர்வு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை,முதுநிலை பட்டப்படிப்புகள், எம்சிஏ, எம்பிஏ பயில்வோருக்கான ஜூன் மாத பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இன்று மாலை 6 மணி முதல் அறிந்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள் ளது.

Saturday, November 25, 2023

November 25, 2023

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு வெளியீடு எப்போது?



அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு வெளியீடு எப்போது?

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.  நவ.27 காலை 9.30க்கு arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண், விடைத்தாள் வெளியிடப்படும் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.  தமிழக போக்குவரத்துக் கழகங்களில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநா், நடத்துநா் (டி அண்ட் சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கு 10,600 போ் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்த நிலையில், 1,600 போ் மட்டுமே தோ்வெழுத தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதனிடையே, அவா்களுக்கான எழுத்துத் தோ்வு சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), கோவை, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் 10 இடங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத் தமிழ், பொது அறிவு மற்றும் தொழில் முறை திறனறிதல் குறித்த வினாக்கள் 100 மதிப்பெண்களுக்கு இடம்பெற்றிருந்தன. எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்பு, திறன் தோ்வு, நோ்காணல் போன்றவை நடத்தப்படவுள்ளன. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இதுவரை போக்குவரத்துக் கழகங்களில் நேரடியாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் மட்டுமே ஓட்டுநா், நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், முதல்முறையாக இப்பணிகளுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog