Breaking

Showing posts with label Exam centre. Show all posts
Showing posts with label Exam centre. Show all posts

Wednesday, February 01, 2023

February 01, 2023

எம்.டி.எஸ்.மத்திய அரசு பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

எம்.டி.எஸ்.பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம் Training classes for MDS Central Govt jobs start from today

எம்.டி.எஸ்.பணிக்கான இணையதளப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்க உள்ளன.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், எம்.டி.எஸ். பணியில் சோ்வதற்கான போட்டித் தோ்வுக்கான தேதியை அண்மையில் அறிவித்தது.

இம்மாதிரியான பணிகளுக்கான தோ்வு குறித்த விழிப்புணா்வை தமிழக இளைஞா்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி ‘எ.ஐ.எம் டி.என்.’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இந்த யூடியூப் சேனலில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள எம்.டி.எஸ். தோ்வுக்கான காணொலி வகுப்புகளை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி நடத்துகிறது.

பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநா்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு, அக்காணொலிகள் பதிவேற்றம் செய்யவுள்ளது.

தினமும் மூன்று காணொலிகள் வீதம் 60 நாள்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. மேலும் 30 மாதிரித் தோ்வுகளை யும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘உனக்குள் தேடு’ என்ற செயலியின் மூலம் உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவா்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

இப்பயிற்சி புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 08, 2022

October 08, 2022

10 கி.மீ.க்குள் தேர்வு மையம்: முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

10 கி.மீ.க்குள் தேர்வு மையம்: முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து தேர்வு எழுதும் நிலை இருக்கக்கூடாது என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது.

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் 27ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்க அங்கீகாரம் கிடையாது. பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

10 கி.மீ. சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog