Wednesday, November 24, 2021
Monday, November 22, 2021
டிசம்பர் - 2021 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை TNPSC வெளியீடு
Tamil Nadu Public Service Commission has introduced One Time Registration from the Departmental Examinations December - 2019 . Hence , the candidates are required to furnish their particulars in Departmental One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - December 2021. TNPSC - Department Exam 2021 Notification - Download here...
Wednesday, October 20, 2021
TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு, பரிசு மழை!
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான TNPSC சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடத்தப்படவில்லை. அதில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 VAO போட்டி தேர்வுகள் இம்மாதம் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த போட்டித்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுகளில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஏராளமான அரசு ஊழியர்களை உருவாக்கி தமிழகத்தின் டாப் பயிற்சி மையமாக திகழும் Dexter Academy ஒரு முயற்சியினை முன்னெடுத்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் TNPSC குரூப் 2, குரூப் 4 VAO ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழகம் முழுவதில் இருந்தும் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம். இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாப் இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பணப்பரிசு, 100% Scholarship உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இத்தேர்வு வருகிற அக்.22ம் தேதி Online & Offline என இரண்டு முறைகளிலும் நடத்தப்பட உள்ளது. இதற்கு முற்றிலும் அனுமதி இலவசம். இதன் ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பின் வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
Apply => For Online TNPSC Group 4 & VAO Model
Apply => For Online TNPSC Group 2 Model
Saturday, October 16, 2021
யுபிஎஸ்சி தேர்விற்கு இலவச மாதிரி வகுப்புகள்
இந்தாண்டு முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களும் வரும் ஆண்டு முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களும் பயன்பெறும் வகை யில் இந்த இலவச வகுப்புகள் தலை சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடைபெற இருக்கின்றன. இந்த இலவச பயிற்சிகளைப் பெற விரும்பும் மாணவர்கள் தங் கள் பெயர்களை 9790811635, 8610519012 ஆகிய செல்லிடப்பேசி எண்களை அழைத்து தங்களது விவரங்களை பதிவு செய்து கொள் ளலாம்.
Friday, October 08, 2021
TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு (Press Release) - Dt: 07.10.21
Saturday, September 25, 2021
TNPSC - துறைத் தேர்விற்கான உத்தேச விடைகள் Answer Keys - Download here
Departmental Examination May-2021, code 072 Answer Keys - Download here
Departmental Examination May-2021, code 065 Answer Keys - Download here
TNPSCன் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம்.. தகுதி பெற 45 மதிப்பெண்கள் தேவை!
இதனிடையே தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.இந்நிலையில் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் சென்ற 22-ந் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்தும், அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில் புதிய விதிகளை வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். அதில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. புதிய முறைப்படி, தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு முன்பு தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும்.அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது. மேலும் பெண்களுக்கான நியமனங்களில் 40 இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியான உடன், அதை நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
பெண் தேர்வர்களுக்கான என்.டி.ஏ.&என்.ஏ. விண்ணப்ப படிவம் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு
சில வாரங்களுக்கு முன்னர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது சற்று சிரமமான காரியம். இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க எங்களுக்கு சில காலம் தேவைப்படுகிறது. ஆகவே அடுத்த வருடம் மே மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு பெண்களை விண்ணப்பிக்க அனுமதிக்கலாம்’ என கூறி, கால நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைத்திருந்தது.
மத்திய அரசின் கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, இவ்வருடத்துக்கான தேர்வு வரும் நவம்பரில் நடக்கவுள்ள நிலையில், அதிலேயே பெண் தேர்வர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கிணங்க, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகள்(II) 2021க்கு, பெண்கள் கலந்துக்கொள்ளலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இத்தேர்வில் கலந்துக்கொள்ள விரும்பும் பெண்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறி அதற்கான விண்ணப்பப் படிவம் குறித்த அறிவிப்பு தற்போது வெளீயாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பில், “தேசிய பாதுகாப்பு படை அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் (II), பெண்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை தனது இணையளத்தில் (upsconline.nic.in) ஏற்படுத்த மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஜூன் 9ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2021-NDA-II-ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்த அறிவிப்பு மத்திய அரசு தேர்வாணை இணையளத்தில் (www.upsc.gov.in) உள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு, இந்த ஆன்லைன் விண்ணப்ப வசதி, 24.09.2021-லிருந்து, 8.10.2021 (மாலை 6 மணி வரை) திறந்திருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, September 24, 2021
2 பொண்டாட்டிக்காரர் தேர்வு எழுத முடியாது - TNPSC புதிய அறிவுரைகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி தேர் வுக்கு விண்ணப்பிப்போர் www.tnpscexams.in, www tmcp.in ஆகிய தேர்வா ணையத்தின் இணையத னங்கள் மூலம் இணைய வழியில் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங் களுடைய ஒருமுறை பதி வுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். விண்ணப்பதா ரர் அனைவரும் புநிதாக ஒருமுறை பதிவு எண்ணை உருவாக்குவதற்கும். புதுப் பிப்பதற்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு முறைபதிவில் உள்நுழைவ தற்கும், எந்த ஒரு தேர்வு அறிவிக்கைக்காக விண் ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமானதாகும். ஒருமுறை பதிவு என் பது பதிவு செய்த முதல் 5 ஆண்டுகள் வரை செல் லுபடியாகும். ஒரு முறை பதிவு செய்வதற்கு, பயன் பாட்டில் உள்ள மின்னஞ் சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவை கட்டாய மாகும். ஆண் விண்ணப்ப தாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது விண் ணப்பதாரர் பெண்ணாக இருப்பின், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய் தவராகஇருத்தல்கூடாது. காலிபணியிடங்களில் இடஒதுக்கீடு விதி பொருத் தும் பதவிகளாக இருந்தா லும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 30சதவீதம் பெண் விண்ணப்பதாரர்களுக்கு இடஒதுக்கீடு செய் யப்படுகிறது. பெண்கள், மூன்றாம் பாலின(பெண் கள்) 30 சதவீத இடஒதுக் மீட்டில் போட்டியிட தகுதி யானவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது, போதுமான தமிழறிவு கொண்டிருக்கவில்லை என்றாலும் அவர் அந்த பணியிடத்திற்கு விண்ணப் பிக்கலாம்.
ஆனால், இரண்டாம் வகுப்பு மொழித்தேர்வில் (முழு தேர்வு) தமிழில் தேர்ச்சிபெற்றிருக்கவேண் டும். தவறினால் அவர் பணியில் இருந்து விடுவிக் கப்படுவார்.
நேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர், செயவாளர், தேர்வு கட் டுப்பாட்டு அலுவலர், பிற அலுவவர்கள் அல்லது ஊழியர்களின் ஆதரவை பெற நேரடியாகவோ, கடிதத்தின் மூலமாகவோ, உறவினர், நண்பர், காப்பா ளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாகவோ செல்வாக்கை செலுத்த முயற்சித்தால்3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. சாதி சான்றிதழ், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீர ருக்கான சான்றிதழ்கள், மூன்றாம் பாலினத்தவர் களுக்கான சான்றிதழ். தமிழ் வழியில் பயின்றோ குக்கான சான்றிதழ்களை போலியாக சமர்ப்பித்தல், ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களை ஏதேனும் திருத்தம், சேதங்களை ஏற் படுத்தியிருந்தால் நிரந்தா மாக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக் கப்படும். தேர்வறையின் உள்ளே மின்னணு சாத னங்கள். செல்போன், நினைவூட்டுக் குறிப்புகள் உள்ளடக்கிய கடிகாரம் மற் றும்மோதிரங்கள் புளூடூத உபகரணங்கள் தொடர் புடைய சிப்புகள், வேறு ஏதேனும் மின்னணு உப கரணங்கள் ஆகியவற்றை வைத்திருந்தாலோ, அறை கண்காணிப்பாளர், வேறு அலுவலர்கள் அல்லது வெளிநபரின் உதவியை நாட்டினாலோ டிஎன்பி எஸ்சி தேர்வை நிரந்தர மாக எழுத முடியாது. மது அருந்தி விட்டு வரும் விண்ணப்பதாரர் கள். தேர்வு கூடத்தில் புகைப்பிடிக்கும் விண்ணப் பதாரர். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் 3ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. ஆன்மாறாட்டம், தேர்வு நடைபெறுவதை முறிய டிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற கடுமையான ஒழுங்கின செயல்களில் ஈடுபட் டால் நிரந்தரமாகவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 45 நிமி உங்களுக்குமுன்னதாகவே மூடப்படும். அதன் பின் னர் வரும் யா வு மையத்திற்குள் கப்பட மாட்டாது.
Thursday, September 23, 2021
TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியீடு! - Download PDF
புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு.
முன்னதாக 40% பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசு அறிவித்திருந்த நிலையில், 30% என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF ( Choose Telegram App )
UPSC வெளியிட்டுள்ள 247 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? 20.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடங்கள்: 247 தகுதி: பொறியியல் துறையில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் பட்டதாரி உறுப்பினர் தேர்வு அல்லது அசோசியேட் உறுப்பினர் தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 02.01.1992 முதல் 01.01.2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவராகவும், 21 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.upsconline.nic.in என்ற வலைத்தளத்தின் இணையதளம் மூலம் 20.10.2021 என்ற தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200, எஸ்டி, எஸ்சி, பி.டபிள்யு.டி, பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 20.02.2021 நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது https://www.upsc.gov.in/sites/default/files/Notif-ESEP-22-engl-220921.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். "
வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!!
இந்த நிலையில், குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை.2021ம் ஆண்டு தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணையத்தில் சென்று பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, September 19, 2021
WhatsAppல் TNPSC குரூப் தேர்வுகளுக்கான நோட்ஸ் இலவசமாக பெறுவது எப்படி?
அரசுப் பணித் தேர்வுக்கு தயாராவோருக்கு வாட்ஸ்அப்-ல் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அகாடமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் (Tnpsc) குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோவுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத் திட்டத்தின்படி , சமச்சீா் பாடப் புத்தகங்களை தேர்வு நோக்கில் தொகுத்து, இந்த டி.என்.பி.எஸ்.சி பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைப் பெற விரும்புவோர், தங்களது முழு முகவரியை 91760 84468 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்த அனைவருக்கும் PDFவடிவில் பாடநூல் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அகாடமியை நேரிலோ, 91763 92791, 99439 46464 ஆகிய எண்களையோ அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

