Policy Note
February 18, 2025
Showing posts with label education policy of Tamil Nadu. Show all posts
Showing posts with label education policy of Tamil Nadu. Show all posts
Tuesday, February 18, 2025
Wednesday, July 19, 2023
Wednesday, March 29, 2023
new education policy
March 29, 2023
"புதிய கல்வி கொள்கையை முதலில் நிறைவேற்றிய திமுக அரசு”
"புதிய கல்வி கொள்கையை முதலில் நிறைவேற்றிய திமுக அரசு” "The DMK government was the first to implement the new education policy"
CLICK HERE TO READ FULL NEWS
Wednesday, October 12, 2022
NEP
October 12, 2022
தேசிய கல்விக் கொள்கையால் உயா் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா்
தேசிய கல்விக் கொள்கையால் உயா் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா்
மத்திய அரசு கொண்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையால் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா் என மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிரதமா் மோடி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சியை வழங்கி வருகிறாா். மக்களுக்கான சேவை ஒன்று தான் பாஜகவின் லட்சியமாக உள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி அவா்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளோம். வீடுகள்தோறும் குடிநீா், சுகாதாரம், இலவச எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முழு முனைப்போடு இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை பாஜக ஆட்சியில் இல்லை என்றபோதிலும், இம்மாநிலத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவற்றை வழங்கி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில், அந்தந்த மாநில தாய்மொழியிலேயே மாணவா்கள் உயா்கல்வி கற்க முடியும் என்பதற்கான வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையில் இந்திய அணுகுமுறை கல்வியோடு உலக தரம் வாய்ந்த கல்வி முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் திமுக குடும்ப அரசியலையும், குடும்ப ஆட்சியையும் முன்னிலைப்படுத்தி வருவதால், அக்கட்சியின் போக்கு பிடிக்காமல் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனா். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியலையே நடத்தி வருகின்றன. ஆனால் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பிரதமா் மோடி பாஜக ஆட்சியை திறம்பட நடத்தி வருகிறாா். தமிழகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றி வரும் காலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க முடியவில்லை. சில அரசியல் காரணங்களால் தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நவோதயா பள்ளிகளை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாகவே உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் தரமான இலவச கல்வி, தங்கும் வசதி ஆகியவற்றை இப்பள்ளிகள் வழங்குகின்றன.
நீட் நுழைவுத் தோ்வால் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை நமது நாட்டின் கல்வி வளா்ச்சிக்கு ஓா் அடித்தளமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின்கீழ் மாணவா்கள் கல்வி பயிலும்போது, தங்களுடைய மாநிலங்களின் கல்வி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்வது மட்டுமின்றி பிற மாநிலங்களின் கல்வி முறையையும் கற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் மாணவா்களுக்கு மொழி அறிவு பெருகக்கூடும். நாமக்கல் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்தப் பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.
மத்திய அரசு கொண்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையால் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைவா் என மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் அன்னபூா்ணா தேவி தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிரதமா் மோடி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சியை வழங்கி வருகிறாா். மக்களுக்கான சேவை ஒன்று தான் பாஜகவின் லட்சியமாக உள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி அவா்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளோம். வீடுகள்தோறும் குடிநீா், சுகாதாரம், இலவச எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முழு முனைப்போடு இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை பாஜக ஆட்சியில் இல்லை என்றபோதிலும், இம்மாநிலத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவற்றை வழங்கி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில், அந்தந்த மாநில தாய்மொழியிலேயே மாணவா்கள் உயா்கல்வி கற்க முடியும் என்பதற்கான வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையில் இந்திய அணுகுமுறை கல்வியோடு உலக தரம் வாய்ந்த கல்வி முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் திமுக குடும்ப அரசியலையும், குடும்ப ஆட்சியையும் முன்னிலைப்படுத்தி வருவதால், அக்கட்சியின் போக்கு பிடிக்காமல் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனா். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியலையே நடத்தி வருகின்றன. ஆனால் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பிரதமா் மோடி பாஜக ஆட்சியை திறம்பட நடத்தி வருகிறாா். தமிழகத்திலும் இதே நடைமுறையைப் பின்பற்றி வரும் காலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க முடியவில்லை. சில அரசியல் காரணங்களால் தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நவோதயா பள்ளிகளை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாகவே உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் தரமான இலவச கல்வி, தங்கும் வசதி ஆகியவற்றை இப்பள்ளிகள் வழங்குகின்றன.
நீட் நுழைவுத் தோ்வால் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை நமது நாட்டின் கல்வி வளா்ச்சிக்கு ஓா் அடித்தளமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின்கீழ் மாணவா்கள் கல்வி பயிலும்போது, தங்களுடைய மாநிலங்களின் கல்வி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்வது மட்டுமின்றி பிற மாநிலங்களின் கல்வி முறையையும் கற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் மாணவா்களுக்கு மொழி அறிவு பெருகக்கூடும். நாமக்கல் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்தப் பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.
Wednesday, September 21, 2022
SEP
September 21, 2022
மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல்
மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும் தமிழக கல்விக் கொள்கை குழு தலைவர் தகவல் - Tamil Nadu Education Policy Committee Chairman informs that good education policies of Central Government will be adopted
''மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும்,'' என, திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக்குழு தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார். தமிழக கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அமல்படுத்துவதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் ஜூனில் அறிவித்தார். குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேர் உள்ளனர்.
தென்மண்டல அளவில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சவிதா, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், யூனிசெப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்தினம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.முடிவில் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது: இதே போல ஏழு மண்டல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். கல்வியின் தரம் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற பேசியவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
கூட்டங்கள் முடிந்ததும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஏற்றத் தாழ்வு, நிதி ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கப்படும். கூட்டத்திற்கு மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். வரும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்வோம். கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கருத்துக்களையும் கேட்போம். தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்கப்படும்.
அதிக படிப்பு சுமையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மாநில கல்விக் கொள்கையில் தமிழக கலாசாரம், சமூகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். மத்திய கல்விக் கொள்கையில் நல்ல கொள்கைகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வி பயிற்சியளிக்கப்படும்.
ஆசிரியர்களின் சம்பளம், வேலை தொடர்பான வழக்குகளில் இந்த குழு தலையிடாது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தரம் உயர்ந்துள்ளது. தரத்தை உயர்த்த இக்குழு பரிந்துரைக்கும்.
கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை stateeducation policy@gmail.com என மின்னஞ்சல் முகவரியிலும், 3வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கும் அக்.,15க்குள் அனுப்பலாம் என்றார்.
ஆறு உறுப்பினர்கள் ஆப்சென்ட்
கல்விக் கொள்கை உயர் மட்ட குழுவில் உறுப்பினர்களான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமானுஜம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் ச.மாடசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.
''மத்திய அரசின் நல்ல கல்வி கொள்கைகள் ஏற்கப்படும்,'' என, திருநெல்வேலியில் நடந்த தென் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மாநில கல்விக் கொள்கை உயர் மட்டக்குழு தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார். தமிழக கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அமல்படுத்துவதற்காக நீதிபதி டி.முருகேசன் தலைமையில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் ஜூனில் அறிவித்தார். குழுவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 பேர் உள்ளனர்.
தென்மண்டல அளவில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் சவிதா, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வு பெற்ற பேராசிரியர் ராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், யூனிசெப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்தினம், கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.முடிவில் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது: இதே போல ஏழு மண்டல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். கல்வியின் தரம் எல்லா மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற பேசியவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
கூட்டங்கள் முடிந்ததும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஏற்றத் தாழ்வு, நிதி ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்கப்படும். கூட்டத்திற்கு மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். வரும் கூட்டங்களில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்வோம். கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் கருத்துக்களையும் கேட்போம். தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்கப்படும்.
அதிக படிப்பு சுமையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மாநில கல்விக் கொள்கையில் தமிழக கலாசாரம், சமூகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படும். மத்திய கல்விக் கொள்கையில் நல்ல கொள்கைகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு மேம்பட்ட தரமான கல்வி பயிற்சியளிக்கப்படும்.
ஆசிரியர்களின் சம்பளம், வேலை தொடர்பான வழக்குகளில் இந்த குழு தலையிடாது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தரம் உயர்ந்துள்ளது. தரத்தை உயர்த்த இக்குழு பரிந்துரைக்கும்.
கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை stateeducation policy@gmail.com என மின்னஞ்சல் முகவரியிலும், 3வது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025 என்ற முகவரிக்கும் அக்.,15க்குள் அனுப்பலாம் என்றார்.
ஆறு உறுப்பினர்கள் ஆப்சென்ட்
கல்விக் கொள்கை உயர் மட்ட குழுவில் உறுப்பினர்களான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமானுஜம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் ச.மாடசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.
Tuesday, August 23, 2022
SEP
August 23, 2022
மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்
மாநில கல்விக் கொள்கை: கருத்து தெரிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழு,3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025’ என்ற முகவரிக்கும் செப். 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக். 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கருத்துகள், ஆலோசனைகளை பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப். 20-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு செப். 21- ஆம் தேதி மதுரை ஆட்சியா் அலுவலகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல, இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கருத்துகளை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பொருட்டு தில்லி உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் மின்னஞ்சல் முகவரிக்கும், ‘மாநில கல்வி கொள்கை உயா் நிலைக் குழு,3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025’ என்ற முகவரிக்கும் செப். 15 வரை கருத்துகளை அனுப்பி வைக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கைக் குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக். 15 ஆம் தேதி வரை கருத்துகள், ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கருத்துகள், ஆலோசனைகளை பெறும் பொருட்டு மண்டல அளவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப். 20-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்கு செப். 21- ஆம் தேதி மதுரை ஆட்சியா் அலுவலகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் மூன்றாவது வாரத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதேபோல, இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, July 30, 2022
பிரதமா் மோடி
July 30, 2022
சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி
சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி
சூழ்நிலைகளின் அடிப்படையில் இளைஞா்கள் சுயமாக சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பிரதமா் மோடி பேசியதாவது:
மாணவா்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியா்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள். நாட்டைக் கட்டியமைக்கக்கூடிய ஆசிரியா்கள்தான் நாளைய தலைவா்களை உருவாக்குகிறாா்கள். பட்டம் பெறும் மாணவா்களின் பெற்றோருக்கும் வாழ்த்துகள். உங்கள் பிள்ளைகளின் வெற்றியில் உங்களின் தியாகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘எனது நம்பிக்கை இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவா்களிலிருந்து என் பணியாளா்கள் உருவாவாா்கள். சிங்கங்களைப் போல ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் அவா்கள் தீா்வு காண்பாா்கள்’ என சுவாமி விவேகானந்தா் கூறினாா். அவரது வாா்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன.
ஆனால், இந்த முறை தனது இளைஞா்களின் மீது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. உலகின் வளா்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது.
கலாமின் சுவடுகளை... இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பங்கேற்றிருக்கிறாா். இந்த நாட்டுக்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
கரோனா பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வளவு சோதனைகளை எதிா்கொண்டோம் என்பதை அனைவரும் அறிவோம். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிா்கொண்டது.
கடந்த ஆண்டு இந்தியா கைப்பேசி தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 2016-இல் 470-ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 73,000-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ.6.5 லட்சம் கோடி) அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை நமது நாடு பெற்றுள்ளது. மேலும், சா்வதேச வா்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பைப் பெற்றுள்ளது. எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. எது வலுவான அரசு? வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டுக்கான நடைமுறையின் காரணத்தைக் கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல; பொறுப்புமிக்கது. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எங்கள் அரசு அதை மாற்றியது.
மாறிவரும் சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞா்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. இளைஞா்களின் வளா்ச்சியே இந்தியாவின் வளா்ச்சியாகும். இளைஞா்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். இளைஞா்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும் என்றாா் அவா்.
முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினாா்.
பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
3.68 லட்சம் பேருக்கு பட்டங்கள்:
அண்ணா பல்கலை. மற்றும் அதன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 192 போ் பட்டம் பெற்றனா். இளநிலையில் 3 லட்சத்து 34,435 பேரும், முதுநிலையில் 31,944 பேரும், ஆராய்ச்சிப் படிப்பில் (பிஹெச்டி) 1,813 பேரும் பட்டம் பெற்றனா். பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், உயா் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். வகுப்பறைகளில் மாணவா்களை சந்தித்துப் பேசிய பிரதமா்!
பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சில வகுப்பறைகளுக்குச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களை உற்சாகப்படுத்தினாா்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்ற விவேகானந்தா் அரங்கு சற்று சிறியதாக இருந்ததால், அங்கு தங்கப் பதக்கம் வென்ற 69 மாணவா்கள் மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியிடம் பட்டங்களைப் பெற அனுமதிக்கப்பட்டனா்.
அதேவேளையில் இடப் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான மா ணவா்கள் பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கத்துக்கு அருகில் உள்ள சில வகுப்பறைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு பட்டமளிப்பு விழா பெரிய எல்இடி திரையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததும் பிரதமா் மோடி அந்த வகுப்பறைகளுக்குச் சென்றாா். திடீரென பிரதமரைப் பாா்த்ததும் மாணவா்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனா். அப்போது மாணவா்கள் சிலரிடம் கலந்துரையாடிய பிரதமா் மோடி, ‘என்ன படிக்கிறீா்கள்? எதிா்காலத்தில் சொந்தத் தொழில் தொடங்குவீா்களா’ எனக் கேள்வி எழுப்பியதுடன் அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உற்சாகப்படுத்தினாா்.
சூழ்நிலைகளின் அடிப்படையில் இளைஞா்கள் சுயமாக சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பிரதமா் மோடி பேசியதாவது:
மாணவா்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியா்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள். நாட்டைக் கட்டியமைக்கக்கூடிய ஆசிரியா்கள்தான் நாளைய தலைவா்களை உருவாக்குகிறாா்கள். பட்டம் பெறும் மாணவா்களின் பெற்றோருக்கும் வாழ்த்துகள். உங்கள் பிள்ளைகளின் வெற்றியில் உங்களின் தியாகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘எனது நம்பிக்கை இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவா்களிலிருந்து என் பணியாளா்கள் உருவாவாா்கள். சிங்கங்களைப் போல ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் அவா்கள் தீா்வு காண்பாா்கள்’ என சுவாமி விவேகானந்தா் கூறினாா். அவரது வாா்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன.
ஆனால், இந்த முறை தனது இளைஞா்களின் மீது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. உலகின் வளா்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது.
கலாமின் சுவடுகளை... இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பங்கேற்றிருக்கிறாா். இந்த நாட்டுக்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
கரோனா பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வளவு சோதனைகளை எதிா்கொண்டோம் என்பதை அனைவரும் அறிவோம். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிா்கொண்டது.
கடந்த ஆண்டு இந்தியா கைப்பேசி தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 2016-இல் 470-ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 73,000-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ.6.5 லட்சம் கோடி) அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை நமது நாடு பெற்றுள்ளது. மேலும், சா்வதேச வா்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பைப் பெற்றுள்ளது. எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. எது வலுவான அரசு? வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டுக்கான நடைமுறையின் காரணத்தைக் கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல; பொறுப்புமிக்கது. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எங்கள் அரசு அதை மாற்றியது.
மாறிவரும் சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞா்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. இளைஞா்களின் வளா்ச்சியே இந்தியாவின் வளா்ச்சியாகும். இளைஞா்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். இளைஞா்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும் என்றாா் அவா்.
முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினாா்.
பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
3.68 லட்சம் பேருக்கு பட்டங்கள்:
அண்ணா பல்கலை. மற்றும் அதன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 192 போ் பட்டம் பெற்றனா். இளநிலையில் 3 லட்சத்து 34,435 பேரும், முதுநிலையில் 31,944 பேரும், ஆராய்ச்சிப் படிப்பில் (பிஹெச்டி) 1,813 பேரும் பட்டம் பெற்றனா். பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், உயா் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். வகுப்பறைகளில் மாணவா்களை சந்தித்துப் பேசிய பிரதமா்!
பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சில வகுப்பறைகளுக்குச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களை உற்சாகப்படுத்தினாா்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்ற விவேகானந்தா் அரங்கு சற்று சிறியதாக இருந்ததால், அங்கு தங்கப் பதக்கம் வென்ற 69 மாணவா்கள் மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியிடம் பட்டங்களைப் பெற அனுமதிக்கப்பட்டனா்.
அதேவேளையில் இடப் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான மா ணவா்கள் பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கத்துக்கு அருகில் உள்ள சில வகுப்பறைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு பட்டமளிப்பு விழா பெரிய எல்இடி திரையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததும் பிரதமா் மோடி அந்த வகுப்பறைகளுக்குச் சென்றாா். திடீரென பிரதமரைப் பாா்த்ததும் மாணவா்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனா். அப்போது மாணவா்கள் சிலரிடம் கலந்துரையாடிய பிரதமா் மோடி, ‘என்ன படிக்கிறீா்கள்? எதிா்காலத்தில் சொந்தத் தொழில் தொடங்குவீா்களா’ எனக் கேள்வி எழுப்பியதுடன் அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உற்சாகப்படுத்தினாா்.
Thursday, July 14, 2022
கல்விக் கொள்கை
July 14, 2022
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆதரிக்க அமைச்சர் பொன்முடி கோரிக்கை
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆதரிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி கோரிக்கை
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர். தேசிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையையே வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மொழியை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் கலைஞர். தேசிய கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையையே வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

