Breaking

Showing posts with label schoolgirls. Show all posts
Showing posts with label schoolgirls. Show all posts

Monday, October 31, 2022

October 31, 2022

புதுமைப் பெண் திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுமைப் பெண் திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுமைப் பெண் திட்டத்துக்கு நவ. 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டம் கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, கல்லூரிகளில் 2 முதல் நான்காம் ஆண்டு வரை பயிலக் கூடிய லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் பெற்றுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள தனி இணையதளம் வழியே மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவ. 1 முதல் 11-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு தகுதி பெற்றவா்கள். கல்வி நிறுவனங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பம் செய்யக் கூடாது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு ஆகியன குறித்து கல்லூரிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மாணவிகள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் படிக்கும் மாணவிகள் ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியிருந்தால், இப்போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதவி மைய எண்கள்: விண்ணப்பிக்கும் முறையில் மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், சமூக நலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் செயல்படும் உதவி மைய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். அதாவது, 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 ஆகிய எண்களை திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். மேலும், ம்ழ்ஹட்ங்ஹள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை அனுப்பி விளக்கம் பெறலாம் என தமிழக அரசுத் துறையினா் தெரிவித்தனா்.

Friday, September 09, 2022

September 09, 2022

பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

அரசுப் பணியில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின்கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளை எதிா்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிா்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமா்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீதத்தை பெண் விண்ணப்பதாரா்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளா் தோ்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது.

இது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது. இதே நடைமுறைப்படி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேசமயம் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப் பிரிவையும், பிறகு சமூகரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூா்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனா். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிா்காலத்தில் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி , வழக்குகளை முடித்து வைத்தனா்.

Total Pageviews

Search This Blog