Breaking

Showing posts with label Private Employment Camp. Show all posts
Showing posts with label Private Employment Camp. Show all posts

Tuesday, January 02, 2024

January 02, 2024

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்...!!



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்...!!

திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 பணிக்காலியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 பணிக்காலியிடங்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 07.02.2024 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக 04.01.2024 அன்று தொடங்கப்படவுள்ளது.

இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 8682066089 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 24, 2023

January 24, 2023

ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் Private employment camp on 28 Jan

நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜனவரி 28-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் ஜனவரி 28-ஆம் தேதி பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில், படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சுய விவரக்குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Saturday, January 21, 2023

January 21, 2023

நாளை (22.01.2023) மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் Tomorrow (22.01.2023) huge private placement camp

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

January 21, 2023 by பிரபாகரன் வீரமலை

கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கரூர் மாவட்ட மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22.01.2023 ) நடைபெற உள்ளது.

இந்த சிறப்புமிக்க வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை வழங்க உள்ளார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 220 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி 2 கோடி 67 லட்சம் இணைப்பு இணைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து உள்ளார்கள். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின் இணைப்புடன் ஆதார்  என்னை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் இரத்து ஆகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகளுக்கு விசைத்தறி கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம்  மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு 9048 கோடி மானியத்தை வழங்கினார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியத்தை வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியோடு இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ‌.சுந்தரவதனம்,இ.கா‌.ப., மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) திரு.ஞானசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஷீலா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் திரு சீனிவாசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ப. சரவணன், கல்லூரி முதல்வர் திருமதி கௌசல்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஸ்வரி, மண்டல தலைவர் திரு எஸ். பி.கனகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

Thursday, January 19, 2023

January 19, 2023

தேனியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்& செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்

தேனியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்& செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம் Private employment camp in Theni tomorrow & PWDs needing artificial leg can participate in it

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கால்களை இழந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் வகையில், சென்னையை சேர்ந்த தன்னார்வ நிறுவனம் மூலம் மருத்துவ அளவீட்டு முகாம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது

செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம். தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Friday, December 30, 2022

December 30, 2022

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்



செங்கல்பட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்தும் இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (டிச. 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், 8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்க உள்ளனா்.

முகாமுக்கு வருவோா் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

Saturday, September 03, 2022

September 03, 2022

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்

WANTED TEACHERS Tamil, English, Physics, Chemistry, Maths, Botany, Zoology, Comp.Sci., Commerce, Economics, Accountancy, History, Business Maths, Hindi, Abacus,

Music, Yoga, Physical Education, D.T.Ed., B.E.,

M.Sc., B.Sc., MA., B.A., M.Com., B.Com., MCA,

BCA, D.T.Ed., M.Tech., B.Tech with B.Ed.,
or without B.Ed., 

Montessori (Experience / Fresher) 

இடம் : 
VELALAR VIDYALAYAA SENIOR SEC SCHOOL

MARUTHI NAGAR,THINDAL, ERODE

நாள் : 04.09.2022 SUNDAY 

நேரம் : 9.00 am - 4.00pm

94425 68675,97888 29179

Sunday, August 21, 2022

August 21, 2022

தனியார் வேலைகள் தமிழர்களுக்கே வழங்க அரசு சட்டம்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே 80 சதவீத வேலை வழங்கும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும்.

தமிழக அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, August 20, 2022

August 20, 2022

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை)

பரமத்தி வட்டார அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ,ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டாரங்களைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தோ்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்க அலகினை 04286 - 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 07, 2022

July 07, 2022

நாளை (ஜூலை 8) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் - காஞ்சிபுரம் மாவட்டம்

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு நோ்முகத் தோ்வு நடத்துகின்றன. 10 -ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவா்கள் வரை வேலை நாடுநா்கள் முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

விருப்பமுள்ளோா் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போட் அளவுள்ள இரு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 044 - 27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 07, 2022

April 07, 2022

நாளை (08.04.22) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

Statement by Chengalpattu Collector Rahul Nath. A small-scale employment camp is held every Friday at all the District Employment and Career Guidance Centers, which are affiliated offices of the Department of Employment, Department of Employment and Training, Government of Tamil Nadu. Accordingly, an employment camp will be held at the district employment office tomorrow. Job seekers who have completed 10th, 12th class, undergraduate ITI and diploma can attend this employment camp and get employment.

Those with the above qualifications and aspirations can attend the Private Sector Employment Camp to be held tomorrow at 10 a.m. at the District Employment and Career Guidance Center, located on the campus of the Government Vocational Training Center, Chengdu. It has been stated that the employment office registration of those who are employed in this camp will not be canceled. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், வெள்ளிக்கிழமைதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

மேற்காணும் கல்வித்தகுதி, விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, வெண்பாக்கம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog