TNEA Counselling 2022
August 21, 2025
Showing posts with label TNEA Counselling 2022. Show all posts
Showing posts with label TNEA Counselling 2022. Show all posts
Thursday, August 21, 2025
Monday, August 22, 2022
TNEA Counselling 2022
August 22, 2022
TNEA கவுன்சலிங்; தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!
TNEA Engineering counseling cut off for top colleges in Tamilnadu: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், டாப் மோஸ்ட் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று தேதிகள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும்.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மற்றும் கோவையில் உள்ள டாப் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
கடந்த ஆண்டுகளில் கல்லூரியின் தரம், மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் முதலிடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் முதல் பல்வேறு டாப் பொறியியல் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ஒவ்வொரு இனப்பிரிவுக்கும் தனித் தனியாக கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.
கட் ஆஃப் 200க்கு 200 வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு உள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்குத் தான் அதிகமான கட் ஆஃப் உள்ளது. மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் உள்ள கல்லூரிகளிலும், அந்த படிப்புக்கே கட் ஆஃப் அதிகமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐ.டி மற்றும் இ.சி.இ, சிவில் போன்ற படிப்புகள் உள்ளன. அதேநேரம் தமிழ் வழி கல்விக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு 20% இடஓதுக்கீடு வழங்கியுள்ள நிலையிலும், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலே அதற்கான ஆர்வம் குறைவாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று தேதிகள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும்.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மற்றும் கோவையில் உள்ள டாப் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
கடந்த ஆண்டுகளில் கல்லூரியின் தரம், மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் முதலிடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் முதல் பல்வேறு டாப் பொறியியல் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ஒவ்வொரு இனப்பிரிவுக்கும் தனித் தனியாக கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.
கட் ஆஃப் 200க்கு 200 வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு உள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்குத் தான் அதிகமான கட் ஆஃப் உள்ளது. மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் உள்ள கல்லூரிகளிலும், அந்த படிப்புக்கே கட் ஆஃப் அதிகமாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐ.டி மற்றும் இ.சி.இ, சிவில் போன்ற படிப்புகள் உள்ளன. அதேநேரம் தமிழ் வழி கல்விக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு 20% இடஓதுக்கீடு வழங்கியுள்ள நிலையிலும், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலே அதற்கான ஆர்வம் குறைவாக இருந்து வருகிறது.
Saturday, August 20, 2022
TNEA Counselling 2022
August 20, 2022
இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை அறிவிப்பு 7 நாளில் கல்லூரியில் சேர புதிய கட்டுப்பாடு
இன்ஜினியரிங் பொது மற்றும் தொழிற்கல்வி கவுன்சிலிங், 25ல் துவங்குகிறது. இதற்கான 'ஆன்லைன்' விருப்பப் பதிவு உள்ளிட்ட கால அட்டவணை மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
1.56 லட்சம் பேர்
கவுன்சிலிங், நான்கு சுற்றுகளாக நடக்கிறது. இதில், 1.49 லட்சம் இடங்களுக்கு, 1.56 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களும், பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.
* கவுன்சிலிங் அட்டவணைப்படி, சம்பந்தப்பட்ட 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் தர வரிசை பெற்றவர்கள், அதற்கான தேதியில், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், பதிவு செய்ய வேண்டும்
* மாணவர்கள் பதிவு செய்த முன்னுரிமை வரிசை, காலியிடங்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கல்லுாரிகள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட கல்லுாரியை ஏற்பதற்கான அவகாசத்துக்குள், உறுதி செய்ய வேண்டும்
கட்டாயம் சேர வேண்டும்
*உறுதி செய்தவர்களுக்கு மட்டும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பின், ஏழு நாட்களுக்குள் ஒதுக்கீடு கிடைத்த கல்லுாரிகளில், கட்டாயம் சேர வேண்டும். சேராவிட்டால், அடுத்த சுற்று மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்
ஆன்லைனில் மட்டுமே
* ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள கவுன்சிலிங் உதவி மையத்தை அணுகலாம். மேலும், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் பார்க்கலாம்
* எந்த மாணவரும் சென்னை கவுன்சிலிங் மையத்துக்கு வர வேண்டியதில்லை. அனைத்து பணிகளையும் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது கவுன்சிலிங் உதவி மையங்களில் இருந்தோ, ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலிங் கால அட்டவணை
கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் தரவரிசை விருப்ப பதிவு தேதி தற்காலிக ஒதுக்கீடு உறுதிப்படுத்தும் தேதி
முதல் சுற்று 200 முதல் 184.505 வரை ஒன்று முதல் 14,524 வரை ஆக., 25 முதல் 27 வரை ஆக., 28 ஆக., 29
இரண்டாம் சுற்று 184.500 முதல் 163 வரை 14,525 முதல் 45,577 வரை செப்., 9 முதல் 11 வரை செப்., 12 செப்., 13
மூன்றாம் சுற்று 162.995 முதல் 130.250 வரை 45,578 முதல் 94,620 வரை செப்., 23 முதல் 25 வரை செப்., 26 செப்., 27
நான்காம் சுற்று 130 முதல் 77.500 வரை 94,621 முதல் 1,56,278 வரை அக்., 9 முதல் 11 வரை அக்., 12 அக்., 13
தொழிற்கல்வி 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 1,879 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29
தொழிற்கல்வி 7.5 சதவீதம் 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 488 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29
ஒரே தேதியில் 2 கவுன்சிலிங்
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும், பொது கவுன்சிலிங்கின் போதே, நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
7.5 சதவீதத்துக்கான தரவரிசையில், முதல் சுற்றில், ஒன்று முதல் 332வது ரேங்க்; இரண்டாம் சுற்றில், 333 முதல் 2,407வது ரேங்க்.மூன்றாம் சுற்றில், 2,408 முதல் 7,733வது ரேங்க் மற்றும் 7,734வது ரேங்க் முதல், 22 ஆயிரத்து, 99வது ரேங்க் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு, அதே சுற்றிலேயே பொது கவுன்சிலிங்கும் சேர்ந்து நடக்கும்.
அவர்களுக்கான ஆன்லைன் பக்கத்தில், 'சாய்ஸ் பில்லிங்' வசதியில், அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும், பொது கவுன்சிலிங்குக்கான இட ஒதுக்கீடுக்கும், தனித்தனியாக இரண்டு விருப்ப பதிவு பட்டியல் காட்டப்படும்.இரண்டு பட்டியலிலும், மாணவர்கள் தங்களுக்கான கல்லுாரிகளை வரிசைப்படுத்தலாம். இரண்டு பட்டியலிலும் மாணவர்களின் முன்னுரிமை வரிசை அடிப்படையில், தனித்தனியே இரண்டு வித ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
அவற்றில், எந்த ஒதுக்கீட்டு கல்லுாரியில் மாணவர் சேர விரும்புகிறாரோ, அந்த கல்லுாரியில், ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். அவர் சேராமல் விடும் இடம் காலியானதாக கருதப்பட்டு, அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். அதேபோல், இரண்டிலும் சேராமல் தவற விட்டால், மீண்டும் அடுத்த சுற்றில் பங்கேற்க முடியாது.
1.56 லட்சம் பேர்
கவுன்சிலிங், நான்கு சுற்றுகளாக நடக்கிறது. இதில், 1.49 லட்சம் இடங்களுக்கு, 1.56 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களும், பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.
* கவுன்சிலிங் அட்டவணைப்படி, சம்பந்தப்பட்ட 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் தர வரிசை பெற்றவர்கள், அதற்கான தேதியில், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், பதிவு செய்ய வேண்டும்
* மாணவர்கள் பதிவு செய்த முன்னுரிமை வரிசை, காலியிடங்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கல்லுாரிகள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட கல்லுாரியை ஏற்பதற்கான அவகாசத்துக்குள், உறுதி செய்ய வேண்டும்
கட்டாயம் சேர வேண்டும்
*உறுதி செய்தவர்களுக்கு மட்டும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பின், ஏழு நாட்களுக்குள் ஒதுக்கீடு கிடைத்த கல்லுாரிகளில், கட்டாயம் சேர வேண்டும். சேராவிட்டால், அடுத்த சுற்று மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்
ஆன்லைனில் மட்டுமே
* ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள கவுன்சிலிங் உதவி மையத்தை அணுகலாம். மேலும், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் பார்க்கலாம்
* எந்த மாணவரும் சென்னை கவுன்சிலிங் மையத்துக்கு வர வேண்டியதில்லை. அனைத்து பணிகளையும் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது கவுன்சிலிங் உதவி மையங்களில் இருந்தோ, ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலிங் கால அட்டவணை
கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் தரவரிசை விருப்ப பதிவு தேதி தற்காலிக ஒதுக்கீடு உறுதிப்படுத்தும் தேதி
முதல் சுற்று 200 முதல் 184.505 வரை ஒன்று முதல் 14,524 வரை ஆக., 25 முதல் 27 வரை ஆக., 28 ஆக., 29
இரண்டாம் சுற்று 184.500 முதல் 163 வரை 14,525 முதல் 45,577 வரை செப்., 9 முதல் 11 வரை செப்., 12 செப்., 13
மூன்றாம் சுற்று 162.995 முதல் 130.250 வரை 45,578 முதல் 94,620 வரை செப்., 23 முதல் 25 வரை செப்., 26 செப்., 27
நான்காம் சுற்று 130 முதல் 77.500 வரை 94,621 முதல் 1,56,278 வரை அக்., 9 முதல் 11 வரை அக்., 12 அக்., 13
தொழிற்கல்வி 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 1,879 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29
தொழிற்கல்வி 7.5 சதவீதம் 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 488 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29
ஒரே தேதியில் 2 கவுன்சிலிங்
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும், பொது கவுன்சிலிங்கின் போதே, நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
7.5 சதவீதத்துக்கான தரவரிசையில், முதல் சுற்றில், ஒன்று முதல் 332வது ரேங்க்; இரண்டாம் சுற்றில், 333 முதல் 2,407வது ரேங்க்.மூன்றாம் சுற்றில், 2,408 முதல் 7,733வது ரேங்க் மற்றும் 7,734வது ரேங்க் முதல், 22 ஆயிரத்து, 99வது ரேங்க் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு, அதே சுற்றிலேயே பொது கவுன்சிலிங்கும் சேர்ந்து நடக்கும்.
அவர்களுக்கான ஆன்லைன் பக்கத்தில், 'சாய்ஸ் பில்லிங்' வசதியில், அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும், பொது கவுன்சிலிங்குக்கான இட ஒதுக்கீடுக்கும், தனித்தனியாக இரண்டு விருப்ப பதிவு பட்டியல் காட்டப்படும்.இரண்டு பட்டியலிலும், மாணவர்கள் தங்களுக்கான கல்லுாரிகளை வரிசைப்படுத்தலாம். இரண்டு பட்டியலிலும் மாணவர்களின் முன்னுரிமை வரிசை அடிப்படையில், தனித்தனியே இரண்டு வித ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
அவற்றில், எந்த ஒதுக்கீட்டு கல்லுாரியில் மாணவர் சேர விரும்புகிறாரோ, அந்த கல்லுாரியில், ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். அவர் சேராமல் விடும் இடம் காலியானதாக கருதப்பட்டு, அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். அதேபோல், இரண்டிலும் சேராமல் தவற விட்டால், மீண்டும் அடுத்த சுற்றில் பங்கேற்க முடியாது.
Monday, August 01, 2022
TNEA Counselling 2022
August 01, 2022
TNEA Counselling 2022: இதர மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?
TNEA Counselling 2022: விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது; இதர மாணவர்களுக்கு எப்போது?
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது
கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது.இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நேரடியாக தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விளையாட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 3093 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் நாளொன்றுக்கு 300 மாணவர்கள் வீதம் கலந்தாய்விற்கு அழைக்கப்பட இருக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) உதவியுடன் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சரிபார்க்கப்படும். இதர மாணவர்களுக்கு தமிழக அரசு அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். அந்த, இடங்கள் காலியாக காட்டப்பட்டு தரவரிசையில் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் நடப்பாண்டு முதல் குறையும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது
கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது.இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நேரடியாக தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விளையாட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 3093 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் நாளொன்றுக்கு 300 மாணவர்கள் வீதம் கலந்தாய்விற்கு அழைக்கப்பட இருக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) உதவியுடன் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சரிபார்க்கப்படும். இதர மாணவர்களுக்கு தமிழக அரசு அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். அந்த, இடங்கள் காலியாக காட்டப்பட்டு தரவரிசையில் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் நடப்பாண்டு முதல் குறையும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
