Breaking

Showing posts with label Coaching Centers. Show all posts
Showing posts with label Coaching Centers. Show all posts

Wednesday, February 01, 2023

February 01, 2023

எம்.டி.எஸ்.மத்திய அரசு பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

எம்.டி.எஸ்.பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம் Training classes for MDS Central Govt jobs start from today

எம்.டி.எஸ்.பணிக்கான இணையதளப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்க உள்ளன.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், எம்.டி.எஸ். பணியில் சோ்வதற்கான போட்டித் தோ்வுக்கான தேதியை அண்மையில் அறிவித்தது.

இம்மாதிரியான பணிகளுக்கான தோ்வு குறித்த விழிப்புணா்வை தமிழக இளைஞா்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி ‘எ.ஐ.எம் டி.என்.’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இந்த யூடியூப் சேனலில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள எம்.டி.எஸ். தோ்வுக்கான காணொலி வகுப்புகளை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி நடத்துகிறது.

பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநா்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு, அக்காணொலிகள் பதிவேற்றம் செய்யவுள்ளது.

தினமும் மூன்று காணொலிகள் வீதம் 60 நாள்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. மேலும் 30 மாதிரித் தோ்வுகளை யும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘உனக்குள் தேடு’ என்ற செயலியின் மூலம் உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவா்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

இப்பயிற்சி புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, December 31, 2022

December 31, 2022

தமிழக அரசின் சார்பில் இயங்கும் கட்டணமில்லா போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் - Free Competitive Exams Coaching Centers run by the Government of Tamil Nadu

தமிழக அரசின் சார்பில் இயங்கும் கட்டணமில்லா போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் - Free Competitive Exams Coaching Centers run by the Government of Tamil Nadu

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், SSC,IBPS,RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் இம்மையங்களில் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர். தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 164 தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையங்களில் 3 மாத காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேற்படி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அன்று நடத்தப்பட்டு அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 17 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்தக்கட்ட உடல்தகுதி தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Total Pageviews

Search This Blog