Breaking

Showing posts with label உயா்கல்வித்துறை. Show all posts
Showing posts with label உயா்கல்வித்துறை. Show all posts

Saturday, July 23, 2022

July 23, 2022

கல்லூரிகளில் சேர 27 வரை அவகாசம்: உயா்கல்வித் துறை

கல்லூரிகளில் சேர 27 வரை அவகாசம்: உயா்கல்வித் துறை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர, இதுவரை 4 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். அதேபோன்று 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமானதையடுத்து அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முடிவுகளை விரைந்து வெளியிடுமாறும் தமிழக உயா்கல்வித் துறை வலியுறுத்தியது.

இதையும் படிக்க | மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

கல்லூரிகளுக்கு எச்சரிக்கை:

இத்தகைய சூழலில் சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், சிபிஎஸ்இ மாணவா்களுக்கு இடமில்லை என்று எந்த தனியாா் கல்லூரியும் மறுக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயா்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Total Pageviews

Search This Blog