Breaking

Showing posts with label English Language. Show all posts
Showing posts with label English Language. Show all posts

Sunday, November 27, 2022

November 27, 2022

ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம்

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய-ஜப்பான் தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜப்பானிய மொழிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து இந்த அமைப்பின் பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா - ஜப்பான் இடையே கல்வி, கலாசாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய -ஜப்பான் தொழில் வா்த்தக சபை கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மொழிப் பள்ளி சாா்பில், ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு (எண் - 5) நடைபெறவுள்ளது.

இதில் நேரடி மற்றும் இணைய வழியில் மாணவா்கள் கலந்து கொள்ளலாம். இந்த வகுப்பு டிச.17-ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் வரை, வாரந்தோறும் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். இதற்கு ரூ.10,900 பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிற்சியின் முடிவில் ஜப்பான் அறக்கட்டளை நடத்தும் ஜப்பானிய மொழிப்புலமை தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வலைதளம் அல்லது 044-4855 6140, 98843 94717 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Thursday, August 25, 2022

August 25, 2022

ஆங்கிலத்தால் 5% மட்டுமே பயன் தாய் மொழியில் படிப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு

‘ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,’ என்று அமித்ஷா பேசிய நிலையில், அவர் இந்திக்கு ஆதரவாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை - 2020 என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்த காலத்தில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் இந்தியில் இருந்து குஜராத்திக்கு மொழி பெயர்த்து கட்டுரைகளை படித்தேன். இந்தியில் எனது புலமையை மேம்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் கவனம் செலுத்துங்கள் என்று தலைவர் ஒருவர் கூறினார். தாய் மொழியில் படிக்கும் 95 சதவீத குழந்தைகளின் திறன்கள் பயன்படாமல் போவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தாய் மொழி திறனை முழுமையாக பயன்படுத்தினால் நாடே பிரகாசமாக இருக்கும்.

ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அமித்ஷா ஏற்கனவே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்திக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Total Pageviews

Search This Blog