salary deduction
October 19, 2025
Showing posts with label salary deduction. Show all posts
Showing posts with label salary deduction. Show all posts
Sunday, October 19, 2025
Saturday, December 16, 2023
salary hike
December 16, 2023
சம்பள பட்டியல் தயாரிப்பில் சவாலாகும் சர்வர் பிரச்னை மனஉளைச்சலில் அலுவலர்கள்
சம்பள பட்டியல் தயாரிப்பில் சவாலாகும் சர்வர் பிரச்னை மனஉளைச்சலில் அலுவலர்கள்
தமிழகத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மையம் சர்வர் பிரச்னை காரணமாக சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்வதில் கல்வித்துறை அலுவலர்கள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர். மாதம் 15 தேதிக்கு மேல் வரும் திங்களில் சென்னை, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக ஆன்லைனில் ஆசிரியர், அலுவலர்களுக்கான சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். 24 மணிநேரத்தில் பில் ஜெனரேட் ஆனபின் அதற்கான தகவல் தெரிவிக்கப்படும். பின் 25 தேதிக்குள் கருவூலத்தில் ஒப்படைத்தால் தான் சம்பளம் பெற முடியும்.
ஆனால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்வதால்பெரும்பாலும் சர்வர் முடங்கியே கிடப்பதும்,நள்ளிரவுக்கு மேல்சர்வர் வேலை செய்வதும்அலுவலர்களை மனஉளைச்சலில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் டிச., 24 முதல் சர்வர் புதுப்பிக்கப்படவுள்ளதால் டிச., 8 க்குள் சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல தொழில்நுட்ப பிரச்னையால் இதுவரை பதிவேற்றப் பணிகள் முடிந்தபாடில்லை என ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர். சவாலாக உள்ளது அவர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் இந்த சர்வர் பிரச்னையால் அரசு அலுவலர்கள் படாதபாடு படுகின்றனர். 95 சதவீதம் நள்ளிரவில் தான் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த சர்வரை கையாளும் தனியார் நிறுவனம் 15 ம் தேதிக்கு பின் தான் ஆன்லைனில் பதிவேற்ற முடியும் என தெரிவித்து வந்த நிலையில்இம்மாதம் மட்டும் 8 முதல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
அப்படியென்றால் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இருந்தே பதிவேற்றம் செய்ய அனுமதிக்கலாமே. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பதிவேற்றம் நேர ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்திலும் ஆன்லைன் வேலை செய்வதில்லை. உதவிபெறும் பள்ளிகளுக்கு இப்பணி மேலும் சவாலாக உள்ளது. இம்முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.
Thursday, February 16, 2023
salary deduction
February 16, 2023
அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை
அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை
கமுதி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ.16 லட்சத்தை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி என 163 பள்ளிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் 163 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
கடந்த 2021 மாா்ச் மாதத்திலிருந்து 2023 பிப்ரவரி மாதம் வரை கரோனா கால நிதிப் பற்றாக்குறை காரணங்களைக் காட்டி, 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக தூய்மைப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஒரு சில பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்கள் ஊதியமின்றி பணியாற்ற முன்வராததால் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் விருப்பபட்டு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய முன்வந்தாலும், அதனால் ஏற்படும் சமூகப் பிரச்னைகளை பள்ளி நிா்வாகம் சந்திக்க நேரிடும் என்பதால், ஆசிரியா்களே பள்ளிகளைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நிலுவை ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
கமுதி தாலுகாவில் உள்ள 163 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை ஊதியத் தொகையை, நிதிநிலைக்கு ஏற்ப விடுவித்து வருகிறோம். தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை உள்ளது. விரைவில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கமுதி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ.16 லட்சத்தை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி என 163 பள்ளிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் 163 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
கடந்த 2021 மாா்ச் மாதத்திலிருந்து 2023 பிப்ரவரி மாதம் வரை கரோனா கால நிதிப் பற்றாக்குறை காரணங்களைக் காட்டி, 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக தூய்மைப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஒரு சில பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்கள் ஊதியமின்றி பணியாற்ற முன்வராததால் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் விருப்பபட்டு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய முன்வந்தாலும், அதனால் ஏற்படும் சமூகப் பிரச்னைகளை பள்ளி நிா்வாகம் சந்திக்க நேரிடும் என்பதால், ஆசிரியா்களே பள்ளிகளைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நிலுவை ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
கமுதி தாலுகாவில் உள்ள 163 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை ஊதியத் தொகையை, நிதிநிலைக்கு ஏற்ப விடுவித்து வருகிறோம். தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை உள்ளது. விரைவில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
Thursday, October 06, 2022
Saturday, September 03, 2022
TPF
September 03, 2022
TPF சந்தாதாரகளின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தில் 200 ரூபாய் 300 ரூபாய் குறைகிறதா?
TPF சந்தாதாரகளின் கவனத்திற்கு
உங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தில் 200 ரூபாய் 300 ரூபாய் குறைகிறதா?
உங்களுக்கான பதிவு இது.
உங்கள் TPF சந்தா *குறைந்தபட்சம் 12%* இருக்க வேண்டும்.
*உதாரணமாக*
Basic - 65500
DA 34%. - 22270
TOTAL. - 87770
87770 x 12% = 10532
10532 rounded
to hundred = *10600*
Ok sir அப்பவும் எனக்கு சரியா வரல என்ன பன்றது?
ஒன்னும் இல்ல
*நீங்க 2000PP வாங்கும் TPF இடைநிலை ஆசிரியரா?*
அப்போ அதையும் சேத்துகோங்க அவ்ளோதான்.
*உதாரணமாக*
Basic - 61700
DA 34%. - 20978
PP. - 2000
*TOTAL. - 84678*
84678 x 12% = 10161
10161 rounded
to hundred = *10200*


