Breaking

Showing posts with label Aadhaar. Show all posts
Showing posts with label Aadhaar. Show all posts

Sunday, November 30, 2025

Thursday, May 30, 2024

Thursday, February 22, 2024

February 22, 2024

பள்ளிகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்தல் திட்டம் நாளை (23.02.2024) முதல் தொடக்கம்



பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம். பள்ளி மாணவர்களுக்கு தனி ஆதார் முகாம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் Separate Aadhaar camp for school students - School Education Secretary letter

தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பிரத்தியேக தனித்தனி எண்கள் எமிஸ் வளையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் முழு தகவல்கள் இடம்பெற்றுள்ளன மாணவர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை ஒரே எண் பராமரிக்கப்படுகிறது

மாணவர் பற்றிய தகவல் மற்றும் மாணவருக்கு தேவையான அரசு உதவிகள் அரசின் திட்டங்கள் சென்றடைய இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆதார் எண் குழந்தையில் பிடிக்கப்பட்டுள்ளதால் "பயோ மெட்ரிக்" அதில் இணைக்க இணைக்காமல் உள்ளது எனவே பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் ஆதார் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும்பான்மையான ஆதார் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவிகளுக்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடும் ஒன்றை அனுப்பி உள்ளது அதில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேகமாக ஒரு ஆதார் முகாம் நடத்த பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் இதில் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார திருத்தங்கள் பயோ மெட்ரிக் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tuesday, November 14, 2023

November 14, 2023

ஆதார் போல் மாணவருக்கு வருகிறது அபார்



ஆதார் போல் மாணவருக்கு வருகிறது அபார்

'ஆதார்' போல், பள்ளி மாணவர்களுக்கென தனித்துவ அடையாள அட்டை, 'அபார்' எனும் பெயரில், விரைவில் வர உள்ளது.

மக்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது போல், நாடு முழுதும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அட்டைக்கு, 'தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு' அதாவது 'அபார்' என, பெயரிடப்பட உள்ளது.

இதில், மாணவரின் முழுமையாக கல்வி விபரம், கூடுதல் திறமைகள் பதிவு செய்யப்பட உள்ளன.

'அபார்' அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் 'ஆதார்' தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்கு பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளிவர உள்ளது' என்றனர்.

Wednesday, November 08, 2023

November 08, 2023

How much gold can be bought without PAN card? - பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?

Moreover, in case you are buying gold from a jeweller for a value over two lakh rupees whether through cash or otherwise, you have to provide the seller with your identity like a PAN card or Aadhaar Card. So you can buy gold upto Rs. 2 lakhs without having to furnish either PAN or Aadhaar number.

பான்-ஆதார் இல்லாமல் எவ்வளவு தங்கம் வாங்க முடியும்?

தங்கத்தை வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் நம் நாட்டில் உள்ளன.

அந்த விதிகளை மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் மற்றும் வரி அதிகாரியின் கவனத்திற்கு வரலாம்.

அதனால் தங்கம் வாங்கும்போது இந்த விதிகளைத் தெரிந்து அதற்கு ஏற்றபடி பர்சேஸ் செய்வது நல்லது.

ஏதேனும் ஆவணம் தேவையா?

நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.

2 லட்சம் அல்லது அதற்கு மேல் தங்கம் வாங்கினால், பான் எண்ணைக் காட்ட வேண்டும். வருமான வரி விதிகளின் 114பி பிரிவின் கீழ் நாட்டில் இந்த விதி உள்ளது. ஜனவரி 1, 2016க்கு முன், ரூ.5 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் பான் எண்ணைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. எவ்வளவு தங்கத்தை பணமாக வாங்கலாம்?

இதனுடன், ரொக்கமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகைக்கு மேல் தங்கம் வாங்கினால், அதை கார்டு மூலமாகவோ அல்லது பான் கார்டுடன் ஆவணங்கள் சமர்ப்பித்து ரொக்கமாக செலுத்த வேண்டும்.

மேலும் பண பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST உள்ளது.

இதன்படி, ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. எனவே அடிப்படையில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகச் செலுத்தி தங்கம் வாங்கினால், நீங்கள் விதிகளை நன்றாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆவணங்களை சமர்ப்பிப்பது முக்கியம்.

ஆவணங்கள் மறந்தால் விதிமீறல் ஆகும்.

மேலும் இதற்கு ஒரு அபராதமும் உள்ளது, இது பணத்தை எடுக்கும் நபருக்கு விதிக்கப்படுகிறது.


யார் எவ்வளவு தங்கத்தை சேமிக்க முடியும்?

-திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.

- திருமணமாகாத ஒரு பெண் தன்னிடம் 250 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம்.

- ஆடவர்கள் தன்னுடன் 100 கிராம் தங்கத்தை வைத்திருக்க முடியும்.

Wednesday, September 27, 2023

September 27, 2023

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்

கூட்டுறவு சங்கம் , வங்கிகளின் உறுப்பினர்கள் , ஆதார்எண் , குடும்ப அட்டை எண்ணை சமர்ப்பிக்க இணைப் பதிவாளர் அறிவுறுத்தல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டைஎண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உடன் சமர்ப்பித்து விட வேண்டும். எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன் னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணி கள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங் களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற் றும் வங்கிகளில் அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் ‘அ ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் படும்.மேற்படி 'அ' வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும் நேர்வில் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அத் தேர்தலில் போட்டியிடஇயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள்மற்றும்வங்கிக ளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இணைப்பதிவாளர் (பொ) சிவ.முத்துக்குமாரசாமி தெரிவித் துள்ளார்கள்.

Saturday, September 23, 2023

September 23, 2023

9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் கார்டு இல்லை... பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்த உண்மை!

*9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் கார்டு இல்லை... கணக்கெடுப்பில் தெரிய வந்த உண்மை!

அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக இருந்தாலும், அது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் மேற்கு வங்கத்தின் பள்ளிக் கல்வித்துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

அதில், மேல்நிலை தேர்வு எழுத விரும்பும் சுமார் 9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் அட்டை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆதார் அட்டை இல்லாததால், இதுபோன்ற மாணவர்கள் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை அடிக்கடி இழக்கின்றனர் என்பதை மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டை சேர்க்கைக்காக மாநிலம் முழுவதும் 275 தற்காலிக முகாம் அலுவலகங்களை அமைத்து இந்தப் பிரச்னையைச் சமாளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் இதுபோன்ற பதிவு முகாம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த வித கட்டணமும் இன்றி மாணவர்கள் தங்கள் பெயர்களை அங்கு பதிவு செய்து கொள்ளலாம்.

முதன்மை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என அனைத்து நிலை மாணவர்களும் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும் இந்த வசதிகள் விரிவுபடுத்தப்படும்.

Monday, September 11, 2023

September 11, 2023

Post Office Account இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு..இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!

போஸ்ட் ஆப்பிஸ் அக்கவுண்ட் இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு..இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!

ஆதார் அட்டை இணைக்காவிட்டால், உங்களின் தபால் அலுவலக கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

( *எப்படி இணைப்பது என்று இந்தப் பதிவில் கடைசியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*)

வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதேபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், வட்டி வகிதமும் பன்மடங்கு நன்மையை தரக்கூடியது.

அதாவது, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்து யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் தபால் அலுவலக கணக்கிற்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். *ஆதாரை இணைப்பது கட்டாயம்:*

இந்நிலையில், தபால் அலுவலக கணக்கை திறப்பதற்கு முன், வாடிக்கையாளர்கள் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

அதில் குறிப்பாக, அஞ்சலகக் கணக்குடன் ஆதாரை எண்ணை இணைக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறு சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள மக்கள் தங்களது தபால் அலுவலக கணக்குடன் இணைக்கத் தவறினால், தபால் அலுவலக கணக்கு செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் முதலீடு செய்ய முடியாது.

முதலீட்டின் முதிர்வு பலன்களை பெற வாய்ப்பு இருக்காது மேலும், கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *எப்படி இணைப்பது?

முதலில் https://www.indiapost.gov.in/VAS/Pages/CustomerLinking.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில், உங்கள் கணக்கின்  User ID மற்றும் Password-ஐ உள்ளிட வேண்டும்.

பின்னர், உங்கள் ஆதாரை எண்ணை உள்ளிட்டு, எந்த கணக்குடன் இணைக்க நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், ஆதார் எண் இணைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் எண்ணிற்கு மெசேஜ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆதார் அட்டை, உங்கள் கணக்கின் கடவுச்சொல்லுடன் அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog