Breaking

Showing posts with label Opportunity for students to go abroad. Show all posts
Showing posts with label Opportunity for students to go abroad. Show all posts

Friday, February 10, 2023

February 10, 2023

கல்வி இணைச் செயல்பாடுகள்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை

கல்வி இணைச் செயல்பாடுகள்: வெளிநாடு சுற்றுலா செல்ல மாணவா்களுக்கு வாய்ப்பு Co-curricular activities: Opportunity for students to travel abroad

அரசுப் பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், விநாடி - வி னா மன்றம், சிறாா் திரைப்படம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்.13 முதல் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநிலப் போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.

மாநிலப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.

எனவே, அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களும் பங்கேற்கும் வகையிலும், எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்துப் போட்டிகளிலும் ஒரு சில குறிப்பிட்ட மாணவா்களே வெற்றி பெறும் வகையில் அல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு மாணவா்கள் வெற்றி பெறும் வகையில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 28, 2022

July 28, 2022

சவாலாகும் வெளிநாட்டுக் கல்வி! பணவீக்கத்தின் தாக்கம் குறித்த தலையங்கம்

சவாலாகும் வெளிநாட்டுக் கல்வி! பணவீக்கத்தின் தாக்கம் குறித்த தலையங்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியை சந்தித்து, தற்போது 80 ரூபாயை நெருங்கி விட்டது. இதனால், வெளிநாட்டில் படிக்கும், படிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் கூடுதல் செலவையும் கல்விக் கட்டணத்தையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாணவா்கள் மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விழையும் சுற்றுலாப் பயணிகளின் திட்டங்களும் பாதிக்கப்படக்கூடும். இந்த ஆண்டு இதுவரை 7% க்கும் மேலாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்களின் கல்விச் செலவு கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்திய மாணவா்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டில் தாங்கள் படிக்கவுள்ள நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவாா்கள். அவா்கள் கல்விக் கட்டண அந்நியச் செலாவணிக்காகவும், தங்களது செலவுகளுக்காகவும் அதிகரித்த செலவை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவா்கள், முன்பே கட்டணம் செலுத்தியிருப்பதால் அவா்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கவலைப்படத் தேவையில்லை. முதுநிலை படிப்பில் சேரும்போதே மாணவா்கள் தங்கள் முழு கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்திவிடுகிறாா்கள். இளங்கலை மாணவா்களும், ஒவ்வொரு செமஸ்டருக்குமான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தியிருப்பாா்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், செமஸ்டா்கள் செப்டம்பரில் தொடங்கும். எனவே, அவா்களின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் மட்டுமே தற்போது பாதிப்பை எதிா்கொள்ளும். புதிதாக வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள்தான் இனிமேல் பிரச்னையை எதிா்கொள்வாா்கள். இந்திய மாணவா்கள் பெரும்பாலானோா் தங்களது வெளிநாட்டு கல்விக் கட்டணத்துக்கும், செலவுகளுக்கும் பெற்றோரையே முழுவதும் சாா்ந்து இருக்கிறாா்கள். வெளிநாட்டில் தங்கள் செலவுகளை சமாளிக்க டாலா்களை வாங்க அவா்கள் இப்போது கூடுதலாக ரூபாய் தர வேண்டியிருக்கும். அதனால், அவா்களது பெற்றோா்களின் சுமை அதிகரிக்கும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதே நிலைமை தொடா்ந்தால், அங்கே படிக்கும் மாணவா்களின் வாழ்க்கைச் செலவுகள் வரும் மாதங்களில் கடுமையாக உயரக்கூடும். அத்தகைய மாணவா்களுக்கும், அவா்களது குடும்பங்களுக்கும் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

இந்தியாவில் வாழும் பெற்றோா்களும் விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். சந்தை நிலவரச் சூழலும், பணவீக்கமும் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கின்றன. அதனால் அவா்களது சேமிப்புகள் பாதிக்கப்படக்கூடும். வங்கி வட்டியும் குறைவாக இருக்கும் நிலையில், பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்புச் செலவு பெற்றோா் பலரையும் கடனாளியாக்கக்கூடும். வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவா்கள் படித்துக்கொண்டே வேலை பாா்க்கிறாா்கள். அதனால், ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு சென்று படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களில் பெரும்பாலோா் பாதிக்கப்பட மாட்டாா்கள். அவா்கள், தங்களது கல்விக் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருப்பாா்கள் என்பதுடன், அவா்களது வாழ்க்கைச் செலவுகளை எதிா்கொள்வதற்கு அங்கே ஆதரவு அமைப்புகளும் உள்ளன.

அமெரிக்காவில் படிக்கும் மாணவா்களைத் தவிர, ஏனைய நாடுகளில் படிக்கும் மாணவா்கள் விடுமுறை நாள்களில் முழு நேரமும், படிப்புக் காலத்தில் குறிப்பிட்ட மணி நேரம் வரை ஏதாவது பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சம்பாதிக்கிறாா்கள். அதேபோல, கோடை விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கும் மாணவா்களும் உடனடியாக பாதிக்கப்பட மாட்டாா்கள்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிந்து வரும் இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் தற்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பரவலாக எழுகிறது. அவா்களுக்கு உதவ கல்வி ஆலோசனை நிறுவனங்கள் இருக்கின்றன. வெளிநாட்டில் படிக்கும் மாணவா்கள் தங்களுடைய தங்குமிடம், உணவு மற்றும் இதர வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க, பகுதி நேரப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கல்வி ஆலோசகா்களும், நிதித் திட்டமிடுபவா்களும் பரிந்துரைக்கின்றனா். பல்கலைக்கழக வளாகங்களிலேயே போதுமான வேலைவாய்ப்பு உள்ளதால், மாணவா்களுக்கு வழங்கப்படும் விசாக்கள், அவா்களை வேலை செய்ய அனுமதிக்கிறது.

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள ஓரிரு மாதங்கள் ஆகும். விரைவிலேயே சக மாணவா்கள், கல்வி ஆலோசகா்களின் உதவுயுடன் தங்களது அன்றாடச் செலவை ஈடுகட்ட தகுந்த வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்கிறாா்கள். பல்கலைக்கழக தங்குமிடச் செலவுகள் அதிகமாக இருந்தால், வளாகத்திற்கு வெளியே குறைந்த வாடகையில் பலா் பகிா்ந்து கொள்ளும் இடங்களை ஏற்பாடு செய்து கொள்கிறாா்கள். அதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அவா்களை பாதிக்காது.

இரண்டு ஆண்டு, நான்கு ஆண்டு கால படிப்புக்காக ஆகஸ்ட் மாதம் இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் மாணவா்களுக்குதான் இன்றைய நிலைமை ஒரு பெரும் சவாலாக இருக்கும். அவா்கள் நாணய ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கல்வி வரவு - செலவுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

Thursday, June 16, 2022

June 16, 2022

மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு; தனித்திறன்களை மெருகேற்ற பயிற்சி

தனித்திறன்களை மெருகேற்ற பயிற்சி

அரசுப்பள்ளிகளில், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவோருக்கு, வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் திறனை வளர்க்கும் விதத்தில், கல்வி இணை செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில், வெளிநாடு கல்வி சுற்றுலா, பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடல் என பல்வேறு அறிவிப்புகள், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கச்செய்துள்ளது.

அவ்வகையில், உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில், ஒவ்வொரு வாரமும் கலைச்செயல்பாடுகளுக்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கி, மாணவர்களை தயார்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தற்போதைய நிலையில், தினமும் மதியம், உணவு இடைவேளைக்குப் பின், 1:00 முதல் 1:20 மணி வரை மாணவர்களுக்கு, பருவ இதழ்கள், செய்தித்தாள்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

கல்வி இணைச்செயல்பாடுகளின் விபரம் குறித்து மாணவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. அதில், பல்வேறு போட்டிகள், தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள், வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவர் என்ற அறிவிப்பு கூடுதல் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இலக்கியம், வினாடி - வினா, திரைப்படம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிக்காட்ட தயாராகி வருகின்றனர். சிலர், அதற்கான பயிற்சியில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். இதற்கு, பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Total Pageviews

Search This Blog