Breaking

Showing posts with label NTSE. Show all posts
Showing posts with label NTSE. Show all posts

Monday, January 02, 2023

January 02, 2023

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எப்போது; எதிர்பார்ப்புடன் காத்திருப்பு

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எப்போது; எதிர்பார்ப்புடன் காத்திருப்பு

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற, எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஏழாம் வகுப்பு இறுதித்தேர்வில், 55 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், இத்தேர்வு எழுத தகுதியுடையவர்கள். இதோடு, மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், ரூ.3.5 லட்சத்திற்குள் இருப்பது அவசியம். மனத்திறன் பகுதியில், 90 மதிப்பெண்களுக்கும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, படிப்பறிவு பகுதியில், 90 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இத்தேர்வு அறிவிப்பு, டிச., துவக்கத்திலே வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இத்தேர்வு அறிவிப்பு, தற்போது வரை வெளியிடப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வுக்கு, ஏழாம் வகுப்பில் முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில், முதல் இரு பருவ பாடத்திட்டத்தில் கேள்விகள் இடம்பெறும்.

இன்று முதல் மூன்றாம் பருவம் துவங்கவுள்ளதால், விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியிட வேண்டும்.தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இத்தொகை உயர்கல்விக்கு, பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்

Wednesday, January 19, 2022

January 19, 2022

NTSE - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்யலாம்

NTSE - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்யலாம்.

29.01.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 05.02.2022 ( சனிக்கிழமை ) நடைபெறும் . மேலும் , தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் , தேர்வு தேதி மாற்றத்தின் காரணமாக 25.01.2022 அன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்தான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

Monday, January 17, 2022

January 17, 2022

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 19ம் தேதி ஹால்டிக்கெட்

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 19ம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு அரசால் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் படிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ₹1250, உயர்கல்விக்கு செல்லும்போது மாதம் ₹2000 என உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது தவிர ஆய்வுப் படிப்புகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 29ம் தேதி வெளியானது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள்கள், 9, 10ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். இந்த தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மாணவ மாணவியர் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை இம்மாதம் 19ம் தேதி முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, January 12, 2022

January 12, 2022

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஜனவரி 2022 - தேர்வு தேதி மாற்றம் மற்றும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்திக்குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), ஜனவரி 2022 - தேர்வு தேதி மாற்றம் மற்றும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - சார்பு. - 23.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 29.01.2022 (சனிக்கிழமை) நடைபெறும். மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்தான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் தங்கள் பத்திரிகையில் செய்தியாக வெளியிடுமாறும் வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

Friday, November 12, 2021

November 12, 2021

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவி தொகை பெறுவதற்கான தேசிய திற னாய்வு தேர்வுக்கு விண் ணப்பிக்க, மாணவர்கள் தங்கள் பள்ளிகளை அணு குமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவர் களின் கல்வி திறன் அடிப்ப டையில், சிறந்த மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகைவழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெறு வோரை தேர்வு செய்வதற் கான, மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறையின் அரசு தேர்வு துறை சார்பில், பள்ளிகள் வழியே மாண வர்களிடம் விண்ணப்பங் கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப் பிக்கவும், வரும் 20ம் தேதி. வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய திறனாய்வு குறித்து பள்ளி கள் தரப்பில் மாணவர் களுக்கு தெரியப்படுத்த வில்லை புற்றோர். தம் நாளிதழை தொடர்பு கொண்டு, அதன் நடை முறைகளை கேட்டனர்.

நடைமுறை இதுதான்!

• பத்தாம் வகுப்பு படிக் கும் மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர் வுக்கு தங்கள் பள்ளி விண்ணப்பங் களை பூர்த்தி செய்து தர வேண்டும்.

விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன்" என்ற ஆங்கில தலைப் பில், விண்ணப்பங் செய்யலாம். பதிவிறக்கம் மேலும், https:// apply1.tndge.org/dge -notification/NTS and இணையதன இணைப் பில் விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப் பங்களை, பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களி டம் அளிக்க வேண்டும்.

லிண்ணப்பத்துடன், தங்களது ஜாதி சான்றி தழையும் இணைத்து வழங்க அதனுடன் வேண்டும். சேர்த்து பள்ளிகளின் தரப்பில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வர். கூடுதல் தகவல்களை, தலைமை ஆசிரியர் கள் அல்லது தங்களின் வகுப்பு ஆசிரியர்களி டம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிகளில் தகவல் கிடைக்காதவர்கள், தங் கள் மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது அரசு தேர்வு துறை உதவி இயக்குனர் அலு வலகங்களில் தெரித்து கொள்ளலாம். இந்த தாவல்கள், கல் வித்துறை அதிகாரிகளிடம் கேட்டு பெறப்பட்டன.

Saturday, May 22, 2021

May 22, 2021

NTSE 2020-21 - 10th Std National Talent Search Exam - Result Published

மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , டிசம்பர் 2020-21 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் " Result ” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் . NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் ( 2 வாரங்களில் ) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
National Talent Search Exam ( X - STD ) (Dec - 2020-21) - Result Direct Link...

Saturday, March 06, 2021

March 06, 2021

National Talent Search Examination - NTS DECEMBER 2020 - KEY ANSWER - FINAL - PDF

ADMISSION TO POSTGRADUATE AND RESEARCH PROGRAMMES - 2021 - last date for submission of online applications is 19th April 2021. National Talent Search Examination - NTS DECEMBER 2020 - KEY ANSWER - FINAL CLICK HERE TO DOWNLOAD FULL PDF
March 06, 2021

தேசிய வருவாய்த்தேர்வு: விடைக்குறிப்பு வெளியீடு

தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து 12ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் நாடு முழுவதும் நடத்தப்படும் தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்புதவி தொகை தேர்வு கடந்த 21ம் தேதி நடந்தது. தமிழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை (Answer Key) தற்போது தேர்வுத்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 05.03.2021 - PDF
மாணவர்கள் தங்கள் விடைகளை சரிபார்த்துக்கொள்ள, www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கவும். இந்த விடைக்குறிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால், மாணவர்களும் பெற்றோரும் 12ம் தேதிக்குள் ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.

Monday, December 28, 2020

December 28, 2020

NTSE Exam 2020 (27.12.2020) - Answer key - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
27.12.2020- NTSE- EXAM- SAT ,MAT QUESTION & KEY AVAIL
NTSE Exam 2019 - SAT Question Paper - PDF Download here NTSE Exam 2019 - MAT Question Paper - PDF Download here
NTS Exam 2020 - Maths Answer key - Download here...
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Thursday, December 24, 2020

December 24, 2020

தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு தள்ளிவைக்க கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான திறனாய்வு தேர்வு - கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்க கோரிக்கை
பள்ளி படிப்பு முதல், ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான NTS எனப்படும் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு வரும் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 900 மையங்களில் நடைபெறுகிறது. தற்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதால் கொரோனோ பேரிடர் காலத்தில் நோய் தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க முடியுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய , மாநில அரசு சார்பில் NTS உதவித்தொகை வழங்கப்படுகின்றது. அந்த வகையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. முதலில் மாநில அளவில் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு பெறுபவர்களுக்கு 2ம் கட்ட தேர்வும் நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையும், அதன்பிறகு பட்டப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகையினை மத்திய அரசு வழங்குகிறது. இந்த கல்வி உதவித்தொகைக்கான முதல்கட்ட தேர்வு வரும் 27-ஆம் தேதி தமிழகத்தில் 900 மையங்களில் நடைபெறுகின்றன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். பள்ளி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கும் தேர்வு என்பதால், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 27ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒரு தேர்வும், 11: 30 மணி முதல் பகல் 1: 30 மணி வரை ஒரு தேர்வும் நடைபெற இருக்கிறது. தலா 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வு சரியான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் நடத்தப்படுகிறது . ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனினும் தேர்வு மையத்தில் அதிகமான மாணவர்கள் கூடுவதால் தொற்று ஏற்படும் என அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
December 24, 2020

தேசிய திறனாய்வுத் தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD OFFICAL PDF பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். அதன்படி 2020- 2021ஆம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) டிசம்பர் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வை நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. CLICK HERE TO DOWNLOAD OFFICAL PDF அதில் கூறப்பட்டுள்ளதாவது: * ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும். * அனுமதிச் சீட்டு உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர்ப்பட்டியலில் உள்ள தேர்வர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். * நுழைவுச் சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச் சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். * பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின், உரிய திருத்தம் செய்து சான்றொப்பம் இட்டு, முதன்மைக் கண்காணிப்பாளரின் கையொப்பத்தைப் பெறவேண்டும். CLICK HERE TO DOWNLOAD OFFICAL PDF * தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக 26-ம் தேதியன்று அனைத்துத் தேர்வு மையங்களிலும் கிருமிநாசினி தெளித்துச் சுத்தம் செய்ய மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். * தேர்வெழுதும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும். * தேர்வெழுதும் மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். * தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள், சானிடைசர்களைத் தேர்வறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். CLICK HERE TO DOWNLOAD OFFICAL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog