Breaking

Showing posts with label informations. Show all posts
Showing posts with label informations. Show all posts

Monday, February 12, 2024

February 12, 2024

தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி? A-Z தகவல்கள்



தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி? A-Z தகவல்கள் Gold bond sale begins today - where to buy? How much interest? A-Z information

*தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம்*

*"தங்கப் பத்திரம் பிப்.12 வெளியீடு!"* *- எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி?*

*A-Z தகவல்கள்!*

தங்கப் பத்திரம் வெளியீடு! திருவிழா, பண்டிகை, கல்யாணம், காதுகுத்து...

இப்படி இந்தியாவில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தங்கம் இல்லாமல் இருக்கவே இருக்காது. பொதுவாகவே, இந்தியர்களுக்கு தங்கம் மீது மோகம் அதிகம்.

அதனால் கையில் கொஞ்சம் காசு கிடைத்து விட்டாலே தங்கம் வாங்க வண்டியைக் கட்டிவிடுவார்கள்.

இப்படி ஆசை ஆசையாக இந்தியர்கள் வாங்கிக் குவிக்கும் தங்கத்துக்கு பாதுகாப்பு உள்ளதா, வாங்கிய விலைக்கே விற்க முடியுமா என்று கேட்டால், இல்லவே இல்லை' என்பதுதான் உண்மை.

அதனால் காசு இருக்கு... தங்கம் வாங்கணும்... ஆனா, நஷ்டம் இருக்கக் கூடாது' என்பவர்களுக்கும், தங்கம் வேணும்... ஆனா, பாதுகாப்பானதாக வேண்டும்' என்பவர்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரம்' ஒரு நல்ல நண்பன். இதில் நீங்கள் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரமும் வந்துவிட்டது.

2023-24 நிதியாண்டின் தங்கப் பத்திரத்தின் நான்காவது சீரிஸ், இன்று (பிப்ரவரி 12, திங்கள்கிழமை) வெளியாகி, பிப்ரவரி 16, 2024 வரை விற்பனையாகும்.

இந்த ஐந்து நாட்களுக்குள் மக்கள் கட்டும் தொகைக்கான பத்திரங்கள் பிப்ரவரி 21, 2024 அன்று ஒதுக்கப்படும். இந்தத் தங்கப் பத்திரம் ஒரு கிராமுக்கு ரூ.6,263-க்கு விற்பனை ஆக உள்ளது.

*யார் வாங்கலாம்?*

இந்த தங்கப் பத்திரங்களை தனி நபர்கள், HUFs, அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் வாங்கிக்கொள்ள முடியும்.

*எங்கு வாங்கலாம்?*

தங்கப் பத்திரங்களை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அஞ்சலகங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் ஆன்லைனிலும் வாங்க முடியும்.

ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி தரப்படுகிறது. *ஒருவர் எவ்வளவு கிராம் வாங்க முடியும்?*

ஒருவர் 4,000 கிராம் அல்லது 4 கிலோ கிராம் வரை தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

அறக்கட்டளைகள் மாதிரியான அமைப்புகள் ஒரு நிதியாண்டில் 20 கிலோ கிராம் வரை தங்கப் பத்திரம் வாங்கலாம்.

*தங்கப் பத்திரம் முதிர்வு காலம் எது?*

பொதுவாக, தங்கப் பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

ஆனால், தேவைக்கேற்ப 5 ஆண்டுகளில் இருந்தே வெளியேறிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அதனால் முதலீடு செய்த 5 ஆண்டுகளில் இருந்து தங்கப் பத்திரங்களை விற்க முடியும்.

முதிர்வு காலம் வரை தங்கப் பத்திரத்தை நாமே வைத்திருந்தால், முதலீடு முதிர்வடையும் காலத்தில் அன்றைக்கு 24 காரட் தங்கத்தின் விலை என்ன விலையோ, அதே விலை பணமாகக் கிடைக்கும்.

இத்துடன் முதலீட்டுத் தொகைக்கு ஆண்டு ஒன்றுக்கு 2.5% வட்டி கிடைக்கும். இந்த வட்டி தொகை ஆறு மாதத்துக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

*கோல்ட் பாண்டின் தங்கம் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?*

தங்கப் பத்திரங்களின் விலை IBJA-வால் நிர்ணயிக்கப்படும் 999 சுத்தமான தங்கத்தின், கடந்த 3 நாள்களின் சராசரி விலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. *தங்கப் பத்திரம் வாங்க பணம் எப்படி செலுத்த வேண்டும்?*

தங்கப் பத்திரம் வாங்க ரூ.20,000 வரை ரொக்கமாகவும், அதற்கு மேற்பட்ட தொகை வங்கி வரைவு டிஜிட்டல் முறை மூலமும் செலுத்த வேண்டும்.

*முதிர்வுத் தொகைக்கான நடைமுறை என்ன?*

முதலீடு, முதிர்வு பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு முதலீட்டாளருக்குத் தகவல் தரப்படும்.

முன்னர் கொடுத்த வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்றவற்றில் மாற்றம் இருந்தால், தொடர்புடைய வங்கி, அஞ்சலகம் முதலானவற்றுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

Wednesday, January 03, 2024

January 03, 2024

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் - ஓய்வு பெறப்போவோர் விபரம்

மொத்த நடுநிலைப் பள்ளிகள் 6941

தற்போதைய HMs 5760.

தற்போது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் 1181

ஓய்வு பெறப்போவோர் விபரம்

31.5.24 - 231 பேர்

31.5.25 - 447

31.5.26 - 568

31.5.27 - 624

31.5.28 - 742

31.5.29 - 809

31.5.30 - 839

31.5.31 - 653

31.5.32 - 210

31.5.33 - 94

31.5.34 - 89

31.5.35 - 99

31.5.36 - 62

31.5.37 - 66

31.5.38 - 19

31.5.39 - 32

31.5.40 - 27

31.5.41 - 31

Saturday, December 23, 2023

December 23, 2023

வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம்.



*வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம். Introducing a new website to know the status of house sales.

வீட்டுவசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விபரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி திட்டங்கள் குறித்த விபரங்களை பொது மக்கள் அறிவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொது மக்கள் அணுகுகின்றனர்.

ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விபரங்களை அளிப்பதில்லை.

இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக, ஒரு இணையதளம் துவக்கப்பட்டது.

அதில் முழுமையான விபரங்கள், பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என புகார் எழுந்தது.

இந்த இணையதளமும் முறையாக செயல்படாமல் முடங்கியது. இதற்கு தீர்வாக, புதிய இணையதளம் ஏற்படுத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.

அதன்படி, tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது.

இந்த இணையதளத்தை, வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தார்.

வாரிய நிர்வாக இயக்குனர் சரவண வேல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Friday, December 22, 2023

December 22, 2023

வைகுண்ட ஏகாதசி; விரதம் இருப்பது எப்படி? உண்ணாமல், உறங்காமல் இருக்க வேண்டுமா?

வைகுண்ட ஏகாதசி; விரதம் இருப்பது எப்படி? உண்ணாமல், உறங்காமல் இருக்க வேண்டுமா?


மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து.

கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும்.

குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.

ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.

பட்டினி கிடப்பதால் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. ஏகாதசி விரத முறை:

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார்.

ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம்.

இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன.

எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர்.

சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும்.

Friday, November 10, 2023

November 10, 2023

தீபாவளி இனிப்புகள் & ஸ்நாக்ஸ் ரெசிபிகள் - Diwali Recipes in Tamil - Delicious Collection of Traditional Diwali Recipes - PDF

தீபாவளி இனிப்புகள் & ஸ்நாக்ஸ் ரெசிபிகள் - Diwali Recipes in Tamil - Delicious Collection of Traditional Diwali Recipes - PDF


Diwali Recipes in Tamil - Delicious Collection of Traditional Diwali Recipes - PDF

Diwali Recipes

Delicious Collection of Traditional Diwali Recipes from Penmai’s Kitchen Queens

Our sincere thanks to all the members who had contributed their recipes in Penmai.

No part of this book may be reproduced or transmitted in any form, all rights reserved by the respective contributors. Though the contents provided here are with good faith and free from errors, we do not warrant its accuracy or completeness.

CLICK HERE TO DOWNLOAD Diwali Recipes in Tamil PDF

Sunday, September 17, 2023

September 17, 2023

"விநாயகர் சதுர்த்தி மந்திரம்" தெரிந்து கொள்ளுங்கள்..!!



விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே விசேஷமானது. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்தில் பூஜை அறையில் பிள்ளையார் இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய பண்டைய முறை. இந்த முப்பது நாட்கள் தினந்தோறும் மனதோடு வழிபடவேண்டும்.

புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் புனர் பூஜை முடித்து விநாயகர் சிலையை நதியில் , குளத்திலோ , கடலிலோ அல்லது ஏதாவது ஒரு நீர்நிலையில் விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாளோ , மூன்று , நான்கு நாட்கள் கழித்து புனர் பூஜை செய்து உடனடியாக கரைத்து விடுகிறார்கள். எதுவுமே விரத மற்றும் பூஜை இல்லாத பட்சத்தில் நீங்கள் காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து அன்று முழுவதும் உச்சரித்துக் கொண்டே இருங்கள் விநாயகப்பெருமானின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.விநாயகர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே , வக்ரதுண்டாய தீமஹி, தந்நோ தந்தி ப்ரசோதயாத் இதுதான் விநாயகர் காயத்ரி மந்திரம் இதை உச்சரித்தால் போதும்.

Tuesday, August 01, 2023

August 01, 2023

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புது வசதி அறிமுகம்!



What is the procedure of new passport?

Login to the Passport Seva Online Portal with the registered Login Id. Click "Apply for Fresh Passport/Re-issue of Passport" link. Fill in the required details in the form and submit. Click the "Pay and Schedule Appointment" link on the "View Saved/Submitted Applications" screen to schedule an appointment.

How many days before we can apply for new passport?

What should I do? A: You can apply for a re-issue of passport up to 1 year before the expiry and not earlier. However, in case of any change of personal particulars, lost/damaged, Exhaustion of pages you may apply for re-issue of passport.

Which documents are required for passport?

Proof of age (Birth Certificate, School Leaving Certificate, etc.). Proof of address (Aadhaar card, Voter ID card, Electricity bill, etc.). Proof of nationality (Birth Certificate, Voter ID card, etc.). Self-attested copies of the first two and last two pages of your old passport (if any).

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புது வசதி அறிமுகம்

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது, பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆவணங்களின் ஒட்டுமொத்த பரிசீலனை நேரம், தடையற்ற சரிபார்ப்பு ஆகியவற்றை குறைக்க, தேவையான துணை ஆவணங்களை பதிவேற்றுவதற்கான 'டிஜிலாக்கர்' (DigiLocker) செயல்முறையை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் டிஜிலாக்கர் மூலம் பதிவேற்றினால் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையப்பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது, டிஜிலாக்கர் மூலம் 'ஆதார் ஆவணம்' ஏற்கப்படும் வசதியை அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

முகவரி அல்லது பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்களில் ஒன்றாக 'ஆதார்' சமர்பிக்கப்பட்டால், இணையப்பக்கத்தில் 'டிஜிலாக்கர் பதிவேற்ற' ஆவண செயல்முறையை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிஜிலாக்கர் மூலம் ஆதார் பதிவேற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://youtu.be/M9xPGDVHib8 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, July 28, 2023

July 28, 2023

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது.. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.!!!



ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது.. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.!!!

ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன.

அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

காசோலை தொடர்பான விதி:

பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வங்கியின் காசோலை தொடர்பான முக்கிய விதி மாறப்போகிறது.அதாவது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான காசோலைகளை செலுத்துவதற்கு வங்கியால் நேர்மறை ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள்:

ஆகஸ்ட் மாதத்தில் பல பண்டிகை நாட்கள் வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் எனவும் இதில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வருகின்ற ஆகஸ்ட் மாதமும் சிலிண்டர் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐடிஆர் நிரப்பினால் அபராதம்:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் கடைசி தேதிக்கான காலக்கெடு தனிப்பட்ட வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லை. இந்த தேதிக்குள் ஐடி ஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இப்படியான நிலையில் வரியுடன் அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் உங்களின் வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 07, 2023

February 07, 2023

மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..! மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..!

மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..! மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..!

Maha sivratri 2023 | மகா சிவராத்திரியின் போது சிவ புராணம் படிப்பது நமசிவாயம் சொல்லி ஜபிப்பது, தேவார திருவாசகப் பாடல்கள் பாடுவது என சிவனை நினைத்து கண் விழித்து இருத்தால் சிறப்பு

சிவபெருமனுடைய அற்புதமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரிக்காக ஒரு வருடமாக காத்திருந்து விரதமிருந்து, வேண்டும் வரங்களையெல்லாம் பெறனும் என்று விரும்பும் பக்தர்கள் ஏராளம். இது ஒரு விரதத்திற்கு உரியநாள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு. இந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.. செய்ய வேண்டியவைகள்

1. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். அதுவே வயதானவர்கள், உடல்நல கோளாறு கொண்டவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மருத்துவரின் அறிவுரைப்படி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

2. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலையிலேயே குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.

3. சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அத்துடன் தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருத்தல் நல்லது.

4. அதுமட்டுமல்லாமல் சிவாய நம ஓம், சிவாய நம் ஓம் என ஒரே ஒருமுறை சொன்னால் போதும் பல நூறு முறை சொன்னதற்கு பலன் கிடைக்கும்.

5. தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

6. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

7. ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் முழு பலனை தரும். சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும். செய்யக்கூடாதவை

1. இந்த தினத்தில் மாமிசம், துரித உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மது அருந்துதல் கூடாது. விழித்திருப்பதற்காக சீட்டு ஆடுவது, செல்போனில் விளையாடுவது, கேளிக்கையில் ஈடுபடுவது அறவே தவிர்க்க வேண்டும்.

2. இந்த புனிதமான தினத்தில் பொய் பேசுதல், புறம் பேசுதல், பிறரை திட்டுவது, அடிப்பது, சுக போகங்கள், தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனுபவிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

3. நமக்கு பாவம் வந்து சேரும். இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் உறங்கக்கூடாது. சிவாலயங்களுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி உண்ணக் கூடாது.

4. மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது. மனிதர்களுக்கு மிக முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

Wednesday, October 26, 2022

October 26, 2022

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்.

ML Clarification Letter - Download here

Tuesday, September 20, 2022

September 20, 2022

How to crack SSC exam easily? - SSC தேர்வில் எளிமையாக சாதிப்பது எப்படி?

எஸ்.எஸ்.சி. தேர்வில் எளிமையாக சாதிப்பது எப்படி?

Important tips to crack SSC CGL

Go through the Syllabus and focus on study accordingly.

Solve Previous Year Papers.

Prepare your study plan and follow it.

Choose only best books as study material.

Solve practice set regularly.

Set your study goal.

Make Important Study Notes.

Do revision of your notes every week.

எஸ்.எஸ்.சி. தேர்வில் சாதிப்பது எப்படி?

மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியிலான லோயர் டிவிஷன் கிளார்க், ஷார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்டல் அசிஸ்டன்ட், ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப தேர்வை நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு எப்படி திட்டமிட்டு தயாராக வேண்டும் என்று பார்க்கலாம்...

முதலில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை 4 அல்லது 5 முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். பின்பு, தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகளை சேகரியுங்கள். சந்தையில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

இவற்றை நேரடியாக படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை படித்து சுயமாக குறிப்பெடுத்து படித்த பின்பு, படிப்பது நல்ல பலனைத் தரும். ஆங்கிலப் பகுதி மற்றும் புத்திக்கூர்மை பகுதிக்கு நேரடியாக சந்தையில் கிடைக்கும் இவை சார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.

முந்தைய தேர்வு வினாத் தாள்களை பொறுமையாக வாசித்து, வினாக்கள் கேட்கப்படும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்பு எந்த பகுதிக்கு அதிக நேரம் படிக்க வேண்டும், எந்த பாடத்திற்கு பிறரின் உதவி தேவை, எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை படித்து முடிக்க முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குங்கள்.

உதாரணமாக, சிலருக்கு கணிதப்பகுதியில் பிறரின் உதவி தேவைப்படலாம். சிலருக்கு ஆங்கிலப் பகுதியில் தேவைப்படலாம்.

தினமும் பயிற்சி

எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை முடிக்கலாம் என்பது அவரவர் கல்வித் திறன், தேர்வுகள் எழுதிய அனுபவம், தினசரி படிக்கும் முறை, ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது. எவ்வாறாயினும், அதிகபட்சம் 45 தினங்களுக்குள் ஓரளவு முடித்துவிடலாம்.

பின்பு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆங்கிலம்

பெரும்பாலானவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தயங்கக் காரணம் ஆங்கிலப் பகுதி மற்றும் கணிதப்பகுதியைக் கண்டுதான். ஆங்கில வினாக்கள் நீங்கள்

நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல.

பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது. எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றையும் படிப்பது நல்லது.

இலக்கணத்தில் தெளிவிருந்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடிவதுடன், குறைந்த நேரத்திலேயே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்பது சிறப்பு. ஸ்பாட்டிங் எரர் பகுதி வினாக்கள், வங்கித் தேர்வு வினாக்கள்போல சிரமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

கணிதம்

கணிதப்பகுதி, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். ஆனால், வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல.

நம்பர் சிஸ்டம் மற்றும் அல்ஜிப்ரா பகுதிகளில் இருந்து படிக்க ஆரம்பிப்பது சிறப்பு. பள்ளி பாடப்புத்தகங்களை படித்த பின்பு, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் உள்ள கணக்கு மாதிரிகளுக்கு பயிற்சி செய்யுங்கள். எளிமையான வழியில் எந்த புத்தகத்தில் கணக்கு தீர்வு செய்யப்பட்டிருக்கிறதோ அதை குறிப்பெடுத்து பின்பற்றுங்கள்.

தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கணிதப்பகுதிக்கென ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தேர்வில் ஒரு கணித வினாவிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வினாவிற்கு சென்றுவிடுங்கள்.

ரீசனிங்

இப்பகுதிக்கு இதர மூன்று பகுதிகளைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. லாஜிக்கை புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்தல் நல்ல பயனைத் தரும். அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம். ஒரே நேரத்தில் இருவேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். ஒன்றை முழுமையாக படித்த பின்பு, அடுத்தவர் எழுதிய புத்தகத்தை படிப்பது தெளிவைத் தரும். குழப்பங்களை தவிர்க்கும்.

பொது அறிவுப் பகுதி

இந்திய வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுப் பகுதி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிக்கலாம். அதற்கு முன்பாக ஐந்து வருடத்திற்குரிய முந்தைய தேர்வு வினாக்களை பொறுமையாக படிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, கேள்விகள் கேட்கப்படும் முறை மற்றும் தரம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பின்பு பாடப்புத்தகங்களைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தினமும் காலை, மாலை தட்டச்சு பயிற்சி செய்யுங்கள். கட்டுரைத் தேர்வுக்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.

பயம் தவிர்ப்போம்



எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “ நான் ஏன் இத்தேர்வினை எழுத முடிவு செய்துள்ளேன்” என்பதுதான். உங்களது குறிக்கோள் தெளிவானதாக, உறுதியாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

பயிற்சி வகுப்புக்கு செல்வது உங்கள் திறமையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக பயிற்சியும், முயற்சியும் அவசியம். முந்தைய வினாக்களை படிப்பது, தகுந்த தரமான புத்தகங்களை படிப்பது, நிறைய பயிற்சி வினாக்களை செய்து பழகுவது ஆகியவை சேர்ந்தே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தயக்கமின்றி முழு மனதுடன் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள்.

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. எனவே, இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.

நம்பிக்கையுடன் இன்றே விண்ணப்பியுங்கள். விடாமுயற்சியுடனும், ஆர்வத்துடனும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

Wednesday, September 07, 2022

September 07, 2022

தகைசால் பள்ளிகளின் சிறப்பம்சம் என்ன

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை துவக்கி வைத்தனர். அந்த வகையில் 26 தகை சால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இரண்டு வகை பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது.

ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும் , இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். அந்தவகையில் முதற்கட்டமாக திருவள்ளூர், சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு , இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் , விழுப்புரம் ,தருமபுரி ,சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் , திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 1000த்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.

👉ஸ்மார்ட் வகுப்பறைகள்

👉விளையாட்டுப் பயிற்சிகள்

👉வாசிப்பு இயக்கம்

👉கலை , இசை , நாடகப் பயிற்சிகள்

👉உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்

👉கலையரங்கம்

👉ஆசிரியர்களுக்குப் பயிற்சி

👉படைப்பாற்றலை வளர்த்தல்

Total Pageviews

Search This Blog