new courses
March 21, 2026
Showing posts with label new courses. Show all posts
Showing posts with label new courses. Show all posts
Saturday, March 21, 2026
Friday, January 31, 2025
Tuesday, February 07, 2023
new courses
February 07, 2023
வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்
வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்கு சான்றிதழ் படிப்புகள், நான்கு டிப்ளமா படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னையில் அளித்த பேட்டி:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் உள்ளிட்ட மொத்தம் 44 வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தற்போது, அலங்கார தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட டிப்ளமா படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வயது வரம்பு இல்லை. சென்னை நகர்ப்புறவாசிகளுக்கு, கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தில் பயிற்சி பெறலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மையங்கள் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்கு சான்றிதழ் படிப்புகள், நான்கு டிப்ளமா படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னையில் அளித்த பேட்டி:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் உள்ளிட்ட மொத்தம் 44 வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
தற்போது, அலங்கார தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட டிப்ளமா படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வயது வரம்பு இல்லை. சென்னை நகர்ப்புறவாசிகளுக்கு, கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தில் பயிற்சி பெறலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மையங்கள் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, August 02, 2022
சென்னை ஐஐடி
August 02, 2022
சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்
சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்
சென்னை: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் 3 ஆண்டு படிப்பாக இருந்த பி.எஸ்.புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை ஐஐடி மெட்ராஸ் தற்ேபாது 4 வருட படிப்பாக மாற்றியுள்ளது. சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் என்ற 3 வருட படிப்பை, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என மாற்றி 4 ஆண்டு பட்டப் படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணி பயிற்சியோ, ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில், தற்போது 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 115 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2022ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.itm.ac.in என்ற இணையமுகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.
சென்னை: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் 3 ஆண்டு படிப்பாக இருந்த பி.எஸ்.புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை ஐஐடி மெட்ராஸ் தற்ேபாது 4 வருட படிப்பாக மாற்றியுள்ளது. சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் என்ற 3 வருட படிப்பை, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என மாற்றி 4 ஆண்டு பட்டப் படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணி பயிற்சியோ, ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில், தற்போது 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 115 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2022ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.itm.ac.in என்ற இணையமுகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.