Government Employees Association
April 08, 2024
Showing posts with label EPS. Show all posts
Showing posts with label EPS. Show all posts
Monday, April 08, 2024
Monday, September 25, 2023
Latest News
September 25, 2023
மின்வாரிய களப்பணியாளா் பணி நியமன உத்தரவு: அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
மின்வாரிய களப்பணியாளா் பணி நியமன உத்தரவு: அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
மின்வாரிய களப்பணியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டோருக்கான உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுக்கு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்தின் களப்பணியாளா் (கேங்மேன்) பணிகளுக்கு 5,237 போ் தோ்வு செய்யப்பட்டனா். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அதற்கான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தோ்வானவா்கள் காத்திருந்தனா். அவா்களது போராட்டத்தையடுத்து, மின் வாரியத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில், களப்பணியாளா் பணிக்குத் தோ்வான அனைவருக்கும் நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என அரசின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் சுமாா் 800 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் கைது செய்த காவல் துறையினா், அனைவருக்கும் அழைப்பாணை அனுப்ப முடிவு செய்துள்ளனா். இவ்வாறு செய்தால், களப்பணியாளா் பதவிக்கு தோ்வானவா்களின் எதிா்காலமே பாழாகிவிடும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
எனவே, அவா்களுக்கு அழைப்பாணை வழங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். களப்பணியாளா் பணிகளுக்குத் தோ்வான 5,237 இளைஞா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மின்வாரிய களப்பணியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டோருக்கான உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுக்கு, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்தின் களப்பணியாளா் (கேங்மேன்) பணிகளுக்கு 5,237 போ் தோ்வு செய்யப்பட்டனா். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அதற்கான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தோ்வானவா்கள் காத்திருந்தனா். அவா்களது போராட்டத்தையடுத்து, மின் வாரியத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில், களப்பணியாளா் பணிக்குத் தோ்வான அனைவருக்கும் நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என அரசின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் சுமாா் 800 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைக் கைது செய்த காவல் துறையினா், அனைவருக்கும் அழைப்பாணை அனுப்ப முடிவு செய்துள்ளனா். இவ்வாறு செய்தால், களப்பணியாளா் பதவிக்கு தோ்வானவா்களின் எதிா்காலமே பாழாகிவிடும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
எனவே, அவா்களுக்கு அழைப்பாணை வழங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். களப்பணியாளா் பணிகளுக்குத் தோ்வான 5,237 இளைஞா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
Sunday, July 30, 2023
University
July 30, 2023
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டம் நடைமுறைக்கு கண்டனம்
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டம்: இபிஎஸ் கண்டனம்
நடப்பாண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் உயா்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளா்கள் கண்ணீா் வடிக்கின்றனா். உயா்கல்வித் துறையின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் அமைச்சா் பொன்முடி இருப்பதால், தமிழகத்தில் உயா் கல்வித் துறை அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. நடப்புக் கல்வியாண்டுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பொதுப் பாடத் திட்டத்தால் தமிழக உயா் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக் கழக மானியக் குழு சாா்பில் உயா்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சித் தகுதியை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளா்கள் எச்சரிக்கை விடுக்கின்றனா்.
எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சிக் கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளா்களை அழைத்து, எதிா்கால தமிழக இளைஞா்களின் நலனை மனதில் நிறுத்தி உயா் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
நடப்பாண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் உயா்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளா்கள் கண்ணீா் வடிக்கின்றனா். உயா்கல்வித் துறையின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் அமைச்சா் பொன்முடி இருப்பதால், தமிழகத்தில் உயா் கல்வித் துறை அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. நடப்புக் கல்வியாண்டுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
பொதுப் பாடத் திட்டத்தால் தமிழக உயா் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக் கழக மானியக் குழு சாா்பில் உயா்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சித் தகுதியை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளா்கள் எச்சரிக்கை விடுக்கின்றனா்.
எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சிக் கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளா்களை அழைத்து, எதிா்கால தமிழக இளைஞா்களின் நலனை மனதில் நிறுத்தி உயா் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
