Physical Education Teachers
January 28, 2026
Showing posts with label PET. Show all posts
Showing posts with label PET. Show all posts
Wednesday, January 28, 2026
Wednesday, November 26, 2025
Sunday, June 15, 2025
Friday, May 30, 2025
Wednesday, February 05, 2025
physical education department
February 05, 2025
அரசு பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திட்டம் அறிமுகம்
Monday, November 04, 2024
Friday, November 01, 2024
Saturday, October 26, 2024
Wednesday, September 11, 2024
Tuesday, August 08, 2023
Tamilnadu Government
August 08, 2023
பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்!
மாணவர்களுக்கான உபகரணங்கள் தரப்படவில்லை - பாஜக
பள்ளிகள் திறந்து ஒருமாதமாகியும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை
எது எதற்கோ வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால், மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்கவில்லை; மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் வழங்குவது அரசின் கடமை
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணி மற்றும் சீருடைகளை இன்னும் முழுமையாக வழங்காததால், மாணவ, மாணவிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை குறித்த நேரத்தில் வழங்குவதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏன் உறுதி செய்யவில்லை?
கடந்த ஆண்டும் இதேபோல காலதாமதமாக வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக்கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நூறாவது பிறந்த நாளைக்கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் 12 கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் ரூ.3 முதல் ரூ.4 கோடிசெலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. பெருமளவு நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்களை வழங்காமல் தமிழக அரசு அலைக்கழிக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்ததும்,பத்தாயிரம் சிதிலமடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதியகட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இதுவரை எத்தனை பள்ளிக்கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள்?கோடிக்கணக்கில் வீணாக செலவு செய்யும் திமுக அரசுக்கு, நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனமில்லை.
மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவ,மாணவிகளுக்கு சீருடை, காலணிகள்உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் திறந்து ஒருமாதமாகியும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை
எது எதற்கோ வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால், மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்கவில்லை; மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் வழங்குவது அரசின் கடமை
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணி மற்றும் சீருடைகளை இன்னும் முழுமையாக வழங்காததால், மாணவ, மாணவிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை குறித்த நேரத்தில் வழங்குவதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏன் உறுதி செய்யவில்லை?
கடந்த ஆண்டும் இதேபோல காலதாமதமாக வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக்கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நூறாவது பிறந்த நாளைக்கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் 12 கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் ரூ.3 முதல் ரூ.4 கோடிசெலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. பெருமளவு நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்களை வழங்காமல் தமிழக அரசு அலைக்கழிக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்ததும்,பத்தாயிரம் சிதிலமடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதியகட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இதுவரை எத்தனை பள்ளிக்கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள்?கோடிக்கணக்கில் வீணாக செலவு செய்யும் திமுக அரசுக்கு, நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனமில்லை.
மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவ,மாணவிகளுக்கு சீருடை, காலணிகள்உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Saturday, July 22, 2023
Monday, July 03, 2023
Saturday, June 24, 2023
Friday, June 16, 2023
Monday, May 22, 2023
Tuesday, January 03, 2023
PET
January 03, 2023
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் ,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள்
முதலமைச்சர் கோப்பைக்கான
விளையாட்டுப் போட்டிகள்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் ,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள்
பதிவு செய்ய கடைசி தேதி 17.01.23
பதிவு செய்ய
https://www.sdat.in/cmtrophy
அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - கல்வி மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் ,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள்
பதிவு செய்ய கடைசி தேதி 17.01.23
பதிவு செய்ய
https://www.sdat.in/cmtrophy
அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் - கல்வி மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Monday, December 12, 2022
PET
December 12, 2022
அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு
அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள் , 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிகல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு உயர்கல்வியில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு மாநில திட்ட இயக்ககம் ( ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ) ( SSA ) மூலம் உடற்கல்வித்துறை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே , மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் , அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிடவும் , பள்ளிகளில் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடவும் , இதற்கான ஒப்புகை சீட்டினை பெற்று இருப்புகோப்பு பராமரிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Thursday, September 22, 2022
Sports Competition
September 22, 2022
10 Types of Sports Competition - School Education Circular - பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டி - பள்ளிக்கல்வி சுற்றறிக்கை
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டி - பள்ளிக்கல்வி சுற்றறிக்கை - New for School Students, 10 Types of Sports Competition - School Education Circular
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி கமிஷனரக இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 10 வகை விளையாட்டுகள், இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு கடற்கரை கையுந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வளையப்பந்து ஆகிய, 10 வகை விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
இதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல், 30ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
38 மாவட்டத்துக்கு, 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் உரிய முறையில் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி கமிஷனரக இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 10 வகை விளையாட்டுகள், இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய வேண்டும்.
அவர்களுக்கு கடற்கரை கையுந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வளையப்பந்து ஆகிய, 10 வகை விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
இதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல், 30ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
38 மாவட்டத்துக்கு, 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் உரிய முறையில் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, August 29, 2022
Tamil Nadu Governor
August 29, 2022
கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்த 65 வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு தெரிவித்து, பதக்கங்கள் வழங்கினாா்.
விழாவில் ஆளுநா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களின் அளப்பரிய சாதனைகளால் தமிழகம் மட்டுமல்லாது, நாடே பெருமை கொள்கிறது. அந்த வீரா்களுக்காக தன்னலமற்று கடின உழைப்பையும், பங்களிப்பையும் செலுத்தி வரும் பெற்றோா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் வாழ்த்துகள்.
2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது, சா்வதேச விளையாட்டு ரீதியான வரைபடத்தில் இந்தியா கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்ட முன்னுதாரண மாற்றங்கள், இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை விளையாட்டில் எதிரொலித்து, இந்தியாவை விளையாட்டில் முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்கிறது. தற்போதைய விளையாட்டு வீரா்களின் கடின உழைப்பு, ஒழுங்கு, பொறுமை, அா்ப்பணிப்பு, ஆற்றல் என அனைத்தும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரா்களையும் சென்றடைய வேண்டும்.
பிரதமா் மோடி, ஃபிட் இந்தியா பிரசாரம், யோகா தினம் போன்றவை மூலம் வீரா்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கான புதிய முயற்சிகளை எடுத்துள்ளாா். இளைஞா்களுக்கு யோகா பயிற்சி புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது.
தலைசிறந்த விளையாட்டு வீரா்களால் ஒவ்வொரு இந்தியா்கள் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளைஞா்கள் அதிகளவில் சாதிக்கிறாா்கள். இது ஒவ்வொரு இந்தியா்களையும் பெருமை கொள்ளச் செய்கிறது. எல்லோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கவைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்குகிறது. விளையாட்டுத் துறையில் மகளிரின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. அவா்களுடைய சாதனைகளும் பெண்களுக்கான அதிகாரமளித்தலில் புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களும், கல்வி நிறுவனங்களின் தலைவா்களும் விளையாட்டு ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவா்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை புதிய இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் நல்ல உயரத்துக்குக் கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். 2047-இல் நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியா விளையாட்டில் விஷ்வ குருவாகத் திகழும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
விழால் ஆளுநா் தனிச் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், சா்வதேச சதுரங்க போட்டி சம்மேளனத்தில் துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்த 65 வீரா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு தெரிவித்து, பதக்கங்கள் வழங்கினாா்.
விழாவில் ஆளுநா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்களின் அளப்பரிய சாதனைகளால் தமிழகம் மட்டுமல்லாது, நாடே பெருமை கொள்கிறது. அந்த வீரா்களுக்காக தன்னலமற்று கடின உழைப்பையும், பங்களிப்பையும் செலுத்தி வரும் பெற்றோா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் வாழ்த்துகள்.
2008-இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது, சா்வதேச விளையாட்டு ரீதியான வரைபடத்தில் இந்தியா கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்ட முன்னுதாரண மாற்றங்கள், இளைஞா்களின் ஆற்றல் ஆகியவை விளையாட்டில் எதிரொலித்து, இந்தியாவை விளையாட்டில் முக்கிய இடத்துக்குக் கொண்டு செல்கிறது. தற்போதைய விளையாட்டு வீரா்களின் கடின உழைப்பு, ஒழுங்கு, பொறுமை, அா்ப்பணிப்பு, ஆற்றல் என அனைத்தும் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரா்களையும் சென்றடைய வேண்டும்.
பிரதமா் மோடி, ஃபிட் இந்தியா பிரசாரம், யோகா தினம் போன்றவை மூலம் வீரா்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கான புதிய முயற்சிகளை எடுத்துள்ளாா். இளைஞா்களுக்கு யோகா பயிற்சி புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது.
தலைசிறந்த விளையாட்டு வீரா்களால் ஒவ்வொரு இந்தியா்கள் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளைஞா்கள் அதிகளவில் சாதிக்கிறாா்கள். இது ஒவ்வொரு இந்தியா்களையும் பெருமை கொள்ளச் செய்கிறது. எல்லோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கவைத்து, வலிமையான இந்தியாவை உருவாக்குகிறது. விளையாட்டுத் துறையில் மகளிரின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. அவா்களுடைய சாதனைகளும் பெண்களுக்கான அதிகாரமளித்தலில் புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களும், கல்வி நிறுவனங்களின் தலைவா்களும் விளையாட்டு ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவா்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை புதிய இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் நல்ல உயரத்துக்குக் கொண்டு செல்லும் சக்தியாக இருக்கும். 2047-இல் நாட்டின் 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியா விளையாட்டில் விஷ்வ குருவாகத் திகழும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
விழால் ஆளுநா் தனிச் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல், சா்வதேச சதுரங்க போட்டி சம்மேளனத்தில் துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.
Saturday, August 20, 2022
Stumbling physical education department in Tamil Nadu
August 20, 2022
தமிழகத்தில் தடுமாறும் உடற்கல்வித்துறை..!
சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழகத்தில் நடத்திக் காட்டினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் விளையாட்டு வீரர்களை பள்ளி பருவத்திலே உருவாக்கும் உடற்கல்வி துறையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறி நிற்கிறது உடற்கல்வித்துறை என்று
-கூறுகின்றனர் உடற்கல்வித் துறை வட்டாரம் சார்ந்தவர்கள்..!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தடுநினன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆகும் ஆனால் பள்ளிக் சுல்வித் துறையில் தற்போது 50 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அரசு நிர்ணயம் செய்துள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத சூழநிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் உடனடியாக நடத்திட சுந்தாவிடப்பட்டுள்ளதால் குமுறளில் உள்ளனர் உடற்கல்வி ஆசிரியர் வட்டாரத்தில் உள்ளவர்கள்!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இவ்வாண்டு பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளையும், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளையும் நடத்திட அரசு உத்தரவு இட்டுள்ளது.
அதப்படி ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பா முதல் வாரத்திற்குள் குறு மைய அளவில் பழைய மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள் த12 நடத்தி முடித்திட பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அக்டோபா முதன் வார்த்திற்குள் வருவாய் மாவட்ட அளவியான போட்டிகளை நடத்தி முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தடுநினன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆகும் ஆனால் பள்ளிக் சுல்வித் துறையில் தற்போது 50 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அரசு நிர்ணயம் செய்துள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத சூழநிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் உடனடியாக நடத்திட சுந்தாவிடப்பட்டுள்ளதால் குமுறளில் உள்ளனர் உடற்கல்வி ஆசிரியர் வட்டாரத்தில் உள்ளவர்கள்!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இவ்வாண்டு பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளையும், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளையும் நடத்திட அரசு உத்தரவு இட்டுள்ளது.
அதப்படி ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பா முதல் வாரத்திற்குள் குறு மைய அளவில் பழைய மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள் த12 நடத்தி முடித்திட பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அக்டோபா முதன் வார்த்திற்குள் வருவாய் மாவட்ட அளவியான போட்டிகளை நடத்தி முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





