Breaking

Showing posts with label Team Visit. Show all posts
Showing posts with label Team Visit. Show all posts

Wednesday, August 21, 2024

Wednesday, October 19, 2022

October 19, 2022

சென்னை மண்டல அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு

சென்னை மண்டல அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு

சென்னை மண்டலத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரடி ஆய்வு நடத்தினா்.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் மாணவா்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரித்து ஆணையா் க.நந்தகுமாா் தலைமையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடா்ச்சியாக 2-ஆவது கட்ட ஆய்வு தற்போது தொடங்கியுள்ளது.

அந்த வகையில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வியின் பல்வேறு துறை சாா்ந்த இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நேரடி ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகள், அரசின் நலத் திட்டங்கள், மாணவா்களின் கற்றல் அடைவு, மதிப்பீட்டு முறை, புதுமைக் கற்பித்தல், வருகைப்பதிவு ஆகியவை உள்பட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் கேட்டறிந்தனா்.

சென்னை மாவட்டத்தில் சைதைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ அரசு மேல்நிலைப்பள்ளி, அசோகா்நகா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின்போது கற்றல்-கற்பித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை விரைவில் சரி செய்யும்படி தலைமை ஆசிரியா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

இதையடுத்து இந்த ஆய்வு மூலம் பெறப்பட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட குழுவினா் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, October 11, 2022

October 11, 2022

காஞ்சிபுரம் பள்ளிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

மத்திய கல்வித் துறை மற்றும் வெளியுறவு துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், நேற்று காஞ்சிபுரம் பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், இரண்டு நாள் பயணமாக காஞ்சிபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்திருந்தார்.

முதல் நாள் நிகழ்ச்சியாக, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இரண்டாம் நாள் பயணமாக நேற்று காலை 10:30 மணிக்கு, காஞ்சிபுரம் அருகில் உள்ள புத்தேரி அங்கன்வாடி மையத்திற்கு சென்றார்.

அப்போது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை பெற்றோரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, புத்தேரி பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவன உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்களின் கராத்தே மற்றும் யோகா வகுப்புகளையும் பார்வையிட்டு, மாணவர்களிடையே உரையாடினார்.

காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கணினி ஆய்வகத்தை பார்வையிட்டவர், மாணவியரிடம் கலந்துரையாடினார்.

இதையடுத்து முத்தியால்பேட்டையில், மத்திய அரசின் 'சமகர சிக்சா' திட்டத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியில், மாணவ- - மாணவியரை சந்தித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் செயல்பாடு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

இறுதியாக, களியனுார் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் பிற துறை அதிகாரிகள்உடனிருந்தனர்.

Tuesday, September 27, 2022

September 27, 2022

1,293 அரசு பள்ளிகளில் ஒரே நாளில் துாய்மைப் பணி - கலெக்டர் ஆய்வு - government schools - Collector survey

1,293 அரசு பள்ளிகளில் ஒரே நாளில் துாய்மைப் பணி - கலெக்டர் ஆய்வு - Sanitation work in 1,293 government schools in one day - Collector survey

விழுப்புரம் மாவட்டத்தில் 1,293 அரசு பள்ளிகளில் துாய்மைப் பணி திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் உள்ள 1,293 பள்ளிகளிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் துாய்மைப்பணி மேற்கொள்ளும் திட்டம் துவங்கியது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலெக்டர் மோகன், நேற்று காலை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரே நாளில் துாய்மைப் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.இ.ஓ., மேற்பார்வையில், 7,877 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரோக்கியமான சூழ்நிலையே இந்த துாய்மைப்பணியின் முக்கிய நோக்கம். பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நாள்தோறும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.

காலை, மாலை இருவேளையும் பிளீச்சிங் பவுடர், லைசால் உள்ளிட்டவை கொண்டு சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த துாய்மைப்பணி இன்று மட்டும் நடைபெறுவது மட்டுமின்றி தினமும் நடைபெறும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நாள்தோறும் பள்ளியை துாய்மையாக வைத்துக் கொள்வதற்கான பணியில் ஈடுபட வேண்டும்.

பள்ளிகளில் ஆரோக்கியமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் எவ்வித நோய் தொற்றுக்கும் ஆளாகாமல் நன்றாக படிக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து துாய்மைப்பணியை மேற்கொண்டு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க பாடுபடுவோம்.இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் பெருமாள் உடனிருந்தனர்.

Saturday, September 03, 2022

September 03, 2022

உயர் அதிகாரிகள் நமது பள்ளியை பார்வையிட்டு பின் தெரிவித்த கருத்துக்கள் - Download செய்ய Direct link

உயர் அதிகாரிகள் நமது பள்ளியை பார்வையிட்டு பின் தெரிவித்த கருத்துக்கள் - Download செய்ய Direct link

பள்ளிப் பார்வை அறிக்கை

உயர் அதிகாரிகள் நமது பள்ளியை பார்வையிட்டு நமது பள்ளியைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள்

உயர் அதிகாரிகள் நமது பள்ளியை பார்வையிட்டு நமது பள்ளியைப் பற்றி தெரிவித்த

சிறப்பம்சங்கள்

முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகள்

போன்ற விவரங்களை எளிதில் அறிவதற்கான வழிமுறை

Click Here - School Visit Registers - Direct link

Saturday, August 13, 2022

August 13, 2022

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

Thursday, August 04, 2022

August 04, 2022

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள்.

இதனை அறிந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்று மாணவிகளை ஆச்சர்யபட வைத்தார். மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்களை பரிசளித்தார். இஸ்ரோவின் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 'ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்' தொழில்நுட்பத்துடன் 'வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்' ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வேறொரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நிலையில், இச்செய்தியினை அறிந்து அப்பள்ளிக்கு திடீரென சென்றார்.

அம்மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 10 மாணவிகளும் ஆகஸ்ட் மாதம் 7'ம் தேதி ஸ்ரீகரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். மேலும் பள்ளியை பார்வையிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் முறையினையும் ஆய்வுசெய்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாக உறுதியளித்தார்.

Thursday, July 28, 2022

July 28, 2022

பள்ளியில் திடீர் ஆய்வு வகுப்பறை ஓட்டைகளை சீரமைக்க கூட மதிப்பீடா? அதிகாரிகளுக்கு மேயர் பிரியா கிடுக்கிப்பிடி கேள்வி

சிறுசிறு வேலைக்கு கூட மதிப்பீடு வேண்டுமா என அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மேயர் பிரியா அதிகாரிகளிடம் கிடுக்கிபிடி கேள்வி கேட்டார். மேலும், உடனே வகுப்பறைகளை சீரமைக்கவும் அதிரடியாக உத்தரவிட்டார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 44வது வார்டு, நியூ காமராஜர் நகர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார். அவர், ஒரு வகுப்பறைக்குச் சென்றபோது வகுப்பறையில் ஆங்காங்கே ஓட்டையாக சரியாக கலவை பூசாமல் இருந்தது. இதை பார்த்த மேயர், குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏன் இந்த இடத்தை இப்படி வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அதிகாரிகள், இதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அதற்கு மேயர், இந்த சிறிய வேலைக்கு கூட மதிப்பீடு செய்து அதன் பிறகுதான் வேலையை செய்வீர்களா என கேட்டார். உடனே அதிகாரிகள் உடனே முடித்து விடுகிறோம் என கூறினர். இன்று (நேற்று) இரவுக்குள் பணியை முடித்து எனது மொபைலுக்கு போட்டோ அனுப்பி வையுங்கள் என்று கூறினார். அடுத்த வகுப்பில் ஒரு மாணவன் பள்ளி சீருடை அணியாமல் வண்ண சீருடையில் இருந்தான். அந்த சிறுவனிடம், ஏன் பள்ளி சீருடை அணியவில்லை என கேட்டதற்கு, எனக்கு சீருடை தரவில்லை என கூறினான். இதுகுறித்து அருகில் இருந்த ஆசிரியரிடம் மேயர் விசாரிக்கையில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை வழங்க வேண்டும் என்ற ஆணை உள்ளது. இந்த சிறுவன் சத்துணவு சாப்பிடவில்லை என கூறினார். பிறகு பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு குறைவான அளவில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஏன் முக்கியமான சாலையில் இவ்வளவு குறைவாக ஆட்களை வைத்து வேலை செய்கிறீர்கள். அதிக ஆட்களை வைத்து வேலை செய்ய வேண்டியதுதானே என கேட்டு யார் உங்கள் கான்ட்ராக்டர் என கேள்வி கேட்டார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், நாளையிலிருந்து அதிக ஆட்களை வைத்து வேலை செய்கிறோம் என்று பதில் அளித்தனர். தொடர்ந்து, முத்தமிழ் தெரு பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அங்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, அதிகாரிகளை கடிந்துகொண்ட மேயர், தகுந்த பாதுகாப்புடன் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 44வது வார்டு கவுன்சிலர் சர்ப ஜெயாதாஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Friday, July 22, 2022

July 22, 2022

மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

திருப்பூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Saturday, July 09, 2022

July 09, 2022

மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள்!

மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள்!

திருவாரூரில் நடைபெற்ற மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

எண்ணும் எழுத்தும் வகுப்பறை அனைத்து களங்களையும்(story Corner. Song corner etc.... ) உள்ளடக்கி இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

Learning corners பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி வாரந்தோறும் துணைக்கருவிகள் உடன் மாற்றியமைக்கப்பட வேண்டும். கதைக்களம் ஆனாலும் சரி பாட்டு களமாக இருந்தாலும் சரி அல்லது படிப்பு களமாக இருந்தாலும் அதன் அருகே செல்லும்போது அந்த மாணவனுக்கு கதை சொல்லவோ பாடல் பாடவோ அல்லது அதை பார்க்கும்போது வாசிக்கவோ தோன்றக் கூடிய அளவில் கவர்ச்சிகரமாக வகுப்பறைச் சூழல் அமைய வேண்டும்.

எண்ணும் எழுத்தும் வகுப்பறையை எப்படி வைப்பது என்பதனை யூடியூப் வாயிலாகவும் இணையத்தின் வாயிலாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள டெலிகிராம் குரூப் வாட்ஸ் அப் குரூப் ஆகியவற்றின் மூலமாக ஆசிரியர்கள் அறிந்துகொண்டு நேர்த்தியாக அமைத்திட வேண்டும்.

அனைத்து பாடத்திற்கும் கற்றல் விளைவுகள் வெளிப்படக்கூடிய விதத்தில் பாட போதனை அமைந்திருப்பதை ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும்.

முதலில் ஆசிரியர் தான் நடத்துகிற பாடத்தின் கற்றல் விளைவுகளை நன்கு அறிந்தும் பாட குறிப்பேட்டில் எழுதியும் இருந்திட வேண்டும்.

கற்பிக்கப்படும் எல்லா படங்களின் திறன்களையும் உட்திறன்களையும் ஆசிரியர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

எல்லா செயல்பாடுகளிலும் வகுப்பில் உள்ளமெல்ல கற்கும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

பாடம் நடத்தப்படும் போது சிறப்பாக செய்யும் மாணவர்களை பாராட்ட வேண்டும். ஆய்வாளர்கள் பள்ளியை பார்வையிடும்போதும் மற்றும் எல்லா பாடவேளைகளிலும் எண்ணும் எழுத்தும் முறையில் கற்பிக்கப்படும் வகுப்புகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பாடம் நடத்துவதற்கு ஏற்ற வகையில் முன் தயாரிப்புடன் இருந்திட வேண்டும்.

எண்ணும் எழுத்தும் முறையிலான பாட போதனை சரியாக இல்லாத பள்ளிகளில் பாடஆசிரியரும் தலைமை ஆசிரியரும் பொறுப்பாவார்கள்.

ஆசிரியர்களுடைய வருகையும் மாணவர்களுடைய வருகையும் தினசரி இணையத்தில் பதிவு செய்வதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இணையத்தில் பதிவு செய்யப்படாத ஆசிரியர் மாணவர் வருகை நாட்கள் பணிக்கு வராத நாட்களாக கருதப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

பணியில் ஆர்வம் இல்லாமலும் மாணவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிட வேண்டும்.

எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறைக்கான ஆசிரியர் கையேட்டில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மாணவர்களுக்கு செய்து காட்டப்பட வேண்டும்.

மாணவர்கள் செயல்பாடுகளை அவர்களாகவே செய்வதற்கு பயிற்றுவிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளையும் கண்காணித்து கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். CRC பயிற்சி உள்பட அனைத்து பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பங்கேற்று வேண்டும்.

பயிற்சியில் கூறப்படுகிற முறைகளை வகுப்பறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.பயிற்சியில் எடுக்கின்ற குறிப்புகள் அடங்கிய குறிப்பேடு அனைத்து ஆசிரியர்களின் மேசையிலும் பாட குறிப்புடன இருந்திட வேண்டும்.

தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை உயர்த்துவதற்கு பாடுபட வேண்டும்.

மேற்கண்ட விவரங்களை பள்ளியின் சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியர்களின் பார்வைக்கு வைப்பதற்கும் தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமையாசிரியர்கள் ஆவன செய்திட வேண்டும்.

Thursday, July 07, 2022

July 07, 2022

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு



வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊசூா், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆசிரியா் விலங்கியல் பாடம் நடத்துவதை வகுப்பறையில் மாணவா்களுடன் அமா்ந்து கவனித்த ஆட்சியா், மாணவா்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி உயா்ந்த இடங்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற அவா் அறிவுரைகள் வழங்கினாா். மேலும், மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். பள்ளிக்கு வரும் போது தூய்மையான சீருடை, முடி திருத்தம் செய்து வரவேண்டும். மாணவா்கள் அனைவரும் ஆசிரியா்கள், பெற்றோா் சொல்வதைக் கேட்டு தங்களை சிறந்தவா்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பொய்கை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவா் ஆய்வு செய்ாா். அங்கு, மாணவா்களுக்கு பொருளாதாரம் பாடம் நடத்தி, வகுப்பறையில் மாணவா்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். பொருளாதாரம் தொடா்பான பல்வேறு கருத்துகள், ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின் போது, பூதூா் ஊராட்சித் தலைவா் கவிதா சிவகுமாா், தெள்ளூா் ஊராட்சித் தலைவா் தேவி சுரேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

Friday, July 01, 2022

July 01, 2022

ஆணையரகத்தின் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆண்டாய்வு - பள்ளிக் கல்வி கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - சார்ந்து.

Wednesday, June 29, 2022

June 29, 2022

ஆய்வின்போது அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

தண்டலம் ஊராட்சியில் ஆய்வு செய்ய வந்த மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய வந்தார். அவரை, மன்ற தலைவர் ஆனந்தன் வரவேற்றார். பின்னர், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, 5 மற்றும் 6வது வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவியரிடம் பாடப்புத்தகங்களில் உள்ள ஒரு பகுதியை படித்துக் காட்டுமாறு கூறினார். இதையடுத்து ரூ. 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தண்டலம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார். பின்னர், அருகிலிருந்த நூலக கட்டிடத்திற்கு சென்று அங்கு தினமும் நாளிதழ்கள் வாங்கப்படுகிறதா, தினமும் நூலகத்தை திறந்து வைக்கிறீர்களா என்று ஊராட்சி செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஊராட்சி செயலாளர் அனைத்து நாட்களிலும் நூலகத்தை திறந்து வைப்பதாகவும், நாளிதழ்கள் வாசிக்க காலை நேரங்களில் ஏராளமானோர் வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அருகில் இருந்த கூட்டுறவு கடைக்கு சென்ற கலெக்டர் கடை விற்பனையாளரிடம் அனைத்து பொருட்களையும் பொதுமக்களுக்கு சரியான எடையில் வழங்குகிறீர்களா என்று கேட்டார். பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் உங்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு பொதுமக்கள் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது என்றும், பருப்பு வகைகளை கூடுதலாக வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். ஆய்வின்போது, திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், ஒன்றிய ஆணையாளர் பூமகள்தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Saturday, May 14, 2022

May 14, 2022

இல்லம் தேடி கல்வித் திட்டம்: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஆய்வு

போந்தூா், கூழங்கலச்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை 16 பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில், அவா்களுக்கு மாலை நேரங்களில் பயிற்றுவிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தன்னாா்வலா்கள் மாணவா்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனால், மாணவா்களுக்கு ஏற்படும் பயன்கள் ஆகியவை குறித்து ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், போந்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் மையங்களை நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 12 போ் அடங்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை பாா்வையிட்டு மாணவா்களிடம் கலந்துரையாடினா். போந்தூா் பகுதியில் இந்தத் திட்ட மையத்தைப் பாா்வையிட வந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருக்கு போந்தூா் ஊராட்சித் தலைவா் சரோஜாமணி தலைமையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் போந்தூா் செந்தில்ராஜன், யுவராணி சேட்டு ஆகியோா் முன்னிலையில் வரவேற்பளிக்கப்பட்டது.

மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பாலமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்ட மையத்தை 4 போ் கொண்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் புதன்கழமை பாா்வையிட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் கல்வி மாவட்ட அலுவலா் பிரேமலதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ.தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Total Pageviews

Search This Blog