Breaking

Showing posts with label Second Semester. Show all posts
Showing posts with label Second Semester. Show all posts

Wednesday, December 06, 2023

December 06, 2023

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் - மறுதேதி அறிவிப்பு



ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள். - மறுதேதி அறிவிப்பு.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் - திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு

புயல் காரணமாக கடந்த 4, 5 தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

Wednesday, September 21, 2022

September 21, 2022

conduct of the First Semester Comprehensive Assessment Examination - 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம்

4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக திருச்சிராப்பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம் - Letter of Instruction to the District Education Officers regarding the conduct of the First Semester Comprehensive Assessment Examination for Class 4 and 5 students.

முதன்மைக் கல்வி அலுவலகம் திருச்சிராப்பள்ளி.

ந.க.எண். 08314 /ஆ4 /2022. நாள். 21.09.2022 (நகல் )தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

இணைப்பில் கண்டுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுக்கான தேர்வினை நடத்திடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வினாத்தாட்கள் பள்ளிவாரியாக வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு 25.09.2022 அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.. க்குள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தினந்தோறும் (26.09.200 முதல் 30.09.2022 வரை) அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாட்களை காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் குறுவளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் அலுவலகப் பணியாளர்கள் வாயிலாக 10 முதல் 15 பள்ளிகளாக பிரித்து அந்தந்தப் பகுதிகளில் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும்.

வினாத்தாள் கட்டுகளை ஒப்படைக்க வட்டாரக்கல்வி அலுலவர்கள் சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

விடைக்குறிப்புகள் 30.09.2022 அன்று வழங்கப்பட வேண்டும்.இப்பொருள் சார்பாக எவ்வித புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக தேர்வுகளை நடத்தி முடித்திட அனைத்து நிலை அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்க.ள்.

இணைப்பு - கடித நகல்

Thursday, September 15, 2022

September 15, 2022

Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers - தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - Primary School – 3 days training for all teachers – SCERT Director's Procedures.

SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.

ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022

பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.

இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.

பார்வை :

பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '

மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.



1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .

சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,

சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog