Special Leave
February 23, 2026
Showing posts with label maternity leave. Show all posts
Showing posts with label maternity leave. Show all posts
Monday, February 23, 2026
Saturday, January 24, 2026
paternity leave
January 24, 2026
3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு
Sunday, December 01, 2024
Sunday, October 08, 2023
maternity leave
October 08, 2023
'Maternity Leave நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
'Maternity Leave days cannot be considered as working time' - High Court action order 'Maternity Leave நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின்போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார். இந்த விடுமுறை காலத்தை பணிக் காலமாக கருதாததால், தன்னை விட இளையவர்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று விட்டதாகவும், எனவே, பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதி, தாசில்தாராக பதவி உயர்வு வழங்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''முழு சம்பளத்துடன், பேறுகால விடுமுறை எடுக்க உரிமை உள்ளபோது, அந்த விடுமுறை நாட்களை பணிக் காலமாகதான் கருத வேண்டும்.
''கேரளாவில் உள்ள பணி விதிகளின்படி, பயிற்சி காலத்தின்போது பேறுகால விடுமுறை எடுத்தால், பணி காலமாக கருதப்படும். அந்த விதி, தமிழகத்தில் இல்லை என்றாலும், மகளிருக்கு அந்த சலுகையை வழங்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.அழகு கவுதம், ''விடுமுறை நாட்களை, முழு பணிக் காலமாக கருத முடியாது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
வருவாய் பணி விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். அதனால், பயிற்சி காலத்துக்கு முழு விலக்கு கோர முடியாது. பயிற்சி காலத்தின் போது, பல தேர்வுக்கு உட்பட வேண்டும். பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நிரந்தர பணியில் வரன்முறை செய்யப்படுவர். எனவே, பயிற்சி காலத்தை வெறும் சம்பிரதாயமாக கருத முடியாது.
பேறுகால விடுமுறையை, பயிற்சி காலத்தின்போது எடுத்திருந்து, அந்த நாட்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், பயிற்சி காலத்தை நீட்டிக்க, நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. விதிகளில் எந்த திருத்தங்களையும் கொண்டு வருவது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
அதற்காக, அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேறுகால விடுமுறையை, பணிக் காலமாக கருதும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tuesday, August 29, 2023
Order of High Court
August 29, 2023
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கிடையாது: உயர் நீதிமன்றம்
மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கிடையாது: உயர் நீதிமன்றம்
இரண்டு குழந்தைகளுக்கு பின், அடுத்ததாக பிறந்த இரட்டை குழந்தைக்கும் பேறுகால விடுப்பு வழங்க கோரிய, பள்ளிக் கல்வித் துறை ஊழியரின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், உதவியாளராக பணியாற்றுபவருக்கு, முதல் திருமணம் வாயிலாக, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவரது கணவர் இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்தார்; இரட்டை குழந்தை பெற்றார். கருவுற்றிருக்கும்போதே, 11 மாத பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார்; மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'அரசுப் பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் பிறந்தன. பணியில் சேர்ந்த பின், இரண்டாவது திருமணம் வாயிலாக, இரட்டை குழந்தைகள் பிறந்தன. பேறுகால விடுமுறை இதுவரை எடுக்கவில்லை என்பதால், விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு' என கூறப்பட்டது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண், கூடுதல் பிளீடர் அருண்குமார் ஆஜராகி, 'இரண்டு குழந்தைகள் பிறப்புக்கு மட்டுமே, பேறுகால விடுமுறை வழங்க முடியும் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை பெற உரிமை இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு தான் பேறுகால விடுமுறை என்பது அரசின் கொள்கை' என்றனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு, நான்கு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை இல்லை என்பது அரசின் கொள்கை மற்றும் அடிப்படை விதியாக உள்ளது.
எனவே, பேறுகால சலுகை சட்டத்தின் அடிப்படையில், பேறுகால விடுமுறையை, உரிமையாக மனுதாரர் கோர முடியாது. விடுமுறை நிராகரித்தது செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோரி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை தாக்கல் செய்த மனுவில், 'பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
'பேறுகால சலுகையை அனுபவிக்காததால், மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோர உரிமையில்லை' எனக் கூறி மனுவை, நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு பின், அடுத்ததாக பிறந்த இரட்டை குழந்தைக்கும் பேறுகால விடுப்பு வழங்க கோரிய, பள்ளிக் கல்வித் துறை ஊழியரின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், உதவியாளராக பணியாற்றுபவருக்கு, முதல் திருமணம் வாயிலாக, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவரது கணவர் இறந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்தார்; இரட்டை குழந்தை பெற்றார். கருவுற்றிருக்கும்போதே, 11 மாத பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார்; மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'அரசுப் பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் பிறந்தன. பணியில் சேர்ந்த பின், இரண்டாவது திருமணம் வாயிலாக, இரட்டை குழந்தைகள் பிறந்தன. பேறுகால விடுமுறை இதுவரை எடுக்கவில்லை என்பதால், விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு' என கூறப்பட்டது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண், கூடுதல் பிளீடர் அருண்குமார் ஆஜராகி, 'இரண்டு குழந்தைகள் பிறப்புக்கு மட்டுமே, பேறுகால விடுமுறை வழங்க முடியும் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை பெற உரிமை இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு தான் பேறுகால விடுமுறை என்பது அரசின் கொள்கை' என்றனர்.
மனுவை விசாரித்த, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு, நான்கு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை இல்லை என்பது அரசின் கொள்கை மற்றும் அடிப்படை விதியாக உள்ளது.
எனவே, பேறுகால சலுகை சட்டத்தின் அடிப்படையில், பேறுகால விடுமுறையை, உரிமையாக மனுதாரர் கோர முடியாது. விடுமுறை நிராகரித்தது செல்லும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று, மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோரி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை தாக்கல் செய்த மனுவில், 'பணியில் சேர்வதற்கு முன், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
'பேறுகால சலுகையை அனுபவிக்காததால், மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டது.
'மூன்றாவது குழந்தைக்கு பேறுகால விடுமுறை கோர உரிமையில்லை' எனக் கூறி மனுவை, நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்தார்.
Thursday, July 27, 2023
maternity leave
July 27, 2023
பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்திய அரசு!
சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு ஒரு மாத காலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விரையில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.
பேறுகால நலச்சட்டம் 1961ன் படி பெண்களுக்கு 6 மாத விடுப்பு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Wednesday, July 12, 2023
Sunday, February 19, 2023
Special Leave
February 19, 2023
அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் - அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களின் கரோனா கால விடுமுறை சிறப்பு விடுப்பாக கருதப்படும் - அரசாணை வெளியீடு
Corona period leave of government employees to be treated as special leave - Issue of Ordinance
கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்.
பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விடுமுறைக் காலமாகக் கருதப்படும். தலைமைச் செயலகப் பணியாளர்களை பொறுத்தவரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து, அந்தந்த துறைச் செயலர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Corona period leave of government employees to be treated as special leave - Issue of Ordinance
கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்.
பெண் பணியாளர்களைப் பொறுத்தவரை, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விடுமுறைக் காலமாகக் கருதப்படும். தலைமைச் செயலகப் பணியாளர்களை பொறுத்தவரை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து, அந்தந்த துறைச் செயலர்களே முடிவெடுக்கலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, January 20, 2023
Special Leave
January 20, 2023
கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு!
கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு! 60 days maternity leave for girls 18+ in Kerala!
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.
இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.
மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.
18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.
இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.
மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.


